என் மலர்
நீங்கள் தேடியது "Deputy Chief Minister"
- மத்திய பாஜகவின் ஆஸ்தான அடிமை இபிஎஸ்-ஆல் கூட ஆதரிக்க முடியாத அளவுக்கு குப்பை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
- தந்தை பெரியாரின் மண்ணில் பெற்றிருக்கும் மாபெரும் இந்த வெற்றியை, 2026-ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி உரையாற்றிானர்.
அப்போது அவர் கூறியதாவது:-
மிக மிக முக்கியமான நாளில் இந்த கண்டன பொதுக்கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.
கிட்டத்தட்ட 1 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகள் பெற்று, 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுந்தர குமார் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்.
அந்த சூழலில் வெற்றியோடு இந்த கூட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எந்த அளவுக்கு ஒரு பயனற்ற பழிவாங்குகின்ற ஒரு யூஸ்லெஸ் பட்ஜெட்.
அப்படி ஒரு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு பட்ஜெட்டை வாசித்திருக்கிறார்கள்.
அதில், தமிழ்நாட்டிற்கென ஒரு திட்டத்தை கூட அவர் அறிவிக்கவில்லை. திட்டம் மட்டும் இல்லை தமிழ்நாடு என்கிற வார்த்தையை ஒரு முறை கூட அவர் பயன்படுத்தவில்லை.
அந்த அளவிற்கு மத்திய அரசுக்கு தமிழ்நாடு மீது பாசம். ஆனால், இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கின்ற பீகார் மாநிலத்திற்கு பட்ஜெட்டில் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்கள்.
பிற மாநிலங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கக்கூடாது என்று கூறவில்லை. ஆனால், அங்கு தேர்தல் வர இருக்கின்ற ஒரே காரணத்திற்காக அதை மனதில் வைத்துக் கொண்டு அம்மாநிலத்திற்கு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். பீகார் மாநிலத்திற்கு மட்டும் பல்லாயிர கோடி கணக்கில் நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள்.
இது பீகார் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக போட்ட பட்ஜெட் மாதிரி தெரியவில்லை. பீகார் மாநிலத்தில் தன் கூட இருக்கிற நிதிஷ் குமாரின் கூட்டணியை உடைத்துவிட்டு அவரின் காலை வாரிவிட்டு அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் என்கிற ஒரே திட்டத்தோடு போட்டிற்கிற பட்ஜெட் இது.
ஏன் என்றால் பாஜகவின் வரலாறு அப்படி.
மத்திய பாஜகவின் ஆஸ்தான அடிமை இபிஎஸ்-ஆல் கூட ஆதரிக்க முடியாத அளவுக்கு குப்பை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
ஈரோடு கிழக்கில் பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாடல் அரசின் மீதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை உணர்த்துகிறது.
தந்தை பெரியாரின் மண்ணில் பெற்றிருக்கும் மாபெரும் இந்த வெற்றியை, 2026-ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எந்தத் துறையாக இருந்தாலும் பரம்பரை என்பது கட்டுக்கதை.
- பாரம்பரியம் மட்டுமே அனைத்தையும் நிலைநிறுத்துவதில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷுக்கு துணை முதல் மந்திரி பதவி வழங்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஏற்கனவே நடிகர் பவன் கல்யாண் துணை முதல் மந்திரியாக இருக்கும் நிலையில் சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு துணை முதல் - மந்திரி பதவி கோரிக்கை எழுந்துள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த கேள்விக்கு சந்திரபாபு நாயுடு கூறியதாவது 'தொழில், திரைப்படம், அரசியல், குடும்பம் என எந்தத் துறையாக இருந்தாலும் பரம்பரை என்பது கட்டுக்கதை.
ஒரு தலைமுறை தொழிலில் சிறந்து விளங்கி நன்றாக சம்பாதித்தால் அடுத்த தலைமுறை அதை இழக்க நேரிடும்.
நம் நாட்டில் ஒரு காலத்தில் பலம் வாய்ந்த கட்சிகள் பின்னர் காணாமல் போய்விட்டன. பாரம்பரியம் மட்டுமே அனைத்தையும் நிலைநிறுத்துவதில்லை. இது சில சிறந்த வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பது முக்கியம். அதை சரியான முறையில் பெற்றால் மட்டுமே மேன்மை அடைய முடியும். நான் வாழ்வாதாரத்திற்காக அரசியலைச் சார்ந்து இருந்ததில்லை.
