என் மலர்
நீங்கள் தேடியது "மோகன் பகவத்"
- இந்து சமூகம் எதிர்காலத்தில் மறைந்து போகக்கூடும்
- நமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, ஆனால் விழிப்புணர்வு அவசியம்
இந்து சமூகத்தினர் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த சமூக நல்லிணக்க நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், திருமணத்தின் உண்மையான நோக்கம் சந்ததியை முன் எடுத்துச் செல்வதே தவிர, ஒருவரின் தனிப்பட்ட ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
மூன்றுக்கும் குறைவாக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் இந்து சமூகம் எதிர்காலத்தில் மறைந்து போகக்கூடும் என தெரிவித்துள்ளார். இந்துக்களை ஒன்றிணைத்து அதிகாரம் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்துக்களை ஒன்றிணைப்பதற்கும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் ஒரு தேவை உள்ளது. நமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, ஆனால் விழிப்புணர்வு அவசியம் எனப் பேசினார்.
மேலும் பெண்கள்தான் குடும்பத்தின் அஸ்திவாரம் எனவும் தெரிவித்துள்ளார். பெண்களை பலவீனமானவர்களாகக் கருதக்கூடாது என்றும், அவர்களுக்குத் தற்காப்புக் கலைகளில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்திய பாரம்பரியம் பெண்களுக்கு ஒரு மரியாதைக்குரிய இடத்தையும், அவர்களின் வெளிப்புறத் தோற்றத்தை விட அவர்களின் வளர்க்கும் பண்புகளுக்கே அதிக மதிப்பையும் வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
- மோதல்கள் உள்ளன, ஆனால் நாடு ஒற்றுமையாகவே உள்ளது.
- நான்காவது வகை "மறந்தவர்கள், மறக்கச் செய்யப்பட்டவர்கள்"
மும்பையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா ஒன்றில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், இந்துக்கள் நான்கு வகை என்றும், இந்து என்ற உணர்வு மறக்கப்பட்டதால்தான் இந்தியாவில் பிரிவினை ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.
விழாவில் பேசிய அவர்,
'இந்துத்துவாவை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் எதையும் இழக்க மாட்டீர்கள். உங்கள் மத நடைமுறையையோ அல்லது உங்கள் மொழியையோ. இந்துத்துவா உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம். இந்துக்களில் நான்கு வகையினர் உள்ளனர். முதலாவது, பெருமையுடன் நாங்கள் இந்துக்கள் எனக்கூறுவார்கள். இரண்டாவது பிரிவில், "நாங்கள் இந்துக்கள், அதனால் என்ன? இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?" என்று கூறுபவர்கள். மூன்றாவது பிரிவில், "வீட்டிற்குள் மட்டும் இந்துக்கள்" என்று கூறுபவர்கள்.
நான்காவது "மறந்தவர்கள், மறக்கச் செய்யப்பட்டவர்கள்" அடங்குவர். மேலும் அதிகமான மக்களை மறக்கச் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன'. என்று கூறினார். மேலும் இந்து பாவம் அல்லது இந்து என்ற உணர்வு மறக்கப்பட்டதால்தான் இந்தியாவில் பிரிவினை ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.
"மதத்தின் காரணமாகப் பிரிவினை ஏற்பட்டது. நாங்கள் இந்துக்கள் என்பதால் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம் என்று சொன்னோம். இது தவறு என்று கூறும் மக்கள் உள்ளனர். இஸ்லாம், கிறிஸ்தவம் இன்னும் இந்தியாவில் உள்ளன. மோதல்கள் உள்ளன, ஆனால் நாடு ஒற்றுமையாகவே உள்ளது. 'இந்து பவ் கா விஸ்மரன்' என்பது இந்தியாவின் பிரிவினைக்கு வழிவகுத்தது," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து வங்கதேச வன்முறைகள் தொடர்பாக பேசியவர், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள 1.25 கோடி இந்துக்கள் அங்கேயே இருந்து தங்கள் உரிமைகளுக்காகப் போராட முடிவு செய்தால், அவர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான், ரன்பீர் கபூர் மற்றும் பாடகர் அட்னான் சாமி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
- உண்மைகளை நிலைநாட்டுவதற்காக அறிவியல் பரிசோதனை மற்றும் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய அனுபவங்களைச் சார்ந்துள்ளது.
