என் மலர்
நீங்கள் தேடியது "மோகன் பகவத்"
- உலகம் உயிர்வாழ இந்து சமூகம் அவசியம்
- இந்தியா ஒரு ‘இந்து ராஷ்டிரம்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையில்லை.
இந்து சமூகம் என்றும் அழியாதது என்றும், பண்டைய நாகரிகங்கள் அழிந்தபோதும் இந்த சமூகம் நிலைத்திருந்தது எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் பேசியுள்ளார். மணிப்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,
"உலகில் உள்ள அனைத்து நாடுகளும் எல்லாவிதமான சூழ்நிலைகளையும் கடந்திருக்கும். யுனான்(கிரீஸ்), மிஸ்ர் (எகிப்து), ரோமா என உலகின் அனைத்து சிறந்த பண்டைய நாகரிகங்களும் அழிந்தன. ஆனால் நம் நாகரிகத்தில் ஏதோ இருக்கிறது. அதனால்தான் நாம் இன்னும் இருக்கிறோம்" என தெரிவித்தார்.
முன்னதாக இந்தவார தொடக்கத்தில் அசாமில் பேசிய மோகன் பகவத்,
"தாய்நாட்டின் மீதான பக்தி, நமது முன்னோர்களின் பெருமை மற்றும் நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அனைவரும் இந்துக்கள்தான். இந்து என்பதை வெறும் மத அர்த்தங்களில் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்து மற்றும் இந்துக்களின் கலாச்சாரம் என்பது வெறும் உணவு மற்றும் வழிபாடு மட்டுமல்ல, அனைத்தையும் உள்ளடக்கியது. இந்து மதம் இன்னும் பல மக்களை ஈர்க்கும்.
தங்கள் வழிபாடு, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை விட்டுகொடுக்காவிடினும், நம் நாட்டை, இந்திய கலாச்சாரத்தை பின்பற்றினால், நம் மூதாதையர்களை எண்ணி பெருமைப்பட்டால் அந்த முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்கள்தான். பாரதம் என்பதில் பெருமை கொள்பவர்கள் அனைவரும் இந்துக்கள்தான். பாரதம், இந்து ஆகிய இரண்டு சொற்களும் ஒத்த சொற்கள்தான். இந்தியா ஒரு 'இந்து ராஷ்டிரம்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையில்லை. நாட்டின் நாகரிக நெறிமுறைகள் ஏற்கனவே அதனை அடையாளப்படுத்துகின்றன" என தெரிவித்தார்.
- சாதி, மத அடையாளங்களை விட்டுவிட்டு இந்த அமைப்பில் இணையலாம்.
- எந்த ஒரு கட்சி மீதும் தங்களுக்கு தனி ஈடுபாடு கிடையாது
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஆர்எஸ்எஸ்-ல் இணையலாம் என்று ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன் பகவத் இதனை தெரிவித்தார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், "ஆர்எஸ்எஸ்-ல் பிராமணர், வேறு எந்த சாதியினர், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் யாரும் குறிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை. இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் RSS-ல் இணையலாம். அவர்கள் தங்களது சாதி, மத அடையாளங்களை விட்டுவிட்டு இந்த அமைப்பில் இணையலாம். எந்த ஒரு கட்சி மீதும் தங்களுக்கு தனி ஈடுபாடு கிடையாது என்றும் தேசிய கொள்கைகளை ஆதரிக்கும் கட்சிக்கு வாக்களிப்போம்" என்று தெரிவித்தார்.
- முதலாவது பிரிவினர் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்பவர்கள்
- இரண்டாவது பிரிவினர் இந்துவாக இருப்பதில் பெருமைப்படுவதில்லை
இந்தியா ஒரு இந்து நாடு என்றும், நாட்டில் உள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்து மூதாதையர்களின் சந்ததியினர் என்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன் பகவத் இதனை தெரிவித்தார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், "பண்டைய காலத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் இந்த மண்ணில் வாழும் மக்களைக் குறிக்க இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர்.
