என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Action raid"
- சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த தந்தங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- தொடர்புடையவர்களை மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இருந்து யானை தந்தம் கடத்தப்படுவதாக தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதைத்தொடந்து அங்கு சென்று குறிப்பிட்ட ஒரு இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 23 கிலோ எடையில், 2 தந்தங்கள் பறிமுதல் இருந்தது. இதைத்தொடர்ந்து யானை தந்தங்கள் பறிமுதல் செய்து அங்கிருந்த ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரை சேர்ந்த முருகன் (வயது 34) உள்ளிட்ட 2 பேரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் 2 பேரையும் ராஜபாளையம் சுங்க இலாகா அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது முருகன், சுங்க அலுவலக கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த தந்தங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ. 6 கோடி என கூறப்படுகிறது.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் யானை தத்தங்கள் பதுக்கிய சம்பவத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கார்த்திகேயன், வினித்குமார் ஆகியோரை போலீசார் இன்று பிடித்து கைது செய்தனர். இதில் தொடர்புடையவர்களை மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- குமாரபாளையம் போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 பேர் வீடுகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
- பல வீடுகள் பூட்டப்பட்டிருந்தது. சில வீடுகளில் இருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் திருந்தி வேலைக்கு செல்வதாகவும் தற்போது எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு நகரம், ஊரகம், பள்ளிபாளையம், குமாரபாளையம் போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 164 பேர் வீடுகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
ஆய்வு
இதன்படி இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், பாரதிமோகன், தீபா, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட குழு திருச்செங்கோடு நகர எல்லைக்குட்பட்ட 61 பேர், ஊரக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 12 பேர், பள்ளிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 30 பேர், குமாரபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட 23 பேர் என 164 பேர் வீடுகளில் ஒரே நாளில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருந்தி வாழ அறிவுரை
அப்போது பல வீடுகள் பூட்டப்பட்டிருந்தது. சில வீடுகளில் இருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் திருந்தி வேலைக்கு செல்வதாகவும் தற்போது எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் வீடுகளிலும் இருந்தவர்களிடம் வேறு ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும், திருந்தி வாழ அறிவுறுத்துங்கள் எனவும் குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்தனர்.
ஆயுதங்கள் பறிமுதல்
இந்த 164 பேரும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர்கள் வேறு ஏதாவது நடவ டிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன் அதிரடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டதன் பெயரில் நேற்று ஒரே நாளில் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களை கொண்டு இந்த ஆய்வு மேற்கொட்டப்பட்டது.
அதில் சில இடங்களில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றப்பின்னணி உள்ள வர்களின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து குற்றப் பின்னணி கொண்டவர்களையும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
- 'ஆபரேஷன் விடியல்' என்கிற அதிரடி சோதனையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- 10-க்கும் மேற்பட்ட வீச்சரிவாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
சேதராப்பட்டு:
புதுச்சேரியில் கஞ்சா விற்பனை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 'ஆபரேஷன் விடியல்' என்கிற அதிரடி சோதனையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வில்லியனூர் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி, கஞ்சா விற்பனை போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
அதனை தடுக்க போலீசார் பல்வேறு வழிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குற்ற சம்பவங்களில் ஈடுபட பதுங்கி இருந்த பல்வேறு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுவை சட்டம் ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரசைதன்யா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு வம்சீரதரெட்டி, வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் வில்லியனூர், மங்கலம் போலீசார் இன்று அதிகாலை கரிக் கலாம்பாக்கம், கோர்க்காடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளின் வீடுகளில் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.
மேலும் குற்றவாளிகளின் வீடுகளில் கஞ்சா, ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர். அப்போது ரவுடிகளின் வீடுகள் மற்றும் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வீச்சரிவாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து சென்றனர்.
- கடந்த காலங்களில் ஏராளமான செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- ஜெயிலில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் மற்றும் பெண்கள் தனிச்சிறை உள்ளது. இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயிலுக்குள் கைதிகள் கஞ்சா, செல்போன், புகையிலை பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கைதிகள் பலர் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.
கடந்த காலங்களில் ஏராளமான செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளியே இருந்து ஜெயிலுக்குள் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் வீசப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 56 போலீசாரும், சிறை வார்டன் உள்ளிட்ட 65 சிறை காவலர்கள் சேர்ந்து வேலூர் ஜெயிலில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.
ஆண்கள் ஜெயிலில் காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர். அப்போது 2 மோப்ப நாய்கள் உதவியுடன் கைதிகளின் அறை, கழிவறை பகுதிகள், சமையலறை என வளாகம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். 2 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.
இதேபோல போலீசார் பெண்கள் ஜெயிலில் சோதனை நடத்தினர்.
2 ஜெயில்களிலும் நடந்த இந்த அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஜெயிலில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- விழுப்புரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
- விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தனர்.
விழுப்புரம், அக்.9-
விழுப்புரம் மற்றும் விழுப்புரத்தை சுற்றி குட்கா பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை கொண்டு செல்வோரைப் பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. உமாசங்கர் (பொறுப்பு) தலைமை யிலான போலீசார் மற்றும் தனிப்படை பிரிவு போலீசார் அமைக்கப்பட்டு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தனர்.
அதில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 500 கிலோ எடை கொண்ட குட்கா பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இதற்கு காரணமான விழுப்புரம் கே. கே. ரோடு மாந்தோப்பு தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23), கீழ்பெரும்பாக்கம் மீனாட்சி ரைஸ் மில் தெருவை சேர்ந்த சுல்தான் மைதீன் ஆகிய 2 பேரை பேரை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்