நான் 33 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தொழிலைத் தொடங்கினேன். எனது குடும்ப உறுப்பினர்கள் அதை நிர்வகித்து வருகின்றனர். இதே தொழிலை தொடர்ந்திருந்தால் லோகேஷ்க்கு மிகவும் எளிதாக இருந்திருக்கும்.
ஆனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்தார். அதில் அவர் திருப்தி அடைந்துள்ளார். இதில் வாரிசு உரிமை இல்லை'
மத்திய அரசில் சேரும் எண்ணம் இல்லை. மாநிலத்திலேயே இருப்பேன் திறமை மற்றும் செயல்திறனால் மட்டுமே லோகேஷ் வாரிசாக வளர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கு தேசம் கட்சியின் வாரிசு குறித்து கடந்த காலங்களிலும் விவாதிக்கப்பட்டது. என்.டி. ராமாராவ் முதல் மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் பாலகிருஷ்ணாவை அரசியல் வாரிசாக அறிவித்தார்.
ஆனால் ஐதராபாத் திரும்பிய அவர் கட்சித் தலைவர்களின் ஆலோசனையின் பேரில் தனது கருத்தை மாற்றிக்கொண்டார்.
மேலும், 2014 தேர்தலுக்கு முன், நந்தமுரி ஹரிகிருஷ்ணா தனது குடும்பத்தில் வாரிசு பிரச்சினையை எழுப்பினார். அவரது மகன் ஜூனியர் என்.டி.ஆரை தனது அரசியல் வாரிசாக அறிவிக்க சந்திரபாபுவுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அப்படி ஒரு கருத்தை வெளியிட மறுத்துவிட்டார்.
இப்போது எதிர்பாராத விதமாக தெலுங்கு தேசம் கட்சியில் மீண்டும் அதே விவாதம் தொடங்கியுள்ளது. ஆனால் சந்திரபாபு தொடக்கத்திலேயே அதைத் தடுத்து நிறுத்தி உள்ளார்.
- ஆந்திர அரசியலில் அனல் பறக்கும் அளவுக்கு விவாதங்கள் நடந்து வருகின்றன.
- தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி கூட்டணியில் சிக்கல்
திருப்பதி:
ஆந்திராவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஜனசேனா மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாகவும், ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் துணை முதல் மந்திரியாகவும் உள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.
மந்திரியாக உள்ள நாரா லோகேஷ்க்கு துணை முதல் மந்திரி பதவி வழங்க வேண்டும் என முன்னாள் மந்திரியும் தெலுங்கு பேசும் எம்.எல்.ஏ.வான சோமி ரெட்டி சந்திரமோகன் ரெட்டி மற்றும் பொலிடா பீரோ உறுப்பினர் சீனிவாச ரெட்டி மூத்த கட்சி தலைவர்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்பாக லோகேஷ் நடை பயணமாக சென்று நேரடியாக மக்களை சந்தித்தார் இதனால் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
இதேபோல் தெலுங்கு தேசம் கட்சியில் 1 கோடி பேரை உறுப்பினராக சேர்த்து இருக்கிறார். இதனால் லோகேஷ் துணை முதல் மந்திரி பதவிக்கு 100 சதவீதம் தகுதியானவர் என தெரிவித்துள்ளனர்.
தற்போது துணை முதல் மந்திரியாக பவன் கல்யாண் பதவி வகித்து வரும் நிலையில் லோகேஷிற்கு துணை முதல் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சியில் வலுத்து வருகிறது.
அவருக்கு துணை முதல் மந்திரி பதவி வழங்கப்பட்டால் பவன் கல்யாணின் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி கூட்டணியில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.
இதனால் தற்போது ஆந்திர அரசியலில் அனல் பறக்கும் அளவுக்கு விவாதங்கள் நடந்து வருகின்றன.
- எங்கள் விமர்சனங்களுக்கு கூட கலைஞர் நாசுக்காக பதில் கொடுப்பார்.
