search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tariffs"

    ரூ.42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளதன் மூலம் அமெரிக்காவுக்கு சீனாவும் பதிலடி கொடுத்துள்ளது.
    பீஜிங்:

    உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ளது. சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள (இந்திய மதிப்பில்) பொருட்களுக்கு 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 25 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது. இது சீனாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

    உடனடியாக அமெரிக்காவுக்கு சீனாவும் பதிலடி கொடுத்தது. அது, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. ரூ.42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளது. சீனாவின் நிதித்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவுடன் சீனா உடனே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், மேலும் வரி உயர்வு செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எச்சரிக்கையும் விடுத்தார்.

    இதையொட்டி சீனா பதில் அளித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் செங் சுவாங் நேற்று கருத்து தெரிவிக்கையில், “வரிகளை உயர்த்திக்கொண்டே போவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சீனா வர்த்தகப்போரை விரும்பவில்லை. அதே நேரத்தில் சீனா வர்த்தகப்போருக்கு அஞ்சவும் இல்லை. யாரேனும் எங்கள்மீது வர்த்தகப்போரை தொடுத்தால் நாங்கள் இறுதிவரை போராடுவோம். வெளியில் இருந்து வருகிற எந்தவொரு நிர்ப்பந்தத்துக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்கள் சட்டப்பூர்வமான உரிமைகளை, நலன்களை பாதுகாப்பதற்கான தீர்வும் தகுதித்திறனும் எங்களுக்கு உள்ளது” என குறிப்பிட்டார்.

    மேலும் இதில் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை டிரம்ப் தவறாக மதிப்பிட்டு விட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


    சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் வரிவிதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். #Trumph
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான சண்டை நடந்து வருகிறது. அமெரிக்க அதிபரான ட்ரம்ப் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தினார். இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரியை உயர்த்தினார்.

    சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான 800 பொருட்களுக்கு அமெரிக்க அரசு கூடுதல் வரி விதித்தது.  இதன்மூலம், சீனாவுக்கு 50 முதல் 60 பில்லியன் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும், அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சுமார் 25 சதவிகிதம் வரை வரி விதித்து அறிவித்தது.

    இந்த நிலையில், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்க உள்ளதாகவும், தேவைப்பட்டால் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வரி விதிக்கப்படும் எனவும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் இதை செய்யவில்லை எனவும், நாட்டுக்கு தேவையான விஷயத்தையே செய்வதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். #Trumph
    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தன் நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு மற்றும் அலுமினியத்தின் மீதான புதிய வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது. #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தன் நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கின் மீது 25 சதவீதமும், அலுமினியத்தின் மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இந்த புதிய வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.

    இந்த நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய யூனியன், கனடா, மெக்சிகோ மட்டுமல்லாது டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசு கட்சியில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து உள்ளன. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கையாக அங்கு இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு பொருட்கள் மற்றும் பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றின் மீது இறக்குமதி வரி விதித்தனர்.

    டிரம்பை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், உருக்கு மற்றும் அலுமினியம் மீது விதித்துள்ள இறக்குமதி வரி, சட்டவிரோதமானது என கூறினார். அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் எனவும் அவர் கூறி உள்ளார்.

    அதே நேரத்தில் தன் வரி விதிப்பை டிரம்ப் நியாயப்படுத்தினார். அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்கள் முக்கியம் என்றும், சர்வதேச அளவில் ஏற்பட்டு இருக்கிற தேக்க நிலையால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் இந்தக் கருத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்தார்.

    இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தக மந்திரி லியாம் பாக்ஸ், உருக்கின் மீது 25 சதவீத வரி என்பது அபத்தமானது என குறிப்பிட்டார். ஜெர்மனி பொருளாதார மந்திரி பீட்டர் ஆல்ட்மையர், ஐரோப்பிய யூனியன் தரக்கூடிய பதிலடி, டிரம்ப் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வைக்கும் என்று கூறினார்.  #Tamilnews #DonaldTrump
    ×