என் மலர்
நீங்கள் தேடியது "ireland"
- ஜெர்மனி ஹாட்ரிக் வெற்றியுடன் கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
- 2-வது ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன.
சென்னை:
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரை ஆகிய 2 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
வருகிற 10-ந் தேதி வரை இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்று உள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.
4-வது நாளான இன்று பிற்பகலில் மதுரையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள ஜெர்மனி-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
ஜெர்மனி ஹாட்ரிக் வெற்றியுடன் கால் இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-0 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் கனடாவை 7-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. அயர்லாந்து முதல் ஆட்டத்தில் கனடாவை (4-3) வென்றது. அடுத்து தென் ஆப்பிரிக்காவிடம் (1-2) தோற்றது.
2-வது ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன.
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டிகளில் 'சி' பிரிவில் உள்ள நியூசிலாந்து-ஜப்பான் (மாலை 5.45 மணி), அர்ஜென்டினா-சீனா (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.
அர்ஜென்டினா, நியூசிலாந்து, அணிகள் 1 வெற்றி, 1 டிராவுடன் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. ஜப்பான் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 3 புள்ளி பெற்றுள்ளது. சீனா 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.
இந்த பிரிவில் முதல் இடத்தை பிடித்து கால் இறுதியில் நுழைய அர்ஜென்டினா, நியூசிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடைசி ஆட் டத்திலும் வெற்றி பெறும் போது இரு அணிகளும் தலா 7 புள்ளிகளை பெறும் கோல்கள் அடிப்படையில் முடிவு நிர்ணயம் செய்யப் படும்.
- முன்னாள் அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்சே தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
- அதிபராக தேர்வான கேத்தரின் 1997-ம் ஆண்டு தொழிலாளர் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினாா்.
டப்ளின்:
ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் இடதுசாரியான கேத்தரின் கோனொலி (வயது 68) சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார்.
அவருக்கு அங்குள்ள இடதுசாரி கட்சிகளான சின் பெயின், தொழிலாளர் கட்சி மற்றும் சமூக ஜனநாயக கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்தன.
இந்த தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவிலேயே அவர் 63 சதவீதம் வாக்குகளை பெற்றார். எனவே அவர் அபார வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்சே தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
அதிபராக தேர்வான கேத்தரின் 1997-ம் ஆண்டு தொழிலாளர் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினாா். 2006-ம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த கட்சியில் இருந்து விலகி சுயேச்சை வேட்பாளராக தொடர்ந்தார். மேலும் இஸ்ரேல்-காசா போரில் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்ததன் மூலம் சர்வதேச அளவில் அவர் கவனம் பெற்றார்.
இந்தநிலையில் தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார். அவரது பதவியேற்பு விழா அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதன்மூலம் நாட்டின் 10-வது மற்றும் மூன்றாவது பெண் அதிபராக அவர் பதவியேற்றார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- வலதுசாரி மையக் கட்சியான Fine Gael-ஐ சேர்ந்த ஹீதர் ஹம்ப்ரீஸ் 29% வாக்குகள் மட்டுமே பெற்றார்.
- அயர்லாந்தில் நிலவும் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய பிரசனைகளை முன்னிறுத்தி இளைஞர்ளை ஈர்த்தார்.
அயர்லாந்தின் அடுத்த அதிபராக இடதுசாரி சுயேச்சை வேட்பாளரான கேத்தரின் கொனோலி பதவியேற்க உள்ளார்.
நேற்று முன் தினம் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டு வருகின்றன.
முதற்கட்ட முடிவுகளின்படி கொனோலி 63% வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி மையக் கட்சியான Fine Gael-ஐ சேர்ந்த ஹீதர் ஹம்ப்ரீஸ் 29% வாக்குகளும் பெற்று முன்னிலை வகிக்கின்றனர்.
ஆரம்பகட்ட முடிவுகளின்படி அதிக வித்தியாசத்தில் பின்தங்கியதால் ஹீதர் ஹம்ப்ரீஸ் தோல்வியை ஒப்புக்கொண்டு கொன்னோலிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனால் கொன்னோலி அடுத்த அதிபராவது உறுதியாகி உள்ளது.
