search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ireland"

    • ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
    • முதல் போட்டியில் அயர்லாந்தும், 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன.

    ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 72 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய அயர்லாந்து 17.2 ஓவரில் 98 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஒமர்சாய் 4 விக்கெட்டும், நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் அயர்லாந்தும், 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன.

    • டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஸ்டிர்லிங் படைத்தார்.
    • இவருக்கு அடுத்த இடத்தில் பாபர் அசாம் 395 பவுண்டரிகள் அடித்துள்ளார்.

    துபாய்:

    ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. அதில் அயர்லாந்து வெற்றி பெற்றது.

    இதில் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 பவுண்டரிகள் உட்பட 25 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டியில் அடித்த 2 பவுண்டரிகள் சேர்த்து இதுவரை டி20 போட்டிகளில் அவர் அடித்த பவுண்டரிகளின் எண்ணிக்கை 401 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார்.

    டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்களின் பட்டியல் வருமாறு:

    பால் ஸ்டிர்லிங் - 401 பவுண்டரிகள்

    பாபர் அசாம் - 395 பவுண்டரிகள்

    விராட் கோலி - 361 பவுண்டரிகள்

    ரோகித் சர்மா - 359 பவுண்டரிகள்

    டேவிட் வார்னர் - 320 பவுண்டரிகள்.

    • மாணவர்கள் பள்ளியில் ஸ்மார்ட்போன் உபயோகிக்க ஏற்கெனவே தடை உள்ளது
    • குழந்தைகளின் கைகளில் இணையமா அல்லது இணையத்தின் கைகளில் குழந்தைகளா என கேட்கிறார்

    வடமேற்கு ஐரோப்பாவில் வட அட்லான்டிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு அயர்லாந்து. இதன் தலைநகரம் டப்லின். டப்லின் நகரின் விக்லோ கவுன்டியில் உள்ளது கிரே ஸ்டோன்ஸ் பகுதி. இந்த பகுதியில் சுமார் 8 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை பள்ளி நிர்வாகம் தடை செய்திருக்கிறது. இதனை பலரும் வரவேற்றிருக்கின்றனர்.

    இந்நிலையில், அங்குள்ள 8 பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் சங்கம் ஒரு படி மேலே சென்று தங்கள் குழந்தைகள் எலிமென்டரி எனப்படும் ஆரம்ப பள்ளி பருவம் முடியும் வரை மொபைல்போன் உபயோகிப்பதை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். இதன்படி குழந்தைகள் இடைநிலை பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிக்கான வயதை அடையும் வரையில் பள்ளி, வீடு, விளையாட்டு மைதானங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் மொபைல் போன் உபயோகிக்க முடியாது.

    "சிறு குழந்தைகளிடம் காணப்படும் பல்வேறு உளவியல் ரீதியான சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைத்து இந்நகர மக்கள் தந்திருக்கும் ஆதரவு ஆச்சரியத்தை அளித்தது. குழந்தைகளின் கைகளில் இணையம் இருக்கிறதா அல்லது இணையத்தின் கைகளில் குழந்தைகள் உள்ளனரா என கணிக்க முடியாத அளவிற்கு இணையத்தில் வரும் தகவல்களால் அவர்கள் கல்வியில் கவனச்சிதறலுடன் மன அழுத்தம், மறதி, மற்றும் தூக்கமின்மை உட்பட பல சிக்கல்கள் தோன்றின" என அந்நகர மருத்துவ உளவியல் நிபுணர் ஜஸ்டினா ஃப்ளின் தெரிவித்தார்.

    இந்த ஆண்டு துவக்கத்தில் இதே கருத்தை ஐக்கிய நாடுகளின் சபையும் ஒரு அறிக்கையில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றிவிட்டது.
    • தொடரை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி கடைசி போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையில் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று துவங்க இருந்த நிலையில், போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே மழை பெய்து வந்ததால், போட்டியில் டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    3 நாடுகள் கிரிக்கெட் தொடரில் பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் அயர்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காள தேசம்.
    டுப்ளின்:

    வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து மற்றும் வங்காள தேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டுப்ளினில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து, வங்காளதேசம் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 130 ரன்னில் அவுட்டானார். அவருக்கு கேப்டன் போர்ட்டர்பீல்டு 
    நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்தது.

