என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ajit Pawar"

    • அஜித் பவார் மகன் பார்த்து பவார், புனேவில் ரூ.1800 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு முறைகேடாக வாங்கிய புகாரில் சிக்கினார்.
    • பவாரைப் போன்ற ஒரு தலைவர் வாக்காளர்களை அச்சுறுத்தும்போது, தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும், சிவசேனாவை இரண்டாக உடைத்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரசை இரண்டாக உடைத்த அஜித் பவார் ஆகிய இருவரும் துணை முதல்வராக உள்ளனர்.

    அஜித் பவார் மகன் பார்த்து பவார், புனேவில் ரூ.1800 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு முறைகேடாக தனது நிறுவனத்துக்காக வாங்கிய ஊழல் குற்றச்சாட்டில் அண்மையில் சிக்கினார்.

    இதற்கிடையே மகாராஷ்டிராவில் உள்ள பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் டிசம்பர் 2 அன்று நடைபெற உள்ளன. இந்நிலையில் நிலையில் அஜித் பவார் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

    நேற்று மாலேகான் நகரில் உள்ள பாராமதி தாலுகாவில் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலில் தனது கட்சி வெப்பாளர்களுக்கு வாக்களித்தால் மட்டுமே அந்த பகுதிக்கான வளர்ச்சி நிதியை வழங்குவேன் என மிரட்டியுள்ளார்.

    அமைச்சரவையில் நிதித் துறையை அஜித் பவார் தன் வசம் வைத்துள்ளார். இதன் பின்னணியில் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "நண்பர்களே, மத்திய அரசும் மாநில அரசும் பல திட்டங்களைக் உருவாகியுள்ளன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தினால், மாலேகானுக்கு நல்ல வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.

    நீங்கள் எங்களின் 18 வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்தால், நான் வாக்குறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் எனது வேட்பாளர்களை கிராஸ் மார்க் செய்தால், நானும் உங்களை கிராஸ் மார்க் செய்வேன். வாக்கு உங்கள் கையில் உள்ளது, நிதி என் கையில் உள்ளது." என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

    இதை விமர்சித்த உத்தவ் சிவசேனா தலைவர் அம்பாதாஸ் தான்வே, "நிதி என்பது பொதுமக்கள் செலுத்தும் வரிகளிலிருந்து வழங்கப்படுகிறது, அது அஜித் பவாரின் வீட்டில் இருந்து அல்ல. பவாரைப் போன்ற ஒரு தலைவர் வாக்காளர்களை அச்சுறுத்தும்போது, தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார். 

    முன்னதாக கடந்த ஜனவரியில் கூட்டம் ஒன்றில் பேசிய அஜித் பவார், வாக்களித்து விட்டதால் நீங்கள் ஒன்றும் எனக்கு முதலாளிகள் இல்லை, நான் என்ன கூலியா? என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

    மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரின் மகன் அஜித் பவாரின் மகன் பார்த்து பவார்.

    இவருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு புனேவில் உள்ள ரூ.1804 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ரூ. 300 கோடிக்கு மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளனர். இந்த நிலம் அரசாங்க சொத்தாக வகைப்படுத்தப்பட்டது என தெரியவந்தது.

    இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்கு தேவையான ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

    இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், "இந்த ரூ.300 கோடி பரிவர்த்தனை குறித்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழு விசாரித்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும்.

    இந்த பரிவர்த்தனை தொடர்பான பதிவு ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டு, தொடர்புடைய ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒரு ரூபாய் கூட கைமாறவில்லை. அந்த நிலம் அரசாங்கத்திற்கு சொந்தமானது, அதை விற்க முடியாது. அது அரசு நிலம் என்ற விஷயம் எனது மகன் பார்த்து மற்றும் அவரது கூட்டாளி திக்விஜய் பாட்டீல் ஆகியோருக்கு தெரியாது" என்று கூறினார்.

    இதற்கிடையே இந்த நிலமோசடி தொடர்பாக போலீசார் பதிந்த வழக்கு வழக்கில் அஜித் பவார் மகன் பெயர் இடம் பெறவில்லை.  நிலத்தை வாங்கிய நிறுவனத்தில் 1 சதவீதம் மட்டும் பங்கு வைத்துள்ள திக்விஜய் பாட்டீலின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

    இது குறித்து சிவசேனா(உத்தவ்) நிர்வாகி அம்பாதாஸ் தன்வே கூறுகையில்,"நிலத்தை வாங்கிய கம்பெனியில் அஜித் பவார் மகனுக்கு 99 சதவீத பங்கு இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஒரு சதவீத பங்கு இருப்பவர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.