அயர்லாந்தில் நிலவும் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய பிரசனைகளை முன்னிறுத்தி களம் கண்ட கொனோலி இளைஞர்களின் வாக்குகளை அதிகம் ஈர்த்தார். மேலும் Sinn Fein, தொழிலாளர் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஆதரவையும் அவர் பெற்றிருந்தார்.
முன்னாள் பாரிஸ்டரான கொனோலி, 2016 முதல் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். காசா போர் தொடர்பாக இஸ்ரேலைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.
உக்ரைன் போர் தொடர்பாக நேட்டோ கூட்டமைப்பின் செயல்பாடுகளையும் விமர்சித்து வந்தார். ஐரோப்பிய ஒன்றியம் சமூக நலனை புறக்கணித்து ராணுவமயமாக்களில் கவனம் செலுத்துவதாக விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
- புயல் கரையை கடந்தபோது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
- அப்போது மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
டப்ளின்:
அயர்லாந்தில் உருவான ஆமி புயலால் கடந்த சில நாளாக பெய்த கனமழையால் டோனகல், லீட்ரிம் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக் காடாக மாறின.
இதற்கிடையே புயல் கரையை கடந்தபோது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. அப்போது ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.
ஆமி புயல் காரணமாக டப்ளின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 115 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். அதேபோல், ரெயில் சேவையும் கடுமையாக பாதிப்பு அடைந்தது.
- நான் நகர முயன்றபோது, மேலும் இருவர் வந்து என்னை அடிக்கத் தொடங்கினர்.
- அங்கிருத்தவர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்ல.
அயர்லாந்தில், இந்திய சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 3 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளனது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் டூப்லினில் மூன்று இளைஞர்களால் ஒரு இந்தியர் தாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாலை 5:30 மணியளவில் ஃபேர்வியூ பார்க்கில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்தியர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் எட்டு தையல்கள் போடப்பட்டன.
தனக்கு நேர்ந்ததை விவரித்த பாதிக்கப்பட்டவர், "நான் பூங்காவிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மின்சார ஸ்கூட்டரில் வந்த ஒரு இளைஞன் என் அருகில் வந்து என் வயிற்றில் உதைத்தான்.
நான் நகர முயன்றபோது, மேலும் இருவர் வந்து என்னை அடிக்கத் தொடங்கினர்.
நான் தரையில் விழுந்த பிறகும் அவர்கள் என்னைத் தொடர்ந்து தாக்கினர். அவர்களில் ஒருவர் தனது ஸ்ட்டீல் தண்ணீர் பாட்டிலால் என் கண்ணில் அடித்தார்" என்று தெரிவித்தார்.
மேலும் அங்கிருத்தவர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்லை என்றும் 2 இளைஞர்கள் மட்டும் தனக்கு உதவி செய்து காவல்துறைக்கு தகவல் அளித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார். சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதலை அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி. ஹிக்கின்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், வரும் நாட்களில் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக 6 வயது இந்திய சிறுமி, சிறுவர்கள் கும்பலால், " உனது நாட்டுக்கே திரும்பிப் போ' என கூறி தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சமீபத்திய ஆறு வயது இந்திய சிறுமியை அந்நாட்டை விட்டு வெளியேறும்படி சிறுவர் கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
- இந்திய சமூகத்தின் நேர்மறையான பங்களிப்பைக் கெடுக்கும் என்று மைக்கேல் எச்சரித்தார்.
அயர்லாந்தில், இந்திய சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் மட்டும் 3 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளனது.
இந்தத் தாக்குதல்களை அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கண்டித்துள்ளார்.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மைக்கேல் டி ஹிக்கின்ஸ், இந்திய சமூகம் அயர்லாந்தின் மருத்துவம், செவிலியர், பராமரிப்பு, கலாச்சாரம், வணிகம் மற்றும் தொழில்முனைவு போன்ற பல துறைகளுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளது.
