என் மலர்
நீங்கள் தேடியது "இம்ரான் கான்"
- எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது.
- இம்ரான் கான் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அவர் இந்தியாவுடன் நட்பு கொள்ள முயற்சித்தார், பாஜகவுடன் கூட.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.
இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறைக்கு சென்று இம்ரான்கானை சந்தித்தார்.
பின்னர் வெளியே வந்த உஸ்மா கூறும்போது,"இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால் அவருக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது" என்றார்.
இதற்கிடையே தனது சகோதரியை சந்தித்த பிறகு இம்ரான் கான் அளித்த அறிக்கையை அவரது கட்சி வெளியிட்டது.
அதில், எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. என்று அவர் தெரிவித்தார்.
இந்த சூழலில் இம்ரான் கான் சகோதரி அலீமா கானும் 'ஸ்கை நியூஸ்' சேனலுக்கு அளித்த பேட்டியில், "அசீம் முனீர் ஒரு அடிப்படைவாத இஸ்லாமியர். அதனால்தான் அவர் இஸ்லாத்தை நம்பாதவர்களுடன் சண்டையிட விரும்புகிறார்.
இம்ரான் கான் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அவர் இந்தியாவுடன் நட்பு கொள்ள முயற்சித்தார், பாஜகவுடன் கூட.
ஆனால் முனீர் போன்ற ஒருவர் இருக்கும்போது, இந்தியாவுடன் போர் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அவர் இந்தியாவுடன் போருக்காக ஏங்குகிறார்" என்று அலீமா தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்காரவாத தாக்குதலுக்கு பிறகு மே மாத தொடக்கத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட 3 நாட்களில் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
- இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
- இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.
இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறைக்கு சென்று இம்ரான்கானை சந்தித்தார். பின்னர் வெளியே வந்த உஸ்மா கூறும்போது,"இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால் அவருக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது" என்றார்.
இந்தநிலையில் தனது சகோதரியை சந்தித்த பிறகு இம்ரான்கான் அளித்த அறிக்கையை அவரது கட்சி வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியைப் போன்ற சூழ்நிலையில் நான் அடைக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏதாவது நடந்தால், ராணுவத் தலைவரும், உளவுப்பிரிவு டி.ஜி.யும் பொறுப்பாவார்கள்.
நான் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டேன். 5 நாட்கள் என் அறைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 நாட்கள் நான் அறையில் அடைக்கப்பட்டேன். இங்குள்ள நிலைமைகள் மனிதாபிமான மற்றவைகளாக உள்ளன.
ராணுவ தளபதி அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி. மனநிலை சரியில்லாதவர். எனக்கு அளிக்கப்படும் சித்ரவதைக்கு அசிம் முனீர் தான் காரணம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், மின்சாரம் அல்லது சூரிய ஒளி, உணவு, சுத்தமான குடிநீர், மருத்துவ உதவி மற்றும் கைதிகளுக்கு பொதுவாகக் கிடைக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இம்ரான் கான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அவரது கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
- அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- தனது கைதுக்கும் தற்போதைய நிலைக்கும் காரணமான ராணுவத் தளபதி அஸீம் முனீரை குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார்.
எதிர்க்கட்சிளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவியை இழந்த இம்ரான்கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 2023 ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், ராணுவத் தளபதி அசிம் முனீர் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்திகள் பரவிய நிலையில், நேற்று அன்று அவரைச் சந்தித்த பின் உஸ்மா கானும் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறியதாவது, "கடவுளின் அருளால் அவர் நலமாக இருக்கிறார். ஆனால், தனக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுவதால் அவர் கோபமாக இருக்கிறார். நாள் முழுவதும் அவர் தனது அறையிலேயே அடைத்து வைக்கப்படுகிறார். குறுகிய காலத்திற்குக் கூட வெளியே வரவோ, யாருடனும் பேசவோ அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், தனது கைதுக்கும் தற்போதைய நிலைக்கும் காரணமான ராணுவத் தளபதி அசிம் முனீரை பாதுகாத்து அதிக அதிகாரம் வழங்க நாட்டின் அரசியலமைப்பை மறுசீரமைக்க முயற்சிகள் நடப்பதாக இம்ரான் கான் குற்றம் சாட்டியதாக உஸ்மா கானும் தெரிவித்தார்.
