என் மலர்
நீங்கள் தேடியது "Indian Rupee Value low"
- 2013-14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.60 ஐ நெருங்கியபோது கேள்வி எழுப்பினார்.
- நேபாளத்தின் ரூபாய் மதிப்பு இப்படி வீழ்ச்சியடையவில்லை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் நாணயங்கள் இப்படி வீழ்ச்சியடையவில்லை.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது, ஒரு டாலருக்கு ரூ.90க்கும் கீழே சரிந்துள்ளது.
நேற்று காலை அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் 28 பைசாக்கள் சரிந்து, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலருக்கு ரூ.90.43 ஆகக் குறைந்தது.
இந்நிலையில் கடந்த 2013-14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.60 ஐ நெருங்கியபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை மோடி விமர்சித்த பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
"ரூபாய் மதிப்பு ஏன் சரிந்து வருகிறது? பிரதமரிடம் நரேந்திர மோடியின் கேள்வி" என்ற தலைப்பில் மோடியின் வீடியோவை காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.
அந்த வீடியோவில், "நேபாளத்தின் ரூபாய் மதிப்பு இப்படி வீழ்ச்சியடையவில்லை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் நாணயங்கள் இப்படி வீழ்ச்சியடையவில்லை, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு பதிலளிக்க வேண்டும்" என்று மோடி பேசியுள்ளார்.
- இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.96 ஆக இருந்தது.
- இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் முதல் முறையாக ரூ.90-யை இன்று கடந்துள்ளது. நேற்று வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு ரூ.89.92 வரை சென்றது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.89.96 ஆக இருந்தது.
காலை 10 மணியளவில் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.90.16-க்கு சரிந்தது. வர்த்தகப் பற்றாக் குறை, இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம் ஆகியவை ரூபாய் வீழ்ச்சிக்கு காரணமாக கருதப்படுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்போது, நமது அன்னிய செலாவணி அதிகரிக்கும். அதேநேரம் இப்போது உலகின் மற்ற நாடுகளை விட இந்திய பங்குச்சந்தை உச்சத்தில் இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுக்கிறார்கள்.
இதனால் அன்னிய செலாவணி குறைகிறது. இதுவும் ரூபாய் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
- கடந்த வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் டாலரின் மதிப்பு 87.43 ரூபாயாக இருந்தது.
- மந்தமான பொருளாதாரத்தை வலுப்படுத்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரெப்போ வட்டி விகிதங்கள் குறைப்பு.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (பிப்ரவரி 10) வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் டாலரின் மதிப்பு 87.43 ரூபாயாக இருந்த நிலையில் இன்று திங்கள்கிழமை சந்தை தொடக்கத்தில் 43 பைசா வீழ்ச்சி அடைந்து ரூபாய் மதிப்பு 87.92 ரூபாயாக உள்ளது. இந்திய ரூபாய் இதுவரை இவ்வளவு வீழ்ச்சியை சந்திதது கிடையாது.
நேற்று [பிப்ரவரி 9] அன்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25% வரியை அறிவித்தார்.
இதன்காரணமாக ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டுள்ளது. னைத்து நாடுகளிலிருந்தும் உலோக இறக்குமதிகளுக்கு இந்த வரிகள் பொருந்தும் என்றும் இந்த வார இறுதியில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மந்தமான இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரெப்போ வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.
- இந்திய ரூபாய் மதிப்பு 87.92 ரூபாயாக இருந்தது.
- மதிப்பை உயர்த்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியும் நேற்று முயற்சித்தது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (பிப்ரவரி 11) சற்றே உயர்வை கண்டுள்ளது.
நேற்று (பிப்ரவரி 10) வாரத்தின் முதல் நாளில் 43 பைசா வீழ்ச்சி அடைந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 87.92 ரூபாயாக இருந்தது.
இந்திய ரூபாய் இதுவரை இவ்வளவு வீழ்ச்சியை சந்திதது கிடையாது. எனவே ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியும் நேற்று முயற்சித்தது.
சந்தை திறப்பதற்கு முன்பு, இந்திய ரிசர்வ் வங்கி, அரசு நடத்தும் வங்கிகள் வழியாக டாலர்களை விற்றது. சந்தை திறந்த பிறகும் இது நீடித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். சுமார் 2 முதல் 3 பில்லியன் டாலர்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்தது.
எனவே இன்று (பிப்ரவரி 11) டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. நேற்றைவிட விட 61 பைசாக்கள் குறைந்து இன்றைய ருபாய் மதிப்பு 86.63 ஆகி உயர்ந்துள்ளது. கடந்த 2 வருடத்தில் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. கடைசியாக நவம்பர் 2022 க்கு பிறகு ரூபாய் மதிப்பு 1 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இது தவிர இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரும் சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது.
ஜூன் 19-ஆம் தேதி அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.61 என்ற அளவிற்கு சரிந்திருந்தது. இது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக கருதப்பட்டது. அதன்பின்னர் சிறிது ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு நேற்றைய வர்த்தக நேர முடிவில் 68.61 ஆக நிலைபெற்றது.
ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கி, அந்த நாட்டை தனிமைப்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் தொடக்கமாக, கூட்டணி நாடுகள் அனைத்தும் ஈரானிடம் இருந்து நவம்பர் மாதத்திற்குப் பிறகு கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று கூறியிருந்தது. இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது என்றும், இதை மீறினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டது.
இதுபோன்ற காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடுமையாக சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின்போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து 68.89 ஆக இருந்தது. அதன்பின்னர் சிறிது நேரத்திலேயே மேலும் சரிந்து 69.10 என்ற நிலையை எட்டியது. இது வரலாறு காணாத சரிவு ஆகும். #RupeeRecordLow #IndianRupeeValue






