என் மலர்
நீங்கள் தேடியது "பிரிக்ஸ்"
- பிரிக்ஸ் அமைப்பு எவ்வாறு ஒன்றாக இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
- அமெரிக்க வர்த்தகம் இல்லாமல் பிரிக்ஸ் நாடுகள் உயிர்வாழ முடியாது.
இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தினார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால் உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவுவதாக கூறி இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா எடுத்தது.
இவ்விவகாரத்தில் இந்தியாவை டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் பீட்டர் நவரோ மீண்டும் இந்தியா மீது கடும் விமர்சனத்தை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியா, சீனா, ரஷியாவை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பு நாடுகள், அமெரிக்க வர்த்தகம் இல்லாமல் உயிர்வாழ முடியாது. இந்த நாடுகள் எதுவும் அமெரிக்காவிற்கு விற்காவிட்டால் உயிர்வாழ முடியாது. அவர்கள் பொருட்களை அமெரிக்காவிற்கு விற்கும்போது தங்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால் அமெரிக்காவின் ரத்தத்தை உறிஞ்சும் காட்டேரிகள் போல் செயல்படுகிறார்கள்.
பிரிக்ஸ் அமைப்பு எவ்வாறு ஒன்றாக இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் வரலாற்று ரீதியாக அவர்கள் ஒருவருக்கொருவர் வெறுக்கிறார்கள். வரிகளை விதிப்பதில் இந்தியா மகாராஜாபோல் உள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா மிக உயர்ந்த வரிகளை விதிக்கிறது. உக்ரைனை ரஷியா ஆக்கிரமிப்பதற்கு முன்பு இந்தியா ஒருபோதும் ரஷிய எண்ணெயை வாங்கியதில்லை. போருக்கு பிறகுதான் ரஷிய எண்ணெய் வாங்க தொடங்கியது.
ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவுடன் எங்களுக்கு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுஉள்ளது. எங்கள் சந்தைகள் தேவை என்பதை உணர்ந்து இந்த நாடுகள் எங்களுடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன. இந்தியா ஒரு கட்டத்தில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியா விரைவில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வரும் என்று நம்புகிறேன். ரஷியா, சீனாவுடன் கூட்டணி வைப்பது இந்தியாவுக்கு நல்ல முடிவை தராது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் இந்தியாவுடனான உறவு சிறப்பாக உள்ளது என்றும் மோடி எப்போதும் எனது நண்பர்தான் என்றும் கூறினார். ஆனால் அவரது ஆலோசகர் தொடர்ந்து இந்தியாவை கடுமை யாக விமர்சித்து வருகிறார்.
- பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.
- பிரிக்ஸ் அமைப்பு, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என டிரம்ப் விமர்சித்தார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது BRICS அமைப்பு. இதில் புதிதாக எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா இணைந்துள்ளது.
அண்மையில் பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இதனிடையே பிரிக்ஸ் அமைப்பை, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என விமர்சித்த டொனால்டு டிரம்ப், பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்த நாடும், கூடுதல் 10 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ளும் என மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்தக சவால்களை எதிர்கொள்ள, பிரிக்ஸ் நாடுகள் பரஸ்பர வெற்றியை இலக்காக கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளது.
அடுத்தாண்டு பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், பிரிக்ஸ் நாடுகள் இடையேயான வர்த்தக பற்றாகுறையை நிவர்த்தி செய்வதன் மூலம், நாம் ஒரு முன்மாதிரியாகத் திகழ முடியும் எனவும் நியாயமான, பாகுபாடற்ற, விதி சார்ந்த கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .
- சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் சென்றுள்ளார்.
- டிராகனும் யானையும் கைகோர்ப்பது காலத்தின் தேவை என்று ஜி ஜின்பிங் கூறினார்.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார்.
சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சீனா சென்றார்.
இதனிடையே இன்று நடந்த பிரதிநிதிகள் மட்ட இரு தரப்பு சந்திப்பு கூட்டத்தின்போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
சீன அதிபர் மோடிக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இந்தியாவின் தலைமைக்கு ஆதரவையும் தெரிவித்தார்.
பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் சீனாவுடன் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையில், டிராகனும் யானையும் கைகோர்ப்பது காலத்தின் தேவை என்று ஜி ஜின்பிங் கூறினார்.