முன்னதாக இம்ரான் கானின் கட்சியினர் அவரின் நிலைமை குறித்து விளக்கம் கேட்டு ராவல்பிண்டியில் போராட்டம் நடத்த இருந்த நிலையில் நேற்றும் இன்றும் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ராவல்பிண்டியில் நாளை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து வகையான கூட்டங்கள், உள்ளிருப்புப் போராட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் அவரது கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ராவல்பிண்டி நகரில் இம்ரான்கான் கட்சியினர் பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து ராவல்பிண்டியில் நாளை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான கூட்டங்கள், உள்ளிருப்புப் போராட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறையில் உள்ள இம்ரான்கானை இன்று அவரது சகோதரி உஸ்மா மற்றும் ஒரு வக்கீல் மட்டும் சந்திக்க நிபந்தனையுடன் சிறைத்துறை அனுமதி வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இம்ரான்கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் பாகிஸ்தானில் பரவியது.
- இம்ரான்கான் சகோதரிகள் நோரீன் கான், அலீமா கான், உஸ்மா கான் ஆகியோர் சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, கடந்த 3 வாரமாக இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரிகள் மற்றும் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி நிர்வாகிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இம்ரான்கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் பாகிஸ்தானில் பரவியது.
இம்ரான்கான் சகோதரிகள் நோரீன் கான், அலீமா கான், உஸ்மா கான் ஆகியோர் நேற்று அடியாலா சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள் தகவலறிந்து ஏராளமான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக ராவல்பிண்டி அடியாலா சிறை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,"இம்ரான் கான் அடியாலா சிறையிலிருந்து மாற்றப்பட்டதாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவர் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார், அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) இந்த வதந்திகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. அரசாங்கம் உடனடியாக இந்த விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், உடனடியாக இம்ரானுடன் அவரது குடும்ப உறுப்பினர்களின் சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இதைத்தொடர்ந்து இம்ரான் கானை அவரது சகோதரிகள் சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
- தனது மகளுக்கு இம்ரான்கான் பொருத்தமானவராக இருப்பார் என புஷ்பவல்லி நம்பினார்.
- ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து சென்றனர்.
இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரேகா. நடிகர் ஜெமினி கணேசனின் மகளான ரேகா 1980 காலக்கட்டங்களில் திரை உலகில் கொடிகட்டி பறந்தார்.
இந்நிலையில் 1985-ம் ஆண்டில் நடிகை ரேகாவும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானும் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்று வந்தனர். கடற்கரையில் இருவரும் ஒன்றாக உலா வந்தனர். இதையடுத்து இருவரும் மிகவும் நெருங்கி பழகி வருவதாகவும், காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

ரேகாவின் தாயாரான புஷ்பவல்லிக்கு இம்ரான்கானை மிகவும் பிடிக்கும். இதனால் ரேகா குடும்பத்தில் ஒரு நபராகவே இம்ரான்கான் இருந்து வந்தார். இதையடுத்து ரேகாவுக்கும் இம்ரான்கானுக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக புஷ்பவல்லி டெல்லியில் பிரபல ஜோதிடர் நஜ்மீயிடம் ஜாதகம் பார்த்ததாகவும் கூறப்பட்டது. தனது மகளுக்கு இம்ரான்கான் பொருத்தமானவராக இருப்பார் என புஷ்பவல்லி நம்பினார்.
காதல் கிசுகிசுக்கள் ஜோடியாக சுற்றித் திரிந்தது. தாயாரின் சம்மதம் இருந்தாலும் ரேகா, இம்ரான்கான் விவகாரம் திருமணம் வரை செல்லவில்லை. என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து சென்றனர். ஆனால் காதல் பற்றியோ, பிரிவு பற்றியோ ரேகாவும் சரி, இம்ரான்கானும் சரி ஒரு போதும் கருத்து சொல்லவில்லை. 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரேகா இம்ரான்கானின் காதல் விவகாரம் தற்போது வெளியாகி வைரலை ஏற்படுத்தி உள்ளது.
- பாகிஸ்தான் நாட்டில் ஹைபிரிட் சிஸ்டம் இல்லை. இருப்பது அசிம் முனீரின் சர்வாதிகாரம்.
- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-க்கு பதிலாக அசிம் முனீரை அழைத்தது ஏன்?.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான் கான், பல்வேறு குற்றச்சாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சிறையில் உள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சித் தலைவரான இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், கடும் பதவி வெறி பிடித்தவர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக இம்ரான் கான் கூறியதாவது:-
ராணுவ தளபதி அசிம் முனீர் அதிகார வெறி பிடித்தவர். பாகிஸ்தானில் மிகவும் மோசமான வகையிலான சர்வாதிகாரத்தை அமல்படுத்தியுள்ளார். அவர் ஒழுக்கும் அல்லது இஸ்லாமை புரிந்து கொள்ளவில்லை.
நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துவதை விட, 2023 மே 9ஆம் தேதி வன்முறைக்காக அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மே 9 வன்முறை அவரால் கட்டமைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் திருடப்பட்டன.
பாகிஸ்தான் நாட்டில் ஹைபிரிட் சிஸ்டம் இல்லை. இருப்பது அசிம் முனீரின் சர்வாதிகாரம். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-க்கு பதிலாக அசிம் முனீரை அழைத்தது ஏன்?.
நான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். மூன்று மாதங்களில் மூன்று முறை மட்டுமே ஆலோசனை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஒரு மாதங்களாக வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினரை சந்திக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் என்னை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
கடந்த 8 மாதங்களான என்னுடைய மனைவி புஷாரா பேகமும் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டு, உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. பயன்படுத்த அசுத்தமான தண்ணீர் வழங்கப்படுகிறது. எல்லா வகையான கொடுமைகளும் அவள் மீது திணிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் அசிம் முனீரால் செய்யப்படுகின்றன.
இவை அனைத்தும் என்னை விட்டு விலகிச் செல்வதற்காக செய்யப்படுகிறது. ஆனால், அவர் எனது பக்க நியாயத்தை புரிந்து கொண்டுள்ளார். எனக்கு எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும், எனது குடும்பத்தினரை சிறையில் அடைத்தாலும் பெரிய விசயமில்லை. நான் ஒருபோதும் அடிய பணியமாட்டேன். உங்களுடைய அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இதுதான் அசிம் முனீருக்கான என்னுடைய செய்தி. என்ன விலை கொடுத்தாவது உண்மையான சுதந்திரத்திற்காக என்னுடைய போராட்டத்தை நான் தொடர்வேன்.
நீதித்துறை அழிக்கப்பட்டுள்ளது, ஊடகங்கள் மவுனமாக்கப்பட்டுள்ளன, காவல்துறை அவர்களை குற்றவாளிகளாக மாற்றும் வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு இம்ரான் கான் தன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
- பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
- குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கைதுகள் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சித் தலைவருமான இம்ரான் கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 2023 முதல் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி நாடு முழுவதும் PTI கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டங்களின் போது போலீசார் 500க்கும் மேற்பட்ட PTI தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கைது செய்ததாக கட்சி வட்டாரங்கள் குற்றம் சாட்டின.
குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கைதுகள் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இம்ரான் கான் இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டதாக PTI தலைவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கம் அவரது அடிப்படை உரிமைகளை பறித்துள்ளதாகவும், அவரது சட்டக் குழு அல்லது குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சந்திக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
- போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
- 77 பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ - இன்ஸாஃப் கட்சியைச் சேர்ந்த 166 உறுப்பினர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு இம்ரான் கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன்போது, பஞ்சாப் மாகாணத்தில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் புலனாய்வுத் துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும், ராணுவத் தளவாடங்களும் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்நிலையில் ஃபைசலாபாத்திலுள்ள பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட நிலையில் 185 பேரில், 108 பேருக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. 77 பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஃபைசலாபாத் நகர காவல் நிலையம் மீதான தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட 58 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஒமர் அயூப், பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஷிபிலி ஃபராஸ், சார்தாஜ் குல், ஷாஹிப்சடா ஹமித் ரஸா உள்ளிட்ட இம்ரான் கான் கட்சியின் மூத்த 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
- சமீப நாட்களாக நான் சிறையில் மோசமான நடவடிக்கையை மிகத் தீவிரமாக எதிர்கொண்டு வருகிறேன்.
