search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோர்ட்டில் ஆஜர் ஆகாத வாலிபருக்கு பிடிவாரண்டு
    X

    கோர்ட்டில் ஆஜர் ஆகாத வாலிபருக்கு பிடிவாரண்டு

    • ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயா.
    • அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு சார்பில் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயா. இவர் மீது வேலூர் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு சார்பில் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனிடையே ஆஞ்சநேயா தேன்கனிகோட்டை கோர்ட்டில் வருகிற 31-ந்தேதி விசாரணைக்காக ஆஜர் ஆகவேண்டும் என்று நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

    Next Story
    ×