இந்த ஆண்டு சீன-இந்திய ராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்றும் ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.
- அமெரிக்க பொருளாதாரத்தை சீரழிக்கவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
- பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது பிரிக்ஸ் அமைப்பு. கடந்த வருடம் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஆகியவை இணைந்தன. இந்த வருடம் இந்தோனேசியா இணைந்துள்ளது.
அண்மையில் பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இதனிடையே பிரிக்ஸ் அமைப்பை, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என விமர்சித்த டொனால்டு டிரம்ப், பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்த நாடும், கூடுதல் 10 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ளும் என மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், "அமெரிக்க பொருளாதாரத்தை சீரழிக்கவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே பிரிக்ஸ் நாடுகளுக்கு விரைவில் 10% வரி விதிக்கப்படும்" என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.
பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவில் உள்ளதால் இந்தியாவுக்கும் டிரம்ப் 10% வரி விதிப்பாரா? என்று அச்சம் எழுந்துள்ளது.
- பிரிக்ஸ் மாநாடு பிரேசிலில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
- பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க கொள்கைக்கு எதிரான குரூப் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது பிரிக்ஸ் அமைப்பு. கடந்த வருடம் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஆகியவை இணைந்தன. இந்த வருடம் இந்தோனேசியா இணைந்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு நேற்றும் இன்றும் பிரேசில் நடைபெற்றது. பிரேசில் மாநாடு நடைபெற்று கொண்டிருக்கும்போது, பிரிக்ஸ் அமைப்பை, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என அழைத்த டொனால்டு டிரம்ப், பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்த நாடும், கூடுதல் 10 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ளும் என மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் பிரிக்ஸ் மோதலுக்கான அமைப்பு அல்ல. வளர்ந்து வரும் சந்தைகள், வளர்ந்து வருடம் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான முக்கியமான தளம். வர்த்தக போர் மற்றம் வரி விதிப்பு போர் வெற்றியார்கள் இல்லை என சீனா தெரிவித்துள்ளது.
- பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- மேடையில் தலைவர்கள் நிற்கும் இடத்தை குறிக்க தரையில் இந்திய கொடியும், தென் ஆப்பிரிக்கா கொடியும் வைக்கப்பட்டிருந்தது.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கி ஆகஸ்ட் 24ம் தேதி வரை நடக்கிறது. அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தார். ஜோகனஸ்பர்க் நகரில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, மேடையில் தலைவர்கள் நிற்கும் இடத்தை குறிக்க தரையில் இந்திய கொடியும், தென் ஆப்பிரிக்கா கொடியும் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, அவர்கள் நாட்டு கொடியை கையில் எடுத்து எதிரில் இருந்த நபரிடம் கொடுத்தார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி மேடை ஏறியதும், தரையில் இருந்து இந்திய கொடியை எடுத்து எதிரில் இருந்த நபரிடம் கொடுக்காமல் தனது சட்டைப்பையிலேயே வைத்துக்கொண்டார். பிரதமர் மோடியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH | Johannesburg, South Africa | PM Narendra Modi notices Indian Tricolour on the ground (to denote standing position) during the group photo at BRICS, makes sure to not step on it, picks it up and keeps it with him. South African President Cyril Ramaphosa follows suit. pic.twitter.com/vf5pAkgPQo
— ANI (@ANI) August 23, 2023
- பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது.
- இந்தியா, சீன எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
ஜோகனஸ்பர்க்:
எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது.
இதற்கிடையே, ஜோகன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். மாநாட்டுக்கு இடையே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்தனர். அப்போது இருவரும் கைகுலுக்கி, சிறிது நேரம் தனியாக பேசினர்.
இந்நிலையில், இரு நாட்டு தலைவர்கள் பேசியது குறித்து வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா கூறியதாவது:
இந்தியாவின் லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது.
எல்லை பிரச்சினையில் இருதரப்பிலும் அமைதியை நிலைநாட்டுவதன் முக்கியத்துவம்.
இந்திய சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என இருவரும் முடிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.
