search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assets case"

    • முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவர் மனைவி உள்ளிட்ட 11 பேர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை.

    தருமபுரி:

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவர் மனைவி மல்லிகா உள்ளிட்ட 11 பேர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதுதொடர்பாக 10 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்ற பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    கடந்த மாதம் 6-ம் தேதி அன்று கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், விசாரணை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் இன்று ஆஜாராக உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று அவரது உறவினர்கள் ரவிசங்கர், சரவணன், சரவணகுமார், மாணிக்கம், தனபால் ஆகிய 5 பேர் மட்டுமே விசாரணைக்கு ஆஜராகினர்.

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை. இந்த வழக்கு விசாரணையை நீதிபதி வரும் ஜனவரி 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளை ஏலம் விடக்கோரி மனு
    • முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    வழக்கு விசாரணை முடிவடைந்து, குற்றவாளிகள் தண்டனை அனுபவித்த நிலையில், அரசு வழக்கறிஞர் ஒருவரை நியமித்து சொத்துகள் ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அத்துடன் சொத்து குவிப்பு வழக்கில் என்னென்ன இணைக்கப்பட்டிருந்தன என்ற விவரங்கள் முழுவதையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என தமிழக லஞ்சத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில், தமிழக லஞ்சத்துறை அதிகாரிகள் சார்பில் ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியலை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பொருட்களை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளை அரசு வழக்கறிஞரிடம் இருந்து கேட்டறிந்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களின் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம், வைப்புநிதி உள்ளிட்ட விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.

    மனுதாக்கல் செய்திருந்த நபர், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சால்வை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஏலம் விட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி, சட்ட விரோதமாக சேர்த்த சொத்துகள் பட்டியலில் இல்லாததை ஏலம் விட முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

    ஜெயலலிதாகவின் ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை சட்டவிரோதமாக சேர்த்த சொத்து பட்டியலில் இல்லை.

    • சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார்.
    • 28 வகையான பொருட்களை பெற்ற பாஸ்கரன் யார்? என்ற கேள்வி எழுந்தது.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தாலும், சுப்ரீம் கோர்ட்டு அதை உறுதி செய்து தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து விடுதலை ஆகினர்.

    இந்த நிலையில் இந்த சொத்து குவிப்பு வழக்கில் 30 கிலோ தங்க, வைர நகைகள், புடவைகள், செருப்புகள் உள்பட 29 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி பெங்களூருவை சோ்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையின்போது, அரசு சிறப்பு வக்கீலாக கிரண் ஜவளி நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கில் ஆஜராகி வந்தார்.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர், அந்த சிறப்பு கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்து, தாங்கள் வாரிசுகள் என்பதால் ஜெயலலிதாவின் பொருட்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிடக் கோரினர். இந்த மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்த வழக்கு தொடர்பான பொருட்களில் கர்நாடக அரசிடம் தற்போது 30 கிலோ தங்கம், வைரம் போன்ற ஆபரணங்கள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 28 வகையான பொருட்கள் குறித்த தகவலை சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவிக்க வேண்டும் என்று வாய்மொழியாக நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே கடந்த 9-5-2023 அன்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்களை பெங்களூரு கோர்ட்டில் உடனடியாக ஒப்படைக்குமாறு அவர் கோரினார்.

    இந்த நிலையில் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி அதற்கு தபால் மூலம் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ''நீங்கள் கடந்த 9-5-2023 அன்று எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை.

    அதற்கு பதிலாக அந்த பொருட்கள் மதிப்பீட்டு பணிகளுக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட நபரான (நாமினி) பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக எங்களிடம் எதுவும் நிலுவையில் இல்லை''.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடிதத்தில் கூறப்பட்டுள்ள நபரான பாஸ்கரன் யார்? என்பது தெளிவாக கூறப்படவில்லை. ஏனென்றால், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் சகோதரியான ஸ்ரீதளா தேவியின் கணவரது பெயரும் பாஸ்கரன் (வயது 58). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 17-ந்தேதி மரணம் அடைந்தார்.

    இன்னொரு பாஸ்கரன், டி.டி.வி.தினகரனின் சகோதரர் ஆவார். ஆனால், இந்த இரு பாஸ்கரனிடமும் ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் ஒப்படைக்கப்படவில்லை. அப்படி என்றால், 28 வகையான பொருட்களை பெற்ற பாஸ்கரன் யார்? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பாஸ்கரன் என்பவரிடம்தான் 28 வகையான பொருட்களும் ஒப்படைக்கப்பட்டதாக ஜெயலலிதா தரப்பு வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.

    28 வகையான பொருட்கள் எவை?