- ஆன்மீகம் உள்அனுபவங்களை மூலம் அதே கொள்கையை பின்பற்றுகிறது.
திருப்பதியில் நடைபெற்ற பாரதிய அறிவியல் சம்மேளனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அறிவியலுக்கும் ஆன்மீகம் அல்லது தர்மத்திற்கு இடையில் முரண்டுபாடு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மோகன் பகவத் கூறியதாவது:-
தர்மம் மதம் அல்ல. இது படைப்புகள் இயங்குவதற்கான விதியாகும். இதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் இதற்கு வெளியே யாராலும் இயங்க முடியாது. தர்மத்தில் உள்ள சமநிலையின்மை அழிவுக்கு வழிவகுக்கும்.
அறிவியல் ஆய்வில் தர்மத்திற்கு இடமில்லை என்ற அனுமானத்தின் காரணமாக, அறிவியல் வரலாற்று ரீதியாக தர்மத்திலிருந்து விலகியே இருந்தது. அத்தகைய நிலைப்பாடு அடிப்படையில் தவறானது.
அறிவியலுக்கும் தர்மத்திற்கும் அல்லது ஆன்மீகத்திற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. அணுகுமுறைகள் வேறுபடலாம். ஆனால் இலக்கு ஒன்றேதான். அது உண்மையை அறிவது.
உண்மைகளை நிலைநாட்டுவதற்காக அறிவியல் பரிசோதனை மற்றும் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய அனுபவங்களைச் சார்ந்துள்ளது. ஆன்மீகம் உள்அனுபவங்களை மூலம் அதே கொள்கையை பின்பற்றுகிறது. நேரடி அனுபவத்தை வலியுறுத்துகிறது. மேலும், அனுபவிக்கப்படும் எதுவாக இருந்தாலும், அது அனைவராலும் அடையக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.
- ஆர்எஸ்எஸ் பற்றி புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது
- பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தங்களது 100-வது ஆண்டை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று கொல்கத்தாவில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் அவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது,
"சூரியன் கிழக்கில் உதிக்கிறது; இது எப்போதிலிருந்து நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. அதற்கு அரசியலமைப்பு ஒப்புதல் தேவையா? அதுபோல இந்தியா ஒரு இந்து நாடு. இந்தியாவைத் தங்கள் தாய்நாடாகக் கருதுபவர்கள் இந்திய கலாச்சாரத்தைப் பாராட்டுகிறார்கள்; இந்துஸ்தான் நிலத்தில் இந்திய மூதாதையர்களின் மகிமையை நம்பும் மற்றும் போற்றும் ஒருவர் உயிருடன் இருக்கும் வரை, இந்தியா ஒரு இந்து நாடு.
நாடாளுமன்றம் எப்போதாவது அரசியலமைப்பைத் திருத்தி அந்த வார்த்தையைச் சேர்க்க முடிவு செய்தால், அவர்கள் அதைச் செய்தாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை, ஏனென்றால் நாங்கள் இந்துக்கள், எங்கள் நாடு ஒரு இந்து நாடு. அதுதான் உண்மை. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல.
நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து இருந்தால், நான் சொல்கிறேன், ஆர்எஸ்எஸ் வெளிப்படையானது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், அப்படி ஏதாவது (முஸ்லிம்களுக்கு எதிராக) நடப்பதை நீங்கள் பார்த்தால், உங்கள் பார்வை அப்படியே இருக்கட்டும். அப்படி அதுபோன்ற செயல்கள் நடக்கவில்லை என்றால் உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுங்கள். (ஆர்எஸ்எஸ் பற்றி) புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது, ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள விரும்பவில்லை என்றால், உங்கள் மனதை யாராலும் மாற்ற முடியாது" என தெரிவித்தார்.
- உலகம் உயிர்வாழ இந்து சமூகம் அவசியம்
- இந்தியா ஒரு ‘இந்து ராஷ்டிரம்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையில்லை.
இந்து சமூகம் என்றும் அழியாதது என்றும், பண்டைய நாகரிகங்கள் அழிந்தபோதும் இந்த சமூகம் நிலைத்திருந்தது எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் பேசியுள்ளார். மணிப்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,
"உலகில் உள்ள அனைத்து நாடுகளும் எல்லாவிதமான சூழ்நிலைகளையும் கடந்திருக்கும். யுனான்(கிரீஸ்), மிஸ்ர் (எகிப்து), ரோமா என உலகின் அனைத்து சிறந்த பண்டைய நாகரிகங்களும் அழிந்தன. ஆனால் நம் நாகரிகத்தில் ஏதோ இருக்கிறது. அதனால்தான் நாம் இன்னும் இருக்கிறோம்" என தெரிவித்தார்.
முன்னதாக இந்தவார தொடக்கத்தில் அசாமில் பேசிய மோகன் பகவத்,
"தாய்நாட்டின் மீதான பக்தி, நமது முன்னோர்களின் பெருமை மற்றும் நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அனைவரும் இந்துக்கள்தான். இந்து என்பதை வெறும் மத அர்த்தங்களில் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்து மற்றும் இந்துக்களின் கலாச்சாரம் என்பது வெறும் உணவு மற்றும் வழிபாடு மட்டுமல்ல, அனைத்தையும் உள்ளடக்கியது. இந்து மதம் இன்னும் பல மக்களை ஈர்க்கும்.
தங்கள் வழிபாடு, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை விட்டுகொடுக்காவிடினும், நம் நாட்டை, இந்திய கலாச்சாரத்தை பின்பற்றினால், நம் மூதாதையர்களை எண்ணி பெருமைப்பட்டால் அந்த முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்கள்தான். பாரதம் என்பதில் பெருமை கொள்பவர்கள் அனைவரும் இந்துக்கள்தான். பாரதம், இந்து ஆகிய இரண்டு சொற்களும் ஒத்த சொற்கள்தான். இந்தியா ஒரு 'இந்து ராஷ்டிரம்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையில்லை. நாட்டின் நாகரிக நெறிமுறைகள் ஏற்கனவே அதனை அடையாளப்படுத்துகின்றன" என தெரிவித்தார்.
- சாதி, மத அடையாளங்களை விட்டுவிட்டு இந்த அமைப்பில் இணையலாம்.
- எந்த ஒரு கட்சி மீதும் தங்களுக்கு தனி ஈடுபாடு கிடையாது
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஆர்எஸ்எஸ்-ல் இணையலாம் என்று ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன் பகவத் இதனை தெரிவித்தார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், "ஆர்எஸ்எஸ்-ல் பிராமணர், வேறு எந்த சாதியினர், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் யாரும் குறிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை. இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் RSS-ல் இணையலாம். அவர்கள் தங்களது சாதி, மத அடையாளங்களை விட்டுவிட்டு இந்த அமைப்பில் இணையலாம். எந்த ஒரு கட்சி மீதும் தங்களுக்கு தனி ஈடுபாடு கிடையாது என்றும் தேசிய கொள்கைகளை ஆதரிக்கும் கட்சிக்கு வாக்களிப்போம்" என்று தெரிவித்தார்.
- முதலாவது பிரிவினர் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்பவர்கள்
- இரண்டாவது பிரிவினர் இந்துவாக இருப்பதில் பெருமைப்படுவதில்லை
இந்தியா ஒரு இந்து நாடு என்றும், நாட்டில் உள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்து மூதாதையர்களின் சந்ததியினர் என்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன் பகவத் இதனை தெரிவித்தார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், "பண்டைய காலத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் இந்த மண்ணில் வாழும் மக்களைக் குறிக்க இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர்.
இந்து சமூகத்தை நான்கு குழுக்களாக வகைப்படுத்தபட்டுள்ளது. முதலாவது பிரிவினர் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்பவர்கள். இரண்டாவது பிரிவினர் தாங்கள் இந்துக்கள் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் அதில் பெருமைப்படுவதில்லை. மூன்றாவது பிரிவினர் தங்களை தனிப்பட்ட முறையில் இந்துக்கள் என்று கருதுபவர்கள், ஆனால் வெளிப்படையாக தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாதவர்கள். நான்காவது பிரிவினர் தாங்கள் இந்துக்கள் என்பதை மறந்துவிட்டார்கள்.
இந்தியா ஒரு இந்து நாடு. இங்குள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒரே மூதாதையர்களின் சந்ததியினர். இந்து சமூகம் ஒன்றுபட்ட சக்தியாக ஒன்றுபட வேண்டும்" என்று தெரிவித்தார்.
- தங்களுக்கும், தங்களுடைய நிலைக்கும் என்னவாகும் என்று உலக மக்கள் பயப்படுகிறார்கள்.
- இதனால்தான் இந்திய பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. மேலும், ரஷியாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தாததால் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்துள்ளது.
50 சதவீதம் வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:-
இந்தியா வலிமையாக வளர்ந்தால் தங்களுக்கும், தங்களுடைய நிலைக்கும் என்னவாகும் என்று உலக மக்கள் பயப்படுகிறார்கள். இதனால்தான் இந்திய பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது. அநீதியானது. எந்தவொரு நெருக்கடிக்கும் அரசு அடி பணியக் கூடாது.
இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
- தனது முழு வாழ்க்கையையும் சமூக மாற்றத்திற்கும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதற்கும் அர்ப்பணித்துள்ளார்.
- அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வசுதைவ குடும்பகம் என்ற கொள்கையால் ஈர்க்கப்பட்டு, ஸ்ரீ மோகன் பகவத் ஜி தனது முழு வாழ்க்கையையும் சமூக மாற்றத்திற்கும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதற்கும் அர்ப்பணித்துள்ளார்.
அவரது 75வது பிறந்தநாளின் சிறப்பு நிகழ்வில், மோகன் ஜி மற்றும் அவரது ஊக்கமளிக்கும் ஆளுமை குறித்து சில எண்ணங்களை எழுதினார். அன்னை பாரதியின் சேவையில் அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.
- உங்களுடைய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஏதும் சொல்லப் போவதில்லை.
- நாங்கள் முடிவு செய்வதில்லை.
பாஜக கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக வேறு தலைவர் நியமிக்கப்பட வேண்டியது உள்ளது. அடுத்த தேசிய தலைவரை தேடும் பணியில் பாஜக மேலிடம் ஈடுபட்டு வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவராக இருப்பார். இதனால் பாஜக தலைவர் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முக்கிய பங்கு வகிக்கும். ஆர்எஸ்எஸ் கைக்காட்டும் நபர்தான் பாஜக-வின் தேசிய தலைவராவார் என்ற பார்வையும் உள்ளது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 3 நாள் விழா நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசும்போது கூறியதாவது:-
உங்களுடைய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஏதும் சொல்லப் போவதில்லை (நகைச்சுவையாக). நாங்கள் முடிவு செய்வதில்லை. நாங்கள் முடிவு செய்வதாக இருந்தால், இவ்வளவு காலம் எடுத்திருக்கமாட்டோம். ஆர்எஸ்எஸ் அமைப்பை இயக்குவதில் நான் நிபுணர். அரசை இயக்குவதில் பாஜக நிபுணர். நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்துகளை மட்டுமே சொல்ல முடியும். எங்கேயும் மோதல் இல்லை. ஆனால், எல்லா பிரச்சனையிலும் ஒரே பக்கமாக இருக்கும் என்பது சாத்தியமற்றது. நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் நம்புகிறோம்.
இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார்.
- நல்ல பணிகளை செய்வதில் எங்கள் உதவி தேவைப்பட்டால், பாஜக-வுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நாங்கள் உதவுகிறோம்.
