search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "referendum"

    • ஓய்வு பெறும்போது கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் என்று மாற்ற வேண்டும்.
    • மக்களுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    சென்னை:

    தென்னக ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில், பொது மகா சபைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளராக என்.கண்ணையா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தலைவராக சி.ஏ.ராஜா ஸ்ரீதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர, கோட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.கண்ணையா கூறியதாவது:-

    ரெயில்களில் பாமர மக்கள் பயணிக்கும் பொது பெட்டிகளை ஏ.சி. பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டு உள்ளனர். இதனால் பாமர, ஏழைமக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்க்கிறோம்.

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டம் கடந்த 2001-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தேசிய பென்சன் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் பயனற்றதாக உள்ளது. புதிய பென்சன் திட்டத்தை மாற்றி, முன்பு இருந்ததுபோல், ஓய்வு பெறும்போது கடைசிமாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் என்று மாற்ற வேண்டும்.

    தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசு, தாங்கள் பதவிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை தருவோம் என்று உறுதி கூறினர். ஆனால், இன்றோ ஆட்குறைப்பு, தனியார் மயமாக்கம் ஆகியவற்றின் மூலமாக தற்போது இருக்கும் பணியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. தற்போது, ரெயில்வேயில் காலியாக உள்ள 90,000 இடங்களுக்கு 2.80 கோடி பேர் விண்ணப்பிக்கின்றனர். வேலை இல்லாத நிலை எந்த அளவுக்கு உள்ளதை இதன்மூலம் புரிந்து கொள்ள வேண்டும். ஐ.சி.எப்.யில் ஒரு வந்தே பாரத் ரெயில் தயாரிக்க ரூ.98 கோடி செலவிடப்பட்டது. தற்போது, ரஷியா கம்பெனிக்கும், மற்ற கம்பெனிகளுக்கு ரூ.139 கோடியில் ஒரு வந்தே பாரத் ரெயில் தயாரித்து கொடுக்க உள்ளார்கள். இதனால், வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது. மக்களுக்கு இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    பொது பெட்டிகளை ஏ.சி. பெட்டியாக மாற்றக்கூடாது. நல்ல நிலையில் இயங்கும் கம்பெனிகளை வெளிநபர்களுக்கு கொடுக்கக்கூடாது. இவற்றை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாக அகில இந்திய அளவில் வருகிற 21, 22-ந் தேதி மத்திய அரசு ஊழியர்கள், ரெயில்வே ஊழியர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உள்ளோம்.

    இதன் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆஸ்திரேலிய அரசியலமைப்பு சட்டத்தில் அவர்கள் குறித்து சிறு குறிப்பு கூட கிடையாது
    • வாய்ஸ் டு பார்லிமென்ட் எனப்படும் ஒரு கமிட்டி அமைக்கப்படும்

    அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அந்நாட்டிலேயே காலங்காலமாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களுக்கு அந்நாடுகளில் பிற்காலத்தில் குடியேறி தற்போது வரை குடிமக்களாக வாழும் மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் கிட்டத்தட்ட சரிசமமாக வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால், ஆஸ்திரேலியாவில் மட்டும், அங்குள்ள 2.5 கோடி (26 மில்லியன்) மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.2% பழங்குடி மக்கள் வசித்து வந்தாலும் அவர்களுக்கு பின் அங்கு குடியேறியவர்களுக்கு உள்ள உரிமைகள் இல்லாததால், பழங்குடியினரின் சமூக, பொருளாதார வாழ்வியல் மிகவும் பின்னடைந்துள்ளது.

    வடக்கு ஆஸ்திரேலியாவிற்கும், நியூ கினியாவிற்கும் இடையில் உள்ள டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளில் வாழ்பவர்களுக்கும், ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிவழியாக வாழ்வதாக கூறப்படும் பழங்குடியினர்களான ஆஸ்திரேலிய அபோரிஜின்ஸ் மக்களுக்கும், ஆஸ்திரேலியாவில் சட்டமியற்றுதலில் பங்கேற்கும் உரிமைகள் தற்போது வரை கிடையாது.