    • ரூ.1804 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ரூ. 300 கோடிக்கு மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளனர்.
    • தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1800 கோடி மதிப்புள்ள அரசு நிலம், அமைச்சரின் மகனின் நிறுவனத்துக்கு வெறும் ரூ. 300 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சரின் மகன் அஜித் பவாரின் மகன் பார்த் பவார்.

    இவருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு புனேவில் உள்ள ரூ.1804 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலத்தை ரூ. 300 கோடிக்கு மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளனர். இந்த நிலம் அரசாங்க சொத்தாக வகைப்படுத்தப்பட்டது என தெரியவந்தது.

    இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்கு தேவையான ஒப்புதல்களை சரி பார்க்க தவறியதாக துணைப்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்

    இந்நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

    மகாராஷ்டிரத்தில், தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1800 கோடி மதிப்புள்ள அரசு நிலம், அமைச்சரின் மகனின் நிறுவனத்துக்கு வெறும் ரூ. 300 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

    மேலும் முத்திரைத் தீர்வையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு கொள்ளை மட்டுமல்ல, கொள்ளைக்கு ஒப்புதல் கொடுக்கும் சட்ட முத்திரைகூட.

    இது 'வாக்கு திருட்டு' மூலம் உருவாக்கப்பட்ட அந்த அரசாங்கத்தின் 'நிலத் திருட்டு'. அவர்கள் எவ்வளவு கொள்ளையடித்தாலும், மீண்டும் வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வருவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

    ஜனநாயகம், பொதுமக்கள் அல்லது தலித்துகளின் உரிமைகள் குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

    மோடி ஜி, உங்கள் மௌனம் நிறைய பேசுகிறது. தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பறிக்கும் கொள்ளையர்களால் உங்கள் அரசாங்கம் இயங்குவதால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.   

    • என் முகத்தை பார்த்தால் நான் யார் என்று தெரியும். என்ன தைரியம் உனக்கு என்றார்.
    • பெண் அதிகாரிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

    மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு சோலாப்பூர் மாவட்டத்தின் மாதா தாலுகாவில் உள்ள குர்து கிராமத்தில், சாலை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் மண் சட்டவிரோதமாக அள்ளப்படுவதாக வந்த புகார்களின் பேரில் ஐபிஎஸ் அதிகாரியும் கர்மலா டிஎஸ்பியுமான அஞ்சனா கிருஷ்ணா சம்பவ இடத்துக்கு சென்றார்.

    அப்போது அங்கிருந்த அஜித் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் ஊழியர் ஒருவர் தனது தொலைபேசியில் தலைவருக்கு போன் போட்டு ஐபிஎஸ் அஞ்சனாவிடம் கொடுத்துள்ளார்.

    தொலைபேசியை வாங்கிஅஞ்சனா "நீங்கள் துணை முதல்வர் என்பதை நான் எப்படி அறிவது? தயவுசெய்து எனது தொலைபேசியை நேரடியாக அழைக்கவும்" என்று பதிலளித்தார்.

    இந்தப் பதிலால் கடும் கோபமடைந்த அஜித் பவார், "உனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். என்னை பார்க்க வேண்டுமா? உன் மொபைல் எண்ணை கொடு, அல்லது வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்து பார்.

    என் முகத்தை பார்த்தால் நான் யார் என்று தெரியும். என்ன தைரியம் உனக்கு" என்றார்.

    பின்னர் வீடியோ கால் மூலம் பேசி, அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ஐபிஎஸ் அஞ்சனாவிடம் அஜித் பவார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில் இதுகுறித்து அஜித் பவார் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், "சோலாப்பூர் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியுடனான உரையாடல் தொடர்பான சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. சட்ட அமலாக்கத்தில் தலையிடுவது எனது நோக்கமல்ல. நிலைமை மோசமடையாமல் இருப்பதையும் உறுதி செய்வதே எனது நோக்கம்.

    பொறுமையாகவும் உண்மையாகவும் தங்கள் கடமையைச் செய்யும் நமது காவல்துறை மற்றும் பெண் அதிகாரிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் சட்டத்தின் ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவன்.