    1.பட்டுப்புடவைகள்-11,344

    2.குளிர்சாதன எந்திரங்கள்-44

    3.தொலைபேசிகள்-33

    4.சூட்கேசுகள்-131

    5.கைக்கெடிகாரங்கள்-91

    6.சுவர்கெடிகாரங்கள்-27

    7.மின்விசிறிகள்-86

    8.அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள்- 146

    9.டீப்பாய்கள்-34

    10.மேஜைகள்-31

    11.மெத்தைகள்-24

    12.உடை அலங்கார டேபிள்கள்-9

    13.அலங்கார தொங்கும் மின்விளக்குகள்-81

    14.ஷோபா ஷெட்டுகள்-20

    15.செருப்புகள்-750 ஜோடிகள்

    16.உடை அலங்கார டேபிள் கண்ணாடிகள்-31

    17.மதுபானம் அருந்தும் கண்ணாடி டம்ளர்கள்-215

    18.இரும்பு பெட்டகங்கள்-3

    19.சால்வைகள்-250

    20.குளிர்பதன பெட்டிகள்-12

    21.டி.விக்கள்-10

    22.வி.சி.ஆர்.கள்-8

    23.வீடியோ கேமரா-1

    24.சி.டி.பிளேயர்கள்-4

    25.ஆடியோ பிளேயர்கள்- 2

    26. ரேடியோ பெட்டிகள்-24

    27.வீடியோ கேசட்டுகள்-1,040

    28. 700 கிலோ வெள்ளி பொருட்கள்.

    • ஆ.ராசா உள்ளிட்ட 5 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
    • குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியும், தற்போதைய நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015-ம் ஆண்டில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    7 ஆண்டுகள் விசாரணைக்குப்பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ் குமார், நண்பர் கிருஷ்ண மூர்த்தி, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள்டெக் பார்க் லிமிடெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்கள் மீது கடந்த மாதம் சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

    சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு நீதிபதி டி.சிவகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது, குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிடெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி, ஆ.ராசா உள்ளிட்ட 5 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக பிப்ரவரி 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    • சுப்ரீம் கோர்ட்டுக்கு சமூக ஆர்வலர் 2-வது முறையாக கடிதம் அனுப்பியுள்ளார்.
    • ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    பெங்களூரு :

    சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வரும்போது, ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் நீக்கப்பட்டது.

    இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர். அவர்கள் தண்டனை காலத்தை அனுபவித்து விட்டு வெளியே சென்றுவிட்டனர். இந்த வழக்கின்போது, ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த பட்டு சேலைகள், சால்வைகள், 750 ஜோடி செருப்புகள் ஆகிய பொருட்களும் அடங்கும்.

    இதில் சேலைகள், சால்வைகள், செருப்புகள் ஆகிய 3 பொருட்களும் சேதம் அடையும் வகையானவை என்பதால் அவற்றை ஏலம் விட வேண்டும் என்று கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, சுப்ரீம் கோர்ட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அந்த பொருட்கள் இதுவரை ஏலம் விடப்படவில்லை. இந்த நிலையில் இப்போது அவர் 2-வது முறையாக இதே கோரிக்கையை அதாவது அந்த 3 பொருட்களையும் ஏலம் விடக்கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கூறுகையில், 'ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் சேலைகள், செருப்புகள், சால்வைகள் ஏலம் விடப்படும் வரை நான் சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பி கொண்டே இருப்பேன்' என்றார்.

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. மாரிமுத்துவுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் 1996-2001-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் மாரிமுத்து. அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது குடும்பத்தினரையும் குற்றவாளிகளாக சேர்த்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட செசன்சு கோர்ட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, மாரிமுத்து, அவரது மனைவி துளசியம்மாள், மகன் பிரகாஷ் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், மாரிமுத்து உள்ளிட்ட 3 பேருக்கும் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைத்தும், தலா ரூ.5 லட்சம் பிணைத்தொகையுடன் 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.
    2006 முதல் 2017 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வத்தின் மீது அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #OPanneerSelvam
    சென்னை:

    தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். 6 மாதமாக அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதையடுத்து ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ‘6 மாதமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால் என்ன? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். தற்போது இந்த வழக்கு கோர்ட்டு விசாரணையில் இருக்கிறது.

    இந்த நிலையில் ஓ.பி.எஸ். மீது அறப்போர் இயக்கம் சார்பில் மேலும் ஒரு சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-


    போலீசில் சிக்கிய சேகர் ரெட்டியின் டைரியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியது.

    இந்தநிலையில் 2006 முதல் 2017 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வத்தின் மீது அறப்போர் இயக்கம் புகார் கொடுத்தது. தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குனரகத்திடம் அந்தப் புகாரை அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கொடுத்தார்.

