search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indian rupee"

    • பிரிக்ஸ் மாநாட்டில் சீன யுவானை செலாவணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது
    • 2023ல் பல நாடுகள் தங்களுக்கிடையே மாற்று கரன்சியை பயன்படுத்த உடன்பட்டன

    உலக நாடுகளில் வல்லரசாக அமெரிக்கா திகழ முக்கிய காரணம் அதன் ராணுவ பலமும், சர்வதேச வர்த்தகங்களில் அமெரிக்க கரன்சியான டாலர் (Dollar), பெருமளவில் பயன்படுத்தப்படுவதும்தான்.

    அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை பல நாடுகள் சில ஆண்டுகளாக எடுக்க துவங்கின.

    கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் சீனா அதன் கரன்சியை வர்த்தகத்திற்கு பயன்படுத்த பிரிக்ஸ் (BRICS) மாநாடுகளில் முன்மொழிந்தது. ஆனால், கோவிட் பெருந்தொற்றால் இந்த முடிவு தள்ளி போடப்பட்டது.


    2021ல் துவங்கிய, டாலருக்கு மாற்றாக ஒரு கரன்சியை தேடும் டீ-டாலரைசேஷன் (de-Dollarization) எனப்படும் இந்த முயற்சி, 2023ல் வேகமெடுக்க தொடங்கியது.

    ரஷியா மற்றும் அர்ஜெண்டினா சீனாவுடனான வர்த்தகத்திற்கு சீன யுவான் (Yuan) பயன்படுத்த தொடங்கின.

    கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சீனாவும், இந்தியாவும் தங்கள் நாட்டு கரன்சிகளை மாற்றாக கொண்டு வர முயற்சி எடுத்தன.

    எண்ணெய் சாராத வர்த்தகத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கையும், செலாவணிக்கு "இந்திய ரூபாய்" பயன்படுத்த உடன்பட்டுள்ளன.

    லத்தீன் அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பல நாடுகள் டாலருக்கு மாற்று கரன்சிக்கான தேடுதலை துவங்கியுள்ளன.

    ஒரு சில நாடுகள் டிஜிட்டல் கரன்சி மற்றும் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராகி விட்டன.

    எதிர்காலத்தில் பல நாடுகள் டாலருக்கு மாற்றான வழிமுறையில் தீவிரமாக வணிகத்தில் ஈடுபடும் போது டாலருக்கான தேவை குறையும் என்றும் இதன் காரணமாக அமெரிக்காவிற்கு உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் சிக்கல்கள் அதிகமாகும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் 2 நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார்.
    • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் இந்தியா வளர்ச்சியை காண்கிறது

    கொழும்பு :

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் 2 நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார்.

    அப்போது இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய அவர் "ஜப்பான், கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் கிழக்கு ஆசியா 75 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இ்ப்போது இந்தியாவுக்கான நேரம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் இந்தியா வளர்ச்சியை காண்கிறது" என்றார்.

    முன்னதாக உரையாற்றிய இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தின் தலைவர் டி.எஸ். பிரகாஷ் இலங்கைப் பொருளாதாரத்தில் இந்திய ரூபாயை மேம்படுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய ரணில், "இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு நிகரான பொதுவான நாணயமாக மாறினால் அதை பயன்படுத்துவதில் இலங்கைக்கு எந்த தயக்கமும் இல்லை. அதை எப்படி செய்வது என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்களை வெளியுலகில் இருந்து எடுத்துக் கொள்ள நாம் மனதை விசாலமாக வைத்திருக்க வேண்டும்" என கூறினார்.

    மேலும் அவர், "உலகம் வளர்ச்சியடைந்து வருகிறது, குறிப்பாக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது" என தெரிவித்தார்.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.74.10 ஆக உள்ளது. #RupeeAt74
    புதுடெல்லி:

    கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணை விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது.

    மேலும் இறக்குமதியாளர்கள் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வகையில் ரூ.74.10 ஆக சரிந்தது. ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. சென்செக்ஸ் 792 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. 
    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று மேலும் 22 காசுகள் சரிந்து, வரலாற்றில் இல்லாத அளவிற்கு 72.91 என்ற நிலைக்கு சென்றது. #IndianRupee #RupeeValue
    மும்பை:

    சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
    வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 72.74 என்ற அளவில் சரிந்தது.  அதன்பின்னர் சற்று ஏற்றம் பெற்று நேற்றைய வர்த்தக முடிவில் 72.69 என்ற நிலையில் இருந்தது.

    இந்நிலையில், ரூபாய் மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் மீண்டும் சரியத் தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி 22 காசுகள் சரிந்து 72.91 என்ற நிலையை எட்டியது. இதன்மூலம் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது.



