என் மலர்
நீங்கள் தேடியது "pocso act"
- மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலிப்பதாக தெரிவித்தார்.
- கடந்த 20 நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் மாணவியை கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டம், மல்காஜ்கிரி அடுத்த போச்சாரம் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மைதீன் (வயது 27) என்பவர் இயற்பியல் ஆசிரியராக வேலை செய்து வந்தார். பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய மைதீன் தன்னுடைய வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு காதல் பாடம் நடத்தினார்.
மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலிப்பதாக தெரிவித்தார். மாணவியும் அவரது ஆசை வார்த்தையில் மயங்கி மைதீனை காதலித்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் மாணவியை கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் தனது மகளின் கழுத்தில் மஞ்சள் கயிறு இருப்பதை கண்ட அவரது தாயார் மகளிடம் விசாரித்தார். அப்போது மாணவி நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவியின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்தனர். பின்னர் மல்காஜ்கிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மைதீனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- காதலன் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
- காதலன் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சிறுமி, பாகூர் பகுதியில் இருப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து பெற்றோர் அளித்த தகவலின் பேரில் பாகூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி வந்து காதலன் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் காதலன் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைதொடர்ந்து போலீசார் சிறுமியை மீட்டனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காதலன் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காதலன் மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகின்றனர். மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 மாணவர்களும் பள்ளி படிப்பை இடையிலேயே கைவிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடுமையான தாக்குதலுக்கு ஆளான எனது மகளால் நிற்க கூட முடியவில்லை.
- சிறுமியை தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அவரது உறவுப்பெண் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தையும், தாயும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பு இருந்தார்.
சிறுமியின் தந்தை பொள்ளாச்சியில் கயிறு ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் அருண்குமார் என்பவரிடம் பணியாற்றி வந்தார். அந்த நிறுவனத்துக்கு சிறுமியும் வேலைக்கு சென்றார். அப்போது நிறுவன உரிமையாளர் அருண்குமார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சிறுமியின் தாயார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகள் அருண்குமாரின் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது எனது மகளுக்கு அருண்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிப்பதற்காக எனது மகள் அங்கு வேலையை விட்டு நின்று விட்டார். அதன்பிறகு அவர் மற்றொரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளார்.
அங்கு எனது மகள் மீது திருட்டுப்புகார் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜவுளிக்கடை நிர்வாகத்தினர் சிறுமியின் தந்தை பணியாற்றும் நிறுவன உரிமையாளரான அருண்குமாரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அருண்குமார் சிறுமியை நேரில் அழைத்து விசாரித்து உள்ளார். அவரது தந்தை முன்பே சிறுமியை அருண்குமார் பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார். இதில் எனது மகளின் கை, கால், தோள்பட்டை என உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது.
கடுமையான தாக்குதலுக்கு ஆளான எனது மகளால் நிற்க கூட முடியவில்லை. தற்போது மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். படுகாயம் அடைந்த எனது மகளை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளேன். இதற்கு காரணமான தொழில் அதிபர் அருண்குமார் மற்றும் எனது கணவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி தொழில் அதிபர் அருண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிறுமியை தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அவரது உறவுப்பெண் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார். தனக்கு அருண்குமார் பாலியல் தொல்லை கொடுப்பதாக சிறுமி உறவுப்பெண்ணிடம் கூறி இருக்கிறார். ஆனால் அவர் அதனை கண்டுகொள்ளாமல் அனுசரித்து செல்லுமாறு கூறிஉள்ளார். மேலும் அருண்குமார் சிறுமியை தாக்கியபோது அவர் அடிக்க கம்பை எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக உறவுக்கார பெண் மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
- பாலியல் புகார் அளித்த சிறுமியை பாபு அரிவாளால் வெட்டி உள்ளார்.
- பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மதன்குமார் மீது பாலியல் புகார் அளித்த சிறுமியை அவரது சகோதரன் பாபு அரிவாளால் வெட்டி உள்ளார். சிறுமியின் முகம், கண், கை, கால், தலை ஆகிய பகுதிகளில் அரிவாளால் பாபு வெட்டி உள்ளார்.
பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறுமியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய மதன்குமாரின் சகோதரன் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.
- பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர்.
- இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.
மதுரை நகர் அனைத்து மகளிர் போலீசில் மாணவி ஒருவர் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், நான் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர். அவர்களிடம் அளவு எடுப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதுதொடர்பாக வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால், அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறிவிட்டார். இதுபற்றி பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் கூறினேன். அவர்களும் அது பற்றி கண்டுகொள்ளவில்லை.
பள்ளிக்கு வந்த ஆண் டெய்லர் அளவெடுத்தபோது என்னிடம் அத்துமீறினார். உடல் பாகங்களை தொட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். எனவே, அவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.
இதில், பள்ளிக்கு வந்து சீருடைக்காக அளவெடுத்தபோது மாணவியிடம் அத்துமீறியதாக 60 வயதுடைய டெய்லர் மற்றும் அவரது சகோதரியான மற்றொரு டெய்லர், இதற்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியை ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவியிடமும், அந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மாணவிகளுக்கு சீருடை அளவெடுத்த விவகாரம் தொடர்பாக 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 டெய்லர்கள், அளவெடுக்க வைத்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவி அளித்த புகாரின் பேரில் டெய்லர்கள் பாரதி மோகன், கலாதேவி, மாணவியை கட்டாயப்படுத்தியதாக ஆசிரியை சாராவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- சின்னசாமி 14 வயதுடைய சிறுமியை திருமணம் செய்தார்.