இந்திய சமூகத்தினர் மீதான சமீபத்திய தாக்குதல்கள் அயர்லாந்தின் மதிப்புகளுக்கு முரணானவை என்றும், அவை கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய ஆறு வயது இந்திய சிறுமியை அந்நாட்டை விட்டு வெளியேறும்படி சிறுவர் கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதுபோன்ற செயல்கள் முழு சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்றும், இந்திய சமூகத்தின் நேர்மறையான பங்களிப்பைக் கெடுக்கும் என்று மைக்கேல் எச்சரித்தார்.
தாக்குதல்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டூப்ளினில் உள்ள இந்திய தூதரகம் அதன் குடிமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, அவசர உதவி எண்களைப் பகிர்ந்துள்ளது.
- கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அனுபா அச்சுதன்.
- சிறுமியின் முகம் உள்பட பல இடங்களை தாக்கினர்.
அயர்லாந்தில் சமீபகாலமாக இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் மூன்று தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய சிறுமி மீது தாக்குதல் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அனுபா அச்சுதன். இவர் அயர்லாந்தில் 8 ஆண்டுகளாக நர்சாக பணியாற்றி வருகிறார். அவர் தனது கணவர், 2 குழந்தைகளுடன் தென்கிழக்கு அயர்லாந்தில் உள்ள வாட்டர் போர்டு நகரில் வசித்து வருகிறார்.
அனுபாவின் 6 வயது மகள் நியா வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தபோது அவரை சில சிறுவர்கள் சரமாரியாக தாக்கினார்கள். சிறுமியின் முகம் உள்பட பல இடங்களை தாக்கினர். பின்னர் இந்தியாவுக்குத் திரும்பி செல்லுங்கள் என்று கூறிவிட்டு தப்பி சென்றனர்.
இதுதொடர்பாக சிறுமியின் தாய் அனுபா போலீசில் புகார் செய்தார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவார்கள். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவை ஆன்லைனிலும் பரப்பப்பட்டன.
- காவல்துறை இதை ஒரு வெறுப்புக் குற்றமாகக் கருதி விசாரித்து வருகிறது.
அயர்லாந்தில் இந்தியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் அயர்லாந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) அயர்லாந்தின் டப்ளின் நகரில் தல்லாக்ட் பகுதியில் வைத்து அவர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அவரது ஆடைகளை கிழித்து அந்த கும்பல் ரத்த காயங்கள் ஏற்படும்படி தாக்கியுள்ளது.
குழந்தைகளுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாக அவர் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவை ஆன்லைனிலும் பரப்பப்பட்டன.இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு ஆளானவர் பலத்த காயங்களுடன் ரத்தம் சொட்டச் சொட்ட மீட்கப்பட்டு, தல்லாக்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காவல்துறை இதை ஒரு வெறுப்புக் குற்றமாகக் கருதி விசாரித்து வருகிறது.
பாதிக்கப்பட்டவரை சந்தித்த உள்ளூர் கவுன்சிலர், அவர் அதிர்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்தத் தாக்குதலை மோசமானது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என உள்ளூர் அரசியல் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.
- முதலில் பேட் செய்த மன்ஸ்டர் ரெட்ஸ் அணி 20 ஓவரில் 188 ரன்கள் குவித்தது.
- அதிகபட்சமாக கேப்டன் கர்டிஸ் காம்பெர் 44 ரன்கள் எடுத்தார்.
டப்ளின்:
அயர்லாந்தில் உள்ளூர் டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது.
முதலில் பேட் செய்த மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. கேப்டன் கர்டிஸ் காம்பெர் 44 ரன்னும், பீட்டர் மூர் 35 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது.12வது ஓவரை கர்டிஸ் காம்பெர் வீசினார். இதன் கடைசி 2 பந்தில் வில்சன், கிரஹாம் ஆகியோரை அவுட்டாகினர். மீண்டும் 14வது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்தில் மெக்பிரைனை (29) அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 2 மற்றும் 3-வது பந்தில் மில்லர், ஜோஸ் ஆகியோரை அவுட்டாக்கினார்.
இதனால் நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி 88 ரன்களில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. மன்ஸ்டெர் ரெட்ஸ் அணி 100 ரன்னில் வெற்றி அபார பெற்றது.