    ஆஸ்திரேலியா ஒரு தனி நாடாக உருவானதும், அங்கு வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தில் ஆஸ்திரேலிய கண்டத்தில் சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக வாழ்வதாக நம்பப்படும் அபோரிஜின்ஸ் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுவாசிகளை குறித்து எவ்வித குறிப்பும் கிடையாது என்பது கசப்பான உண்மை.

    இதனை மாற்ற தீவிர முயற்சிகளை கடந்த ஜூன் மாதம் முதல் எடுத்து வரும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், வரும் அக்டோபர் 14-ஐ அன்று இதனை மாற்ற ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

    "நெருங்கும் அக்டோபர் 14 தான் நம்முடைய நேரம். அபோரிஜின்ஸ் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு பழங்குடியினருக்கும் இது ஒரு மராத்தான் ஓட்டப்பந்தயம் போன்று நீண்டகால போராட்டமாக இருந்தது. நமக்கு இது ஒரு குறுகிய கால ஸ்ப்ரின்ட் ஓட்டம்" என அல்பானீஸ் தெரிவித்தார்.

    இம்முயற்சி வெற்றி பெற்றால், உள்நாட்டு மக்களுக்கான உரிமைகள் குறித்து "பாராளுமன்றத்தின் குரல்" (Voice to Parliament) எனும் ஒரு கமிட்டி அமைக்கப்படும். இக்கமிட்டி பழங்குடியினரின் ஆரோக்கியம், வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, கல்வி உட்பட அவர்களின் அடிப்படை உரிமைகள் குறித்து முடிவெடுக்க அரசுக்கும், பாராளுமன்றத்திற்கும் ஆலோசனைகள் வழங்கும் அதிகாரம் பெறும்.

    இத்தைகைய ஒரு கமிட்டி அமைவதை மக்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.

    அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்கள் செய்வதற்கு மக்களிடம் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் ஆதரவு கிடைத்தாக வேண்டும் என்பது ஆஸ்திரேலியாவில் ஒரு கட்டாய வழிமுறையாகும்.

    இந்த முடிவுக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் பல கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த கமிட்டி உருவானாலும் அது ஒரு சக்தியற்றதாக இருக்கும் எனும் கருத்தும் அங்கு பலம் பெறுகிறது.

    அக்டோபர் 14 அன்று வாக்கெடுப்பில் மக்கள் தரப்போகும் முடிவை அரசியல் வல்லுனர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    எகிப்து அதிபரின் பதவிக்காலத்தை ஆறாண்டுகளாக நீட்டிப்பது, பாராளுமன்றத்தில் மேல்சபையை உருவாக்குவது தொடர்பாக மக்களின் கருத்தறியும் பொது வாக்கெடுப்பு இன்று தொடங்கியது. #Egyptianpresident #Egyptreferendum #constitutionalamendments
    கெய்ரோ:

    எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் பட்டா சிசி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகளாக உள்ள நிலையில், மேலும் இரண்டாண்டுகள் அதிகரித்து அதிபரின் பதவிக்காலத்தை ஆறாண்டுகளாக அங்கீகரிக்க சமீபத்தில் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் செய்யப்பட்டது.

    மேலும், பாராளுமன்றத்தில் புதிதாக மேல்சபையை உருவாக்குவது, துணை அதிபர் பதவியை ஏற்படுத்துவது உள்பட எகிப்து அரசியலமைப்பு சட்டத்தில் சில திருத்தங்களும் செய்யப்பட்டது.

    இவற்றுக்கு மக்களின் ஒப்புதலை பெறுவதற்காக கருத்தறியும் பொது வாக்கெடுப்பு 20-4-2019 முதல் 22-4-2019 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அவ்வகையில் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 14 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் காலை முதல் இரவு 9 மணிவரை நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

    2014-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட எகிப்து அரசியலமைப்பு சட்டத்தின்படி, அந்நாட்டின் அதிபரோ, பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐந்தில் ஒருமடங்கு பெரும்பான்மை கொண்ட குழுவினரோ ஒரு அந்நாட்டின் அடிப்படை சட்டத்தை மாற்றியமைக்கும் ஒரு புதிய சட்டத்தை இயற்றலாம். பின்னர், இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இருமடங்கு பெரும்பான்மை ஆதரவை பெற்றாக வேண்டும். 