- சிறையின் உள்ளே அனுப்பவில்லை என்றால் இங்கேயே நாற்காளியை போட்டு அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து விடுவேன் என்றேன்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், தம்பி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுங்கன்னு கலைஞரிடம் நான் தான் சொன்னே்" என்று கூறினார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், " திமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணியில் இருந்தபோது, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்டனர். "நீங்கள் பாமகவுடன் கூட்டணியில் இருக்கிறீர்கள். ஆனால் ராமதாஸ் தினமும் உங்களை விமர்சிக்கிறாரே என்று கேட்டனர். அதற்கு அவர் தைலாபுரத்தில் இருந்து தைலம் வருகிறது என்றார்.
எங்கள் விமர்சனங்களுக்கு கூட கலைஞர் நாசுக்காக பதில் கொடுப்பார்.
கலைஞரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தபோது, நான் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தேன். அப்போது, ஜி.கே.மணியிடம் ஒரு நாற்காலியை காரில் வைக்கச் சொல்லி சிறைக்கு சென்றேன். ஆனால், அங்கு உள்ளே விடவில்லை. சிறையின் உள்ளே அனுப்பவில்லை என்றால் இங்கேயே நாற்காளியை போட்டு அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து விடுவேன் என்றேன். பிறகு, உள்ளே விட்டனர்.
உள்ளே கலைஞரை சந்தித்தேன். அவர் இது எல்லாம் உங்களால் தான் நடந்தது என்றார். அவருடன் கூட்டணி வைத்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது என்ற அர்த்தத்தில் கூறினார்.
கூட்டணி பொதுக்கூட்டம் ஒன்றில், ஏன் இவ்ளோ பாரம் வைத்திருக்கிறீர்கள், துணை முதலமைச்சர் பதவியை தம்பி ஸ்டாலினுக்கு கொடுங்கள் என்று அப்போது கலைஞரிடம் நான் தான் சொன்னேன்.
பலமுறை ஸ்டாலினிடமும் சொல்லி இருக்கிறேன். நான்தான் அப்பாவிடம் பதவி வழங்க கூறினேன் என்று. அதற்கு ஸ்டாலின், "ஆமாம் ஐயா நீங்கள் தான் சொன்னீர்கள்" என்று கூறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்த ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றம்.
- உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தமிழக அமைச்சரவையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டில் தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து 15 மாதங்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிறகு, செந்தில் பாலாஜி ஜாமினில் விடுதலையாகி வெளியே வந்தார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்
செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்த ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றப்பட்டது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவியான மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையே வழங்கப்பட்டது.
செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறையும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டன.

வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலத்துறைக்கும், இதே துறையைக் கையாண்டு வந்த கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையும் ஒதுக்கப்பட்டன.
நிதி அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டது.
அடுத்து, அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், இளித்துறை ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி.செழியனும் சுற்றுலா துறை அமைச்சராக பனமரத்துப்பட்டி ராஜேந்திரனும் புதிதாக இணைந்தனர்.
செஞ்சி மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மை நலத்துறை, ஆவடி நாசருக்கு ஒதுக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரசு அமைந்த பிறகு, 5-வது முறையாக அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வராானார் உதயநிதி ஸ்டாலின்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, கடந்த 2022 டிசம்பர் 14-ம் தேதியில், தமிழக அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி அறிவிக்கப்பட்டார்.

அதன்பிறகு நடப்பு ஆண்டில் சில மாதங்களாக உதயநிதியைத் துணை முதல்வராக்க வேண்டும் என மூத்த அமைச்சர்கள் தொடங்கி பலரும் கோரிக்கை வைத்தனர். முதல்வரும் அந்தக் கோரிக்கை வலுத்திருக்கிறது. பழுக்கவில்லை என பதிலளித்திருந்தார். இந்தநிலையில், தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்ததாக துணை முதல்வராகப் பதவியேற்கும் மூன்றாவது நபராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.
- அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன்
- சிறப்பாக வேலை செய்யும் அரசியல்வாதிகளை நான் மதிக்கிறேன்
பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் ஏராளமான உதவிகள் செய்து புகழ்பெற்றார். ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் உதவிகள் செய்ததால் அவரை 'ரியல் ஹீரோ' என மக்கள் கொண்டாடினர்.
