என் மலர்
நீங்கள் தேடியது "prison sentence"
பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், 2 பெண்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சேலம்:
கொளத்தூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி சசிகலா(வயது 29). இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். அப்போது சசிகலாவின் உறவினர்கள் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தனர். அதில், கோட்டையூர் பகுதியை சேர்ந்த நல்லம்மாள்(58), பாப்பா(35) ஆகியோர் சசிகலாவின் நடத்தை குறித்து தகாத வார்த்தையால் பேசியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.
அதன்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக நல்லம்மாள், பாப்பா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய நல்லம்மாள், பாப்பா ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.
ஆண்டிப்பட்டி அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி:
ஆண்டிப்பட்டி தாலுகா, தெற்கு மூணான்டிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 26) இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தவசி என்பவருடைய மகள் பவித்ரா என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2.6.16-ம் தேதி அன்று குடும்ப பிரச்சனை காரணமாக பவித்ரா தனது தாய் வீட்டிற்கு வந்து மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு போராடிய நிலையில் பவித்ராவை தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த பவித்ரா கடந்த 5.6.16-ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது தொடர்பாக பவித்ராவின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் ஜெயக்குமார் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கு விசாரணை முடிந்து மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி திலகம் தீர்ப்பு கூறினார்.
தீர்ப்பில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்தார். இதில் அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ராஜேஸ்வரி ஆஜரானார். #tamilnews
ஆண்டிப்பட்டி தாலுகா, தெற்கு மூணான்டிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 26) இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தவசி என்பவருடைய மகள் பவித்ரா என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2.6.16-ம் தேதி அன்று குடும்ப பிரச்சனை காரணமாக பவித்ரா தனது தாய் வீட்டிற்கு வந்து மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு போராடிய நிலையில் பவித்ராவை தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த பவித்ரா கடந்த 5.6.16-ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது தொடர்பாக பவித்ராவின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் ஜெயக்குமார் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கு விசாரணை முடிந்து மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி திலகம் தீர்ப்பு கூறினார்.
தீர்ப்பில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்தார். இதில் அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ராஜேஸ்வரி ஆஜரானார். #tamilnews
நாகை மீனவர்கள் 7 பேரும் 7 ஆண்டுக்குள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை கோர்ட்டு எச்சரித்து விடுதலை செய்தது. #NagapattinamFishermen
பேராவூரணி:
தஞ்சை மாவட்டம் கள்ளிவயல்தோட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த செய்புல்லா என்பவரது படகை நாகை மாவட்டம் தரங்கம்பாடி குட்டியாண்டியூர் பகுதியை சேர்ந்த நாராயணன்(வயது 45) வாடகைக்கு எடுத்தார்.
இந்த படகில் நாராயணன், அவருடைய மகன் சக்திதாசன்(19), நாகூரை சேர்ந்த ஆயுள்பதி(45), கோடியக்கரையை சேர்ந்த கண்ணதாசன்(50) ஆகிய 4 பேர் தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு நேற்று முன்தினம் இரவு மீன்பிடிக்க சென்றனர்.
இதேபோல கள்ளிவயல்தோட்டத்தை சேர்ந்த அப்துல்வகாப்(50) என்பவரது நாட்டுப்படகை தரங்கம் பாடியை சேர்ந்த மாதேஷ்(19) வாடகைக்கு எடுத்து அந்த படகில் மாதேஷ், பிரவீண்குமார்(30), பாலகிருஷ்ணன்(45) ஆகிய 3 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ஆழ்கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ரோந்து கப்பலில் துப்பாக்கிகளுடன் வந்த இலங்கை கடற்படையினர் நாகை மாவட்ட மீனவர்கள் 7 பேரையும் சுற்றி வளைத்து தாக்கினர்.
