search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Durai Murugan"

    • சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள்.
    • எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி நாங்கள் தியாகம் செய்யவில்லை என கூறுகிறார். நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். பலமுறை மிசாக்கு சிறை சென்றுள்ளோம். அப்படி சிறைக்கு சென்ற போது எனது மகன் எனது சட்டையை பிடித்து இழுத்து அழுது கொண்டிருந்தார். மேலும் சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள்.

    மேலும் எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய்துள்ளேன். திமுக-வில் செல்வாக்குள்ள வேட்பாளர் நிற்பதால் அவரை ரெய்டு நடத்தி கைது செய்ய மேலிடம் சொன்னதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையை சுற்றி புதிய நீர்நிலைகளை உருவாக்குவது குறித்து நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
    • தற்போது பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உயரத்தை ஒரு அடி அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் நேற்று நடந்த அத்துமீறல் சம்பவம் பாதுகாப்பு சரியாக இல்லை என்பதை தான் குறிக்கிறது. பாராளுமன்றத்திற்குள் ஒரு குண்டூசி கூட எடுத்துச்செல்ல முடியாது. ஆனால் எப்படி அவர்களை விட்டார்கள் என்று தெரியவில்லை.

    அங்கு அத்துமீறி சென்றவர்கள் எங்களால் முடியும் என நிரூபித்துள்ளார்கள். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.டெல்லியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. அதனை பலப்படுத்த வேண்டும்.

    கவர்னர் முதலமைச்சரை அழைத்தாரா என்பது எனக்கு தெரியாது. சென்னையை சுற்றி புதிய நீர்நிலைகளை உருவாக்குவது குறித்து நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

    2 இடங்களில் அந்த சாத்தியக்கூறுகள் உள்ளது. ராமஞ்சேரி பகுதியில் பெரிய டேம் அமைக்கலாம். ஆனால் இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

    அதேபோல் மற்றொரு இடத்திலும் கடந்த ஆட்சியில் நீர் நிலை அமைக்க பணிகள் தொடங்கபட்டது. அதுவும் பாதியில் கைவிடப்பட்டது.

    தற்போது பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உயரத்தை ஒரு அடி அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படும்.

    தமிழகத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். பொதுமக்கள் எதிர்ப்பதால் படாதபாடு பட வேண்டிய நிலை உள்ளது. மக்களுக்கு மாற்று இடம் வழங்கி விட்டு அதற்குப் பிறகு நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மறைந்த தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு ஒவ்வொரு முறையும் நிறைய பரிட்சைகள் வைப்பார்.
    • தந்தையை போல மகனும் உழைப்பு உழைப்பு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். கூடவே அவரை துணை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற தங்கள் ஆசையையும் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மூத்த அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் உதயநிதி ஸ்டாலின் உயர்ந்த பொறுப்புகளுக்கு பொருத்தமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மறைந்த தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு ஒவ்வொரு முறையும் நிறைய பரிட்சைகள் வைப்பார். அவற்றில், அவர் தேறிய பின்தான் உயர்வு அளிப்பார். அப்படித்தான், கட்சியின் இளைஞர் அணி செயலராக, துணைப் பொதுச் செயலராக, பொருளாளராக, செயல் தலைவராக, தலைவராக உயர்வு பெற்றார்.

    நிர்வாகப் பொறுப்பிலும் மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக படிப்படியாக உயர்த்தப்பட்டார். தற்போது முதல்வராகி இருக்கிறார். அந்த வகையில், உதயநிதியும் போட்டியின்றி அனைவர் மனதிலும் நிறைந்திருக்கிறார். அவருக்கான உயரங்களும் விரைவில் போட்டியின்றி, அவருக்கு தானாகவே வந்து சேரும்.

    அவரது உழைப்பு என்பது சாதாரணமானது அல்ல. தந்தையை போல மகனும் உழைப்பு உழைப்பு என்று வாழ்ந்து கொண் டிருக்கிறார்.

    கருணாநிதி ஒருமுறை என்னிடம், பேரனின் புத்திக் கூர்மை மற்றும் அவர் பின்பற்றும் கொள்கை குறித்து வியந்து பாராட்டினார். அப்படி கருணாநிதியால் அன்றைக்கே அடையாளம் காட்டப்பட்டவர் தான் உதயநிதி. உயர்வுக்கு பொருத்தமானவர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி, “தளவாடி மலைப்பகுதி மக்களுக்கு புதிய குடிநீர் திட்ட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
    • கோரிக்கையும் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் உள்ள குடிநீர் திட்டப் பணிகள் குறித்தும், அதனை நிறைவேற்ற வலியுறுத்தியும், கோரிக்கைகளை வைத்தனர்.

    கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், மிருகண்டா நதி அணையை புனரமைக்க அரசு முன் வருமா? நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுமா? என்பது போன்ற கோரிக்கைகளை எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், "இந்த கோரிக்கைகளை அரசு விரைவில் நிறைவேற்றும்" என்று தெரிவித்தார்.

    பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி, "தளவாடி மலைப்பகுதி மக்களுக்கு புதிய குடிநீர் திட்ட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த கோரிக்கையும் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் (அ.தி.மு.க.), "அ.தி.மு.க. ஆட்சியில் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ரூ.1650 கோடியில் அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    தற்போது 91 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. எப்போது அந்த திட்டம் மக்கள் பயனடையும் வகையில் தொடங்கி வைக்கப்படும்" என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், "அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள போதிலும் காளிங்கராயன் அணையில் இருந்து 1.5 டி.எம்.சி. தண்ணீரை வரவழைக்க வேண்டி உள்ளது.

    தற்போது அணையில் தண்ணீர் இல்லாததால் தாமதமாகி உள்ளது. இருப்பினும் இன்னும் 15 நாளில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்" என்றார்.

    • மதுரைக்கு நீர் கொண்டு செல்லும் பணியை அ.தி.மு.க. ஆரம்பித்தாலும் கிணறு தோண்டும் அனுமதியை பெறாமல் இருந்தது.
    • கடந்த ஆட்சியில் 60 கிலோ மீட்டருக்கு பைப் லைன் போடாமல் விட்ட நிலையில் தற்போது அந்த பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும், மதுரை மாநகரில் சாக்கடை நீரும் குடிநீருடன் கலந்து வரக்கூடிய நிலையில் அரசு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கோரிக்கை வைத்தார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கம்பத்தில் இருந்து மதுரைக்கு நீர் கொண்டு செல்லும் பணியை அ.தி.மு.க. ஆரம்பித்தாலும் கிணறு தோண்டும் அனுமதியை பெறாமல் இருந்ததாகவும், 160 எம்.எல்.டி தண்ணீர் கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், கடந்த ஆட்சியில் 60 கிலோ மீட்டருக்கு பைப் லைன் போடாமல் விட்ட நிலையில் தற்போது அந்த பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், 15 கிலோ மீட்டர் பைப் லைன் போட வேண்டிய பணிகள் உள்ளதால் அந்த பணிகளும் விரைவில் நிறைவு பெற்று முதலமைச்சர் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பார் எனவும் கூறினார்.

    அப்போது குறுக்கீட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிச்சயமாக தண்ணீர் கிடைக்கும் என்றும், அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம். எனவே கவலைப்பட வேண்டாம் என கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

    • மிருகண்டா நதி அணையை புனரமைக்க அரசு முன்வருமா? என சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கேள்வி எழுப்பினார்.
    • அணையை பாதுகாக்க செய்ய வேண்டிய வழியையும் ஆய்வறிக்கையாக கொடுத்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் பதில்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கலசப்பாக்கம் தொகுதி, கலசப்பாக்கம் ஒன்றியம், மிருகண்டா நதி அணையை புனரமைக்க அரசு முன்வருமா எனவும், 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதலமடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு அந்த பணிகள் தொடங்கப்படுமா எனவும் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மிருகண்டா நதியை சீரமைக்க உலக வங்கியின் நிதி உதவியுடன் பணிகள் மேற்கொள்ள மத்திய நீர்வளத் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், Dam safety review மூலமும் அணையை பாதுகாக்க செய்ய வேண்டிய வழியையும் ஆய்வறிக்கையாக கொடுத்துள்ளோம் என்றும், அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

    • கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
    • மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவு பாதிக்கப்படும்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

    இதற்கு பதிலடி தெரிவிக்கும் வகையில், வேலூரில் செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துறை முருகன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எவ்வித பேச்சுவார்த்தை, சமரசம் செய்தாலும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்.

    மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவு பாதிக்கப்படும்.

    காவிரி பிரச்சினை குறித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முழுவதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம்.
    • அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை.

    சென்னை:

    கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அங்கு சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் உள்ளார்.

    கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்றிருந்தார். புதிதாக பதவி ஏற்ற கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி பிரச்சனையில் சுமூகமாக நடந்து கொள்ளும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

    ஆனால் பதவி ஏற்ற ஓரிரு நாளில் துணை முதல்-மந்திரி சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று வெளிப்படையாக பேசினார். அவரது பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சென்னையில் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்-மந்திரியான சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று தெரிவித்து இருக்கிறார்.

    இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். ஆனால் அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கால்டுவெல் இல்லத்திற்கு அமைச்சர் துரைமுருகன் சென்று பார்வையிட்டார்.
    • புதிய பஸ் நிலையம் அருகே அமைச்சர் துரைமுருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நெல்லை மாநகரத்தில் நடைபெறும் தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தார். இதற்காக நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் அங்கிருந்து குமரி மாவட்டத்தில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    திட்டப்பணிகள் ஆய்வு

    இன்று காலை அவர் நெல்லை மாவட்டத்திற்கு கார் மூலம் புறப்பட்டார். திசையன்விளை அருகே எம்.எல். தேரி பகுதியில் நடைபெற்று வரும் தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு இணைப்பு திட்ட பணிகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் திசையன்விளை அருகே இடையன்குடியில் உள்ள கால்டுவெல் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டார்.

    அதனைத் தொடர்ந்து நாங்குநேரி அருகே பரப்பாடி பகுதியில் நடைபெற்று வரும் நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான மூன்றாம் நிலை பணியினை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். தொடர்ந்து நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை விரைவுப் படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோ சனை நடத்தினர்.

    அப்போது அவருடன் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ். ஆர். ஜெகதீஷ், ஒன்றிய செய லாளர் ஆரோக்கிய எட்வின் உள்பட பலர் கலந்து கொ ண்டனர். அதன் பின்னர் நெல்லை அருகே பொன்னா க்குடி பகுதியில் நதிநீர் இணைப்பு திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆவுடையப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ் குமார் ஆதித்தன், ஆவின் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ஜான் ரவீந்தர், மாவட்ட துணை செய லாளர் தமயந்தி மற்றும் நிர்வாகிகள் செல்வ கருணாநிதி, சுடலை கண்ணு, ஜார்ஜ் கோசல், ரகுமான் உள்பட கலந்து கொண்டனர்.

    உற்சாக வரவேற்பு

    அதனைத் தொடர்ந்து நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் செண்டை மேளம் முழங்க நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அமைச்சர் துரைமுருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் விஜிலா சத்தியானந்த், எஸ்.வி.சுரேஷ், மாநகர துணை செயலாளரும், மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவருமான சுதா மூர்த்தி, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மாணவரணி ஆறுமுகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளி கையில் அமைச்சர் துரை முருகன் ஓய்வெ டுத்தார்.

    பொதுக்கூட்டம்

    இன்று மாலை டவுன் குளப்பிறை தெருவில் நடைபெற உள்ள தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்ட த்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதனை யொட்டி நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் மாநகர பகுதியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் நடந்ததாக யாரும் கருதவில்லை.
    • ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் இந்தமுறை ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக, தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். வேலூர் கதிர் ஆனந்த் எம்.பி, மாநகர செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

    கூட்டத்தில், முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, அடுத்த லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள முதலமைச்சர் அறிவித்தவாறு வாக்காளர் பட்டியலின்படி பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் தயாரிப்பது, கட்சியில் மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை இணைப்பது, ஈரோடு இடைத்தேர்தலில் வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பூத்களில் அதிக ஓட்டுகளை சேர்த்த தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கும் பாராட்டு தெரிவிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

    ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் நடந்ததாக யாரும் கருதவில்லை. அவகாசத்தின் அடிப்படையில் மேல்முறையீட்டுக்கு செல்லும் வாய்ப்பு இருந்தது. கோர்ட் கதவு திறக்கப்பட்டிருக்கிறது.

    ஆனால், அவர் அதை பயன்படுத்தும் முன்பாகவே அவசரமாக தண்டனை வழங்கியிருப்பது ஜனநாய கருத்துக்கு உகந்ததல்ல.

    ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டை மெஜாரிட்டியுடன் ஆளும் ஒரு கட்சி தனிமனிதனை கண்டு அஞ்சுகிறதோ என்ற எண்ணம் அரசியல் நோக்கர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எல்லா தலைவர்களுமே இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறியுள்ளனர்.

    ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் இந்தமுறை ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். இனி, அதை படுக்கைக்கு அடியிலேயே அவர் வைத்திருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளையும் அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார்.
    • தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியானது. தற்போதாவது மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பொன்னையில் தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், தமிழகத்தில் நிதிநிலை கடும் நெருக்கடியில் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அதனை சமாளித்து வருகிறோம். நிதி நெருக்கடியிலிருந்து மீட்கும் பணிகள் படிப்படியாகத்தான் நடக்கும். அதுவரையில் கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.

    முன்னதாக பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

    கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியானது. தற்போதாவது மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம். அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தெரியும். தமிழக கவர்னர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
    சென்னை:

    திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம், 28.05.2022 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசிக்கப்படுவதாக துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

    ×