என் மலர்
நீங்கள் தேடியது "இந்துக் குடும்பங்கள்"
- இந்து சமூகம் எதிர்காலத்தில் மறைந்து போகக்கூடும்
- நமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, ஆனால் விழிப்புணர்வு அவசியம்
இந்து சமூகத்தினர் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த சமூக நல்லிணக்க நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், திருமணத்தின் உண்மையான நோக்கம் சந்ததியை முன் எடுத்துச் செல்வதே தவிர, ஒருவரின் தனிப்பட்ட ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
மூன்றுக்கும் குறைவாக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் இந்து சமூகம் எதிர்காலத்தில் மறைந்து போகக்கூடும் என தெரிவித்துள்ளார். இந்துக்களை ஒன்றிணைத்து அதிகாரம் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்துக்களை ஒன்றிணைப்பதற்கும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் ஒரு தேவை உள்ளது. நமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, ஆனால் விழிப்புணர்வு அவசியம் எனப் பேசினார்.
மேலும் பெண்கள்தான் குடும்பத்தின் அஸ்திவாரம் எனவும் தெரிவித்துள்ளார். பெண்களை பலவீனமானவர்களாகக் கருதக்கூடாது என்றும், அவர்களுக்குத் தற்காப்புக் கலைகளில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்திய பாரம்பரியம் பெண்களுக்கு ஒரு மரியாதைக்குரிய இடத்தையும், அவர்களின் வெளிப்புறத் தோற்றத்தை விட அவர்களின் வளர்க்கும் பண்புகளுக்கே அதிக மதிப்பையும் வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.