    வங்காள தேசம் சார்பில் அபு ஜெயத் 5 விக்கெட்டும், மொகமது சல்புதின் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 43 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. தமிம் இக்பால் 57 ரன்னும், லித்தான் தாஸ் 76 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 50 ரன்னும் எடுத்தனர்.

    நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வங்காள தேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    மூன்று நாடுகள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட்இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது வங்காள தேசம்.

    டுப்ளின்:

    வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து மற்றும் வங்காள தேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டுப்ளினில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ஹோப் 87 ரன்னும், கேப்டன் ஹோல்டர் 62 ரன்னும் எடுத்தனர்.

    வங்காள தேசம் சார்பில் மு‌ஷடாபிசுர் ரகுமான் 4 விக்கெட்டும், மொர்டசா 3 விக்கெட்டும், சகிப் அல்-ஹசன், மிராஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. முஷ்பிகுர் ரகீம் 63 ரன்னும், சவுமியா சர்கார் 54 ரன்னும், முகமது மிதுன் 43 ரன்னும் எடுத்தனர்.

    இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்திடம் இரண்டாவது முறையாக தோல்வியை தழுவியது. கடந்த 7-ம் தேதி நடந்த ஆட்டத்தில் அந்த அணி 8 விக்கெட்டில் வீழ்த்தியது.

    நாளை நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசம்- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி 17-ம் தேதி நடக்கிறது. இதில் வங்காள தேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    டேராடூனில் நடைபெற்று வரும் அயர்லாந்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 118 ரன்கள் தேவைப்படுகிறது. #AFGvIRE
    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிக்கிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது. முர்டாக் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் யாமின் அகமத்சாய், முகமது நபி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் மற்றும் வக்கார் சலாம்கெய்ல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஹஷ்மத்துல்லா ஷஹிதி 61 ரன்னிலும், அஸ்கர் ஆப்கான் 67 ரன்னிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகமத் ஷா 98 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அயர்லாந்து தரப்பில் ஸ்டூவர்ட் தாம்சன் 3 விக்கெட்டும், ஆண்டி மெக்பிரின், ஜேம்ஸ் கேமரூன் டவ், ஜார்ஜ் டாக்ரெலி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இதையடுத்து, அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணியின் ஆண்ட்ரு பால்பிர்னி 82 ரன்னிலும், கெவின் ஓ பிரையன் 52 ரன்னிலும் வெளியேறினர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பின்வரிசை ஆட்டக்காரர்கள் ஓரளவு தாக்குப் பிடிக்க அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 288 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 5 விக்கெட்டும், யாமின் அஹமத் சாய் 3 விக்கெட்டும், வகார் சலாம்கெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது.

    இரு நாட்கள் மீதமுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு இன்னும் 118 ரன்கள் தேவை என்பதால் எளிதில் வெற்றி பெறும் என தெரிகிறது. #AFGvIRE
    டேராடூனில் நடைபெற்று வரும் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரகமத் ஷாவின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 314 ரன்கள் குவித்துள்ளது. #AFGvIRE
    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் பந்து வீச்சில் சிக்கிய அயர்லாந்து விக்கெட்டுக்களை மளமளவென இழந்தது. ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில் விளையாடிய டாக்ரெல், முர்டாக் ஜோடி சிறப்பாக விளையாடியது. முதல் இன்னிங்சில் அயர்லாந்து அணி 172 ரன்னில் சுருண்டது. முர்டாக் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் யாமின் அகமத்சாய், முகமது நபி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் மற்றும் வக்கார் சலாம்கெய்ல் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், இசனுல்லா ஜனாத்
    இறங்கினர்.

