என் மலர்
நீங்கள் தேடியது "Indian whisky"
- ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறையும் வாய்ப்பு
- கெய்ர் ஸ்டார்மர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையே சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் இந்தியர்களுக்கான விசா பிரச்சனைகள் தீர்வு, கார்கள் மற்றும் ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறைப்பு ஆகியவை அடங்கும்.
இந்நிலையில், வர்த்தக பேச்சுவார்தைகளுக்காக இங்கிலாந்து பிரதமர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் இன்று இந்தியா வந்தடைந்தார்.
கெய்ர் ஸ்டார்மர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்த ஒப்பந்தம் ஆண்டுதோறும் ஸ்காட்லாந்து பொருளாதாரத்திற்கு 190 மில்லியன் யூரோ பங்களிக்கும் என்றும் அதாவது இந்தியாவிற்கு ஆண்டுக்கு £1 பில்லியன் யூரோ அளவுக்கு ஸ்காட்ச் விஸ்கி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமரின் இந்திய பயணம் குறித்து பேசிய ஸ்காட்லாந்திற்கான இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் டக்ளஸ் அலெக்சாண்டர், "இங்கிலாந்து - இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) மூலம் ஸ்காட்ச் விஸ்கி தொழில் வளர்ச்சியடையும். இந்த ஆண்டு இந்தியாவுடன் இங்கிலாந்து அரசாங்கம் செய்து கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் ஸ்காட்லாந்திற்கும், குறிப்பாக நமது விஸ்கி தொழிலுக்கும் ஒரு சிறந்த செய்தியாகும். ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சில சவால்கள் உள்ளது.
இந்தியாவுடனான இங்கிலாந்து அரசாங்கத்தின் ஒப்பந்தத்தில் ஸ்காட்ச் விஸ்கி ஒரு பெரிய வெற்றியாளராக உள்ளது. இது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரத்துடன் இதுவரை எந்த நாடும் ஒப்புக் கொள்ளாத சிறந்த ஒப்பந்தமாகும்.
- இந்திய மதுபான வர்த்தக சந்தை 33 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புடையது
- அம்ருத் விஸ்கி 183 சதவீதம் அதிக வளர்ச்சியை கண்டுள்ளது
மதுபான வகைகளில் உலகளவில் பெரும்பாலான ஆசிய நாடுகளில் பீர் விரும்பப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் வைன் சுவைப்பதையே அதிகளவில் மதுப்பிரியர்கள் விரும்புகின்றனர்.
ஆனால், இந்தியர்கள் விஸ்கி பிரியர்கள்.
மதுபான வர்த்தகத்தில் $33 பில்லியன் மதிப்புடைய சந்தையாக அதிக விஸ்கி சுவைப்பவர்கள் நாடாக இருந்த இந்தியா தற்போது அதிகளவில் விஸ்கி தயாரிக்கும் நாடாக உருவெடுத்துள்ளது.
இந்திய தலைநகர் புது டெல்லியை சேர்ந்த பிக்காடிலி வடிசாலையில் (Piccadily distillery) தயாராகும் சிங்கிள் மால்ட் வகை "இண்ட்ரி" (Indri) விஸ்கி, உலகிலேயே சிறந்த விஸ்கி என முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகளவில் முன்னணியில் உள்ள பிரான்சின் பெர்னாட் ரிகார்ட் (Pernod Ricard) நிறுவனத்தின் க்ளென்லிவெட் (Glenlivet), இங்கிலாந்தின் டியாஜியோ (Diageo) நிறுவனத்தின் டாலிஸ்கர் (Talisker) ஆகிய மதுபான வகைகள் இந்தியாவின் இண்ட்ரி, அம்ருத் (Amrut) மற்றும் ராம்புர் (Rampur) போன்ற உள்ளூர் விஸ்கி மதுவகைகளுடன் போட்டி போட முடியாமல் திணறுகின்றன.

தங்கள் உபயோகத்திற்கும், கேளிக்கை விருந்து பரிமாற்றங்கள் மற்றும் பிறருக்கு பரிசளிக்கவும் பெரும்பாலான இந்தியர்கள், இந்த உள்ளூர் தயாரிப்புகளையே விரும்ப தொடங்கி உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உலகின் தலைசிறந்த விஸ்கிகளுக்கான பரிசு (Whiskies of the World) போட்டியில், ஸ்காட்லேண்டு மற்றும் அமெரிக்காவின் பல பிராண்டுகளை பின்னுக்கு தள்ளி "பெஸ்ட் இன் ஷோ" (Best in Show) பரிசை இண்ட்ரி (தீபாவளி எடிஷன்) வென்று முதலிடம் பிடித்தது.

விற்பனையில் முன்னணியில் இருந்த க்ளென்லிவெட், இந்திய பிராண்டான அம்ருத் விஸ்கியின் 183 சதவீத வளர்ச்சியால் சரிவை சந்தித்திருக்கிறது.
வரும் 2025 காலகட்டத்தில் பிக்காடிலி நிறுவனம் தனது உற்பத்தியை 66 சதவீதம் அதிகரித்து நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் சித்தார்த்த ஷர்மா தெரிவித்தார்.
விற்பனையில் முன்னணியில் உள்ள இந்த மது தயாரிப்பு நிறுவனங்கள் விலையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. ஒரு பாட்டில் இண்ட்ரி $37, அம்ருத் $42 மற்றும் ராம்புர் $66 என அயல்நாட்டு மதுபானங்களுக்கு ஈடாக விற்பனை ஆகிறது.