- மதம் என்பது தனிப்பட்டவரின் விருப்பத்தின் அடிப்படையிலானது. இதில் எந்த வசீகரமோ அல்லது வற்புறுத்தலோ இருக்கக்கூடாது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:-
* தற்போதைய அரசாங்கத்துடன் மட்டுமல்லாமல், ஒவ்வொரு அரசாங்கத்துடனும் எங்களுக்கு நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது
* பாஜக-வுடன் எங்கும் மோதல் இல்லை. ஆனால் எல்லாப் பிரச்சினைகளிலும் ஒரே நிலை எடுப்பது சாத்தியமில்லை, நாங்கள் எப்போதும் ஒருவரையொருவர் நம்புகிறோம்.
* நான் 'ஷாகாக்கள்' நடத்துவதில் நிபுணர், பாஜக அரசாங்கத்தை நடத்துவதில் நிபுணர், நாங்கள் ஒருவருக்கொருவர் பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும்
* நல்ல பணிகளை செய்வதில் எங்கள் உதவி தேவைப்பட்டால், பாஜக-வுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நாங்கள் உதவுகிறோம்
* கல்வி அறிவு மற்றும் திறன்களை வழங்குவதற்காக இருக்க வேண்டும். வேலைகளுக்கு மட்டும் என இருக்கக் கூடாது
* மதம் என்பது தனிப்பட்டவரின் விருப்பத்தின் அடிப்படையிலானது. இதில் எந்த வசீகரமோ அல்லது வற்புறுத்தலோ இருக்கக்கூடாது.
* இந்திய பிரிவினையை ஆர்எஸ்எஸ் எதிர்க்கவில்லை என்று சொல்வது தவறு. நாங்கள் அதை எதிர்த்தோம். ஆனால் அப்போது ஆர்எஸ்எஸ்-க்கு போதுமான பலம் இல்லை
* மதமாற்றம், சட்டவிரோத இடம் பெயர்வு மக்கள் தொகை ஏற்றத்தாழ்வுக்கு முக்கிய காரணங்கள்
* சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் சமூகமும் அதன் பங்கைச் செய்ய வேண்டும்.
* சட்டவிரோத குடியேறிகளுக்கு நாம் வேலை கொடுக்கக்கூடாது. முஸ்லிம்கள் உட்பட நமது சொந்த மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்
* அனைத்து இந்திய குடிமக்களும் மூன்று குழந்தைகளைப் பெறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும், இதனால் மக்கள் தொகை போதுமானதாகவும் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.
* அகண்ட பாரதம் என்பது வாழ்க்கையின் உண்மை. நமது கலாச்சாரமும் முன்னோர்களும் ஒன்றே என்பதை நாம் உணர வேண்டும்
* எல்லோரும் சமமாக இருக்கும்போது இந்து- முஸ்லிம் ஒற்றுமை பற்றி ஏன் பேச வேண்டும்?. நாம் அனைவரும் இந்தியர்கள்.
* இஸ்லாம் இங்கே இருக்காது என்று இந்து சிந்தனை கூறவில்லை.
* சாலைகள், இடங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்கள் வைக்கக்கூடாது. அவை முஸ்லிம்களின் பெயர்களால் சூட்டப்படக் கூடாது என்று நான் கூறவில்லை.
* மத அடிப்படையில் உட்பட யாரையும் தாக்குவதில் ஆர்எஸ்எஸ் நம்பிக்கை கொள்ளவில்லை
* காலாவதியானவை அனைத்தும் ஒழிய வேண்டும், சாதி அமைப்பு ஒரு காலத்தில் இருந்தது, ஆனால் இன்று அதற்கு எந்த சம்பந்தமும் இல்லை
* அரசியலமைப்புச் சட்டத்தின்படி கட்டாயப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை ஆர்எஸ்எஸ் முழுமையாக ஆதரிக்கிறது, மேலும் அது தேவைப்படும் காலம் வரை அதை ஆதரிப்போம்.
- தான் நம்பும் பாதையைப் பின்பற்றுவதில் நம்பிக்கை கொண்டவர்.
- வேறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களை மதிப்பவர்தான் இந்து.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடு வகையில் 3 நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் "இந்து என்பவர் யார்? தான் நம்பும் பாதையைப் பின்பற்றுவதில் நம்பிக்கை கொண்டவர். வேறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களை மதிப்பவர்தான்" என்றார்.






