search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rupee"

    மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், மோடியின் தாயார் வயதுபோல் தேய்ந்து வரும் ரூபாய் மதிப்பு என காங்கிரஸ் தலைவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MadhyaPradeshAssemblyElections #Congress #ModiMother
    போபால்:

    230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு வேட்டை சூடுபிடித்துள்ளது.

    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அந்த மாநிலத்தின் சில தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.



    இந்நிலையில், ம.பி.யில் இந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர், மோடியின் தாயார் வயதுபோல் ரூபாயின் மதிப்பும் தேய்ந்து வருகிறது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மபியின் இந்தூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் பிரதமராக பதவியேற்பதற்கு முன்னால் இந்திய ரூபாயின் மதிப்பு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வயது போல் ரூபாயின் மதிப்பு உள்ளது என தெரிவித்திருந்தீர்கள்.

    ஆனால், தற்போது உங்கள் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு உங்களது தாயாரின் வயதுபோல் தேய்ந்து வந்துள்ளது என தெரிவித்தார்.

    காங்கிரஸ் தலைவரின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ராஜ் பாப்பரின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மாநில பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.  #MadhyaPradeshAssemblyElections #Congress #ModiMother
    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.74.10 ஆக உள்ளது. #RupeeAt74
    புதுடெல்லி:

    கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணை விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது.

    மேலும் இறக்குமதியாளர்கள் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வகையில் ரூ.74.10 ஆக சரிந்தது. ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. சென்செக்ஸ் 792 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. 
    ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தொடர்ந்து பங்குச்சந்தை ஆட்டம் கண்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.2.72 லட்சம் கோடியை இழந்துள்ளனர். #Sensex #ShareMarket #Rupee
    மும்பை:

    சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாட்டு நாணையங்கள் சரிவினை சந்தித்து வருகின்றன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது. 

    சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்தன. அதன் பின் சற்று தேக்க நிலை நீடித்து வந்தது.

    இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 295 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 37,290 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 98.85 புள்ளிகள் சரிந்து 11,278 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

    மேலும் டாலர் மதிப்பு உயர்வால், முதலீட்டு நிறுவனங்கள் பலவும் லாபத்தைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் தங்கள் பங்குகளை விற்பனை செய்தன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிகஅளவில் சரிவைச் சந்தித்தது. 
    ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மோடி பேசிய பழைய வீடியோ ஒன்றை பதிவிட்டு ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். #Rupee #RupeeAllTimeLow
    புதுடெல்லி:

    இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு 70.06 ஆக கடுமையாக சரிந்தது. ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் துருக்கிக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை என்றும் அமெரிக்காவிற்கு துருக்கி பதிலளித்துள்ளது. 

    அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கையின் காரணமாக துருக்கியில் நிலவி வரும் ஸ்திரமற்ற நிலை இந்திய ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்படுகிறது.

    இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துக்கொண்டே வரும் விவகாரத்தில் மத்திய அரசு விமர்சனங்களை எதிர்க்கொண்டு வருகிறது. சமீப காலமாக பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடியின் மீது கடுமையான தாக்குதல்களை முன்னெடுக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்பிரச்சனையையும் கையில் எடுத்துள்ளார். 

    2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததற்கு, அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசை மோடி தாக்கி பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “ வரலாறு காணாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு இருக்கிறது. இது சுப்ரீம் லீடர் (பிரதமர் நரேந்திர மோடி) மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகும். ரூபாய் மதிப்பு ஏன் சரிகிறது என்பது குறித்து அவர் நடத்திய பொருளாதார வகுப்பை இத்துடன் இணைக்கப்பட்டு உள்ள வீடியோவில் கவனியுங்கள்” என பதிவிட்டுள்ளார். 



    வீடியோவில் அப்போதைய காங்கிரஸ் அரசை விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி, ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது, டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுதொடர்ந்தால் இந்தியா உலக வரைப்படத்தில் இருந்தே தெரியாமல் போய்விடும் என கூறுகிறார். 

    மேலும், அதிக ஊழல் இருப்பதன் காரணமாகவே ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாக அப்போது மோடி பேசியதும் வீடியோவில் உள்ளது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், சாமானிய பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? என்பதை பார்க்கலாம். #RupeeInICU #IndianRupee
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இது தவிர இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரும் சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

    இதன் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது.

    ஜூன் 19-ஆம் தேதி அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.61 என்ற அளவிற்கு சரிந்திருந்தது. இது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக கருதப்பட்டது. அதன்பின்னர் சிறிது ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு நேற்றைய வர்த்தக நேர முடிவில் 68.61 ஆக நிலைபெற்றது. 

    ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கி, அந்த நாட்டை தனிமைப்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் தொடக்கமாக, கூட்டணி நாடுகள் அனைத்தும் ஈரானிடம் இருந்து நவம்பர் மாதத்திற்குப் பிறகு கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று கூறியிருந்தது. 

    இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது என்றும், இதை மீறினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டது.

    இதுபோன்ற காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடுமையாக சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின்போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து 68.89 ஆக இருந்தது. அதன்பின்னர் சிறிது நேரத்திலேயே மேலும் சரிந்து 69.10 என்ற நிலையை எட்டியது. இது வரலாறு காணாத சரிவு ஆகும். 

    இந்த நிலை மேலும் மோசமடையலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் 70 ரூபாயை தொடலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரூபாய் மதிப்பு சரிவால் சாமானியர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படலாம் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் இறக்குமதி குறைந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது, இறக்குமதி பொருட்களின் மீதான வரியை உயர்த்தும் நடவடிக்கையை நோக்கி அரசை தள்ளும். மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, கடந்த மே மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 1,460 கோடி டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டில், இதே மாதத்தில் இருந்ததை விட 5.6 சதவீதம் அதிகம். 



    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இறக்குமதி செலவு அதிகரிக்கும். அதனால் பெட்ரோல்,  டீசலின் விலை அதிகரிக்கும். இது சாமானியர்களை வெகுவாக பாதிக்கும். 

    ஏற்கனவே, பெட்ரோல் விலை உயர்வால் கடும் சுமையை தாங்கிக்கொண்டிருக்கும் மக்களின் தலையில் மேலும் இடியாக இது இருக்கும். விலையை குறைத்தால் கடும் நிதிசுமையை ஏற்க வேண்டியிருக்கும் என்பதால், பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்க வாய்ப்புகள் குறைவு. 

    எரிபொருள் விலை உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணியாக அமையும். இதனால், ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளில் தேக்கம் ஏற்படும். இது பணவீக்கம் அதிகரிக்க காரணமாகவும் இருக்கும். பணவீக்கம் அதிகரித்ததால் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது.

    மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு ரூபாய் மதிப்பை உயர்த்தும் வழிகளை செய்தால்தான், பொதுமக்கள் தீவிர சுமைக்கு உள்ளாவதை தடுக்க முடியும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
    ×