    கச்சா எண்ணெய் விலை நேற்றைய வர்த்தகத்தின்போது 2 சதவீதம் அதிகரித்த நிலையில், இன்று 0.35 சதவீதம் குறைந்தது. அதேசமயம் இந்திய பங்குச்சந்தையில் இன்று காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 133.29 புள்ளிகள் உயர்ந்து, 37546.42 புள்ளிகளாக இருந்தது. #IndianRupee #RupeeValue

    அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து இன்று ரூ.71.87 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. #Rupee #Rupeeversusdollar #USdollar
    புதுடெல்லி:

    அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் பதற்றம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முந்தைய வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 71.87 காசுகளாக  இன்று வீழ்ச்சி அடைந்தது.



    பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, நேற்றைய டாலர் விலைக்கு எதிரான மதிப்பான ரூ.71.43 காசுகளுடன் ஆரம்பமானது. ஆனால், வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு உயர்ந்து ரூ.71.40 காசுகளுக்கு வந்தது.

    ஆனால், பிற்பகலுக்குப் பின் மீண்டும் ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டு வர்த்தகம் முடியும்போது நேற்றைய மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக 44 காசுகள் சரிந்து ரூ.71.87 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது. #Rupee #Rupeeversusdollar  #USdollar
    இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க சீன அரசு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக சீன ஊடகத்தில் வெளியான செய்தியை நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. #IndianCurrency #RBI #China #Congress
    புதுடெல்லி:

    சீனாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில், ‘இந்தியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுடன் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சீன ரூபாய் நோட்டு அச்சடிப்பு கார்பரேஷனின் தலைவர் லியூ குயிஷெங் பேட்டியளித்திருந்தார். 

    இந்த செய்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில், சீன ஊடகத்தில் வெளியான செய்தி தவறானது என நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

    இந்திய ரூபாய்கள் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள அச்சகங்கள் மூலமே அச்சடிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    துருக்கி பொருளாதார பாதிப்பு இந்திய பங்குச்சந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது.#RupeeAllTimeLow #RupeeValue #DollarVsRupee
    மும்பை:

    துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததுடன், துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியையும் உயர்த்தியது. இதன் காரணமாக துருக்கியின் பணமதிப்பு வெகுவாக சரிந்து, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    துருக்கியின் பொருளாதார பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 69.93 என்ற அளவுக்கு சரிந்தது.

    இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. வர்த்தகத்தின் துவக்கத்தில் ரூபாயின் மதிப்பு சற்று ஏற்றம் பெற்றபோதிலும், சிறிது நேரத்தில் மீண்டும் சரியத் தொடங்கியது. இன்ட்ரா டே வர்த்தகத்தில் போது இந்திய ரூபாயின் மதிப்பு 70.08 என்ற அளவில் மிகவும் சரிந்தது. இது வரலாறு காணாத சரிவு ஆகும்.

    இந்திய ரூபாய் மதிப்பு சரிவால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்திலும் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பை சரிவில் இருந்து மீட்க ரிசர்வ் வங்கி தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. #RupeeAllTimeLow #RupeeValue #DollarVsRupee
    இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க சீன அரசு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. #IndianCurrency #RBI #China #Congress
    புதுடெல்லி:

    பட்டுசாலை பொருளாதார திட்டத்தின் கீழ் வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை சீனாவில் உள்ள அரசு நிறுவனம் தற்போது தொடங்க உள்ளது. சீனாவின் ரூபாயான யுவானை அதிகளவில் அச்சடிப்பதற்காக நாடு முழுவதும் பல புதிய அச்சகங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

    ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில் சீன ரூபாய் நோட்டு அச்சடிப்பு கார்பரேஷனின் தலைவர் லியூ குயிஷெங், “அண்டை நாடுகள் மற்றும் மிக நெருக்கமான நட்புறவில் உள்ள நாடுகளுக்கு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஒப்பந்தம் செய்துள்ளோம்” என அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்தியா, வங்காளதேசம், இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மலேசியா, பிரசில், போலந்து ஆகிய நாடுகளுடன் ரூபாய் நோட்டு அச்சடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

    இந்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட செய்தியை கொண்டு மத்திய அரசை காங்கிரஸ் கட்சி தாக்கியுள்ளது. ‘இந்திய ரூபாய் நோட்டையே வெளிநாட்டில் அச்சடிப்பதுதான் மேக் இன் இந்தியாவா’ என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிராந்திய நாடுகளில் சீனாவின் கரம் வலுவாக இறங்குவதை இந்தியா ஏன் எதிர்க்கவில்லை எனவும் அவர் தனது கேள்வியில் குறிப்பிட்டுள்ளார். 
    ×