அஜித் பவார் விமான விபத்து சர்ச்சை: மத்திய அமைச்சர் பதவி விலக ரோஹித் பவார் வலியுறுத்தல்

தீவிர வெப்பத்திலும் அழியாத கருப்புப் பெட்டி எப்படி சேதமடைந்தது. தெலுங்கு தேசம் கட்சிக்கும் நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
அஜித் பவார் விமான விபத்து சர்ச்சை: மத்திய அமைச்சர் பதவி விலக ரோஹித் பவார் வலியுறுத்தல்
Published on

மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் நால்வர் உயிரிழந்தனர்.

அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலில் பாஜவுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். மேலும் அவர் உடைந்த தேசியவாத காங்கிரசை ஒன்றிணைக்க இருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளாட்சிகளில் பாஜக ஊழல் செய்வதாக அஜித் பவார் பிரசாரங்களில் விமர்சித்து வந்தார். எனவே அவரின் மரணம் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வந்தன.

இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டி தீயில் கருகி சேதமடைந்திருந்தது. கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தே விமான விபத்து எப்படி நடந்தது என்பதை கண்டறிய முடியும்.

இந்த விபத்தில் சதிச் செயல் இருக்கலாம் என்று பலரை போலவே அஜித்பவாரின் மருமகனும் எம்.எல்.ஏவுமான ரோஹித் பவார் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகிறார்.

தீவிர வெப்பத்திலும் அழியாத கருப்புப் பெட்டி எப்படி சேதமடைந்தது என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விபத்துக்குள்ளான விமானத்தின் மதிப்பு ரூ.35 கோடி மட்டுமே, ஆனால் அது ரூ.210 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதை ரோஹித் பவார் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பின்னணியில் உள்ள நிதி நோக்கங்கள் குறித்து விசாரணை தேவை என அவர் கோரியுள்ளார்.

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய வி.எஸ்.ஆர் நிறுவனத்திற்கும், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ரோஹித் குற்றம் சாட்டியுள்ளார்.

விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் வரும் விமான போக்குவரத்து இயக்குனரகமான DGCA அதிகாரிகள் இந்த நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட வாய்ப்புள்ளது.

எனவே விசாரணை முடியும் வரை அமைச்சர் பதவியில் இருந்து ராம் மோகன் நாயுடு விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ரோஹித் பவார் விரிவான கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com