என் மலர்
நீங்கள் தேடியது "சிறுமி தாக்குதல்"
- கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அனுபா அச்சுதன்.
- சிறுமியின் முகம் உள்பட பல இடங்களை தாக்கினர்.
அயர்லாந்தில் சமீபகாலமாக இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் மூன்று தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய சிறுமி மீது தாக்குதல் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அனுபா அச்சுதன். இவர் அயர்லாந்தில் 8 ஆண்டுகளாக நர்சாக பணியாற்றி வருகிறார். அவர் தனது கணவர், 2 குழந்தைகளுடன் தென்கிழக்கு அயர்லாந்தில் உள்ள வாட்டர் போர்டு நகரில் வசித்து வருகிறார்.
அனுபாவின் 6 வயது மகள் நியா வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தபோது அவரை சில சிறுவர்கள் சரமாரியாக தாக்கினார்கள். சிறுமியின் முகம் உள்பட பல இடங்களை தாக்கினர். பின்னர் இந்தியாவுக்குத் திரும்பி செல்லுங்கள் என்று கூறிவிட்டு தப்பி சென்றனர்.
இதுதொடர்பாக சிறுமியின் தாய் அனுபா போலீசில் புகார் செய்தார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவார்கள். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாலியல் புகார் அளித்த சிறுமியை பாபு அரிவாளால் வெட்டி உள்ளார்.
- பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மதன்குமார் மீது பாலியல் புகார் அளித்த சிறுமியை அவரது சகோதரன் பாபு அரிவாளால் வெட்டி உள்ளார். சிறுமியின் முகம், கண், கை, கால், தலை ஆகிய பகுதிகளில் அரிவாளால் பாபு வெட்டி உள்ளார்.
பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறுமியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய மதன்குமாரின் சகோதரன் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.
- பள்ளி நிர்வாகிகளிடம் புகார் செய்த உறவினர், அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை பார்த்தார்.
- பள்ளி முன்பு நின்ற சிறுமியை நோக்கி வாலிபர் ஒருவர் வருவது பதிவாகி இருந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோட்டை அடுத்த மஞ்சேஷ்வரம் பகுதியில் ஒரு சமய வகுப்பு நடைபெறுகிறது.
இந்த வகுப்புக்கு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி சென்றார். வகுப்பு முடிந்ததும் அவரை அழைத்து செல்ல உறவினர் ஒருவர் வந்தார்.
அப்போது அந்த சிறுமி, தலையில் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர், சிறுமியிடம் விபரம் கேட்டபோது, ஒருவர் தன்னை தாக்கி விட்டு ஓடிவிட்டதாக தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர், சிறுமியை ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு, மீண்டும் பள்ளிக்கு சென்றார்.
பள்ளி நிர்வாகிகளிடம் இதுபற்றி புகார் செய்த உறவினர், அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை பார்த்தார். அப்போது பள்ளி முன்பு நின்ற சிறுமியை நோக்கி வாலிபர் ஒருவர் வருவது பதிவாகி இருந்தது. அந்த வாலிபர் திடீரென சிறுமியை அலேக்காக தூக்கி சாலையில் வீசி எறிவதும் தெரிந்தது. இதில் கீழே விழுந்த மாணவி, வலியில் துடிதுடித்து அழுவதும், அதை பொருட்படுத்தாமல் அந்த வாலிபர் அங்கிருந்து சாவகாசமாக நடந்து செல்வதும் கேமிராவில் பதிவாகி இருந்தது.
இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அக்காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். சிறிதுநேரத்தில் அக்காட்சிகள் வைரலானது.
இது போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் சென்றது. அவர்கள் சிறுமியை தூக்கி வீசிய வாலிபரை கண்டுபிடித்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் சிறுமியை தூக்கி வீசிய வாலிபர் அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்று கண்டுபிடித்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 307, மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி பயனர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
- தாக்குதலுக்குள்ளான சிறுமி விரைவில் குணம் அடைய வாழ்த்துவதாக ஒரு பயனர் கருத்து பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து லெய்செஸ்டர் ஷையர் பகுதியில் உள்ள ஆஸ்பியின் ஸ்டேஷன் ரோட்டில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுமி ஒருவரை 2 இளம்பெண்கள் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கும் காட்சிகள் டுவிட்டரில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டீனோ என்ற பயனரால் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவில், இந்த சம்பவம் எனது தங்கைக்கு நடந்தது என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.
இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி பயனர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. சிறுமியை தாக்கிய பெண்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் தாக்குதலுக்குள்ளான சிறுமி விரைவில் குணம் அடைய வாழ்த்துவதாக ஒரு பயனர் கருத்து பதிவிட்டுள்ளார்.