இந்து சமூகத்தை நான்கு குழுக்களாக வகைப்படுத்தபட்டுள்ளது. முதலாவது பிரிவினர் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்பவர்கள். இரண்டாவது பிரிவினர் தாங்கள் இந்துக்கள் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் அதில் பெருமைப்படுவதில்லை. மூன்றாவது பிரிவினர் தங்களை தனிப்பட்ட முறையில் இந்துக்கள் என்று கருதுபவர்கள், ஆனால் வெளிப்படையாக தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாதவர்கள். நான்காவது பிரிவினர் தாங்கள் இந்துக்கள் என்பதை மறந்துவிட்டார்கள்.
இந்தியா ஒரு இந்து நாடு. இங்குள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒரே மூதாதையர்களின் சந்ததியினர். இந்து சமூகம் ஒன்றுபட்ட சக்தியாக ஒன்றுபட வேண்டும்" என்று தெரிவித்தார்.
- தங்களுக்கும், தங்களுடைய நிலைக்கும் என்னவாகும் என்று உலக மக்கள் பயப்படுகிறார்கள்.
- இதனால்தான் இந்திய பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. மேலும், ரஷியாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தாததால் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்துள்ளது.
50 சதவீதம் வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:-
இந்தியா வலிமையாக வளர்ந்தால் தங்களுக்கும், தங்களுடைய நிலைக்கும் என்னவாகும் என்று உலக மக்கள் பயப்படுகிறார்கள். இதனால்தான் இந்திய பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது. அநீதியானது. எந்தவொரு நெருக்கடிக்கும் அரசு அடி பணியக் கூடாது.
இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
- தனது முழு வாழ்க்கையையும் சமூக மாற்றத்திற்கும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதற்கும் அர்ப்பணித்துள்ளார்.
- அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வசுதைவ குடும்பகம் என்ற கொள்கையால் ஈர்க்கப்பட்டு, ஸ்ரீ மோகன் பகவத் ஜி தனது முழு வாழ்க்கையையும் சமூக மாற்றத்திற்கும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதற்கும் அர்ப்பணித்துள்ளார்.
அவரது 75வது பிறந்தநாளின் சிறப்பு நிகழ்வில், மோகன் ஜி மற்றும் அவரது ஊக்கமளிக்கும் ஆளுமை குறித்து சில எண்ணங்களை எழுதினார். அன்னை பாரதியின் சேவையில் அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.
- உங்களுடைய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஏதும் சொல்லப் போவதில்லை.
- நாங்கள் முடிவு செய்வதில்லை.
பாஜக கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக வேறு தலைவர் நியமிக்கப்பட வேண்டியது உள்ளது. அடுத்த தேசிய தலைவரை தேடும் பணியில் பாஜக மேலிடம் ஈடுபட்டு வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவராக இருப்பார். இதனால் பாஜக தலைவர் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முக்கிய பங்கு வகிக்கும். ஆர்எஸ்எஸ் கைக்காட்டும் நபர்தான் பாஜக-வின் தேசிய தலைவராவார் என்ற பார்வையும் உள்ளது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 3 நாள் விழா நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசும்போது கூறியதாவது:-
உங்களுடைய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஏதும் சொல்லப் போவதில்லை (நகைச்சுவையாக). நாங்கள் முடிவு செய்வதில்லை. நாங்கள் முடிவு செய்வதாக இருந்தால், இவ்வளவு காலம் எடுத்திருக்கமாட்டோம். ஆர்எஸ்எஸ் அமைப்பை இயக்குவதில் நான் நிபுணர். அரசை இயக்குவதில் பாஜக நிபுணர். நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்துகளை மட்டுமே சொல்ல முடியும். எங்கேயும் மோதல் இல்லை. ஆனால், எல்லா பிரச்சனையிலும் ஒரே பக்கமாக இருக்கும் என்பது சாத்தியமற்றது. நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் நம்புகிறோம்.
இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார்.
- நல்ல பணிகளை செய்வதில் எங்கள் உதவி தேவைப்பட்டால், பாஜக-வுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நாங்கள் உதவுகிறோம்.