    ஜனாத் 7 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரகமத் ஷா நிதானமாக விளையாடினார். ஷசாத் 40 ரன்னில் வெளியேறினார்.

    அவரை தொடர்ந்து இறங்கிய ஹஷ்மத்துல்லா ஷஹிதியும் பொறுப்புடன் ஆடினார், இருவரும் அரை சதமடித்தனர். ஷஹிதி 61 ரன்னிலும், அஸ்கர் ஆப்கான் 67 ரன்னிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகமத் ஷா 98 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து ஆடவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அயர்லாந்து தரப்பில் ஸ்டூவர்ட் தாம்சன் 3 விக்கெட்டும், ஆண்டி மெக்பிரின், ஜேம்ஸ் கேமரூன் டவ், ஜார்ஜ் டாக்ரெலி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. #AFGvIRE
    டேராடூனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து. #AFGvIRE
    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 3வது போட்டியில் அயர்லாந்தும், 4வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இன்று 5-வது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. அணி கேப்டன் அஷ்கர் ஆப்கன் பொறுப்புடன் ஆடி 82  ரன்னில் காயமடைந்து வெளியேறினார். அவருக்கு அடுத்தபடியாக, மொகமது நபி 40 ரன்னும், ரஷித் கான் 35 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்தது.
     
    அதன்பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. தொடக்க வீரரான பால் ஸ்டிரிங் 70 ரன்னும், 3-வதாக இறங்கிய ஆன்டி பால்பிரைனி 68 ரன்கள் அடித்தனர். ஆட்டத்தின் கடைசியில் கெவின் ஓ பிரையன் 33 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தார்.

    அயர்லாந்து 47.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டி தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. #AFGvIRE 
    அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், குல்பதின் நயீப்பின் பேட்டிங், பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #AFGvIRE #GulbadinNaib
    ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆப்கானிஸ்தான் 2- 0 என கைப்பற்றியது. 

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று டேராடூனில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அரை சதமடித்த அவர் 89 ரன்னில் அவுட்டானார். மற்றொரு வீரர் ஜார்ஜ் டாக்ரெல் 37 ரன்னில் வெளியேறினார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால், அயர்லாந்து அணி 49.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் தவ்லத் சட்ரான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், குல்பதின் நயீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. மொகமது ஷசாத் 43 ரன்னிலும், ஹஸ்ரத்துல்லா ஷாஷை 25 ரன்னிலும், ரஹ்மத் ஷா 22 ரன்னிலும், குல்புதின் நயீப் 46 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 41.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. #AFGvIRE #GulbadinNaib
    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் உலக சாதனை படைத்துள்ளார். #RashidKhan #WorldRecord
    டேராடூன்:

    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. முகமது நபி 81 ரன்கள் (36 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார். அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் ‘ஹாட்ரிக்’ உள்பட தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியதும் அடங்கும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. #RashidKhan #WorldRecord

    அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. #AFGvIRE #HazratullahZazai #RashidKhan
    ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.   

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது  டி20 போட்டி இன்று டேராடூனில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ரத்துல்லா ஷாஷை, உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அயர்லாந்து அணி பந்துவீச்சை மைதானத்தில் நாலாபுறமும் சிதறடித்தனர். முதல் விக்கெட்டாக உஸ்மான் கனி 73 ரன்கள் எடுத்து வெளியேறினார்.



    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹஸ்ரத்துல்லா சரவெடியாக வெடித்தார். அவர் 62 பந்துகளில் 16 சிக்சர், 11 பவுண்டரி என அடித்து 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளது.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான பால் ஸ்டிர்லிங் 50 பந்தில் 91 ரன் எடுத்து அவுட்டானார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதைத்தொடர்ந்து 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷீத் கான் 4 ஓவரில் 25 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். #AFGvIRE #HazratullahZazai #RashidKhan
    ×