search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrest warrant"

    • அரியலூர் அருகே வழிப்பறி கொள்ளை வழக்கில் கோர்டுக்கு வராத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு நீதிபதி உத்தரவு
    • இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது

    அரியலூர் 

    அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் தளவாய் போலிஸ் சரகம் முள்ளுக்குறிச்சி கிராமத்தை சார்ந்தவர் ராஜாராம் இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார், இவர் கடந்த 27.5.2019 அன்று 3மணியளவில் இருசக்கர வாகனத்தில் ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது 2 வாலிபர்கள் பின்தொடர்ந்து ராஜாராமை வழிமறித்து தாக்கி இருசக்கரவாகனத்தை பிடுங்கிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர், ராஜாராம் கொடுத்த புகார் கொடுத்ததின் பேரில் தளவாய் போலிசார் வழக்கு பதிவு செய்து கடலூர் மாவட்டம் கருங்குழி கிராமத்தை சார்ந்த சக்திவேல்(30), கடலூர் மாவட்டம் சின்னகொசப்பாளையம் கிராமத்தை சார்ந்த அஜய்(23) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர், இந்த வழக்கு செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது, அனைத்து சாட்சிகளும் விசாரனை முடிவுற்ற நிலையில் விசாரனை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கோர்ட்டு சம்மனை பெற்றுக்கொண்டு மார்ச்-23 அன்றைய தேதியிலிருந்து கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வரவில்லை, விசாரனை செய்த செந்துறை குற்றவியல் நிதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயகிருபா வழிப்பறி கொள்ளை வழக்கில் கோர்ட்டிற்கு சாட்சி சொல்ல வராத சண்முகசுந்தரத்திற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு 24ம் தேதி மாற்றப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

    • சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில், கடந்த 2020-ம் ஆண்டு, இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றி னார்.
    • வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை வருகிற 8-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில், கடந்த 2020-ம் ஆண்டு, இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றி னார். அப்போது, 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை காலகட்டத்தில நடந்த 6 சாலை விபத்து வழக்குகள் தொடர்பாக அவர் சேந்த மங்கலம் கோர்ட்டில் நடை பெற்று வரும் விசாரணை யில், இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார்.

    இதைத்தொடர்ந்து சேந்த மங்கலம் குற்றவியல் கோர்ட்டு நீதிபதி ஹரிஹ ரன், வழக்குகளில் ஆஜராகா மல் இருந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்கு மாரை வருகிற 8-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.தற்போது சதீஷ்குமார் சிவகங்கை மாவட்ட தெற்கு கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வருகிறார்.

    இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வளவன். அப்போது அங்கு நடந்த ஒரு வழக்கில், சேந்தமங்கலம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையில், இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து அவர் நாளை (6-ந் தேதி) சேந்த மங்கலம் கோர்ட்டில் ஆஜராக, நீதிபதி பிடிவா ரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன்.
    • வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி 13 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    நாமக்கல்:

    கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது அப்பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை தற்போது சேந்தமங்கலம் கோர்ட்டில் நடந்து வரு கிறது. வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி 13 முறை நோட்டீஸ் அனுப்பி யும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் மாதை யனுக்கு கோர்ட்டு நீதிபதி ஹரிஹரன் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தார்.

    • இம்ரான்கான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
    • எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு பிறப்பிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு பிறப்பிக்கப்பட்டது.

    எனினும் இந்த வழக்குகளில் அவர் ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தற்போது இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டின் நீதிபதி ஜெபா சவுத்ரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இஸ்லாமாபாத் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பான விசாரணைக்கு இம்ரான்கான் இதுவரை நேரில் ஆஜராகாத நிலையில் நேற்று அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி, அவரை ஏப்ரல் 18-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயா.
    • அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு சார்பில் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயா. இவர் மீது வேலூர் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு சார்பில் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனிடையே ஆஞ்சநேயா தேன்கனிகோட்டை கோர்ட்டில் வருகிற 31-ந்தேதி விசாரணைக்காக ஆஜர் ஆகவேண்டும் என்று நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

    • திருப்பத்தூர் கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தரவு
    • 6 மாதமாக ஆஜராகவில்லை

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம் பூரை அடுத்த உமராபாத் போலீஸ் நிலைய எல்லைக்குட் பட்ட தேவலாபுரம் புதுமனை பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு பார்த்திபன் என்பவர்கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக காளிதாஸ் என்பவர்கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.