இந்நிலையில் "தனக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் மாநிலங்களவை எம்.பி. பதவியை தருவதாக சொன்னார்கள், ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்" என்று நடிகர் சோனுசூட் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய சோனுசூட், "எனக்கு முதலில் முதல்வர் பதவியை தருவதாக சொன்னார்கள். நான் அதை மறுத்தபோது எனக்கு துணை முதல்வர், மாநிலங்களவை எம்.பி பதவியை தருவதாக கூறினார்கள். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்.
அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன். மக்கள் இரண்டு காரணங்களுக்காக அரசியலில் சேருகிறார்கள். ஒன்று பணம் சம்பாதிப்பதற்காக அல்லது அதிகாரத்தைப் பெறுவதற்காக... எனக்கு இந்த இரண்டிலும் ஆர்வம் இல்லை.
அரசியலுக்கு வந்தால் எனக்கு டெல்லியில் வீடு, பதவி, உயர் பாதுகாப்பு உள்ளிட்ட ஆடம்பரங்கள் கிடைக்கும் என பலரும் தன்னிடம் கூறியுள்ளனர். அதை கேட்பதற்கு நன்றாக இருந்தது. ஆனால் நான் இப்போது அதற்கு தயாராக இல்லை.
இப்போது எனக்குள் இன்னும் ஒரு நடிகர் மற்றும் இயக்குநர் இருக்கிறார். நான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல. சிறப்பாக வேலை செய்யும் அரசியல்வாதிகளை நான் மதிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க சார்பில் போராட்டம்.
- இன்னொரு துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கலாமே.
வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-
அதில், தி.மு.க.வில் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
திமுக-வில் எத்தனையோ தியாகங்கள் செய்து கட்சிக்காக சிறை சென்ற துரைமுருகன், இன்று தி.மு.க.விலேயே மூத்த அமைச்சராக இருக்கிறார் என்றும், தி.மு.க.விற்காக எவ்வளவோ உழைத்த துரைமுருகனுக்கு பதவி தராதது ஏன்? என கேள்வி எழுப்பியும், இன்னொரு துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கலாமே எனவும் வினவியுள்ளார்.
ஆனாலும் துரைமுருகன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் 2, 3 என்று துணை முதல்வர்கள் இருக்கும் நிலையில் இவருக்கு மட்டும் துணை முதல்வர் பதவி வழங்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால் வேறு வழியில்லாமல் தி.மு.க.வில் துரைமுருகனுக்கு பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக முதல்வரை சுற்றி வியாபாரிகள் இருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
- கடைசி சுற்றில் குகேஷ், சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர் குகேஷ்க்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024ல் சாம்பியன் பட்டம் வென்ற நம் சொந்த கிராண்ட்மாஸ்டர் டிகுகேஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
SDAT இன் ELITE பிளேயர்ஸ் திட்டத்தில் புகழ்பெற்ற வீரரான குகேஷ், சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் நிலையான வெற்றிகளைத் தொடர்ந்து கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவரது வெற்றி நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டையும் கவனிக்க வைக்கிறது.
இவ்வளவு இளம் வயதிலேயே இப்படிப்பட்ட அசாதாரண திறமையைக் கண்டது உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது.
பிரகாசிக்கவும், சாம்பியன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
My heartfelt congratulations to our very own Grandmaster @DGukesh for emerging as the Champion at the World Chess Championship 2024 held in Singapore.We are immensely proud that Gukesh, a distinguished player in SDAT's ELITE Players scheme, continues to bring home consistent… pic.twitter.com/2B2g0d5SOq
— Udhay (@Udhaystalin) December 12, 2024
- காங்கிரஸ்- சிவசேனா கூட்டணியில் இருந்தபோது அஜித் பவார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
- நேற்று முன்தினம் மீண்டும் துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்
நடந்து முடிந்த மகாராஷ்டிர தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. 10 நாட்களாக நீடித்த குழப்பத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 3 வது முறையாக மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றார். என்சிபி பிரிவு தலைவர் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வர் ஆனார். கடந்த முறை முதல்வராக இருந்த சிவசேனா பிரிவு தலைவர் ஷிண்டே துணை முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார்.

அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்ற அடுத்த நாளே அவரது பினாமி வழக்கில் தொடர்புடைய ரூ.1000 கோடிக்கும் மேலான சொத்துக்களை வருமான வரித்துறை விடுவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பினாமி சொத்துக்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2021 ஆம் ஆண்டு ஆளும் காங்கிரஸ்- சிவசேனா கூட்டணியில் இருந்தபோது அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை துறை சோதனை நடத்தியது. இந்த பினாமி சொத்துக்கள் வழக்கில் சதாராவில் உள்ள சர்க்கரை ஆலை, டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கோவாவில் உள்ள ரிசார்ட் உள்ளிட்ட பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சரத் பவார் தலைமையிலான கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு, அஜித் பவார் மீதான மீதான பினாமி வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் துணை முதல்வராகப் பதவியேற்ற அடுத்த நாளே அவரது ரூ.1000 கோடிக்கும் மேலான சொத்துக்களை வருமான வரித்துறை நேற்று விடுவித்துள்ளது.
எந்த ஒரு சொத்தும் அஜித் பவார் பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்றும் பினாமி சொத்துக்களுக்கும் அஜித் பவார் குடும்பத்துக்கும் இடையே எந்த தொடர்பையும் உறுதி செய்ய போதிய ஆதாரம் இல்லை என வழக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
- தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பிறந்த நாளில் உங்கள் அனைவரின் வாழ்த்து மழையிலும் நனைந்தோம். வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் அன்பும், நன்றியும்.
2026ல் இலக்கு 200 எனும் லட்சியப் பயணத்தை நோக்கி வீறுநடை போடுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிறந்த நாளில் உங்கள் அனைவரின் வாழ்த்து மழையிலும் நனைந்தோம். வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் அன்பும், நன்றியும். #2026ல்_இலக்கு200 எனும் லட்சியப் பயணத்தை நோக்கி வீறுநடை போடுவோம்! pic.twitter.com/D5rdM8jqhd
— Udhay (@Udhaystalin) November 27, 2024
- வாடையை மறைக்க பாதைகளில் சுண்ணாப்பு தெளித்து குப்பைகளை அகற்றினர்.
- குழந்தைகள் தீயில் எரிந்து சாகும்போது பாஜக அரசு தனது முகத்திற்கு பாலிஷ் போடுவதில் பிஸியாக உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. 44 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் சிக்கிய மேலும் சில குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீயில் உடல் கருகி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார்.
பிள்ளைகளை இழந்த குடும்பங்கள் இடிந்துபோயுள்ள இந்த சோகமான சூழலுக்கு மத்தியிலும், மருத்துவமனையைப் பார்வையிட வந்த உத்தரப் பிரதேச ஆளும் பாஜக துணை முதல்வர் பாரேஷ் பாதாக் வருகைக்காக மருத்துவமனையில் விஐபி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி. துணை முதல்வர் வருகையை முன்னிட்டு 10 குழந்தைகள் எரிந்து கருகிய அந்த மருத்துவமனை வளாகத்துக்குள் உள்ள பாதைகளையும், மருத்துவமனைக்கு உள்ளேயும் ஊழியர்கள் அவசர அவசரமாக சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சடலங்களின் வாடையை மறைக்க பாதைகளில் சுண்ணாப்பு தெளித்தும் மேற்படி வேலை பார்த்துள்ளனர். இந்த விஐபி வரவேற்பு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கடும் கண்டனங்களை குவித்து வருகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, பாஜக அரசின் துளியும் உணர்ச்சியற்ற செயலை பாருங்கள். ஒரு புறம் குழந்தைகள் உடல் கருகி மரணித்துள்ளனர் , அவர்களின் குடும்பங்கள் அழுத்து ஓலமிட்டுகொண்டின்றன. மறு புறம் துணை முதல்வரை வரவேற்கப் பாதைகளில் சுண்ணாம்பு தெளிக்கப்பட்டு வருகிறது.
