என் மலர்
நீங்கள் தேடியது "Liquor"
- டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
- அதிக விலைக்கு மதுவிற்றதாக பணியில் இருந்து யாரும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை.
சென்னை:
டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக விற்கக் கூடாது. அதில் உள்ள விலைக்கு தான் அனைத்து மதுபாட்டில்கள், பீர் வகைகள் விற்க வேண்டும், கூடுதலாக ரூ.10 வைத்து விற்றால் விற்பனையாளர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று மேலாண்மை இயக்குனர் விசாகன் உத்தரவிட்டு இருந்தார்.
சமீபத்தில் காணொலி காட்சி மூலமாக நடந்த கூட்டத்தில் கூட அதை உறுதிப்படுத்தி பேசியுள்ளார். கூடுதல் விலைக்கு விற்கப்படும் விற்பனையாளர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார், மேலும் விற்பனையை தடுக்க தவறிய சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் கடை வேலை நேரத்தில் பணியில் இல்லாத மேற்பார்வையாளர்கள் விற்பனை குறைவான கடைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர். மத்திய சென்னை மாவட்டத்தில் உள்ள 73 கடைகளில் 25 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் 7 மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் அதிகபட்ச விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. டாஸ்மாக் பொது மேலாளர்கள் நடத்திய சோதனையில் இது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் மீது நிரந்தர பணி நீக்க நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.
இதுவரையில் அதிக விலைக்கு மதுவிற்றதாக பணியில் இருந்து யாரும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை. இடமாற்றம், சஸ்பெண்டு போன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆனால் இந்த முறை டாஸ்மாக் நிறுவனம் ஊழியர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கும் என்பதால் கலக்கத்தில் உள்ளார்.
மத்திய சென்னையை தொடர்ந்து வடசென்னையில் உள்ள 81 கடைகள், தென் சென்னையில் உள்ள 89 கடை பணியாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மதுபிரியர்களிடம் இருந்து கூடுதல் தொகை வசூலித்தால் கண்டிப்பான நடவடிக்கை என்பது அமைச்சர் முத்துசாமி கட்டுப்பாட்டில் இத்துறை வந்த பிறகு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் அவற்றின் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுப்பது என்பது இதுவே முதல் முறையாகும். அதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் மது விற்பனையில் எச்சரிக்கையோடு செயல்படுகின்றனர்.
- தோப்ரன்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அரக்குளம் பகுதியை சேர்ந்தவர் மோகனன்(வயது56). கட்டிட தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று தோப்ரன்குடி என்ற இடத்தில் கட்டிட வேலைக்காக தங்கியிருந்தார். அப்போது அவர், தண்ணீர் என நினைத்து பேட்டரி வாட்டரில் மதுவை கலந்து குடித்திருக்கிறார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மோகனன், தோப்ரன்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்பு மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது இறப்பு குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுக்கடையால் பெண்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- கடையை அகற்ற வேண்டும்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் ஊருக்கு அருகே டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தும் மதுப்பிரியர்கள் இந்த பகுதி வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் காரில் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 220 லிட்டர் வெளிமாநில சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தரங்கம்பாடி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட த்திலிருந்து சாராயம் மதுபாட்டில்களை கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டி ல்கள் காரில் கடத்தி வருவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நீலகண்டன் தலைமையில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெ க்டர் நாகரெ த்தினம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், தலைமை காவலர் அருள், முதன்மை காவலர்கள் மனோகர், மகேஷ், பாலகுரு ஆகியோர் செம்பனா ர்கோவில் காவல் சரகம் ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 672 வெளிமாநில மதுபாட்டி ல்கள் மற்றும் பாக்கெட்டுகள், இருந்தது கண்டுபி டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மது கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட காரையும், 672 வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் 220 லிட்டர் வெளி மரிநல சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்
இது தொடர்பாக மயிலாடுதுறை அருகே பாண்டூரை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேஷ் என்பவ ரை கை செய்து விசாரணை செய்ததில் காரைக்காலில் இருந்து சீர்காழி பகுதிக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- போலீசார் சோதனையில் சிக்கினர்
- பைக் பறிமுதல்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயத்தை முழுமையாக ஒழிக்கவும், வெளிமாநில மது பாட்டில்கள் கொண்டு வந்து விற்பனை செய்வதை தடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஆல்பர்ட்ஜான் உத்தரவிட்டார்.