    அதில் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்துள்ள சொத்து விவரங்கள் மற்றும் அதற்கான ஆவணங்களையும் அவர் வழங்கியுள்ளார். இதுபற்றி ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது:-

    2006-லிருந்து 2017 வரை ஓ.பன்னீர்செல்வம் குவித்துள்ள சொத்து விவரங்கள் அடங்கிய ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குனரகத்திடம் கொடுத்துள்ளோம்.

    2006-ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் ரூ.20 லட்சமே தன்னுடைய சொத்துக் கணக்கு என கணக்குக் காட்டியவர் எப்படி 106 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அந்த நிலம் அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன்கள் பெயரில் உள்ளது. அதற்கான ஆவணத்தை சமர்ப்பித்துள்ளோம்.

    மேலும் நான்கு மரைன் டிரான்ஸ் போர்ட் நிறுவனங்களில் அவர்களுடைய மகன்கள் இயக்குனர்களாக இருந்து வருகின்றனர். 2008-லிருந்து தான் இந்த நிறுவனங்களில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் முழுவதும் எப்படி இந்த நிறுவனத்துக்குள் வந்தது எனவும் கேள்வி எழுப்பினோம்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் பினாமியான சுப்புராஜ், பன்னீர் செல்வத்தின் ஏழு ஏக்கர் நிலத்தை விற்று அந்தப் பணத்தை பஞ்சாயத்துக்கு ஏன் கொடுத்தார்? அவருடைய பின்னணி என்ன? சொத்துக்கள் விவரங்கள் போன்றவற்றை இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.

    மேலும் அவருடைய பினாமிகளாக ஹரிச்சந்திரன் மற்றும் ஞானசேகரன் ஆகியோரைச் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்தச் சொத்துக்கள் அனைத்தும் லஞ்சம், ஊழல் செய்து ஓ.பன்னீர்செல்வம் சேர்த்துள்ளவையே. அவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளோம்’’ என்றார்.

    கடந்த டிசம்பர் மாதமே கொடுத்த இந்த புகார் மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு போடப்பட்டுள்ளது. இந்த மனு நாளை (திங்கள்) விசாரணைக்கு வருகிறது. #OPanneerSelvam
    தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SC #EVVelu
    புதுடெல்லி:

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மனைவி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக 11 லட்சத்துக்கும் மேல் சொத்து சேர்த்ததாக 2013-ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது.

    திருவண்ணாமலை கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

    இதை எதிர்த்து 2016-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.


    இதையடுத்து எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா, சந்தன கெளடா அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, திருவண்ணாமலை கீழமை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது சரியானதே என நீதிபதிகள் தெரிவித்தனர். எ.வ. வேலு மற்றும் அவரது மனைவி மீது அரசியல் பழி வாங்கும் நோக்கத்துடன் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளதாக கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். #SC #EVVelu #AssetsCase
    சொத்து குவிப்பு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான பொன்முடி வழக்கின் விசாரணை வரும் 31-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
    விழுப்புரம்:

    முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி பிரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    பொன்முடி இன்று கோர்ட்டில் ஆஜராகினார். அதன்பின்பு வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று மீண்டும் பொன்முடி ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் மணல் அள்ளியதில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் உள்பட 8 பேர் மீது, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கும் இன்று இதே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கோர்ட்டில் ஆஜரானார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி பிரியா இந்த வழக்கையும் 31-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று பொன்முடி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
    வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவித்த வழக்கில் மத்திய அரசு அதிகாரி, அவரது மனைவிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
    சென்னை:

    சென்னையில் உள்ள மத்திய கலால் வரித்துறை அலுவலகத்தில் தணிக்கை துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் முத்துக்குமாரசாமி. இவர் 1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை பணியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.40 லட்சத்து 21 ஆயிரத்துக்கு சொத்துகள் வாங்கி குவித்ததாக சி.பி.ஐ. அவர் மீதும், உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருஷ்ணாபாய் மீதும் வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள 14-வது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தி, இருவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், இருவருக்கும் சேர்த்து ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    சி.பி.ஐ. அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

    சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #KadaladiSathyamoorthyCase
    சென்னை:

    ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. முதன் முதலாக 1991-ம் ஆண்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கடலாடி சத்தியமூர்த்திக்கு ஜெயலலிதா அமைச்சர் பொறுப்பு வழங்கினார். வருவாய்த்துறை அமைச்சராக சத்தியமூர்த்தி 5 ஆண்டுகள் இருந்தார்.

