search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Racism"

    உன்னாலே உன்னாலே தமிழ் படத்தில் நாயகியாக நடித்திருந்த தனிஷா முகர்ஜி, அமெரிக்காவில் தான் இனவெறியோடு அவமரியாதையை சந்தித்ததாக கூறியுள்ளார். #TanishaMukerji
    தமிழில் உன்னாலே உன்னாலே படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தனிஷா. இந்தி படங்களிலும் நடித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவர் பிரபல இந்தி நடிகை கஜோலின் தங்கை ஆவார். தனிஷாவுக்கு அமெரிக்காவில் இனவெறியோடு அவமரியாதை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று இருந்தேன். நிகழ்ச்சி முடிந்து அங்குள்ள ஓட்டலுக்கு சென்றபோது ஒருவர் என்னை அருவெறுப்பாக பார்த்தார். கேவலமான வார்த்தைகளால் பேசினார். அவரது செயல் குரூரமாகவும், முரட்டுத்தனமாகவும் இருந்தது.



    என்மீது இனவெறியோடு நடந்து கொண்டார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் நான் பொறுமையாக இருந்தேன். ஓட்டல் ஊழியர் ஒருவர் நான் பார்க்க வித்தியாசமாக இருந்ததால் அந்த நபர் அப்படி பேசியதாக தெரிவித்தார். அமெரிக்காவில் இனவெறி அனுபவத்தை நான் சந்தித்தேன். இதற்கு முன்பு இதுபோல் நடந்தது இல்லை. என்னுடன் வந்த தோழிகளும் இதை பார்த்து அதிர்ச்சியானார்கள்.” இவ்வாறு அவர் கூறினார். #TanishaMukerji #Racism

    இந்தி முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி, ஆஸ்திரேலியா சென்றிருந்த நிலையில் விமான ஊழியர் ஒருவரது செயல்பாடு இனவெறி காட்டுவதாக இருந்தது என்று கூறியுள்ளார். #ShilpaShetty
    இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி நேற்று ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்ற அவர் மெல்போனில் இறங்கினார்.

    அவர் தன்னுடன் 2 பேக்குகளை எடுத்துச் சென்று இருந்தார். அவற்றை விமானநிலைய பெண் ஊழியர் கரம்பி என்பவர் சோதனை செய்தார்.

    அப்போது அவரது பேச்சு, செயல்பாடு மற்றும் நடவடிக்கை இனவெறி பாகுபாட்டை காட்டுவதாக இருந்தது என ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

    அதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் மெல்போனுக்கு பிசினஸ் வகுப்பு டிக்கெட்டில் பயணம் செய்தேன். நான் எடுத்துச் சென்ற 2 பேக்குகள் சம்பந்தப்பட்ட கவுண்டரில் சோதனை நடத்தப்பட்டது.


    அங்கு பணியில் இருந்த கரம்பி என்ற பெண் ஊழியரின் பேச்சும் நடவடிக்கையும் கொடூரமாக இருந்தது. நான் துணிமணிகள் எடுத்துச் சென்ற ஒரு ‘பேக்’ பாதி அளவு காலியாக இருந்தது. ஆனால் அது மிகப் பெரியதாக உள்ளது என வாக்குவாதம் செய்தார். அதுகுறித்து கவுண்ட்டரில் இருந்த அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது இது ஒரு நடைமுறை தான் என சாதாரணமாக கூறினார்.

    சாதாரண நடைமுறை என்றால் அந்த ‘பேக்கை பரிசோதிக்க 5 நிமிடம் மட்டும் போதும். ஏன் நீண்ட நேரம் பரிசோதிக்க வேண்டும். இதுகுறித்து அவருடன் இருந்த சக ஊழியர்களிடம் மேல்முறையீடு செய்த போதும் அவர்களும் உண்மையை ஒப்புக்கொள்ளாமல் கரம்பி கூறியதையே பதிலாக தெரிவித்தனர். அது ஒரு இனவெறி நடவடிக்கையாகும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ShilpaShetty
    ×