    கொலை நடந்தபோது உம ராபாத் போலீஸ் இன்ஸ்பெக் டர்களாககோகுல்ராஜ் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். அவர் களில் கோகுல்ராஜ் தற்போது ஆரணி டவுன் இன்ஸ்பெக்ட ராகவும், பாலசுப்பிரமணி வேலூரில் காத்திருப்போர் பட்டியலிலும் உள்ளனர்.

    கொலை வழக்கில் சாட்சி சொல்ல ஆஜராகும்படி இன்ஸ்பெக்டர்கள் 2 பேருக் கும் பலமுறை சம்மன் அனுப்பியும் கடந்த 6 மாதமாக ஆஜராகவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர்கள் கோகுல் ராஜ், பாலசுப்பிரமணி ஆகியோர் வழக்கம்போல ஆஜராகவில்லை.

    இதனால் கூடுதல் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி, இன்ஸ் பெக்டர்கள் 2 பேருக்கும் பிடி வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

    • வழக்கு விசாரணைக்கு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் கோர்ட்டில் ஆஜராகமல் இருந்து வந்தார்.
    • இதையடுத்து நீதிபதி தயாநிதி, இன்ஸ்பெக்டர் சோமசுந்ரம் கோர்ட்டில் ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்தார்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சுண்டப் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 84). விவசாயி. இவருக்கும் அவரது மகன்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது வந்தது. இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி பழனிசாமி வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர். இதில் அவரது பேரன் உள்பட சிலர் சொத்துக்காக பழனி சாமியை கொலை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது 17 வயது பேரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை கோபி செட்டிபாளையம் 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரு கிறது.

    இந்த வழக்கின் விசார ணை அதிகாரியாக அப்போதைய கோபிசெட்டி பாளையம் போலீஸ் இன்ஸ் இன்ஸ்பெக்டர் சோம சுந்தரம் இருந்து வந்தார். சோமசுந்தரம் தற்போது ஈரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு சோம சுந்தரம் கோர்ட்டில் ஆஜரா கமல் இருந்து வந்தார். இதையடுத்து நேற்று மீண்டும் இது குறித்து வழக்கு விசாரணை கோபி செட்டிபாளையம் கோர்ட்டில் நடந்தது. ஆனால் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆஜராகமல் இருந்தார்.

    இதையடுத்து நீதிபதி தயாநிதி, இன்ஸ்பெக்டர் சோமசுந்ரம் கோர்ட்டில் ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்தார்.

    பணமோசடி வழக்கில் இந்திய அரசால் தேடப்படும் தொழிலதிபர் நிரவ் மோடி மீதான குற்றச்சாட்டை ஆய்வு செய்த லண்டன் நீதிமன்றம், அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது. #NiravModiExtradition #LondonCourt
    லண்டன்:

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    தப்பி ஓடிய நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பதாக தெரியவந்தது. அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்தது.

    அத்துடன் நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.



    இதையடுத்து நிரவ் மோடி விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. அவரை கைது செய்தபிறகு, வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கின் விசாரணை தொடங்கும். நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிடும்.  #NiravModiExtradition #LondonCourt
    செக் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் நெப்போலியனுக்கு கரூர் கோர்ட்டு பிடிவாரண்டு அனுப்பியுள்ளது. #ActorNapoleon
    கரூர்:

    கரூர் காமராஜபுரம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 44). நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர் நடிகர் கவுதம் கார்த்திக், நெப்போலியன் ஆகியோர் நடித்த முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்திற்காக ரூ.1 கோடியே 10 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் அந்த படம் வெளியானபோது, ரூ.53 லட்சத்து 54 ஆயிரத்தை கோபால கிருஷ்ணனுக்கு திருப்பி செலுத்த வேண்டிய சூழல் இருந்தது. அப்போது நெப்போலியன் அந்த பணத்திற்கு பொறுப்பேற்று தருவதாக கூறியுள்ளார்.

    பின்னர் ரூ.25 லட்சத்தை திருப்பி செலுத்தினார். மீதமுள்ள ரூ.28 லட்சத்து 54 ஆயிரத்திற்கான காசோலையை, கோபாலகிருஷ்ணனுக்கு கொடுத்திருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட வங்கியில் அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியது.

