search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "independence"

    • சுதந்திரம் பெற்று 75வது பவளவிழா ஆண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தியாகி தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் முன்பு 5 நாள் பாத யாத்திரையை தொடங்கினர்.
    • விடுதலைக்காக போராடிய தியாகத் தலைவர்களை நினைவு கூறும் வகையில் அவர்களது உருவப்படத்துடன் தொடங்கிய பாதயாத்திரை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.

    தரங்கம்பாடி:

    இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 75வது பவளவிழா ஆண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, தில்லையாடி கிராமத்தில் தியாகி தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் முன்பு மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ. வுமான ராஜகுமார் தலைமையில் 5 நாள் பாத யாத்திரையை தொடங்கினர்.

    நினைவு மணிமண்டபத்தில் தில்லையாடி வள்ளியம்மைக்கு மாலை அணிவித்து

    எம்.எல்.ஏ. ராஜ்குமார் பாதயாத்திரையை தொடங்கினார்.

    விடுதலைக்காக போராடிய தியாகத் தலைவர்களை நினைவு கூறும் வகையில் அவர்களது உருவப்படத்துடன் தொடங்கிய பாதயாத்திரை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த பாதயாத்திரை குத்தாலத்தில் முடிவடைகிறது.நாளை 11ம் தேதி குத்தாலத்தில் இருந்து புறப்பட்டு மணல்மேடு சென்றடைகிறது. 12ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு

    13ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு கொள்ளிடத்தை அடைகிறது.

    14ம் தேதி கொள்ளிடத்தில் இருந்து மாதானம் வழியாக பாதையாத்திரை சீர்காழி வந்தடைகிறது.

    சீர்காழியில் ராஜகுமார் எம்.எல்.ஏ தலைவர்கள் படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் புதுப்பிக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவரான நேதாஜிசுபாஷ் சந்திரபோஸின் மண்டபத்தை திறந்து வைத்து பவளவிழா நினைவு கொடியினை ஏற்றி வைத்து பாத யாத்திரையை நிறைவு செய்கிறார்.

    இந்த பாதயாத்திரையில் மாவட்ட பொதுச்செயலாளர் கனிவண்ணண், பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன் உள்ளீட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரைக்கு ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சிமன்ற தலைவர்கள் தில்லையாடி ரெங்கராஜ், திருக்கடையூர் ஜெயமாலதி சிவராஜ், ஆக்கூர் சந்திரமோகன், இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில், ஆங்காங்கே வரவேற்பு கொடுத்து மரியாதை செய்தனர்.

    பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவது தொடர்பாக நியூ கலிடோனியாவில் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. #NewCaledonia #IndependenceReferendum
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் காலனியாக பிரெஞ்சு பசிபிக் பிரதேசமான நியூ கலிடோனியா உள்ளது. அங்கு பிரான்சிடம் இருந்து நியூ கலிடோனியா சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்த நிலையில், நியூ கலிடோனியா, பிரான்சின் ஒரு பகுதியாக நீடிக்க வேண்டுமா அல்லது சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா என்பது குறித்து மக்களின் கருத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. வாக்காளர்கள் திரளாக வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    இந்த நியூ கலிடோனியாவில் மின்னணு சாதனங்கள் தயாரிப்பதற்கு தேவையான நிக்கல் திரளாக கிடைக்கிறது. பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் இந்தப் பகுதியை மிக முக்கிய பகுதியாக பிரான்ஸ் அரசு கருதுகிறது.

    நியூ கலிடோனியா மக்களில் பெரும்பாலோர், தங்கள் பகுதி பிரான்சின் ஒரு பகுதியாக திகழ வேண்டும், சுதந்திரம் தேவையில்லை என்று கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே பிரிவினையாளர்கள் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது. #NewCaledonia #IndependenceReferendum 
    ×