    அதன்பிறகு, மக்களின் கருத்தையறியும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதில் மூன்றில் இருமடங்கு பேரின் தீர்ப்பின்படி, அந்த சட்டம் செல்லுபடியாகலாம் அல்லது கைவிடப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #Egyptianpresident #Egyptreferendum #constitutionalamendments
    பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவது தொடர்பாக நியூ கலிடோனியாவில் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. #NewCaledonia #IndependenceReferendum
    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் காலனியாக பிரெஞ்சு பசிபிக் பிரதேசமான நியூ கலிடோனியா உள்ளது. அங்கு பிரான்சிடம் இருந்து நியூ கலிடோனியா சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்த நிலையில், நியூ கலிடோனியா, பிரான்சின் ஒரு பகுதியாக நீடிக்க வேண்டுமா அல்லது சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா என்பது குறித்து மக்களின் கருத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. வாக்காளர்கள் திரளாக வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    இந்த நியூ கலிடோனியாவில் மின்னணு சாதனங்கள் தயாரிப்பதற்கு தேவையான நிக்கல் திரளாக கிடைக்கிறது. பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் இந்தப் பகுதியை மிக முக்கிய பகுதியாக பிரான்ஸ் அரசு கருதுகிறது.

    நியூ கலிடோனியா மக்களில் பெரும்பாலோர், தங்கள் பகுதி பிரான்சின் ஒரு பகுதியாக திகழ வேண்டும், சுதந்திரம் தேவையில்லை என்று கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே பிரிவினையாளர்கள் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது. #NewCaledonia #IndependenceReferendum 
    ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பான பிரிட்டனின் முடிவு தொடர்பாக மீண்டும் பொது வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என லண்டன் நகர மேயர் சாதிக் கான் வலியுறுத்தியுள்ளார். #Londonmayor #Brexitsecondreferendum
    லண்டன்:

    ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.

    இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. பெரும்பாலான மக்கள் ‘பிரெக்ஸிட்’ எனப்படும் வெளியேறும் முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.

    ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) விவகாரத்தில், பிரதமர் தெரசா மேவின் கொள்கை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரெக்ஸிட் விவகாரத்துறை மந்திரி டேவிட் டேவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் நடவடிக்கையை, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மிகவும் பலவீனமான முறையில் கையாள்வதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    பிரெக்ஸிட் நடவடிக்கையின்போது பிரிட்டனின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பேரங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே, எனது பதவியை விட்டு விலகுகிறேன் என்று தனது ராஜினாமா கடிதத்தில் டேவிட் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

    ஐரோப்பிய யூனியலிருந்து பிரிந்தாலும், அதன் உறுப்பு நாடுகளுடன் தளர்வான ஏற்றுமதி - இறக்குமதி கொள்கை, பொது வர்த்தகச் சந்தை ஆகியவற்றைப் பின்பற்றுவதற்கு தெரசா மே தலைமையிலான அரசு பரிசீலித்து, செயல் திட்டங்களை வகுத்து வருகிறது.

    ஐரோப்பிய யூனியலிருந்து வெளியேறும் விவகாரத்தில் தெரசா மே முன்னெடுத்துவரும் சில திட்டங்களை எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி மட்டுமின்றி, ஆளும்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் எதிர்த்து வருகின்றனர்.

    உள்கட்சியில் அவருக்கு எதிராக சுமார் 70 எம்.பி.க்கள் போர்கொடி உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. தெரசா மே பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான வழிவகை என்ன? என்பது தொடர்பாக அவர்கள் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இவர்களின் செயல்பாடுகளால் எனது பதவிக்கு ஆபத்து வராது என தெரசா மே கூறி வருகிறார். சிலரது மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் இறுதி திட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது, அது ஏற்புடையது தானா? என்பதை பாராளுமன்றம் தீர்மானிக்கட்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

    இந்நிலையில், குழப்ப நிலையில் உள்ள பிரதமர் தெரசா மேவின் நடவடிக்கைகள் நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் என்பதால் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரெக்சிட் விவகாரத்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என லண்டன் நகர மேயர் சாதிக் கான் குறிப்பிட்டுள்ளார்.

