என் மலர்
நீங்கள் தேடியது "Trade"
- இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.
- இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதித்தார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்கி வருவதால் மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு இந்தியா பணியவில்லை.
தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்தநிலையில் இந்தியாவுடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் என அதிபர் டிரம்ப் சொல்லி வருகிறார். மேலும், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதரக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் பதவி ஏற்ற விழாவில் பேசிய அதிபர் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என சூசகமாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒருவர் கூறும் போது,"இந்தியாவுடன் எங்களுக்கு 2 விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
நிச்சயமாக எங்களுக்குள் ஒரு பரஸ்பர பேச்சுவார்த்தை நடந்து முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்" என தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன.
- இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பவர் டேபிள் நிறுவனங்கள் ஜாப் ஒர்க் முறையில் பின்னலாடைகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பவர் டேபிள் சங்கத்தினர் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். அதன்படி கடந்த 2022ம் ஆண்டு 2 சங்கத்தினர் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதில் பவர் டேபிள் நிறுவனங்களுக்கு முதல் ஆண்டு 17 சதவீத கூலி உயர்வும் , அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதமும் வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டுதோறும் இவை முறையாக பின்பற்றப்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த ஜூன் 6-ந்தேதி முதல் உயர்த்தப்பட வேண்டிய 7 சதவீத கூலி உயர்வு சில நிறுவனங்கள் வழங்கினாலும் ஒரு சில நிறுவனங்கள் வழங்காமல் கால நீட்டிப்பு செய்து வருவதால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என கடந்த 7ம் தேதி முதல் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களில் இருந்து ஆர்டர்கள் எடுப்பதையும் , செய்து முடித்த ஆர்டர்களை கொடுப்பதையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 15 நாட்களுக்குள் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்கள் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும். பவர் டேபிள் சங்கம் உற்பத்தி நிறுத்தத்தை செய்வதால் தொழில் பாதிக்கக்கூடும் என சைமா சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பவர் டேபிள் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களுடனான முழு அளவிலான உற்பத்தி நிறுத்தம் இன்று முதல் தொடர உள்ளதாகவும் , கூலி உயர்வை அமல்படுத்தினால் அதற்குள்ளாக போராட்டத்தை கைவிடுவது , இல்லாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பது என தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று முதல் பவர் டேபிள் உரிமையாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் ஆடை உற்பத்தி பணிகள் முடங்கி உள்ளது.
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன.
- இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
திருப்பூரில் 'பவர்டேபிள்' என்று அழைக்கப்படும் 'பனியன் தையல் உரிமையாளர்கள்' சங்கத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. கட்டிங் செய்த ஆடைகளை தைத்து, செக்கிங் செய்து பேக்கிங் செய்யும் பணிகளை இந்த நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
பனியன் தயாரிப்பாளர்களிடம் இந்த பவர்டேபிள் சங்கம் கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் தேதி புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் அமைத்தது. அதன்படி முதல் ஆண்டு 17 சதவீதம், அதைத்தொடர்ந்து மீதம் உள்ள 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் என கூலி உயர்வு பெறுவது என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி தற்போது 2025ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் தேதியில் இருந்து 7 சதவீத கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் பல பனியன் உற்பத்தி நிறுவனங்கள் புதிய கூலி உயர்வை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாக 'பவர்டேபிள்' உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் 7ம் தேதி முதல் கூலி உயர்வு பிரச்சினை தீரும்வரை டெலிவரி எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை என அறிவித்துள்ளனர். எங்களது பாதிப்புகளை உணர்ந்து உற்பத்தி நிறுவனங்கள் புதிய கூலி உயர்வை தடையின்றி வழங்க முன்வர வேண்டும் என திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
திருப்பூர் மட்டுமின்றி அவிநாசி, பெருமாநல்லூர், ஈரோடு, சேலம், செங்கப்பள்ளி என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான 'சைமா' மூலம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் அமைக்கப்பட்டு நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டிற்கான புதிய கூலி உயர்வை சில நிறுவனங்கள் தராமல் காலம் தாழ்த்தி வருவதால் எங்கள் தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர். பலமுறை நேரில் சென்றும், கடிதங்கள் அனுப்பியும் எங்களுக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதனால் மீண்டும் 'சைமா' சங்கத்தை அணுகியுள்ளோம்.
புதிய கூலி உயர்வு வழங்காமல் காலதாமதம் செய்யும் நிறுவனங்களை அழைத்து பேசி இப்பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு ஏற்படுத்த 'சைமா' நிர்வாகிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதனால் பல்வேறு இடங்களில் பனியன் உற்பத்தி பணிகள் முடங்கி வருகின்றன. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும்" என்று கூறினார்.
