search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrest warrant"

    • வழக்கில் சாட்சியம் அளிக்க சோனுவை கோர்ட்டுக்கு வரவழைக்க சம்மன் அனுப்பினர்.
    • அவர் சாட்சியம் அளிக்க கோர்ட்டில் ஆஜராகாததால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    லூதியானா:

    பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக லூதியானா ஐகோர்ட் நீதிபதி ராமன்பிரீத் கவுர் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார்.

    லூதியானாவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் கன்னா. இவர் மோகித் சுக்லா என்பவர்மீது 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்தார். அதில், அவர் போலி ரிஜிகா நாணயத்தில் முதலீடு செய்ய வற்புறுத்தப்பட்டதாகக் கூறியிருந்தார்.

    இதுதொடர்பான வழக்கு லூதியானா கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க சோனு சூட்டுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

    இந்நிலையில், சாட்சியம் அளிக்க கோர்ட்டில் ஆஜராகாத நிலையில், சோனு சூட்டுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    சோனு சூட்டுக்கு முறைப்படி சம்மன் அல்லது வாரண்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கலந்துகொள்ளத் தவறிவிட்டார். எனவே சோனு சூட்டை கைதுசெய்து ஆஜர்படுத்தும்படி லூதியானா கோர்ட் உத்தரவிட்டது.

    • ஜிதேந்திர யாதவ் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் போலீசாரை தடுக்க முயன்றதால் கலவரமாக சூழல் ஏற்பட்டது.
    • சம்பவத்தில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.

    பீகாரில் வர தட்சணை வழக்கில் குற்றவாளியை கைது செய்ய சென்ற போலீசாரை தடுத்து உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள லஹேரியசராய் பகுதியில் உள்ள அபண்டா கிராமத்தில் வசிக்கும் ஜிதேந்திர யாதவை நீதிமன்ற பிடிவாரண்ட் படி கைது செய்ய நேற்று போலீஸ் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது.

    அப்போது ஜிதேந்திர யாதவ் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் போலீசாரை தடுக்க முயன்றதால் கலவரமாக சூழல் ஏற்பட்டது.

    சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றில், ஒரு பெரிய கும்பல் காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசி துப்பாக்கிகளை பறிக்க முயற்சிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர யாதவ் வீட்டிற்கு போலீசார் வருவதைத் தடுக்க, அவர்கள் பிரதான சாலையில் டயர்களை எரித்து மறிக்க முயன்றனர்.

    சம்பவத்தில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 3 அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    போலீசாரின் கூற்றுப்படி, தாக்குதலை நிறுத்தவும் கூட்டத்தை கலைக்கவும் கூடுதல் பாதுகாப்பு படையினர் குழு அனுப்பப்பட்டது.

    இதுகுறித்து பேசிய தர்பங்கா துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) அமித் குமார், உள்ளூர் மக்கள் கூட்டத்தில் குழந்தைகள் இருந்தனர்.

    அதனால் நாங்கள் அவர்களை நோக்கி அதிகம் சுடவில்லை. அவர்கள் பாதுகாப்புப் பணியாளர்கள் மீது கற்களை வீசினர். இருப்பினும், லேசான சக்தியைப் பயன்படுத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று கூறினார்.

    இதற்கிடையே கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ஜிதேந்திர யாதவ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிபர் பதிவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
    • நீதிமன்றமும் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.

    தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கான கைது வாரண்டிற்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி ராணுவ சட்டத்தை விதிப்பதற்கான தனது முடிவை யூன் சுக் அறிவித்த நிலையில், அவர் அதிபர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து அவர்மீது அந்நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாகவே அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அதனை நீதிமன்றமும் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.

    கைது வாரண்ட் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை உயர் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதற்கான உத்தரவை சியோல் மேற்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

    தென் கொரியாவில் அதிபருக்கு எதிராக வழங்கப்பட்ட முதல் கைது வாரண்ட் இது என்று அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ராணுவ சட்டத்தை கொண்டு வர முயன்றதை எதிர்த்து தென் கொரிய புலனாய்வாளர்கள் யூன் சுக் கைது செய்யப்பட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கைது வாரண்ட் பிறப்பிக்க கோரிக்கை விடுத்தனர்.

    • தேனியில் தங்கி இருந்த சவுக்கு சங்கர், கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர்.
    • கடந்த சில விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜராகவில்லை.

    மதுரை:

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    தேனியில் தங்கி இருந்த அவர், கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் அவர் கைதானார். கஞ்சா பதுக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு மதுரை போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கு விசாரணையின்போது சவுக்கு சங்கர் ஆஜராகி வந்தார். கடந்த சில விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி செங்கமல செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதும் சவுக்கு சங்கர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் சவுக்கு சங்கரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • இஸ்ரேல் அளித்த அறிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம் மூவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
    • இஸ்ரேல் மனிதநேய விரோத செயல்களில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த காசா இனப்படுகொலை வழக்கில் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கேலன்ட், ஹமாஸ் தலைவர் முகமது தியாப் ஆகியோருக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பாலஸ்தீன மக்களின் மரணம் தொடர்பாக இஸ்ரேல் அளித்த அறிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம் மூவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    போர் என்ற பெயரில் இஸ்ரேல் மனிதநேய விரோத செயல்களில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட 124 ICC உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டிற்குள் இவர்கள் நுழைந்தால் கைது செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.

    • நீதி மன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.

    அரியலூர்:

    2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மீதும் வெங்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதற்கான குற்றபத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக அரியலூர் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆஜராகாமல் இருந்துள்ளார்.