- மேலும் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி ( வயது37). கொத்தனாரான இவர் 14 வயதுடைய சிறுமியை திருமணம் செய்தார்.
மேலும் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். இந்த திருமணத்திற்கு சின்ன சாமியின் தாயும், சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சின்னசாமி, அவரது தாய் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து குழந்தை திருமண செய்த சின்னசாமியை கைது செய்தனர்.
- போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
- திருமண ஆசைகாட்டி துணிகரம்
குடியாத்தம்:
குடியாத்தம் செருவங்கி புதுதெரு பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் இவரது மகன் பிரதீப் (வயது 22) வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் 16 வயதான மாணவியை காதலித்து வந்தார். மாணவியிடம் திருமண ஆசைகாட்டி பிரதீப் நெருக்கமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தீவிரமாக விசாரித்தபோது வாலிபர் பிரதீப் ஆசை வார்த்தைகள் கூறி நெருக்கமாக இருந்ததாக கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து அவர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அத ன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா ஆகி யோர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விக்னேஷ், மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார்.
- வாலிபர் விக்னேஷ் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பூர்:
புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். 19 வயது வாலிபரான இவருக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவி, தினமும் பள்ளிக்கு பஸ்சில் சென்று வந்தார். வாலிபர் விக்னேசும் பஸ்சிலேயே வேலைக்கு சென்று வந்தார். அப்போது தான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
விக்னேஷ், மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை, விக்னேஷ் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் தனிமையில் இருந்த போது விக்னேஷ், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதில் பிளஸ்-1 மாணவி கர்ப்பம் ஆனார். இதுபற்றி தெரிய வந்ததும் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக புளியந்தோப்பு மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து வாலிபர் விக்னேஷ் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடிய அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கர்ப்பமான மாணவி எழும்பூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.
- பள்ளி மாணவிக்கு அதே பகுதியில் வசித்து வரும் லாரி கிளீனரான லோகேசுடன் பழக்கம் ஏற்பட்டது.
- கடந்த 20-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார்.
கும்மிடிப்பூண்டி:
புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த 14 வயது மாணவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் லாரி கிளீனரான லோகேசுடன் (22) பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
இது பற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். மேலும் மாணவிக்கு கட்டுப்பாடுகள் விதித்ததாக தெரிகிறது.
இதற்கிடையே கடந்த 20-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார். அவரை பெற்றோர் தேடி வந்தனர். இது குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாணவி, காதலன் லோகேசுடன் திண்டிவனத்தில் விடுதியில் அறை எடுத்து தங்கி இருப்பது தெரிந்தது. போலீசார் விரைந்து சென்று மாணவியை மீட்டனர். மேலும் லோகேசை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவியை திருத்தணி கோவிலுக்கு அழைத்து சென்று தாலி கட்டி திருமணம் செய்து இருப்பது தெரிந்தது. பின்னர் அவர்கள் திருப்பூர், திண்டிவனம் சென்று தங்கி உள்ளனர்.
மாணவியை திருமணம் செய்த லோகேஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இவர்கள் இருவரும் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சோமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (வயது 60) மற்றும் தேவராஜ் (55). இவர்கள் இருவரும் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கே.ஜி.சாவடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் தங்கி அங்கு வேலைக்கு சென்று வந்தார்.
- போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒடிசா போலீசார் தெரிவித்தனர்.
கோவை:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 21 வயது வாலிபருக்கு, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து சிறுமி தனது காதலனிடம் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து வாலிபர் கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஒடிசாவில் இருந்து கோவைக்கு கடத்தி வந்தார்.
பின்னர் கே.ஜி.சாவடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சிறுமியுடன் தங்கி அங்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் ஒடிசாவில் உள்ள சதார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
அப்போது சிறுமி கோவையில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஒடிசா மாநிலம் சதார் போலீசார் நேற்று கோவைக்கு வந்தனர். அவர்கள் கே.ஜி.சாவடி போலீசாரின் உதவியுடன் எட்டிமடையில் வாலிபருடன் தங்கி இருந்த சிறுமியை மீட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் ஒடிசாவுக்கு அழைத்து சென்றனர். வாலிபர் சிறுமியை கடத்தி வந்து 7 மாதமாக அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
எனவே வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒடிசா போலீசார் தெரிவித்தனர்.
- சிறுமியின் சித்தப்பா மகன்களில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறையும், மற்றொருவருக்கு 5 ஆண்டு சிறையும் விதித்து நீதிபதி தீர்ப்பு.
- பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு தமிழக அரசு சார்பாக ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
சென்னை:
சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெற்றோரை பிரிந்து வாழும் நிலையில் தாத்தாவின் பாராமரிப்பில் வசித்து வந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இது சம்பந்தமாக அவர் படிக்க கூடிய பள்ளி நிர்வாகம் அளித்த தகவல் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மையிலாப்பூர் போலிசாரில் புகார் அளித்தார்கள்.
இந்த புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமியின் தாத்தா, 3 சித்தப்பாக்கள், சித்தப்பாக்களின் மகன்கள் 2 பேர் உட்பட 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கை விசாரித்த ராஜலட்சுமி இந்த குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்து சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதால், போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தாத்தா, 3 சித்தப்பா ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், 1 லட்சத்மு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறார்.
மேலும் சிறுமியின் சித்தப்பா மகன்களில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறையும், மற்றொருவருக்கு 5 ஆண்டு சிறையும் விதித்து நீதிபதி தீர்பளித்திருக்கிறார்.
இது தவிர பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு தமிழக அரசு சார்பாக ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தள்ளார். தீர்ப்பு அளிக்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.