- நான்கு இந்துஜா சகோதரர்களில் இவர் இரண்டாமவர் ஆவார்.
- தற்போது டாடா, பிர்லா, அம்பானி ஆகியோரின் குழுமங்களுடன் இந்துஜா குழுமமும் இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாக உள்ளது.
இந்துஜா குழுமத்தின் தலைவரான கோபிசந்த் பி. இந்துஜா நேற்று லண்டனில் காலமானார். அவருக்கு வயது 85.
இவர் 2023-ஆம் ஆண்டுதான் இந்துஜா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். நான்கு இந்துஜா சகோதரர்களில் இவர் இரண்டாமவர் ஆவார். மூத்த சகோதரரான ஸ்ரீசந்த் இந்துஜா 2023-ல் காலமானார்.
இவர்களது தந்தை பரமானந்த் இந்துஜா இந்தியவின் மும்பை மற்றும் ஈரானின் தெஹ்ரான் இடையே வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் இரும்புத் தாது ஆகியவற்றை ஏற்றுமதி செய்து விற்றதன் மூலம் வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.
தற்போது டாடா, பிர்லா, அம்பானி ஆகியோரின் குழுமங்களுடன் இந்துஜா குழுமமும் இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாக உள்ளது.

இந்துஜா சகோதரர்கள்
தற்போது ஆட்டோமொபைல், பேங்கிங், தொழில்நுட்பம்., ரியல் எஸ்டேட் உட்பட 11 துறைகளில் இக்குழுமம் வர்த்தகம் செய்கிறது.
அசோக் லேலண்ட், இண்டஸ்இண்ட் வங்க, என்.எக்ஸ்.டி டிஜிட்டல் லிமிடெட் போன்றவை இக்குழுமத்தின் முக்கிய நிறுவனங்கள் ஆகும்.
கோபிசந்த் இந்துஜா 1997-ல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றார். சண்டே டைம்ஸின் 2025 பணக்காரர்கள் பட்டியலில், கோபிசந்த் இந்துஜாவின் குடும்பம் 32.3 பில்லியன் பவுண்டுகளுடன் பிரிட்டனின் பணக்காரக் குடும்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கோபிசந்த் இந்துஜாவுக்கு சுனிதா இந்துஜா என்ற மனைவியும் சஞ்சய் இந்துஜா, தீரஜ் இந்துஜா, ரீட்டா இந்துஜா ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.
- ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறையும் வாய்ப்பு
- கெய்ர் ஸ்டார்மர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையே சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் இந்தியர்களுக்கான விசா பிரச்சனைகள் தீர்வு, கார்கள் மற்றும் ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறைப்பு ஆகியவை அடங்கும்.
இந்நிலையில், வர்த்தக பேச்சுவார்தைகளுக்காக இங்கிலாந்து பிரதமர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் இன்று இந்தியா வந்தடைந்தார்.
கெய்ர் ஸ்டார்மர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்த ஒப்பந்தம் ஆண்டுதோறும் ஸ்காட்லாந்து பொருளாதாரத்திற்கு 190 மில்லியன் யூரோ பங்களிக்கும் என்றும் அதாவது இந்தியாவிற்கு ஆண்டுக்கு £1 பில்லியன் யூரோ அளவுக்கு ஸ்காட்ச் விஸ்கி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமரின் இந்திய பயணம் குறித்து பேசிய ஸ்காட்லாந்திற்கான இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் டக்ளஸ் அலெக்சாண்டர், "இங்கிலாந்து - இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) மூலம் ஸ்காட்ச் விஸ்கி தொழில் வளர்ச்சியடையும். இந்த ஆண்டு இந்தியாவுடன் இங்கிலாந்து அரசாங்கம் செய்து கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் ஸ்காட்லாந்திற்கும், குறிப்பாக நமது விஸ்கி தொழிலுக்கும் ஒரு சிறந்த செய்தியாகும். ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சில சவால்கள் உள்ளது.
இந்தியாவுடனான இங்கிலாந்து அரசாங்கத்தின் ஒப்பந்தத்தில் ஸ்காட்ச் விஸ்கி ஒரு பெரிய வெற்றியாளராக உள்ளது. இது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரத்துடன் இதுவரை எந்த நாடும் ஒப்புக் கொள்ளாத சிறந்த ஒப்பந்தமாகும்.
- ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
- அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார்.