- பிரிக்ஸ் மாநாட்டில் சீன யுவானை செலாவணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது
- 2023ல் பல நாடுகள் தங்களுக்கிடையே மாற்று கரன்சியை பயன்படுத்த உடன்பட்டன
உலக நாடுகளில் வல்லரசாக அமெரிக்கா திகழ முக்கிய காரணம் அதன் ராணுவ பலமும், சர்வதேச வர்த்தகங்களில் அமெரிக்க கரன்சியான டாலர் (Dollar), பெருமளவில் பயன்படுத்தப்படுவதும்தான்.
அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை பல நாடுகள் சில ஆண்டுகளாக எடுக்க துவங்கின.
கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் சீனா அதன் கரன்சியை வர்த்தகத்திற்கு பயன்படுத்த பிரிக்ஸ் (BRICS) மாநாடுகளில் முன்மொழிந்தது. ஆனால், கோவிட் பெருந்தொற்றால் இந்த முடிவு தள்ளி போடப்பட்டது.

2021ல் துவங்கிய, டாலருக்கு மாற்றாக ஒரு கரன்சியை தேடும் டீ-டாலரைசேஷன் (de-Dollarization) எனப்படும் இந்த முயற்சி, 2023ல் வேகமெடுக்க தொடங்கியது.
ரஷியா மற்றும் அர்ஜெண்டினா சீனாவுடனான வர்த்தகத்திற்கு சீன யுவான் (Yuan) பயன்படுத்த தொடங்கின.
கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சீனாவும், இந்தியாவும் தங்கள் நாட்டு கரன்சிகளை மாற்றாக கொண்டு வர முயற்சி எடுத்தன.
எண்ணெய் சாராத வர்த்தகத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கையும், செலாவணிக்கு "இந்திய ரூபாய்" பயன்படுத்த உடன்பட்டுள்ளன.
லத்தீன் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பல நாடுகள் டாலருக்கு மாற்று கரன்சிக்கான தேடுதலை துவங்கியுள்ளன.
ஒரு சில நாடுகள் டிஜிட்டல் கரன்சி மற்றும் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராகி விட்டன.
எதிர்காலத்தில் பல நாடுகள் டாலருக்கு மாற்றான வழிமுறையில் தீவிரமாக வணிகத்தில் ஈடுபடும் போது டாலருக்கான தேவை குறையும் என்றும் இதன் காரணமாக அமெரிக்காவிற்கு உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் சிக்கல்கள் அதிகமாகும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- 16 வது பிரிக்ஸ் [BRICS] உச்சி மாநாடு நடைபெற உள்ளது
- BRICS கூட்டமைப்பு என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய ஒரு அமைப்பாகும்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து கடந்த ஜூலை 9 ஆம் தேதி நடந்த 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி கடைசியாக ரஷியா சென்றிருந்தார். இதில் உக்ரைன் போர் குறித்து அதிபர் புதினுடன் விரிவாக உரையாடல் நடத்தினார்.
இந்த நிகழ்வின்போது மோடிக்கு ரஷியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் 22-23 ஆகிய தேதிகளில் ரஷியாவின் காசான் [Kazan] இல் வைத்து நடக்க உள்ள 16 வது பிரிக்ஸ் [BRICS] உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
BRICS கூட்டமைப்பு என்பது 2009 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய ஒரு அமைப்பாகும். இதில் 2010 இல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. இந்த 5 நாடுகளில் பெயரில் உள்ள முதல் எழுத்தின் சுருக்கமே BRICS.கடந்த ஜனவரி 2024 இல் எகிப்து, எத்தியோப்பியா, இரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தற்போது நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள ரஷியா பயணிக்கும் மோடி, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது. மேலும் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
- பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
- இன்றும் நாளையும் பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது.
16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டார். இந்த மாநாட்டிற்கிடையே பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகள் தலைவர்களுடன் இருநாட்டு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.
கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.
காயம் காரணமாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
- பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் நடைபெறுகிறது.
- இதில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார்.
மாஸ்கோ:
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.
கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டார்.
மாநாட்டிற்கு இடையே பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகள் தலைவர்களுடன் இருநாட்டு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி ரஷியாவின் காசான் நகர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடி வந்தபோது, அங்கு குவிந்திருந்த ரஷியர்களில் சிலர் கிருஷ்ண பஜனை பாடல்களைப் பாடி அசத்தினர்.
- ரஷியாவில் உள்ள காசான் நகரில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது.
- இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.
கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியாவின் காசான் நகர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்தார். இருவரும் கைகுலுக்கி, ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.