    1991-1996-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது ஜெயலலிதா உள்பட அ.தி.மு.க. அமைச்சர்கள் சிலர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டபோது சத்தியமூர்த்தி மீதும் 1997-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வருமானத்துக்கு அதிகமாக ரூ. 83 லட்சம் சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியின் மனைவி சந்திராவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இறுதியில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியையும், அவரது மனைவி சந்திராவையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    சிறப்பு கோர்ட்டு தனது தீர்ப்பில் சத்தியமூர்த்தி, சந்திரா மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி இருந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சத்தியமூர்த்தி, சந்திரா இருவர் மீதான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டன. சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பை வெளியிட்டார்.

    முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி சொத்து குவித்து இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். அதுபோல சத்தியமூர்த்தியின் மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டார்.

    இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அபராத தொகை செலுத்த தவறினால் கூடுதல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் தர வேண்டும் என்று சத்தியமூர்த்தி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.

    ஆனால் இரு கோரிக்கைகளையும் ஏற்க நீதிபதி ஜெயச்சந்திரன் மறுத்து விட்டார். முதலில் ஆஜராகி பிறகு மேல்முறையீடு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே சத்தியமூர்த்தியும், அவரது மனைவியும் கோர்ட்டில் சரண் அடைந்து சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த கடலாடி சத்திய மூர்த்தி முதலில் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளில் ஒருவராக இருந்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்குக்கு பிறகு அவர் தனது அரசியல் நிலைப்பாட்டில் வேறு முடிவை எடுத்தார்.

    கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக அவர் கட்சியில் இருந்து விலக நேரிட்டதாக கூறப்பட்டது.

    மதுரையில் மு.க. அழகிரியை சந்தித்து தி.மு.க.வில் இணைந்த அவர் பிறகு தி.மு.க.வின் அனைத்து நடவடிக்கைகளிலும் தன்னை உட்படுத்திக் கொண்டார்.

    கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட தி.மு.க. மேலிடம் வாய்ப்பு வழங்கியது. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர் முருகனிடம் அவர் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    என்றாலும் அவர் தி.மு.க.வில் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரது அரசியல் வாழ்க்கைக்கு சறுக்கல் ஏற்படும் வகையில் அவருக்கு சொத்து குவிப்பு வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது. #KadaladiSathyamoorthyCase
    சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் கொண்டு வந்தது சசிகலா நகர்த்திய நகர்வுதான் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.#Deepa #Sasikala #AssetsCase
    சென்னை:

    மன்னார்குடியின் உண்மை ஜாதகம் என்ற தலைப்பில் ஜெ.தீபா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    குக்கரில் வேக வைத்து விசில் அடிக்கும் டி.டி.வி. தினகரன் 98 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் அவரிடம் இருப்பதாக சொல்லியுள்ளார். ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்-தி.மு.க. என கூட்டணியை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    2004-ம் ஆண்டு ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர்தான் இந்த தினகரன். அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அனைத்து பொறுப்புகளும் பிடுங்கப்பட்டது. அதனால் 98 சதவீதம் இல்லை. 100 சதவீதம் கூலிப்படையினர் மட்டுமே இவர் பின்னால் வருவார்கள்.


    2011-ம் ஆண்டு ஜெயலலிதா சசிகலா குடும்பத்தின் கூட்டு கொள்ளை சதியை முறியடித்து, பத்திரிகையாளர் சோ.ராமசாமி மற்றும் அப்போதைய டி.ஜி.பி. ராமானுஜம் மற்றும் பெங்களூர் உளவு பிரிவு போலீஸ் எச்சரிக்கையின் அடிப்படையில் காவல்துறை உதவியோடு சசிகலா மற்றும் அவரின் கூட்டாளிகள் 100-க்கும் மேற்பட்ட காவலர்களின் உதவியோடு போயஸ் தோட்டத்தை விட்டு போலீஸ் வேனில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அ.தி.மு.க.வை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்த சசிகலா குடும்பம் திக்குமுக்காடி, தி.மு.க.வின் உதவியை நாடியது. அதன்பிறகு சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் கொண்டு வந்தது சசிகலா நகர்த்திய நகர்வுதான். ஜெயலலிதா பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பூங்குன்றன் என்னை தொடர்பு கொண்டார்.

    நான் அவரை பெங்களூர் சிறையில் சந்தித்தேன். அத்தை என்னிடம் பேச கூடாது என்று சசிகலா சொன்னதால் காவலர்கள் என்னை ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்க தாமதித்தனர். அப்போது மாலை 6 மணி வரை காத்திருந்து திரும்பி சென்றேன். ஆறுமுகசாமி கமி‌ஷனை வைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. அரை வேக்காடு குக்கரை வைத்து கையாலாகாத தினகரனை வைத்து அ.தி.மு.க.வை ஆளவும் முடியாது.

    இவ்வாறு தீபா கூறியுள்ளார். #Deepa #TTVDhinakaran
    ×