இந்த உரையாடலில் வர்த்தகம், ஃபென்டனில் போதைப்பொருள் விவகாரம், மற்றும் டிக்டாக் ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார்.
அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் சீனாவுக்குச் செல்வதாகவும், தொடர்ந்து ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு வருகை தருவார் என்றும் அவர் தெரிவித்தார்.
டிக்டாக் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காகவும் டிரம்ப் தனது நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக மோதல் காரணமாக இருதரப்பும் பரஸ்பரம் வரிகளை அதிகரித்தன.
பேச்சுவார்த்தைக்கு பின் ஏற்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தின்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. இந்த ஒப்பந்தம் நவம்பரில் முடிவடைகிறது.
- இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.
- இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார்.
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுப்பு தெரிவித்ததால் மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. 100 ரூபாய் பொருள் மீது 50 ரூபாய் வரி விதித்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால் இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தார்.
இதற்கிடையே இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது. இதனால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று இந்தியா-அமெரிக்கா இடையே தடைபட்டிருந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்த பிறகு நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.
ஏற்கனவே 5 சுற்றுகள் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், ஆகஸ்ட் 25-ல் நடக்க இருந்த 6வது சுற்று பேச்சுவார்த்தை அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.
- ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- குறைந்தபட்ச வரியை 30 சதவீதம் விதிக்க அமெரிக்க அரசாங்கம் முன்பு முடிவு செய்திருந்தது.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) இறுதியாக ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இருவருக்கும் இடையே ஒரு பெரிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
ஸ்காட்லாந்தில் உள்ள தனது கோல்ஃப் ரிசார்ட்டில் ஞாயிற்றுக்கிழமை, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான குறைந்தபட்ச வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு குறைந்தபட்ச வரியை 30 சதவீதம் விதிக்க அமெரிக்க அரசாங்கம் முன்பு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
இதுவரை கண்டிராத மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் இது என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். ஆட்டோமொபைல்கள் மற்றும் மருந்துகள் உட்பட அனைத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியம் 15 சதவீத வரி விதிக்கும் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவிலிருந்து 750 பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்தியை வாங்கவும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்காவில் மேலும் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அமெரிக்க இராணுவ தயாரிப்புகளையும் வாங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தலைவர் உர்சுலா, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அமெரிக்காவிடமிருந்து எல்என்ஜி, எண்ணெய் மற்றும் அணு எரிபொருளை வாங்குவோம் என்று அவர் கூறினார். இந்த கொள்முதல்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறும் என்று அவர் கூறினார். ரஷிய எரிபொருட்களிலிருந்து பிற ஆதாரங்களுக்கு மாறுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
விமானங்கள், சில வகையான இரசாயனங்கள், விவசாய பொருட்கள் மற்றும் பிற முக்கியமான மூலப்பொருட்களுக்கு இருதரப்பு வரிச் சலுகைகளையும் இருவரும் ஒப்புக்கொண்டனர். தற்போது, அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே சுமார் 1.6 டிரில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
- ஸ்டார்மரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது பிரதமர் மோடியின் 4-வது இங்கிலாந்து பயணம் என்றாலும் ஸ்டாமர் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்பு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மன்னர் 3-ம் சார்லசையும் சந்திக்கிறார். ஸ்டார்மரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்படுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
- ஒப்பந்தத்தின் கீழ் இங்கிலாந்துக்கான இந்திய ஏற்றுமதியில் 99 சதவீத வரிகள் பூஜ்ஜியமாக மாற்றப்படும்.
பிரதமர் நரேந்திரமோடி இன்று முதல் 4 நாட்களுக்கு இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
2 நாள் பயணமாக அவர் முதலில் இன்று இங்கிலாந்து புறப்படுகிறார். பிரதமர் மோடியின் 4-வது இங்கிலாந்து பயணம் என்றாலும் ஸ்டாமர் பிரதமராக பதவியேற்று அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மன்னர் 3-ம் சார்லசையும் சந்திக்கிறார். ஸ்டார்மரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்படுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திடுவார்கள். இது ஒரு சிறப்பம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தத்தின் கீழ் இங்கிலாந்துக்கான இந்திய ஏற்றுமதியில் 99 சதவீத வரிகள் பூஜ்ஜியமாக மாற்றப்படும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 90 சதவீத பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்படும்.