    இதனால் அவர் மீது அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்நீதி மன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி அரியலூர் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

    போக்குவரத்திற்கு இடையூறாக பொதுமக்கள் பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அரியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாராணைக்கு ஆஜராகாத கந்தர்வக் கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. சின்னதுரைக்கும் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வாரன்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட் பிறப்பிப்பு.
    • ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாயார், எடியூரப்பா மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான இது தொடர்பான வழக்கை கர்நாடக மாநில டிஜபி, சிஐடி-க்கு மாற்றினார்.

    சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் எடியூரப்பா சிஐடி முன் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட்-ஐ பிறப்பித்துள்ளது. இதனால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், எடியூரப்பாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பிடிவாரண்டுக்கு எதிராக எடியூரப்பா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச படம் வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. இந்த வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள பிரஜ்வலை கைது செய்ய சர்வதேச அளவில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பிரஜ்வல் ஆபாச வீடியோவை வெளியிட்டது தொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் பா.ஜ.க. பிரமுகர் வக்கீல் தேவராஜ கவுடா ஆகியோர் மீது சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் தேவராஜ கவுடா கைது செய்யப்பட்டார். இதற்கிடையே ஆபாச படங்கள் வெளியான இணையதளங்கள் குறித்த பட்டியலை சேகரித்து அவற்றை நீக்க சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த ஆபாச படங்கள் இருந்தால் அழிக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

    தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரஜ்வல் கர்நாடகாவில் யார், யாருடன் தொடர்பில் இருந்து வருகிறார் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில்,பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிறப்பு புலனாய்வு குழுவின் கோரிக்கையை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஐந்து முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஏற்கனவே ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • அரியலூர் அருகே வழிப்பறி கொள்ளை வழக்கில் கோர்டுக்கு வராத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு நீதிபதி உத்தரவு
    • இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது

    அரியலூர் 

    அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் தளவாய் போலிஸ் சரகம் முள்ளுக்குறிச்சி கிராமத்தை சார்ந்தவர் ராஜாராம் இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார், இவர் கடந்த 27.5.2019 அன்று 3மணியளவில் இருசக்கர வாகனத்தில் ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது 2 வாலிபர்கள் பின்தொடர்ந்து ராஜாராமை வழிமறித்து தாக்கி இருசக்கரவாகனத்தை பிடுங்கிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர், ராஜாராம் கொடுத்த புகார் கொடுத்ததின் பேரில் தளவாய் போலிசார் வழக்கு பதிவு செய்து கடலூர் மாவட்டம் கருங்குழி கிராமத்தை சார்ந்த சக்திவேல்(30), கடலூர் மாவட்டம் சின்னகொசப்பாளையம் கிராமத்தை சார்ந்த அஜய்(23) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர், இந்த வழக்கு செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது, அனைத்து சாட்சிகளும் விசாரனை முடிவுற்ற நிலையில் விசாரனை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கோர்ட்டு சம்மனை பெற்றுக்கொண்டு மார்ச்-23 அன்றைய தேதியிலிருந்து கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வரவில்லை, விசாரனை செய்த செந்துறை குற்றவியல் நிதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயகிருபா வழிப்பறி கொள்ளை வழக்கில் கோர்ட்டிற்கு சாட்சி சொல்ல வராத சண்முகசுந்தரத்திற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு 24ம் தேதி மாற்றப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

    • சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில், கடந்த 2020-ம் ஆண்டு, இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றி னார்.
    • வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை வருகிற 8-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில், கடந்த 2020-ம் ஆண்டு, இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றி னார். அப்போது, 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை காலகட்டத்தில நடந்த 6 சாலை விபத்து வழக்குகள் தொடர்பாக அவர் சேந்த மங்கலம் கோர்ட்டில் நடை பெற்று வரும் விசாரணை யில், இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார்.

    இதைத்தொடர்ந்து சேந்த மங்கலம் குற்றவியல் கோர்ட்டு நீதிபதி ஹரிஹ ரன், வழக்குகளில் ஆஜராகா மல் இருந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்கு மாரை வருகிற 8-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.தற்போது சதீஷ்குமார் சிவகங்கை மாவட்ட தெற்கு கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி வருகிறார்.

    இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வளவன். அப்போது அங்கு நடந்த ஒரு வழக்கில், சேந்தமங்கலம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையில், இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து அவர் நாளை (6-ந் தேதி) சேந்த மங்கலம் கோர்ட்டில் ஆஜராக, நீதிபதி பிடிவா ரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன்.
    • வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி 13 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    நாமக்கல்:

    கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாதையன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது அப்பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை தற்போது சேந்தமங்கலம் கோர்ட்டில் நடந்து வரு கிறது. வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி 13 முறை நோட்டீஸ் அனுப்பி யும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் மாதை யனுக்கு கோர்ட்டு நீதிபதி ஹரிஹரன் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தார்.

    • இம்ரான்கான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
    • எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு பிறப்பிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு பிறப்பிக்கப்பட்டது.

    எனினும் இந்த வழக்குகளில் அவர் ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தற்போது இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டின் நீதிபதி ஜெபா சவுத்ரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இஸ்லாமாபாத் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பான விசாரணைக்கு இம்ரான்கான் இதுவரை நேரில் ஆஜராகாத நிலையில் நேற்று அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி, அவரை ஏப்ரல் 18-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ×