என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » prime minister of pakistan
நீங்கள் தேடியது "Prime Minister Of Pakistan"
பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #ImranKhan #PakistanNewPM
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்கிறது.
இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப்பும் போட்டியிட்டனர்.
இதையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பாகிஸ்தான் காபந்து பிரதமர் நசிர் உல் முல்க், பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மற்றும் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #ImranKhan #PakistanNewPM
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்கிறது.
இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப்பும் போட்டியிட்டனர்.
இதில் 176 ஓட்டு வாங்கி இம்ரான் கான் வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஷாபாஸ் ஷெரீப்புக்கு 96 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. ஓட்டெடுப்பில் பாகிஸ்தான் மக்கள் கட்சி பங்கேற்கவில்லை.
இதையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பாகிஸ்தான் காபந்து பிரதமர் நசிர் உல் முல்க், பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மற்றும் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #ImranKhan #PakistanNewPM
பாகிஸ்தானின் புதிய பிரதமராக, இம்ரான்கான் 14-ந் தேதி பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #ImranKhan
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடந்த 25-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் (வயது 65) பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 116 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்க 137 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்பதால், சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை அந்த கட்சி பெற்று உள்ளது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவர் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) பதவியேற்க விரும்புவதாக கூறியிருந்தார். எனவே அன்று பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
ஆனால் பாகிஸ்தானின் சுதந்திர தினம் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுவதால், அன்றைய நாளில் புதிய அரசு பதவியேற்க வேண்டும் என பல தரப்பினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அங்கு தற்போது ஆட்சியில் இருக்கும் தற்காலிக அரசின் பிரதமர் நசிருல் மல்க் இந்த விருப்பத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து தற்காலிக அரசின் சட்ட மந்திரியான அலி சபர் நேற்று முன்தினம் ‘டான்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஆகஸ்டு 14-ந் தேதி பதவியேற்க வேண்டும் என்றே நானும் (அலி சபர்), தற்காலிக அரசின் பிரதமரான ஓய்வுபெற்ற நீதிபதி நசிருல் மல்க்கும் விரும்புகிறோம். அதன்மூலம் தேசிய அளவிலான உற்சாகத்துடன் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடரை 11 அல்லது 12-ந் தேதியில் தொடங்கலாம். அப்படி 11-ந் தேதி தொடங்கினால் அன்றே புதிய உறுப்பினர்கள் பதவியேற்க முடியும்.
பின்னர் 13-ந் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலை நடத்தி, 14-ந் தேதி பிரதமர் தேர்வை நடத்தலாம். தொடர்ந்து, அன்றே புதிய பிரதமருக்கு அதிபர் மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியும். அதேநேரம் நாடாளுமன்ற தொடர் 12-ந் தேதி தொடங்கினால், 15-ந் தேதிதான் பிரதமரை தேர்வு செய்ய முடியும்.
ஆனால் பாகிஸ்தானின் புதிய பிரதமர், நாட்டின் சுதந்திர தினமான 14-ந் தேதி பதவியேற்பதையே நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு அலி சபர் கூறினார்.
பாகிஸ்தானின் சுதந்திர தினவிழாவில் புதிய பிரதமர் பதவியேற்க வேண்டும் என தற்காலிக அரசு விரும்புவதால், இம்ரான்கானின் பதவியேற்பு விழா 14-ந் தேதிக்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பதவியேற்றபின் தற்காலிக அரசிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக்கொள்வார். #ImranKhan
பாகிஸ்தானில் கடந்த 25-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் (வயது 65) பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 116 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்க 137 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்பதால், சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை அந்த கட்சி பெற்று உள்ளது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவர் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) பதவியேற்க விரும்புவதாக கூறியிருந்தார். எனவே அன்று பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
ஆனால் பாகிஸ்தானின் சுதந்திர தினம் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுவதால், அன்றைய நாளில் புதிய அரசு பதவியேற்க வேண்டும் என பல தரப்பினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அங்கு தற்போது ஆட்சியில் இருக்கும் தற்காலிக அரசின் பிரதமர் நசிருல் மல்க் இந்த விருப்பத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து தற்காலிக அரசின் சட்ட மந்திரியான அலி சபர் நேற்று முன்தினம் ‘டான்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஆகஸ்டு 14-ந் தேதி பதவியேற்க வேண்டும் என்றே நானும் (அலி சபர்), தற்காலிக அரசின் பிரதமரான ஓய்வுபெற்ற நீதிபதி நசிருல் மல்க்கும் விரும்புகிறோம். அதன்மூலம் தேசிய அளவிலான உற்சாகத்துடன் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடரை 11 அல்லது 12-ந் தேதியில் தொடங்கலாம். அப்படி 11-ந் தேதி தொடங்கினால் அன்றே புதிய உறுப்பினர்கள் பதவியேற்க முடியும்.
பின்னர் 13-ந் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலை நடத்தி, 14-ந் தேதி பிரதமர் தேர்வை நடத்தலாம். தொடர்ந்து, அன்றே புதிய பிரதமருக்கு அதிபர் மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியும். அதேநேரம் நாடாளுமன்ற தொடர் 12-ந் தேதி தொடங்கினால், 15-ந் தேதிதான் பிரதமரை தேர்வு செய்ய முடியும்.
ஆனால் பாகிஸ்தானின் புதிய பிரதமர், நாட்டின் சுதந்திர தினமான 14-ந் தேதி பதவியேற்பதையே நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு அலி சபர் கூறினார்.
பாகிஸ்தானின் சுதந்திர தினவிழாவில் புதிய பிரதமர் பதவியேற்க வேண்டும் என தற்காலிக அரசு விரும்புவதால், இம்ரான்கானின் பதவியேற்பு விழா 14-ந் தேதிக்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பதவியேற்றபின் தற்காலிக அரசிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக்கொள்வார். #ImranKhan
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X