- சிறைக் கைதிகளுக்கான அடிப்படை உரிமைகள் கூட எனக்கும், எனது மனைவிக்கும் மறுக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் இருந்து சிறையில் இருக்கும் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சித் தலைவர் இம்ரான் கான் சிறையில் உள்ளார். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் விடுதலை பெற்றாலும் மற்றொரு வழக்கில் கைது என்ற அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை விடுவிக்கும் வகையில் பிடிஐ கட்சி தொண்டர்கள் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு எதிராக ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் மிகப்பெரிய இயக்கத்தை தொடங்க இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு ராணுவ தளபதி அசிம் முனீர்தான் பொறுப்பு என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இம்ரான் கான் தெரிவித்திருப்பதாவது:-
சமீப நாட்களாக நான் சிறையில் மோசமான நடவடிக்கையை மிகத் தீவிரமாக எதிர்கொண்டு வருகிறேன். எனது மனைவி புஷ்ரா பிபியும் அதேபோன்ற நடவடிக்கையை எதிர்கொண்டு வருகிறார். அவருடைய அறையில் டி.வி. கூட ஆஃப் செய்யப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளுக்கான அடிப்படை உரிமைகள் கூட இருவருக்கும் மறுக்கப்பட்டுள்ளது.
எனது கட்சிக்கு தெளிவான தகவலை கொடுத்துள்ளேன். சிறையில் எனக்கு ஏதாவது நடந்தால், அதற்கு அசிம் முனீர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். எனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க தயாராகிவிட்டேன். ஆனால் கொடுங்கோன்மை மற்றும் அடக்குமுறைக்கு முன் தலைவணங்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. எந்த சூழ்நிலையிலும் இந்த அடக்குமுறை அமைப்புக்கு ஒருபோதும் அடிபணிய வேண்டாம் என்பதுதான் பாகிஸ்தான் மக்களுக்கான எனது செய்தி.
இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தான் குடியரசுக் கட்சி, சாதாரண குடிமகனுக்கான குரலாகவும் செயல்படும்.
- பாகிஸ்தானில் இன்னும் சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதி இல்லை.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க கோரி கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான், பாகிஸ்தான் குடியரசு கட்சி என்ற புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- நான் இதற்கு முன்பு ஒருபோதும் அரசியல் பதவிகளை ஏற்றுக்கொண்டதில்லை. ஒரு நபருக்காக ஒரு முறை ஒரு கட்சியில் சேர்ந்தேன். ஆனால் இன்று நான் எனது சொந்த கருத்துக்களில் நிற்கிறேன்.
பாகிஸ்தான் குடியரசுக் கட்சி, சாதாரண குடிமகனுக்கான குரலாகவும் செயல்படும். இது வெறும் கட்சி அல்ல, பாகிஸ்தானின் அரசியலை உண்மையான பொது சேவையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மக்கள் சக்தி வாய்ந்த இயக்கம் ஆகும். அனைத்து பெரிய அரசியல்வாதிகளை மாற்ற நான் வந்துள்ளேன். 2012 முதல் தற்போது வரை, நான் கண்ட பாகிஸ்தானில் இன்னும் சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதி இல்லை. அது இனி ஏற்றுக்கொள்ள முடியாதது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
- அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகும்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்நிலையில் தங்கள் தந்தைக்கு மரண ஆபத்தில் இருப்பதாகவும், அவரை காப்பாற்றுமாறும் இம்ரான் கானின் மகன்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
லண்டனில் வசிக்கும், இம்ரானின் மகன்கள் சுலைமான் கான் மற்றும் காசிம் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசும்போது, தங்கள் தந்தையை விடுவிக்க டிரம்பிடம் கேட்போம் என்று கூறினர்.
தங்கள் தந்தை குறைந்தபட்ச உரிமைகள் கூட இல்லமால் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் இம்ரான் கான் சிறைச் சூழல் குறித்து பேசிய அவர்கள், "அவர் ஒரு மரண அறையில் இருக்கிறார், வெளிச்சம் இல்லை, வழக்கறிஞர் இல்லை, மருத்துவர் இல்லை, இருப்பினும் அவர் உடைந்து போகவில்லை" என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசுகையில், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஆராய்ந்தால், அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகும்.
ஜனநாயகத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் ஆதரிக்கும் எந்தவொரு அரசாங்கமும் எங்கள் தந்தையை விடுவிக்க ஆதரிக்கும். குறிப்பாக உலகின் மிகவும் பிரபலமான தலைவரான டிரம்ப்பின் உதவியை நாடுவோம்" என்று கூறினர்.