துணை முதல்வரின் வருகைக்காக மருத்துவமனை வளாகம் முழுவதிலும் அவசர அவசராமாக குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப் பணிகள் நடத்துள்ளதென குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் கூறுகின்றனர். இதுதான் இந்த பாஜக அரசின் அலட்சியப் போக்கின் உச்சம். குழந்தைகள் தீயில் எரிந்து செத்துக்கொண்டிருக்கின்றனர், ஆனால் இந்த அரசு தனது முகத்திற்கு பாலிஷ் போடுவதில் பிஸியாக உள்ளது. என்ன ஒரு வெட்கக்கேடான செயல் என்று சாட்டியுள்ளது.
BJP सरकार की संवेदनहीनता देखिए।एक ओर बच्चे जलकर मर गए, उनके परिवार रो रहे थे, बिलख रहे थे। दूसरी तरफ, डिप्टी CM के स्वागत के लिए सड़क पर चूने का छिड़काव हो रहा था।परिजनों का यहां तक कहना है कि पूरे कम्पाउंड में गंदगी फ़ैली हुई थी, जो डिप्टी CM के आने से पहले ही साफ की गई।… pic.twitter.com/M1sk8SAa0E
— Congress (@INCIndia) November 16, 2024
இதற்கிடையே விஐபி வரவேற்பு சர்ச்சையானது அடுத்து தனது வருகைக்கு சிறப்பு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி. துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு மத்தியில் இந்த விபத்து தொடர்பாக உ.பி. அரசின் மெத்தனப் போக்கை காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி ஆகியோரும் விமரித்துள்ளனர்.
- மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16.06 ஏக்கரில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம்.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை நேரு உள்விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் தொகுப்பான 'சாம்பியன்ஸ் கிட்' வழங்குவதை முதற் கட்டமாக 553 மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.
இத்தொகுப்பில் பை, நவீன தண்ணீர் பாட்டில், தசைப்பிடிப்பிற்கு ஒத்தடம் கொடுக்கும் பை, தொப்பி, கர்சீப் டவல், வேர்வை உறிஞ்சும் துண்டு, கைக்கடிகாரம் மற்றும் டீ கப் ஆகியவை இடம் பெற்றிருந்தது.
அதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டும் பணிக்கும், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2023-2024-ம் ஆண்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான அறிவிப்பில், புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16.06 ஏக்கரில் ரூ.15 கோடி மதிப்பில் பல்வேறு விளையாட்டு வசதிகள் கொண்ட புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் 15 மாதத்திற்குள் கட்டி முடிப்பதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவ்விளையாட்டு வளாகத்தில் நிர்வாக அலுவலக கட்டிடம், 1500 இருக்கை வசதிகள் கொண்ட கேலரி, ஓடுதளப்பாதை, கால்பந்து மைதானம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கோ-கோ,டென்னிஸ் ஆடுகளங்கள் மற்றும் உடைமாற்றும் அறை, ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை வசதிகள் கொண்ட திறந்தவெளி விளையாட்டரங்கம் அமைக்கப்படும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் உயர்திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்க மேடையை அடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்ட ஒலிம்பிக் அகாடமி சென்னை, திருச்சி, மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2024-2025-ம் ஆண்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான அறிவிப்பில், மதுரை மாவட்டத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின் ஓர் அங்கமாக, ரூ.6 கோடி அளவில் மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் கபாடி மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் தரை தளத்தில் ஒரு கபாடி ஆடுகளம், முதல் தளத்தில் 6 எண்ணிக்கை கொண்ட டேபிள் டென்னிஸ் ஆடுகளம் கொண்ட 250 இருக்கைகளுடன் கூடிய உள்விளையாட்டரங்கம் மற்றும் ஆண், பெண் உடைமாற்றும் அறைகள் கொண்ட வசதியுடன் அமைக்கப்படும்.
நவீன வசதிகளுடன் கொண்ட புதிய உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும். தற்போது உள்ள திறந்தவெளி கூடைப்பந்து ஆடுகளம் செயற்கை தரையமைப்பு, பார்வையாளர் இருக்கைகளுடன் கூடிய புதிய கூடைப்பந்து ஆடுகளமாக புனரமைக்கப்படும்.
தற்போது உள்ள திறந்தவெளி டென்னிஸ் ஆடுகளம் செயற்கை தரையமைப்பு, பார்வையாளர் இருக்கைகளுடன் கூடிய புதிய டென்னிஸ் ஆடுதளமாக மாற்றியமைக்கப்படும்.