    மணல் கடத்தல் உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு நான் உறுதிபூண்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

    • மாநிலத்தில் தினசரி 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
    • பயிர் காப்பீடு, கடன் தள்ளுபடி மற்றும் விலை ஆதரவு கோரும் விவசாயிகளின் அவலக் குரலை கேட்பார்களா?

    மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

    ஆளும் கூட்டணியில் உள்ள அஜித் பவார் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர் மாணிக்ராவ் கோக்டே.

    எதிரணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவரின் பேரன் ரோஹித் பவார் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் மராத்தியில், "ஆளும் கூட்டணியில் தேசியவாத கட்சி பாஜகவை கலந்தாலோசிக்காமல் எதுவும் செய்ய முடியாது என்பதால், எண்ணற்ற விவசாயப் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளபோதும், மாநிலத்தில் தினசரி 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும்போதும், வேளாண் அமைச்சருக்கு வேறு எந்த வேலையும் இல்லாததால், ரம்மி விளையாடுவதற்கு நேரம் கிடைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், "பயிர் காப்பீடு, கடன் தள்ளுபடி மற்றும் விலை ஆதரவு கோரும் விவசாயிகளின் அவலக் குரலை இந்த தவறான அமைச்சர்களும், அரசாங்கமும் எப்போதாவது கேட்பார்களா. ஏழைகளின் வயல்களுக்கு எப்போதாவது வாருங்கள், மாகாராஜாவே" என்று தெரிவித்தார் 

    • 1 முதல் 4ஆம் வகுப்பு வரை இந்தி கற்றுப்பிக்கக் கூடாது.
    • 5ஆம் வகுப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

    இருமொழி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள பெரும்பாலான மாநிலங்கள், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை திட்டத்தை ஏற்க மறுத்து வருகின்றன. இதன்மூலம் மறைமுகமாக இந்தியை திணிக்க முயற்சிப்பதாக, மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றன.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்நாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பட்நாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிரா அரசு, மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளது.

    மராத்தி மற்றும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிக் கூடங்களில் 1ஆம் வகுப்பு முதல் இந்தி கற்றுக்கொடுக்கப்படும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    1ஆம் வகுப்பில் இருந்து இந்தி கற்றுக்கொள்ளப்படும் என மும்மொழிக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் எதிர்ப்ப தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அஜித் பவார் கூறியதாவது:-

    இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருந்தார். 1 முதல் 4ஆம் வகுப்பு வரை இந்தி கற்றுப்பிக்கக் கூடாது. 5ஆம் வகுப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும். மாணவர்கள் 1ஆம் வகுப்பில் இருந்து மராத்தி கற்க வேண்டும். சரளமாக படிக்கும், எழுதும் திறனை பெற வேண்டும்.

    இவ்வாறு அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    • நாங்கள் அனைவருமே ஒரு பெண் முதல்வர் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.
    • இந்த விழாவின் போது, ​​பல்வேறு துறைகளில் பணிபுரியும் பிரமுகர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

    அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், மும்பையின் வோர்லியில் உள்ள ஜம்போரி மைதானத்தில் மகாராஷ்டிர மஹோத்சவத்தை ஏற்பாடு செய்துள்ளது.

    மே 1 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு மே 4 வரை தொடரும். இந்த விழாவின் போது, பல்வேறு துறைகளில் பணிபுரியும் பிரமுகர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

    இந்த நிகழ்வில் இன்று அஜித் பவாரிடம் மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், வரும் காலங்களில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஒரு பெண் வர முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அஜித் பவார், "நாங்கள் அனைவருமே ஒரு பெண் முதல்வர் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அதற்கு, தற்செயலாக ஏதாவது நடக்க வேண்டும்.

    இப்போது பாருங்கள், நானும் பல வருடங்களாக முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் விஷயங்கள் ஒருபோதும் பலனளிப்பதில்லை. அந்த நாள் எப்போதாவது வரும்" என்று பெருமூச்செறிந்தார்.

    2023 ஆம் ஆண்டு சரத் பவாரின் தேசியவாத கட்சியை உடைத்த அஜித் பவார் பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் ஆனார்.

    ஆனால் முதல்வர் ஆக முடியாத ஆதங்கத்தை அவர் பல மேடைகளில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • பட்னாவிசுக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல் வெளியானது.
    • ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம்.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.

    முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்று கொண்டார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்று கொண்டனர்.

    இதனையடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசுக்கும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உங்களுக்கு பிரச்சனை கொடுத்தால், எங்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமாறு துணை முதல்வர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் நானா படோல் அழைப்பு விடுத்துள்ளார்.

    நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நானா படோல், "ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம். தேவேந்திர ஃபட்னாவிஸ் உங்களை தொந்தரவு செய்தால், நாங்கள் உங்களுடன் நின்று ஒன்றாக ஒரு அரசாங்கத்தை அமைக்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

    நானா படோலின் கருத்துக்கு பதில் கூற மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் மறுத்துவிட்டார்.

    • சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக ஜெயந்த் பாட்டீல் உள்ளார்.
    • இவர் அதிருப்தி காரணமாக அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனத் தகவல் வெளியாகி வருகிறது.

    சிவசேனா கட்சித் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதல்வருமான சஞ்சய் ஷிர்சாத், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவரான ஜெயந்த் பாட்டீல் அக்கட்சியில் இருந்து விலகி, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சய் ஷிர்சாத் கூறியதாவது:-

    ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு செல்வார் என்பதை முன்னதாகவே நான் சொல்லியிருக்கிறேன். நீண்ட காலத்திற்கு சரத்பவார் கட்சியில் இருக்க வேண்டும் என்ற மனநிலை அவருக்கு இல்லை. சரத் பவார் கட்சியில் பூகம்பம் ஏற்பட இருக்கிறது. ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைவதை நீங்கள் பார்ப்பீர்கள்.

    இவ்வாறு சஞ்சய் ஷிர்சாத் தெரிவித்துள்ளார்.

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான ஜெயந்த் பாட்டீல், தன்னைப் பற்றி உறுதியாக ஏதும் தெரியவில்லை எனக் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் ஷிர்சாத் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., விஜய் வடேட்டிவார் "ஜெயந்த் பாட்டீல் அதிருப்தியில் இருப்பதால்தான் அவ்வாறு தெரிவித்துள்ளார்" எனத் தெரிவித்ள்ளார். மேலும், "அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை நாம் யூகிக்க மட்டுமே முடியும். அவரது கருத்துக்குப் பின்னால் உள்ள அனுமானம் எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு மூத்த அரசியல்வாதி, எட்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மற்றும் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்" என்றார்.

    சரத் பவாரின் மகளும், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா சுலே "சரத் பவார் எதிரிகளுக்கு மிகப்பெரிய அமைப்பு பலம் இருந்தபோதிலும், ஜெயந்த் பாட்டீல் தேவைப்படுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

    அஜித் பவார் கடந்த 2023-ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்களுடன் கோஷ்டியாக செயல்பட்டு, பின்னர் கட்சியை கைப்பற்றிக் கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

    அஜித் பவார் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றது. சரத் பவார் தலைமையிலான கட்சி 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    • நேர்மையாக அஜித்பவார் என்னுடன் பதவி ஏற்றுக்கொண்டார்.
    • 2 தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவிட்டனர்.

    மும்பை :

    மராட்டியத்தில் 2019-ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஏற்பட்ட தகராறை அடுத்து சிவசேனா கூட்டணியில் இருந்து வெளியேறியது. அந்த கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தது.

    அந்த நேரத்தில் திடீரென தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் அதிகாலை 5 மணிக்கு ராஜ்பவனில் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றனர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் அந்த ஆட்சி பதவி ஏற்ற 3 நாளில் கவிழ்ந்தது.

    இந்தநிலையில் சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் கழித்து சரத்பார் ஆதரவோடு தான் 2019-ல் அஜித்பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைத்தோம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டி.வி. நிகழ்ச்சியில் கூறியதாவது:-

    நிலையான அரசு தேவைப்பட்டதால் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆட்சி அமைக்க நாங்கள் முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தையின் போது சரத்பவாரும் இருந்தார். ஆனால் அதன் பிறகு நிலைமை மாறியது. நிலைமை எப்படி மாறியது என நீங்களே பார்த்தீர்கள். நேர்மையாக அஜித்பவார் என்னுடன் பதவி ஏற்றுக்கொண்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட தகவலை சரத்பவார் மறுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேவேந்திர பட்னாவிஸ் ஜென்டில் மேன், பண்பட்டவர் என்று நினைத்தேன். அவர் பொய்யை நம்பி இதுபோன்ற ஒரு அறிக்கையை விடுவார் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை." என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. 2 தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவிட்டனர்.

