என் மலர்
நீங்கள் தேடியது "சொத்துகுவிப்பு வழக்கு"
- ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு.
- சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது.
தி.மு.க.வின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளரான துரைமுருகன், நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
இவர், கடந்த 1996- 2001ம் ஆண்டு வரை நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் செயல்பட்டு வந்தபோது, தனது வருமானத்துக்கு மீறி அதிக சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது, அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு வேலூர் முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2007ல் அமைச்சர் துரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவின்கீழ், துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக விசாரணையை துவங்கி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு கோர்ட்டுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி இருவரும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து துரைமுருகனின் மனைவி நேரில் ஆஜராகி பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரினார். இதனை தொடர்ந்து அவரது பிடிவாரண்ட்டை நீதிமன்றம் ரத்து செய்தது.
ஆனால், துரைமுருகன் இன்று ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிரான பிடிவாரண்ட்டை வருகிற 15-ம் தேதி அமல்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- குற்றவியல் விசாரணை முறை சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, இந்த ஐகோர்ட்டு செயல்பட்டுள்ளது.
- ஒரு குற்ற வழக்கில், போலீசாரும், குற்றம்சாட்டப்பட்டவர்களும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது.
சென்னை:
சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் வேலூர் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
ஆனால், இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கக்கூடாது. வேறு நீதிபதிதான் விசாரிக்க வேண்டும். சொத்துகுவிப்பு வழக்கை விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு மாற்றி ஐகோர்ட்டு நிர்வாக உத்தரவு சரியில்லை என்று கூறுவதால், ஐகோர்ட்டு பதிவுத்துறையையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பிலும், பொன்முடி தரப்பிலும் வாதிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
பொன்முடி, விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து வேலூர் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் உள்ள நிலையில், இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதால், மேல்முறையீடு செய்யும் தங்களது உரிமை தடுக்கப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது.
குற்றவியல் விசாரணை முறை சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, இந்த ஐகோர்ட்டு செயல்பட்டுள்ளது. இதனால், போலீசாரின் மேல்முறையீடு செய்யும் உரிமை எதுவும் பறிக்கப்படவில்லை.
மேலும், தாமாக முன்வந்து எடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் முடிவு ஒருவேளை கீழ் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக அமைந்தால், அது போலீசாருக்கு சாதகமானது தானே? ஆனால், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கோரிக்கை வியப்பாக உள்ளது.
இந்த வழக்கில் ஐகோர்ட்டு நிர்வாக உத்தரவை குற்றம்சாட்டுவதால், ஐகோர்ட்டு பதிவுத்துறையை வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டு, தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள ஐகோர்ட்டுக்கு வலிமை இருக்கும்போது, ஐகோர்ட்டின் நிர்வாக தரப்புக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசாரும், பொன்முடி தரப்பும் எதற்காக மெழுகுவர்த்தி ஏந்தி வெளிச்சம் காட்ட வேண்டும்.
ஒரு குற்ற வழக்கில், போலீசாரும், குற்றம்சாட்டப்பட்டவர்களும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது. ஆனால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் தோளில் அமர்ந்துகொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் துப்பாக்கியால் சுடுவது போல, ஒரே கோரிக்கையை முன்வைப்பது மர்மமாக உள்ளது. எனவே, இவர்களது கோரிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறேன்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது அரசுக்கும், பொன்முடிக்கும், ஐகோர்ட்டு நிர்வாகத்துக்கும் எதிராக கருத்து தெரிவித்துள்ளதால், இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறேன்.
அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குகளின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பதால், கடந்த சில நாட்களாக ஒரு தரப்பினர் எதிரான எண்ணத்தில் உள்ளனர், ஆனால், விசாரணைக்கு எடுத்தது ஒரு நீதிபதி அல்ல. ஐகோர்ட்டு என்ற அமைப்பு என்பதை அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
குற்றவியல் வழக்கு விசாரணை என்பது தூய்மையாக, கறைபடியாதவாறு இருக்க வேண்டும். அதுபோல, இந்த ஐகோர்ட்டு உத்தரவு, தனிப்பட்ட நீதிபதிகளுக்கு எதிராகவும் இல்லை.
எனவே, லஞ்ச ஒழிப்பு போலீசார், பொன்முடி ஆகியோர் தரப்பினர் விடுத்த கோரிக்கை அனைத்தையும் நிராகரிக்கிறேன்.
இந்த வழக்கில் பதில் அளிக்க எதிர்தரப்புகளுக்கு அவகாசம் தேவைப்படும். அதேநேரம், அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், எந்தெந்த நீதிபதிகள், எந்தெந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து, தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார். அப்போது, எம்.பி.., எம்.எல்.ஏ., வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும். இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 9-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- ரூ.45.14 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட 9 மாவட்டங்களில் 11 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகள் என ஒட்டு மொத்தமாக 56 இடங்களில் ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 120-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பெங்களூரு மாநகராட்சியில் கெங்கேரி மண்டலத்தில் வருவாய்த்துறை அதிகாரியாக இருந்து வரும் பசவராஜ் மாகி வீட்டிலும் லோக் ஆயுக்தா சோதனை நடந்தது.
