search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dollar"

    • புளும்பெர்க் பணக்காரர் பட்டியலில் 90.4 பில்லியன் டாலர் (ரூ.7.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் உள்ளார்.
    • ஒட்டு மொத்த சந்தை மூலதனம் ரூ.13 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

    புதுடெல்லி:

    அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 7 நாட்களில் மட்டும் 10 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.83 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளதாக புளும்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 7 நாட்களில் 10 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதையடுத்து அவரது நிகர சொத்து மதிப்பு தற்போது 70.3 பில்லியன் டாலரை (ரூ.5.83 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

    சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதையடுத்து உலக பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தைபிடித்துள்ளார். புளும்பெர்க் பணக்காரர் பட்டியலில் 90.4 பில்லியன் டாலர் (ரூ.7.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் உள்ளார்.

    இவருக்கு அடுத்தபடியாக டாப் 20 பட்டியலில் இரண்டாவது இந்தியராக கவுதம் அதானி இடம்பெற்றுள்ளார்.

    அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களும் இந்த வாரமும் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. இதையடுத்து அவற்றின் ஒட்டு மொத்த சந்தை மூலதனம் ரூ.13 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

    குறிப்பாக அதானி கிரீன் எனர்ஜி 20 சதவீதம் அதிகரித்து ரூ.1.348-க்கும், அதானி எனர்ஜி 16.38 சதவீதம் உயர்ந்து ரூ.1,050-க்கும், அதானி டோட்டல் கேஸ் 15.81 சதவீதம் அதிகரித்து ரூ.847.90-க்கும், அதானி என்டர்பிரைசஸ் 10.90 சதவீதம் உயர்ந்து ரூ.2 ஆயிரத்து 805-க்கும் வர்த்தகமாகின.

    இவ்வாறு புளும்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் சறுக்கலை சந்தித்துள்ளது.
    • வெளிநாடுகளில் இருந்து ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வருகை துவங்கும்.

    திருப்பூர் :

    நடப்பு நிதியாண்டில் முதல் முறையாக கடந்த ஜூலை மாதம், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் டாலரில் 0.60 சதவீதம் சரிந்துள்ளது.நாட்டில் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடப்பு நிதியாண்டு(2022-23) துவக்கம் முதல் தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் இருந்தது. டாலர் மதிப்பில் கணக்கிடும்போது ஏப்ரல் - 21.44 சதவீதம், மே - 27.85 சதவீதம், ஜூன் - 49.82 சதவீதம் ஏற்றுமதி வர்த்தக மதிப்பு உயர்ந்து காணப்பட்டது. நிதியாண்டின் முதல் காலாண்டு வரை தொடர்ந்து வளர்ச்சி அடைந்துவந்த ஏற்றுமதி வர்த்தகம், முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் சறுக்கலை சந்தித்துள்ளது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1.388 பில்லியன் டாலராக இருந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த ஜூலை மாதம் 1.381 பில்லியன் டாலராக 0.60 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம், ரூபாயிலும், டாலரிலும் வளர்ச்சி நிலையிலேயே காணப்பட்டது. ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது, கடந்த ஆண்டு ஜூலை மாத ஏற்றுமதி 10,347.10 கோடி ரூபாயாக இருந்தது.

    கடந்த ஜூலை மாத ஏற்றுமதி வர்த்தகம் 10,992.26 கோடியாக 6.17 சதவீதம் உயர்ந்திருப்பது போல் தெரிகிறது. இதை வளர்ச்சியாக கருதமுடியாது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 74.55 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு நடப்பு ஆண்டு 79.60 ரூபாயாக 6.78 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனாலேயே டாலரில் 0.60 சதவீதம் சரிந்துள்ள வர்த்தகம் ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது உயர்ந்தது போன்று தெரிகிறது. இம்மாத இறுதி முதல் வெளிநாடுகளில் இருந்து ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வருகை துவங்கும். ஜூலையில் ஏற்பட்டுள்ள அரை சதவீதத்துக்கும் அதிகமான இந்த வர்த்தக சரிவு வரும் மாதங்களில் தொடர்ந்துவிடக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வகையில் ரூ.73.77 ஆக சரிந்தது. #IndianRupee #Dollar
    புதுடெல்லி:

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டது.

    கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணை விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது.

    மேலும் இறக்குமதியாளர்கள் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வரலாறு காணாத வகையில் ரூ.73.34 ஆக சரிந்தது. இன்று காலை நிலவரப்படி ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிந்தது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ73.77 ஆக வீழ்ச்சி ஏற்பட்டது.

    நடப்பு கணக்கில் ஏற்பட்ட பற்றாக்குறையாலும், மூலதனம் வெளியேற்றத்தாலும் ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. #IndianRupee #Dollar
    பங்குச் சந்தை கணிப்பில் ஜாம்பவானும் பிரபல தொழிலதிபருமான வாரன் பஃபெட் 13-ம் ஆண்டு நன்கொடையாக 340 கோடி டாலர்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் எட்வர்ட் பஃபெட் பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார்.

    உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்கஷயர் ஹாதவே" என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவர் 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். இவருடைய சொத்துகளின் மொத்த மதிப்பு $62 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

    பிரசித்திபெற்ற கொடையாளரான பஃபெட் தனது சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக அளிப்பதற்கு உறுதி வழங்கியுள்ளார். அதன்படி, கடந்த 12 ஆண்டுகளாக பல்லாயிரம் கோடி டாலர்களை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வாரன் பஃபெட் நன்கொடையாக அளித்துள்ளார்.

    இந்நிலையில், தொடர்ந்து 13-வது ஆண்டாக சுமார் 340 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள "பெர்கஷயர் ஹாதவே" நிறுவனத்தில் தனக்குள்ள 17.7 மில்லியன் பங்குகளை அவர் தற்போது நன்கொடையாக அளித்துள்ளார்.

    நேற்றைய நிலவரப்படி, இந்த பங்குகள் ஒவ்வொன்றின் முகமதிப்பு சுமார் 192 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்கொடையின் பெரும்பகுதி பில்கேட்ஸ் நடத்திவரும் பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் தனது குடும்பத்தினர் நடத்திவரும் தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. #WarrenBuffett #WarrenBuffettdonates$3.4bln
    ×