    இதனால் ஏமாற்றமடைந்த கோபாலகிருஷ்ணன், இதுதொடர்பாக நெப்போலியன் மீது, கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்காக 5 முறைக்கு மேல் நெப்போலியனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரகோத்தமன், வழக்கில் ஆஜராகாத நெப்போலியனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை மே மாதம் 31-ந்தேதிக்கும் ஒத்திவைத்தார்.

    இதனிடையே வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி நெப்போலியன் தரப்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. #ActorNapoleon
    ஜோகன்ஸ்பர்க் ஓட்டலில் மாடல் அழகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேவின் மனைவியை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. #GraceMugabe
    ஹராரே:

    ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்தவர் ராபர்ட் முகாபே. அவருக்கு தற்போது 94 வயது ஆகிறது.

    கடந்த ஆண்டு புரட்சி மூலம் அவரது ஆட்சி அகற்றப்பட்டது. ராபர்ட் முகாபேவியின் 2-வது மனைவி கிரேஸ் முகாபே. 53 வயதான இவர் ராபர்ட் முகாபேவின் செயலாளராக இருந்து வந்தார். 1996-ல் ராபர்ட் முகாபே கிரேசை திருமணம் செய்து கொண்டார்.

    அதன்பிறகு கிரேசை அதிபராக்க முகாபே முயற்சி செய்தார். இதனால் தான் அவரது ஆட்சியை புரட்சி மூலம் வெளியேற்றினார்கள்.

    தற்போது ராபர்ட் முகாபே சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் கிரேசும் இருப்பதாக தெரிகிறது. கிரேஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜோகன்ஸ்பர்க் ஓட்டலில் மாடல் அழகி கேபரில்லா என்பரை தாக்கினார்.

    தாக்கப்பட்ட மாடல் அழகி.

    மின்சார வயரால் சரமாரியாக தாக்கியதாகவும், இதில் காயம் அடைந்ததாகவும் கேபரில்லா கூறினார். அதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் கிரேஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கிரேசுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.

    இதையடுத்து ஜிம்பாப்வே போலீசார் சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரை கைது செய்வதற்காக வாரண்டை சர்வதேச அளவில் வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே கிரேஸ் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. #GraceMugabe
    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக இருப்பதாக வெளியான குற்றச்சாட்டை அமித் ஷா மறுத்துள்ளார். #AmitShah #ChandrababuNaidu #GodavariProtest
    ஐதராபாத்:

    மகாராஷ்டிரா-ஆந்திரா இடையே கோதாவரி நதிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. 2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கோதாவரியில் நான்டெட் மாவட்டம் பாப்லி என்ற இடத்தில் புதிதாக அணை கட்டும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு செயல்படுத்தியது.

    இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய சந்திரபாபு நாயுடு மற்றும் எம்எல்ஏக்கள், மகாராஷ்டிர மாநிலத்திற்குள் நுழைய முயன்றபோது மகாராஷ்டிர போலீசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கும் மகாராஷ்டிர கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக பின்னணியில் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த குற்றச்சாட்டை பாஜக தலைவர் அமித் ஷா மறுத்துள்ளார்.



    இதுபற்றி ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அமித் ஷா, சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததன் பின்னணியில் பாஜக இல்லை என்றும், தேர்தல் நேரங்களில் மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும் தெரிவித்தார்.

    சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, மத்தியிலும் மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது என்றும் அமித் ஷா கூறினார். #AmitShah #ChandrababuNaidu #GodavariProtest
    2010-ம் ஆண்டு தடையை மீறி நுழைந்த வழக்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட 16 பேருக்கு மகாராஷ்டிரா மாநிலம் துர்ஹமபாத் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. #TDP #ChandrababuNaidu
    மும்பை:

    கோதாவரி ஆற்றின் குறுக்கே நான்ந்டெட் பகுதியில் மகாராஷ்டிரா அரசு பாப்லி என்ற அணையை கட்டியது. 2010-ம் ஆண்டு இந்த அணை கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு (தற்போது ஆந்திர முதல்வர்) தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் அணைய முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தார்.

    இதனை அடுத்து, அப்பகுதியில் மகாராஷ்டிரா அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. தடையை மீறி நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உள்பட 30 எம்.எல்.ஏ.க்கள் 8 எம்.பி.க்கள் ஆகியோர் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு துர்ஹமபாத் கோர்டில் நடந்து வரும் நிலையில் பல முறை சந்திரபாபு நாயுடு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

    ஆனால், அவர் ஆஜராகாததால் இன்று சந்திரபாபு நாயுடு உள்பட 16 பேருக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். 
    ×