- மதம் என்பது தனிப்பட்டவரின் விருப்பத்தின் அடிப்படையிலானது. இதில் எந்த வசீகரமோ அல்லது வற்புறுத்தலோ இருக்கக்கூடாது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:-
* தற்போதைய அரசாங்கத்துடன் மட்டுமல்லாமல், ஒவ்வொரு அரசாங்கத்துடனும் எங்களுக்கு நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது
* பாஜக-வுடன் எங்கும் மோதல் இல்லை. ஆனால் எல்லாப் பிரச்சினைகளிலும் ஒரே நிலை எடுப்பது சாத்தியமில்லை, நாங்கள் எப்போதும் ஒருவரையொருவர் நம்புகிறோம்.
* நான் 'ஷாகாக்கள்' நடத்துவதில் நிபுணர், பாஜக அரசாங்கத்தை நடத்துவதில் நிபுணர், நாங்கள் ஒருவருக்கொருவர் பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும்
* நல்ல பணிகளை செய்வதில் எங்கள் உதவி தேவைப்பட்டால், பாஜக-வுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நாங்கள் உதவுகிறோம்
* கல்வி அறிவு மற்றும் திறன்களை வழங்குவதற்காக இருக்க வேண்டும். வேலைகளுக்கு மட்டும் என இருக்கக் கூடாது
* மதம் என்பது தனிப்பட்டவரின் விருப்பத்தின் அடிப்படையிலானது. இதில் எந்த வசீகரமோ அல்லது வற்புறுத்தலோ இருக்கக்கூடாது.
* இந்திய பிரிவினையை ஆர்எஸ்எஸ் எதிர்க்கவில்லை என்று சொல்வது தவறு. நாங்கள் அதை எதிர்த்தோம். ஆனால் அப்போது ஆர்எஸ்எஸ்-க்கு போதுமான பலம் இல்லை
* மதமாற்றம், சட்டவிரோத இடம் பெயர்வு மக்கள் தொகை ஏற்றத்தாழ்வுக்கு முக்கிய காரணங்கள்
* சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் சமூகமும் அதன் பங்கைச் செய்ய வேண்டும்.
* சட்டவிரோத குடியேறிகளுக்கு நாம் வேலை கொடுக்கக்கூடாது. முஸ்லிம்கள் உட்பட நமது சொந்த மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்
* அனைத்து இந்திய குடிமக்களும் மூன்று குழந்தைகளைப் பெறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும், இதனால் மக்கள் தொகை போதுமானதாகவும் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.
* அகண்ட பாரதம் என்பது வாழ்க்கையின் உண்மை. நமது கலாச்சாரமும் முன்னோர்களும் ஒன்றே என்பதை நாம் உணர வேண்டும்
* எல்லோரும் சமமாக இருக்கும்போது இந்து- முஸ்லிம் ஒற்றுமை பற்றி ஏன் பேச வேண்டும்?. நாம் அனைவரும் இந்தியர்கள்.
* இஸ்லாம் இங்கே இருக்காது என்று இந்து சிந்தனை கூறவில்லை.
* சாலைகள், இடங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்கள் வைக்கக்கூடாது. அவை முஸ்லிம்களின் பெயர்களால் சூட்டப்படக் கூடாது என்று நான் கூறவில்லை.
* மத அடிப்படையில் உட்பட யாரையும் தாக்குவதில் ஆர்எஸ்எஸ் நம்பிக்கை கொள்ளவில்லை
* காலாவதியானவை அனைத்தும் ஒழிய வேண்டும், சாதி அமைப்பு ஒரு காலத்தில் இருந்தது, ஆனால் இன்று அதற்கு எந்த சம்பந்தமும் இல்லை
* அரசியலமைப்புச் சட்டத்தின்படி கட்டாயப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை ஆர்எஸ்எஸ் முழுமையாக ஆதரிக்கிறது, மேலும் அது தேவைப்படும் காலம் வரை அதை ஆதரிப்போம்.
- தான் நம்பும் பாதையைப் பின்பற்றுவதில் நம்பிக்கை கொண்டவர்.
- வேறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களை மதிப்பவர்தான் இந்து.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடு வகையில் 3 நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் "இந்து என்பவர் யார்? தான் நம்பும் பாதையைப் பின்பற்றுவதில் நம்பிக்கை கொண்டவர். வேறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களை மதிப்பவர்தான்" என்றார்.
- மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்வதுதான் தீவிர இந்து என அடிக்கடி தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
- உண்மையான இந்து என்றால் யாரையும் எதிர்ப்பது என்ற அர்த்தம் அல்ல.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மோகன் பகவத் பேசியதாவது:-
மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்வதுதான் தீவிர இந்து என அடிக்கடி தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதுபோன்ற தவறான கருத்து வரலாம். உண்மையான இந்து என்றால் யாரையும் எதிர்ப்பது என்ற அர்த்தம் அல்ல. அப்படி எதிர்க்கவில்லை என்பதற்காக இந்துக்கள் இல்லை அர்த்தம் கிடையாது. நாம் இந்துக்கள். ஆனால், அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் இந்து மதத்தின் சாரம்சம்.
இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.
- தேசத்தை கட்டி எழுப்ப தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் மோரோபந்த் பிங்லி.
- மோரோபந்த் பிங்லி தேச சேவையில் அர்ப்பணிப்புடன் இருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கலந்து கொண்டார்.
அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் மோரோபந்த் பிங்லி குறித்த புத்தகத்தை வெளியீட்டு மோகன்பகவத் பேசியதாவது:-
தேசத்தை கட்டி எழுப்ப தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் மோரோபந்த் பிங்லி. அவசர நிலைக்கு பிந்தைய அரசியல் குழப்பத்தின் போது முடிவுகளை சரியாக கணித்தவர். அவரது இயல்பு மிகவும் நகைச்சுவையானது. மோரோபந்த் பிங்லி தேச சேவையில் அர்ப்பணிப்புடன் இருந்தார்.
தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மோகன் பகவத்தின் இந்த பேச்சு விவாதங்களுக்கு களம் அமைத்துள்ளது. எதிர்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு குறித்து கேள்வி கேட்க தூண்டி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பிரதமர் மோடிக்கு இப்போது 74 வயது ஆகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு மோடி வந்த போதும் அவரது ஓய்வு குறித்த விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் சிவசேனா கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் கூறுகையில், எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி மற்றும் ஜஸ்வந்த்சிங் போன்ற தலைவர்களை 75 வயது நிரம்பிய பிறகு ஓய்வு பெற பிரதமர் மோடி கட்டாயப்படுத்தினார். இப்போது அதே விதியை அவர் தனக்கும் பயன்படுத்துகிறாரா? என்று பார்ப்போம் என கூறினார்.
- கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
- இந்த நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பவகத், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மோகன் பகவத்திற்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பங்கேற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து முன்னணி நடத்திய மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள்அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அண்ணா, பெரியாரை விமர்சிக்கும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- இதுபோன்ற விசயங்களை இந்துக்கள் ஒருபோதும் செய்வது கிடையாது.
- வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு பாடம் கற்பிப்பதும் அந்த கடமையின் ஒரு பகுதியாகும்
பிரதமர் மோடியை நேற்று இரவு டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் நேரில் சந்தித்து பேசினார்.
பஹல்காமில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொடூர கொலை செய்யப்பட்ட சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த வாரம் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பகவத், பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்குக் கடுமையான பதிலடியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். "மக்களிடம் அவர்களின் மதம் என்னவென்று கேட்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டு உள்ளனர். இதுபோன்ற விசயங்களை இந்துக்கள் ஒருபோதும் செய்வது கிடையாது.
நம்முடைய மனங்களில் வலி உள்ளது. நாங்கள் கோபத்தில் இருக்கிறோம் என பேசினார். நம்முடைய அண்டை வீட்டுக்காரர்களை நாம் ஒருபோதும் துன்புறுத்தவோ அல்லது அவர்களுக்கு தீங்கிழைப்பதோ கிடையாது. ஆனால், சிலர் தீங்கானவர்களாக மாறினால், வேறு என்ன வழி? மக்களை பாதுகாக்க வேண்டியது மன்னனின் கடமை.
மன்னன் தன்னுடைய கடமையை கட்டாயம் செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு பாடம் கற்பிப்பதும் அந்த கடமையின் ஒரு பகுதியாகும்" என பேசினார். நெற்றிய உரையாடலிலும் மோகன் பகவத் இதையே வலியறுத்தியதாக தெரிகிறது.
இதற்கிடையே நேற்று ராணுவ தளபதிகளுடன் நடந்த கூட்டத்தில் எதிர் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன






