என் மலர்
நீங்கள் தேடியது "asset hoarding case"
- வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
- இதையடுத்து நாளை கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அப்போது அவரது வீட்டில் இருந்து 11,344 புடவைகள், 750 காலணிகள், 91 கை கடிகாரம், 28 கிலோ மதிப்பிலான 468 வகையான தங்கம், வைர நகைகள் மற்றும் 700 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு கர்நாடக வுக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேரும் சிறை தண்டனையை அனுபவித்தனர்.
இந்த சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ஏலம் மூலம் விற்று அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த பொருட்களை நாளை, நாளை மறுநாள் (7-ந் தேதி)தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி நாளை (புதன்கிழமை) ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைக்க உள்ளது. இதற்காக மாநில அரசு தன்வசம் உள்ள பொருட்களை ஒப்படைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த பொருட்களை பெற்றுக்கொள்ள தமிழக, உள்துறை அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு பெங்களூரு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் நகைகள் மற்றும் உடமைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். 6 பெரிய டிரங்கு பெட்டிகளில் அந்த பொருட்கள் கண்டெய்னர் லாரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் இவை அனைத்தையும் பதிவு செய்ய வீடியோகிராபரும் அழைத்துச் செல்லப்படுகிறார்.
இதையடுத்து நாளை கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- ரூ.45.14 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட 9 மாவட்டங்களில் 11 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் நேற்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகள் என ஒட்டு மொத்தமாக 56 இடங்களில் ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 120-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பெங்களூரு மாநகராட்சியில் கெங்கேரி மண்டலத்தில் வருவாய்த்துறை அதிகாரியாக இருந்து வரும் பசவராஜ் மாகி வீட்டிலும் லோக் ஆயுக்தா சோதனை நடந்தது.
மேலும் பெங்களூரு, கலபுரகியில் உள்ள பசவராஜ் மாகிக்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன. அவரது வீடுகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், பணம் சிக்கியது.
மேலும் அவருக்கு பெங்களூருவில் 5 வீடுகளும், கலபுரகியில் தனது பெயர் மற்றும் சகோதரி பெயரில் 5 வீடுகள் வாங்கியதற்கான சொத்து ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கியது. இதுதவிர பசவராஜ் மாகியின் தாய் பெயரில் 50 ஏக்கர் நிலம் இருப்பதும் தெரியவந்தது.
பெங்களூரு வடக்கு தாலுகா தாசனபுரா கிராம பஞ்சாயத்து செயலாளர் ஜெகதீசுக்கு சொந்தமான பெங்களூருவில் உள்ள வீடு, ஹாசன் மாவட்டத்தில் உள்ள வீட்டிலும் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி பணம், வாகனங்கள், நகைகள், சொத்து ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
மேலும் மண்டியாவில் ஓய்வு பெற்ற என்ஜினீயர் சிவராஜ், அவரது உறவினர் வீட்டிலும், மைசூரு மாவட்டத்தில் நீர்ப்பாசனத்துறை என்ஜினீயராக இருந்து வரும் மகேஷ், பெலகாவி மாவட்டத்தில் நிர்மிதி மையத்தின் திட்டமிடுதல் அதிகாரி சேகரகவுடா, ராமநகர் மாவட்டம் ஆரோஹள்ளி தாசில்தார் விஜியண்ணா, பெலகாவி மாவட்ட பஞ்சாயத்து உதவி என்ஜினீயர் மகாதேவ் பன்னூர், ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித் துறை என்ஜினீயர் ஜெகதீஷ் ஆகியோரின், வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தாவணகெரே மாவட்டத்தில் தொழில்துறை என்ஜினீயராக பணியாற்றி வரும் உமேஷ், அதே மாவட்டத்தில் மின்வாரிய என்ஜினீயராக இருந்து வரும் பிரபாகர், சித்ரதுர்கா மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு என்ஜினீயரான ரவீந்திராவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் போலீசார் சோதனை நடத்தி, தங்க நகைகள், பொருட்கள், சொத்து ஆவணங்களை கைப்பற்றி எடுத்துs சென்றுள்ளனர்.
லோக் ஆயுக்தா போலீசார் சோதனைக்கு உள்ளான 11 அரசு அதிகாரிகளும் தங்களது வருமானத்தை விட சட்டவிரோதமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவித்து இருப்பது தெரியவந்துள்ளது.
11 அதிகாரிகள் வீடுகளில் இருந்தும் ரூ.45.14 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக லோக் ஆயுக்தா போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து லோக் ஆயுக்தா போலீசார் கூறியதாவது:-
கர்நாடக மாநிலம் முழுவதும் 11 அதிகாரிகளுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், அவர்களது உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக் கணக்கான மதிப்புள்ள நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சோதனை நடத்தப்பட்ட அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக பல மடங்கு சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுதவிர வங்கி லாக்கர் களிலும் பணம், நகை பதுக்கி வைத்திருந்தனர். அவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பல்வேறு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 11 அதிகாரிகள் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அவர்களிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கர்நாடகாவில் வால்மீகி மாநகராட்சி ஊழல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிகாரிகள் வீடுகளில் இருந்து கோடிக் கணக்கான சொத்துக்களை லோக் ஆயுக்தா போலீசார் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






