என் மலர்
நீங்கள் தேடியது "கருப்பின அமெரிக்கர்கள்"
- 2 நாட்கள் நீடித்த இந்த படுகொலைகளில் 300 பேர் கொல்லப்பட்டனர். 800 பேர் படுகாயமடைந்தனர்.
- அமெரிக்க வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான துல்சா படுகொலையின் போது பிளெட்சர் ஒரு சிறுமியாக இருந்தார்.
மே 31, 1921 அன்று, அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் துல்சாவில், வெள்ளையர்களின் ஒரு கும்பல் 300க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க-அமெரிக்கர்களைக் கொன்றது. இதுவே துல்சா படுகொலை என அழைக்கப்படுகிறது.
17 வயதுடைய வெள்ளையின லிப்ட் ஆபரேட்டர் சிறுமியை ஷூ பாலிஷ் தொழில் செய்த 19 வயது கறுப்பின இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்ததாக பரவிய தகவலை அடுத்து கறுப்பினத்தவர்களின் வீடுகள் மட்டும் கதைகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வெள்ளியாயினத்தவர் இந்த படுகொலைகளை அரங்கேற்றினர்.
ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும் உள்ளூர் செய்தித்தாள் ஒன்று வெளியிட்ட பொய் செய்தியால் நிற வெறி தூண்டப்பட்டு இந்த படுகொலைகள் அரங்கேற்றப்பட்டதாக தெரியவந்தது.
சுமார் 2 நாட்கள் நீடித்த இந்த படுகொலைகளில் 300 பேர் கொல்லப்பட்டனர். 800 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் முற்றிலுமாக தீவைக்கப்ட்டு நாசமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகினர்.

இந்நிலையில் துல்சா படுகொலையில் உயிர்த்தியவர்களில் தற்போது மூத்தரவாக அறியப்படும் 111 வயதுடைய வயோலா பிளெட்சர் கடந்த திங்கட்கிழமை காலமானார்.
அமெரிக்க வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான துல்சா படுகொலையின் போது பிளெட்சர் ஒரு சிறுமியாக இருந்தார்.
படுகொலைக்குப் பிறகு வீடற்றவராக மாறிய பிளெட்சர் தொடக்கப் பள்ளியை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் வெள்ளையர் குடும்பங்களுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார்.
சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், "கறுப்பின மக்கள் சுட்டுக் கொல்லப்படுவதையும், அவர்களின் உடல்கள் தெருக்களில் கிடப்பதையும், அவர்களின் கடைகள் எரிக்கப்படுவதையும் இன்னும் என்னால் பார்க்க முடிகிறது," என்று விவரித்தார்.
- டிரம்பிற்கு வாய்ப்பு அதிகம் இருந்தும் நிக்கி ஹாலே போட்டியில் பின்வாங்கவில்லை
- இது போன்ற பேச்சுக்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பை தகர்த்து விடும் என்றார் நிக்கி ஹாலே
2024 வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.
குடியரசு கட்சி சார்பில் தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, டிரம்பிற்கு போட்டியாக, தனக்கு ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.
தற்போது நிலவும் சூழலில் அமெரிக்காவில் குடியரசு கட்சியினரின் ஆதரவு டொனால்ட் டிரம்பிற்கே அதிகமாக உள்ளது. ஆனால், நிக்கி ஹாலே போட்டியில் இருந்து பின்வாங்கவில்லை.
இந்நிலையில், தெற்கு கரோலினாவில் தனது கட்சியினரிடம் ஆதரவு கோரி பிரசாரம் செய்யும் போது கருப்பின மக்கள் குறித்து டொனால்ட் டிரம்ப் சில கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
கருப்பின மக்களுக்கு என்னை பிடிக்கும். என்னை போலவே அவர்களும் வஞ்சிக்கப்பட்டனர்.
நான் பாதிக்கப்பட்டது போல அவர்களும் பாதிக்கப்பட்டதால் அவர்கள் என்னை தங்களில் ஒருவனாக பார்க்கின்றனர்.
என்னை காவலில் எடுத்து போது வெளியிடப்பட்ட எனது "மக் ஷாட்" (mug shot) புகைப்படம் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஏனெனில், பிறரை காட்டிலும் கருப்பின மக்கள் அதிகமாக அது போல் காவல்துறையினரால் புகைப்படம் எடுக்கப்பட்டவர்கள்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால், டிரம்பின் இந்த கருத்தை நிக்கி ஹாலே விமர்சித்துள்ளார்.
இது குறித்து நிக்கி ஹாலே தெரிவித்ததாவது:
கருப்பின மக்களை இவ்வாறு அருவெறுக்கத்தக்க வகையில் பேசியதை கண்டிக்கிறேன்.
டிரம்பை மனம் போன போக்கில் பேச விட்டால் இதுதான் நடக்கும்.
பொதுத் தேர்தல் முடியும் வரை அவரிடமிருந்து இது போன்ற பேச்சுக்களும், குழப்பங்களும் அதிகம் வரும். இது போன்ற பேச்சுக்கள் குடியரசு கட்சியின் வெற்றி வாய்ப்பை தகர்த்து விடும்.
அதனால்தான் டிரம்பால் ஒரு பொதுத்தேர்தலை கூட வெல்ல முடியாது என கூறி வருகிறேன்.
இவ்வாறு ஹாலே கூறினார்.
நிக்கி ஹாலேவை போல், "தன் மேல் உள்ள வழக்குகளால் கருப்பின மக்கள் அவரை விரும்புவார்கள் என டிரம்ப் கூறுவது அவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது" என ஜனநாயக கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.