பின்னர் அவர்களை எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 2 படகுகளுடன் சிறைபிடித்து சென்று காங்கேசன்துறை அருகேயுள்ள காரைநகர் பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் நாகை மாவட்ட மீனவர்களை மல்லாகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி, ‘‘நாகை மீனவர்கள் 7 பேரும் 7 ஆண்டுக்குள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்’ என்று எச்சரிக்கை செய்து விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் வருகிற செப்டம்பர் 29-ந்தேதிக்குள் படகு உரிமையாளர் ஆவணங்களை தாக்கல் செய்து படகுகளை திரும்ப பெற்று கொள்ள வேண்டும்’ என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து நாகை மீனவர்கள் 7 பேரும் நேற்று மாலை சேதுபாவாசத்திரம் திரும்பினர்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 7 பேரும் திரும்பி வந்ததால் மீனவ கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். #NagapattinamFishermen
தஞ்சை மாவட்டம் கள்ளிவயல்தோட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த செய்புல்லா என்பவரது படகை நாகை மாவட்டம் தரங்கம்பாடி குட்டியாண்டியூர் பகுதியை சேர்ந்த நாராயணன்(வயது 45) வாடகைக்கு எடுத்தார்.
இந்த படகில் நாராயணன், அவருடைய மகன் சக்திதாசன்(19), நாகூரை சேர்ந்த ஆயுள்பதி(45), கோடியக்கரையை சேர்ந்த கண்ணதாசன்(50) ஆகிய 4 பேர் தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு நேற்று முன்தினம் இரவு மீன்பிடிக்க சென்றனர்.
இதேபோல கள்ளிவயல்தோட்டத்தை சேர்ந்த அப்துல்வகாப்(50) என்பவரது நாட்டுப்படகை தரங்கம் பாடியை சேர்ந்த மாதேஷ்(19) வாடகைக்கு எடுத்து அந்த படகில் மாதேஷ், பிரவீண்குமார்(30), பாலகிருஷ்ணன்(45) ஆகிய 3 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ஆழ்கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ரோந்து கப்பலில் துப்பாக்கிகளுடன் வந்த இலங்கை கடற்படையினர் நாகை மாவட்ட மீனவர்கள் 7 பேரையும் சுற்றி வளைத்து தாக்கினர்.
பின்னர் அவர்களை எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 2 படகுகளுடன் சிறைபிடித்து சென்று காங்கேசன்துறை அருகேயுள்ள காரைநகர் பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் நாகை மாவட்ட மீனவர்களை மல்லாகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி, ‘‘நாகை மீனவர்கள் 7 பேரும் 7 ஆண்டுக்குள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்’ என்று எச்சரிக்கை செய்து விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் வருகிற செப்டம்பர் 29-ந்தேதிக்குள் படகு உரிமையாளர் ஆவணங்களை தாக்கல் செய்து படகுகளை திரும்ப பெற்று கொள்ள வேண்டும்’ என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து நாகை மீனவர்கள் 7 பேரும் நேற்று மாலை சேதுபாவாசத்திரம் திரும்பினர்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 7 பேரும் திரும்பி வந்ததால் மீனவ கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். #NagapattinamFishermen
திருட்டு வழக்கில் பிடிபட்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #thieffleesFrenchjail #thieffleesbyhelicopter
பாரிஸ்:
பிரான்ஸ் நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற கொள்ளையில் தொடர்புடையவன் ரெடோயின் ஃபெய்ட்(46). அந்நாட்டின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்று பின்னர் கைதான இவனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ரியூ பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபெயிட், 3 கைதிகள் துணையுடன் சிறையில் இருந்து தப்பிச் சென்றான்.
அவன் வெளியே ஓடிவந்ததும் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவனை ஹெலிகாப்டரில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் பாரிஸ் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவனை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டரை புறநகர் பகுதியில் கண்டுபிடித்த போலீசார் ரெடோயின் ஃபெய்ட்-ஐ கைது செய்ய பாரிஸ் நகரம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 2013-ம் ஆண்டிலும் வெடிகுண்டால் சிறை சுவரை உடைத்து தப்பிச்சென்ற இவன் பின்னர் போலீசில் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. #thieffleesFrenchjail #thieffleesbyhelicopter