இந்தியாவில் இருந்து துணிகள், காலணிகள், ரத்தினக் கற்கள், நகைகள், வாகன உதிரிபாகங்கள் ஆகியவை 4 முதல் 16 சதவீதத்தில் இருந்து வரிகளை முழுமையாக ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரிகளை இந்தியா தற்போதுள்ள 100 சதவீதத்தில் இருந்து வெறும் 10 சதவீதமாகக் குறைக்கும் என்று கருதினால், ஆஸ்டன் மார்ட்டின் மற்றும் டாடாவுக்குச் சொந்தமான ஜாகுவார், லேண்ட் ரோவர் போன்ற கார்களின் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்து பொருள்களின் மீதான இறக்குமதி வரிகளை குறைப்பதற்கு ஈடாக, இந்திய கார் தயாரிப்பாளர்கள் மின்சார, ஹைபிரிட் வாகனங்களுக்கான இங்கிலாந்து ஆட்டோ மொபைல் சந்தையை எதிர்நோக்குவார்கள். இதனால், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா எலக்ட்ரிக் போன்ற கார் தயாரிப்பாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
வெல்ஸ்பன் இந்தியா, அரவிந்த், ரேமண்ட், வர்த்மான் போன்ற இந்திய ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் இங்கிலாந்துக்கான ஏற்றுமதிக்கான வரி இல்லாமல் பயனடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாட்டா இந்தியா மற்றும் ரிலாக்சோ போன்ற காலணி தயாரிப்பாளர்களும் எளிதாக இங்கிலாந்து மார்க்கெட்டை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்காட்ச், விஸ்கி மீதான இறக்குமதி வரி 150 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாகக் குறையும். பின்னர் அடுத்த 10 ஆண்டுகளில் 40 சதவீதமாகவும் குறைக்கப்படவுள்ளது.
இங்கிலாந்து பயணம் முடிந்ததும் பிரதமர் மோடி 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் மாலத்தீவுக்கு செல்கிறார். மாலத்தீவின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார். அதிபர் முகமது முய்வை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஆதரவு வளர்ச்சி திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
- ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத வரிகள் விதிக்கப்படும்.
- ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும்.
அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் சில நாடுகளுடன் உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத வரிகள் விதிக்கப்படும்.
இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா 90 சதவீத லாபத்தைப் பெறும்.
ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும். இந்த ஒப்பந்தம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதுபோன்ற எதுவும் இதற்கு முன்பு இருந்ததில்லை.
ஜப்பான் அமெரிக்காவிற்கு 15 சதவீத பரஸ்பர வரிகளை செலுத்தும். இது அமெரிக்காவிற்கு மிகவும் உற்சாகமான நேரம். ஜப்பானுடன் நாம் எப்போதும் சிறந்த உறவைக் கொண்டிருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் பிலிப்பைன்ஸ் நாடுடனும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு இந்தோனேசியா எந்த வரியும் விதிக்காது.
- இந்தியாவுடனான ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த வரி விதிப்பை தடுக்க பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் சில நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது டிரம்ப் சமீபத்தில் வரி விதிப்பை அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்கா - இந்தோனேசியா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் கூறியதா வது:-
நாங்கள் இந்தோனேசியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம். இது குறித்து அந்த நாட்டின் அதிபருடன் நான் பேசினேன். இதற்கு முன்பு இந்தோனேசியா சந்தையை நம்மால் அணுக முடியாத சூழல் இருந்தது. பல கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது அது நீக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த ஒப்பந்தத்தில் மிகவும் முக்கியமானது.
அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு இந்தோனேசியா எந்த வரியும் விதிக்காது. அதேவேளையில் இந்தோனேசிய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 19 சதவீத வரி விதிக்கும். இந்தோனேசியாவுக்கு விதிக்கப்பட்ட வரி 19 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க - இந்தோனேசிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா ஆசிய நாட்டின் சந்தைகளுக்கு முழு அணுகலைப் பெறும்.
இதே வழியில் இந்தியாவுடனான ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. நாங்கள் இந்தியாவை அணுகப் போகிறோம். இந்த நாடுகளில் எதற்கும் எங்களுக்கு அணுகல் இல்லை. எங்கள் மக்களால் உள்ளே சென்று வர்த்தகம் செய்ய முடியவில்லை. தற்போது நாங்கள் வரிகளுடன் என்ன செய்கிறோம் என்பதன் காரணமாக அங்கு அணுகலைப் பெற உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
அமெரிக்கா உடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக இந்திய அதி காரிகள் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் டிரம்ப் இந்த கருத்துகளை தெரிவித்து உள்ளார். இந்தியாவின் வர்த்தக அமைச்சக அதிகாரிகள் குழு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளுக்காகப் பல வாரங்களாக அமெரிக்காவில் தங்கி வருவது குறிப்பிடத்தக்கது.






