என் மலர்
நீங்கள் தேடியது "indian rupee"
- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு மூலதனம் வீழ்ச்சிக் காரணம்.
- வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி மாற்றத்தின் வர்த்தக தொடக்கத்தில் 27 பைசா குறைந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்றைய வர்த்தகம் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 பைசா குறைந்து இதுவரை இல்லாத அளவிற்கு 86.31 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு மூலதனம் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் வெளிப்படும் எதிர்மறையான டிரெண்ட் ஆகியவை இந்திய பண வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சியால் சந்தையில் எதிர்பார்த்ததை விட டாலர் மதிப்பு வலுப்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி மாற்றத்தில், இன்று காலை வர்த்தகத்தில் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் 86.12 ஆக தொடங்கியது. பின்னர் 27 பைசா சரிந்து 86.31 ரூபாய இருந்தது. இது முந்தைய நாள் வர்த்தக முடிவில் இருந்து இது 27 பைசா சரிவாகும்.
- நேற்று 1 டாலரின் மதிப்பு ₹85.18 ஆக இருந்தது
- அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் திங்களன்று (டிசம்பர் 23) 85.12 ஆக சரிந்தது. தொடர்ந்து நேற்று [செய்வ்வாய்கிழமை] 1 டாலரின் மதிப்பு ₹85.18ஆக இருந்த நிலையில், இன்று [புதன்கிழமை] மேலும் சரிந்து ₹85.41ஆக உள்ளது. தொடர்ச்சியாக 6வது முறையாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பை வீழ்ச்சியடையச் செய்து வருகிறது. அமெரிக்கக் கடன் பத்திரங்கள் அதிகரிப்பு மற்றும் இறக்குமதியாளர்களிடமிருந்து வலுவான டாலர் தேவை ஆகியவை இந்த வீழ்ச்சிக்குக் காரணம்.
மேலும் மாத இறுதியில் டாலரின் தேவை அதிகரித்தது மற்றும் அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் இறக்குமதி வரி பற்றிய அச்சமும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. எதிர்காலத்தில் நிலையான ரூபாய் மதிப்பு சரிவு தொடரலாம் என்று வர்த்தகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
- நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 84.09 ஆக இருந்தது.
சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அவ்வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.84.33-ஆக சரிந்துள்ளது.
நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 84.09 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.84.33-ஆக சரிந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பின் வெற்றி, இந்திய ரூபாய் மதிப்பு மீது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரிக்ஸ் மாநாட்டில் சீன யுவானை செலாவணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது
- 2023ல் பல நாடுகள் தங்களுக்கிடையே மாற்று கரன்சியை பயன்படுத்த உடன்பட்டன
உலக நாடுகளில் வல்லரசாக அமெரிக்கா திகழ முக்கிய காரணம் அதன் ராணுவ பலமும், சர்வதேச வர்த்தகங்களில் அமெரிக்க கரன்சியான டாலர் (Dollar), பெருமளவில் பயன்படுத்தப்படுவதும்தான்.
அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை பல நாடுகள் சில ஆண்டுகளாக எடுக்க துவங்கின.
கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் சீனா அதன் கரன்சியை வர்த்தகத்திற்கு பயன்படுத்த பிரிக்ஸ் (BRICS) மாநாடுகளில் முன்மொழிந்தது. ஆனால், கோவிட் பெருந்தொற்றால் இந்த முடிவு தள்ளி போடப்பட்டது.
2021ல் துவங்கிய, டாலருக்கு மாற்றாக ஒரு கரன்சியை தேடும் டீ-டாலரைசேஷன் (de-Dollarization) எனப்படும் இந்த முயற்சி, 2023ல் வேகமெடுக்க தொடங்கியது.
ரஷியா மற்றும் அர்ஜெண்டினா சீனாவுடனான வர்த்தகத்திற்கு சீன யுவான் (Yuan) பயன்படுத்த தொடங்கின.
கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சீனாவும், இந்தியாவும் தங்கள் நாட்டு கரன்சிகளை மாற்றாக கொண்டு வர முயற்சி எடுத்தன.
எண்ணெய் சாராத வர்த்தகத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கையும், செலாவணிக்கு "இந்திய ரூபாய்" பயன்படுத்த உடன்பட்டுள்ளன.
லத்தீன் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பல நாடுகள் டாலருக்கு மாற்று கரன்சிக்கான தேடுதலை துவங்கியுள்ளன.
ஒரு சில நாடுகள் டிஜிட்டல் கரன்சி மற்றும் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராகி விட்டன.
எதிர்காலத்தில் பல நாடுகள் டாலருக்கு மாற்றான வழிமுறையில் தீவிரமாக வணிகத்தில் ஈடுபடும் போது டாலருக்கான தேவை குறையும் என்றும் இதன் காரணமாக அமெரிக்காவிற்கு உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் சிக்கல்கள் அதிகமாகும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் 2 நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார்.
- இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் இந்தியா வளர்ச்சியை காண்கிறது
கொழும்பு :
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் 2 நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார்.
அப்போது இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய அவர் "ஜப்பான், கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் கிழக்கு ஆசியா 75 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இ்ப்போது இந்தியாவுக்கான நேரம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் இந்தியா வளர்ச்சியை காண்கிறது" என்றார்.
முன்னதாக உரையாற்றிய இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தின் தலைவர் டி.எஸ். பிரகாஷ் இலங்கைப் பொருளாதாரத்தில் இந்திய ரூபாயை மேம்படுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய ரணில், "இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு நிகரான பொதுவான நாணயமாக மாறினால் அதை பயன்படுத்துவதில் இலங்கைக்கு எந்த தயக்கமும் இல்லை. அதை எப்படி செய்வது என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்களை வெளியுலகில் இருந்து எடுத்துக் கொள்ள நாம் மனதை விசாலமாக வைத்திருக்க வேண்டும்" என கூறினார்.
மேலும் அவர், "உலகம் வளர்ச்சியடைந்து வருகிறது, குறிப்பாக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது" என தெரிவித்தார்.
சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 72.74 என்ற அளவில் சரிந்தது. அதன்பின்னர் சற்று ஏற்றம் பெற்று நேற்றைய வர்த்தக முடிவில் 72.69 என்ற நிலையில் இருந்தது.
கச்சா எண்ணெய் விலை நேற்றைய வர்த்தகத்தின்போது 2 சதவீதம் அதிகரித்த நிலையில், இன்று 0.35 சதவீதம் குறைந்தது. அதேசமயம் இந்திய பங்குச்சந்தையில் இன்று காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 133.29 புள்ளிகள் உயர்ந்து, 37546.42 புள்ளிகளாக இருந்தது. #IndianRupee #RupeeValue