இந்நிலையில், அயர்லாந்தின் கர்டிஸ் காம்பெர் 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார்.
ஏற்கனவே, கர்டிஸ் காம்பெர் கடந்த 2021ல் நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.
- இது அயர்லாந்து வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய லாட்டரி வெற்றியாகும்.
- பல பிரபலங்களை விடவும் அந்த நபர் பணக்காரர் ஆகியுள்ளார்.
ஒரே ஒரு லாட்டரி டிக்கெட்டில் ஐரோப்பாவின் மிகப்பெரிய யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் பரிசான ரூ.2,120 கோடி (208 மில்லியன் பவுண்டுகள்) தொகையை அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் வென்றுள்ளார். இது அயர்லாந்து வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய லாட்டரி வெற்றியாகும்.
இந்த வெற்றி மூலம், கால்பந்து வீரர் ஹாரி கேன் (ரூ.1,150 கோடி) மற்றும் பாப் பாடகி துவா லிபா (ரூ.1,100 கோடி) போன்ற பல பிரபலங்களை விடவும் அந்த நபர் பணக்காரர் ஆகியுள்ளார்.
அயர்லாந்து தேசிய லாட்டரி, வெற்றியாளர் தனது டிக்கெட்டைப் பத்திரப்படுத்தி, லாட்டரி தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த வெற்றியாளர் ஐரிஷ் நாட்டின் 18வது யூரோமில்லியன்ஸ் ஜாக்பாட் வெற்றியாளர் ஆவார். வெற்றியாளரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
- அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றிவிட்டது.
- தொடரை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி கடைசி போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையில் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று துவங்க இருந்த நிலையில், போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே மழை பெய்து வந்ததால், போட்டியில் டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவர்கள் பள்ளியில் ஸ்மார்ட்போன் உபயோகிக்க ஏற்கெனவே தடை உள்ளது
- குழந்தைகளின் கைகளில் இணையமா அல்லது இணையத்தின் கைகளில் குழந்தைகளா என கேட்கிறார்
வடமேற்கு ஐரோப்பாவில் வட அட்லான்டிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு அயர்லாந்து. இதன் தலைநகரம் டப்லின். டப்லின் நகரின் விக்லோ கவுன்டியில் உள்ளது கிரே ஸ்டோன்ஸ் பகுதி. இந்த பகுதியில் சுமார் 8 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை பள்ளி நிர்வாகம் தடை செய்திருக்கிறது. இதனை பலரும் வரவேற்றிருக்கின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள 8 பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் சங்கம் ஒரு படி மேலே சென்று தங்கள் குழந்தைகள் எலிமென்டரி எனப்படும் ஆரம்ப பள்ளி பருவம் முடியும் வரை மொபைல்போன் உபயோகிப்பதை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். இதன்படி குழந்தைகள் இடைநிலை பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிக்கான வயதை அடையும் வரையில் பள்ளி, வீடு, விளையாட்டு மைதானங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் மொபைல் போன் உபயோகிக்க முடியாது.
"சிறு குழந்தைகளிடம் காணப்படும் பல்வேறு உளவியல் ரீதியான சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைத்து இந்நகர மக்கள் தந்திருக்கும் ஆதரவு ஆச்சரியத்தை அளித்தது. குழந்தைகளின் கைகளில் இணையம் இருக்கிறதா அல்லது இணையத்தின் கைகளில் குழந்தைகள் உள்ளனரா என கணிக்க முடியாத அளவிற்கு இணையத்தில் வரும் தகவல்களால் அவர்கள் கல்வியில் கவனச்சிதறலுடன் மன அழுத்தம், மறதி, மற்றும் தூக்கமின்மை உட்பட பல சிக்கல்கள் தோன்றின" என அந்நகர மருத்துவ உளவியல் நிபுணர் ஜஸ்டினா ஃப்ளின் தெரிவித்தார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இதே கருத்தை ஐக்கிய நாடுகளின் சபையும் ஒரு அறிக்கையில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.