    பிரிட்டனில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழில் அவர் இன்று எழுதியுள்ள கட்டுரையில் தெரசா மே முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் அவர் நடத்திவரும் பிரெக்சிட் பேரம் பிரிட்டன் மக்களின் வாழ்க்கைத்தரத்தை சீர்குலைத்து விடும் என குறிப்பிட்டுள்ளார்.

    அரசின் இந்த தோல்வியினால் ஐரோப்பிய யூனியனில் இருந்து நாம் வெளியேற வேண்டுமா? என்ற எண்ணத்துக்கு பெரும்பாலான மக்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளதால் பிரெக்சிட் விவகாரத்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்பட வேண்டும் எனவும் சாதிக் கான் வலியுறுத்தியுள்ளார்.

    மறு வாக்கெடுப்புக்கு அவசியம் இல்லை என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரமி கார்பைன் கூறிவரும் நிலையில் அதே கட்சியை சேர்ந்த முத்த உறுப்பினரும் லண்டன் நகர மேயருமான சாதிக் கான் தற்போது முன்வைத்துள்ள கருத்து பிரிட்டன் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எனினும், அடுத்த வாரம் நடைபெறவுள்ள தொழிலாளர் கட்சி மாநாட்டில் லண்டன் மேயரின் இந்த கருத்து தொடர்பாக பரிசீலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Londonmayor #Brexitsecondreferendum 
    ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமா?, வேண்டாமா? என்பது குறித்து தூத்துக்குடி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது. #SterliteProtest #Thoothukudi
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் நேற்று மாலை தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அரசு திட்டமிட்டு நடத்தி உள்ளது. இதற்காகவே தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். பதற்றமான சூழல் என்று பல இடங்களில் போலீசாரை நிறுத்தி வைத்து மக்களை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிப்பதற்காக தமிழக அரசு, ஒரு நபர் கமிஷன் என்ற பெயரில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனத்தை திரும்ப பெற வேண்டும். அதற்கு மாற்றாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, பரந்தாமன் ஆகியோரில் ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்.

    துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு மாற்றாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இறந்தவர்களின் லட்சியமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு, இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான தமிழக அரசு ஆட்சி பொறுப்பில் இருந்து விலக வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கொலை குற்றத்திற்கான சதித்திட்டம் தீட்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.


    ஸ்டெர்லைட் ஆலைக்கு குடிநீர் வினியோகம், மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை இயங்கவில்லை என்றும் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மறுபக்கம் மக்களின் விருப்பத்தோடு ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்றத்தில் இருந்தும், தமிழக அரசிடம் இருந்தும் அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் ஆலையை தொடங்குவோம் என்று வேதாந்தா நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.

    எனவே அரசும், ஆலை நிர்வாகமும் மக்களின் விருப்பம் என்னவென்று அறிய வேண்டும். அதாவது ஆலை தொடர்ந்து இயங்க வேண்டுமா?, மூடப்பட வேண்டுமா? என்பது குறித்து தூத்துக்குடி மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

    கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SterliteProtest #Thoothukudi #Tuticorin
    அயர்லாந்தில் நாட்டில் கருகலைப்பு செய்ய அனுமதி அளிக்கும் சட்டத்திருத்தத்துக்கான பொது வாக்கெடுப்பு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. #Irelandreferendum repealabortionban

    டப்ளின்: 

    அயர்லாந்து நாட்டில் கருகலைப்பு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து அங்கு பல்வேறு போராட்டங்களை நடைபெற்று வருகின்றன.

    இதையடுத்து, அந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வாக்கெடுப்பு இன்று காலை 7 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) தொடங்கியது. இதில் 3.2 கோடி மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.

    இந்த வாக்கெடுப்பில் கருகலைப்புக்கு ஆதரவாக வெற்றி பெரும் பட்சத்தில் 12 வார காலம் வரை கருகலைப்பு செய்யலாம் என்று சட்டம் மாற்றியமைக்கப்படும். 


    மரணமடைந்த இந்திய பல் மருத்துவர் சவீதா 


    அயர்லாந்து நாட்டில் கருகலைப்பு செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் இந்தியாவை சேர்ந்த பல் மருத்துவர் சவீதா கடந்த 2012-ம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Irelandreferendum repealabortionban
    ×