மேலும் பெங்களூரு, கலபுரகியில் உள்ள பசவராஜ் மாகிக்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன. அவரது வீடுகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், பணம் சிக்கியது.
மேலும் அவருக்கு பெங்களூருவில் 5 வீடுகளும், கலபுரகியில் தனது பெயர் மற்றும் சகோதரி பெயரில் 5 வீடுகள் வாங்கியதற்கான சொத்து ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கியது. இதுதவிர பசவராஜ் மாகியின் தாய் பெயரில் 50 ஏக்கர் நிலம் இருப்பதும் தெரியவந்தது.
பெங்களூரு வடக்கு தாலுகா தாசனபுரா கிராம பஞ்சாயத்து செயலாளர் ஜெகதீசுக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள வீடு, ஹாசன் மாவட்டத்தில் உள்ள வீட்டிலும் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி பணம், வாகனங்கள், நகைகள், சொத்து ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
மேலும் மண்டியாவில் ஓய்வு பெற்ற என்ஜினீயர் சிவராஜ், அவரது உறவினர் வீட்டிலும், மைசூரு மாவட்டத்தில் நீர்ப்பாசனத்துறை என்ஜினீயராக இருந்து வரும் மகேஷ், பெலகாவி மாவட்டத்தில் நிர்மிதி மையத்தின் திட்டமிடுதல் அதிகாரி சேகரகவுடா, ராமநகர் மாவட்டம் ஆரோஹள்ளி தாசில்தார் விஜியண்ணா, பெலகாவி மாவட்ட பஞ்சாயத்து உதவி என்ஜினீயர் மகாதேவ் பன்னூர், ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித் துறை என்ஜினீயர் ஜெகதீஷ் ஆகியோரின், வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தாவணகெரே மாவட்டத்தில் தொழில்துறை என்ஜினீயராக பணியாற்றி வரும் உமேஷ், அதே மாவட்டத்தில் மின்வாரிய என்ஜினீயராக இருந்து வரும் பிரபாகர், சித்ரதுர்கா மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு என்ஜினீயரான ரவீந்திராவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் போலீசார் சோதனை நடத்தி, தங்க நகைகள், பொருட்கள், சொத்து ஆவணங்களை கைப்பற்றி எடுத்துs சென்றுள்ளனர்.
லோக் ஆயுக்தா போலீசார் சோதனைக்கு உள்ளான 11 அரசு அதிகாரிகளும் தங்களது வருமானத்தை விட சட்டவிரோதமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவித்து இருப்பது தெரியவந்துள்ளது.
11 அதிகாரிகள் வீடுகளில் இருந்தும் ரூ.45.14 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக லோக் ஆயுக்தா போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து லோக் ஆயுக்தா போலீசார் கூறியதாவது:-
கர்நாடக மாநிலம் முழுவதும் 11 அதிகாரிகளுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், அவர்களது உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக் கணக்கான மதிப்புள்ள நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சோதனை நடத்தப்பட்ட அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக பல மடங்கு சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுதவிர வங்கி லாக்கர் களிலும் பணம், நகை பதுக்கி வைத்திருந்தனர். அவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பல்வேறு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 11 அதிகாரிகள் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கர்நாடகாவில் வால்மீகி மாநகராட்சி ஊழல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிகாரிகள் வீடுகளில் இருந்து கோடிக் கணக்கான சொத்துக்களை லோக் ஆயுக்தா போலீசார் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பொருட்கள் ஏலம் விடுவதற்கு தடை நீடிப்பு.
- விசாரணை ஜனவரி 3-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.
பெங்களூரு:
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் கர்நாடக அரசு வசம் உள்ளது. அந்த பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை ஜெயலலிதாவின் அபராத தொகையை செலுத்தும்படி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி கர்நாடக அரசுக்கு அந்த கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே ஜெயலலிதாவின் வாரிசு என்பதால் அவரது பொருட்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஜெ.தீபா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து அவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபாவின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசின் சிறப்பு வக்கீல் கிரண் ஜவளி ஆஜரானார்.
அப்போது அவர், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜராகி வாதிட மூத்த வக்கீல் சந்தேஷ் சவுட்டா தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு கடிதத்தை நீதிபதியிடம் வழங்கினார். அதை நீதிபதி சிவசங்கர அமரன்னவர் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற ஜனவரி மாதம் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
எனவே ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்கள் ஏலம் விடுவதற்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.