    • கோடிக்கணக்கான ரூபாய்களை ஷிண்டே அரசு ஊதாரித்தனமாக செலவு செய்கிறது.
    • கடந்த சில மாதங்களில் மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிவாரணங்களை அறிவித்தது.

    மும்பை :

    மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    மாநில அரசு சாமானிய மக்களின் துயரை தீர்க்கும் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, தங்களின் சிரித்த முகத்தை வெளியில் காட்டிக்கொள்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை ஷிண்டே அரசு ஊதாரித்தனமாக செலவு செய்கிறது.

    கடந்த சில மாதங்களில் மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிவாரணங்களை அறிவித்தது. ஆனால் இதுவரை அந்த திட்டத்தின் பயனாளிகளுக்கோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கோ நிவாரண தொகை சென்று சேரவில்லை. மராட்டியம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு நான் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இதை நான் கவனித்தேன்.

    பணவீக்கம் அதிகரித்து வருவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. இருப்பினும் விவசாய விளை பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கவில்லை.

    எனவே கூட்டத்தொடரை முன்னிட்டு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அரசு நடத்தும் வழக்கமான தேனீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

    இதற்கு பதிலாக புதிய கவர்னர் ரமேஷ் பயசை சந்தித்து எங்கள் கவலைகளை அவருடன் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உத்தவ் பாலாசாகேப் சிவசேனாவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே, "அவுரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் நகரங்களின் பெயரை சத்ரபதி சாம்பாஜிநகர் மற்றும் தாராஷிவ் என மாநில அரசு மாற்றி உள்ளது.

    இந்த 2 மாவட்டங்களின் பெயர்களையும் மாற்றலாம் என்று மத்திய அரசு, மாநில அரசுக்கு அனுப்பிய தகவலில் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் இதை செயல்படுத்த அரசு தவறிவிட்டது" என்றார்.

    • மோடிக்கு அவரது கல்வி தகுதியை பார்த்து மக்கள் யாரும் ஓட்டுப்போடவில்லை.
    • மோடி 9 ஆண்டுகளாக நாட்டை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.

    மும்பை :

    பிரதமர் மோடியின் எம்.ஏ. (அரசியல் அறிவியல்) பட்டச்சான்றிதழ் போலியானது என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் மோடியின் பட்டச்சான்றிதழ் கேட்டு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குஜராத் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி, "பிரதமர் மோடி தனது கல்வி தகுதியை மறைக்க வேண்டிய மர்மம் என்ன?. அதை அவர் வெளியிட வேண்டும். மோடி தனது பட்டச் சான்றிதழை அவர் கட்டிய புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்" என்று விமர்சித்தார்.

    ஆனால் உத்தவ் தாக்கரே கட்சியுடன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடியின் கல்வி தகுதி பிரச்சினை தேவையற்றது என்று கருத்து கூறியுள்ளது.

    இதுபற்றி அந்த கட்சியின் மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரியும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பட்டப்படிப்பு விவகாரத்தில் என்ன இருக்கிறது?. நமது ஜனநாயகம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. 543 தொகுதிகளை கொண்ட மக்களவையில் பெரும்பான்மை யாருக்கு இருக்கிறதோ, அவர் பிரதமர் ஆவார்.

    மருத்துவ துறையில், ஒருவர் டாக்டராக பணியாற்ற எம்.பி.பி.எஸ். அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அரசியலில் அப்படி எதுவும் இல்லை.

    2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு அவரது கல்வி தகுதியை பார்த்து மக்கள் யாரும் ஓட்டுப்போடவில்லை. அவர் பா.ஜனதாவில் இல்லாத ஒரு வசீகரத்தை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உருவாக்கினார். அதுவே அவரது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதன் முழு புகழும் மோடியை தான் சாரும்.

    அவர் (மோடி) 9 ஆண்டுகளாக நாட்டை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவருடைய அல்லது வேறு சில மந்திரிகளின் கல்வி தகுதி பற்றிய பிரச்சினை தோண்டி எடுக்கப்படுவதை நான் கவனிக்கிறேன். இது ஒரு முக்கியமான பிரச்சினை அல்ல.

    நாட்டில் பல முக்கிய பிரச்சினை நிலவுகிறது. குறிப்பாக பணவீக்கம் மற்றும் வேலையின்மை முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

    சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இவற்றை பற்றி யாரும் விவாதிக்க தயாராக இல்லை. பிரதமர் மோடியின் கல்வி தகுதி பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

    இவ்வாறு அஜித்பவார் கூறினார்.

    ×