அதன்பேரில் வாணி யம்பாடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் தகரகுப்பத்தை அடுத்த தரைக் காடு பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஒரு இடத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் சாராயத்தையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். சாராயத்தை பதுக்கி வைத்திருந்த சங்கர் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் குட்டை பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அங்கு சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துராமன் (வயது 34) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக யுவராஜ் என்பவரை கைது செய்தனர்.
- புதிய பஸ் நிலையம் அருகே மது பாட்டில்கள் வைத்திருந்த ஜெயக்குமார் என்பவரை கைது செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில், முத்தூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முத்தூர் அருகே உள்ள மேட்டுக்கடை என்ற இடத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக யுவராஜ் (வயது 40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போன்று வெள்ளகோவில் புதிய பஸ் நிலையம் அருகே மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த ஜெயக்குமார் (50) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- போலீசார் விசாரணையும் ரகசிய கண்காணிப்பும் மேற்கொண்டனர் .
- மறைவான பகுதியில் சாராயம் விற்றவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கடலூர்:
குள்ளஞ்சாவடி போலீஸ் சரகத்தில் கள்ளச்சாராயம் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் விசாரணையும் ரகசிய கண்காணிப்பும் மேற்கொண்டனர் . அதில் சுப்ரமணியபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார்மறைவான பகுதியில் சாராயம் விற்ற நடுத்தெருவை செர்ந்த சின்ராஜ் மனைவி சத்தியவாணி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 40 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- மணல்ேமடு பகுதியில் போலீசார் தீவிரசோதனையில் ஈடுப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை:
மணல்மேடு அருகே கடலங்குடி, குறிச்சி ஆகிய பகுதிகளில் சாராயம் விற்பதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது கடலங்குடி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், கடலங்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்த ராமையன் மகன் ராஜேஷ் (வயது 25) மற்றும் கடலங்குடி திருமேனியார் கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (60) என்பதும், அவர்கள் 2 பேரும் சாராயம் விற்றதும் தெரியவந்தது.
இதேபோல் குறிச்சி பாலம் அருகே கண்காணித்தபோது குறிச்சி மேலத்தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் ஸ்டாலின் (35) என்பவர் சாராயம் விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், கலியமூர்த்தி, ஸ்டாலின் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- மதுபான விற்பனையில் உலகின் 5-வது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.
- ரெடி-டு ட்ரிங்க் பானங்கள் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக உருவெடுத்துள்ளன.
சென்னை:
இந்தியாவில் சமீபகாலமாக மதுப்பிரியர்கள் அதிகரித்து வருகின்றனர். எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்ற நிலை வந்துவிட்டதால் மது விற்பனையும் அதிகமாகி வருகிறது. மதுபான விற்பனையில் உலகின் 5-வது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.
மதுபான வகைகளை ஒயின், ஜின் விற்பனை அதிகரித்த நிலையில் தற்போது விற்பனையில் விஸ்கி முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவின் மது விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு விஸ்கி விற்பனை ஆவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் 85 சதவீதம் 10 உள்நாட்டு பிராண்டுகள் பிடித்துள்ளன. விஸ்கியின் விற்பனை சதவீத 66 ஆக அதிகரித்து உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கி 3.3 சதவீதம் விற்பனை ஆவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விஸ்கி சந்தையில் 96 சதவீத இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்புகளுக்கு பின்னர் மது வணிகம் மீண்டும் முன்னேற்ற பாதையில் உள்ளது. வோட்கா ரகம் விற்பனையில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவை பொருத்தவரை ரூ.53 பில்லியன் மதுபானங்கள் விற்பனை ஆவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் இதன் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெடி-டு ட்ரிங்க் பானங்கள் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக உருவெடுத்துள்ளன. கடந்த ஆண்டு 40 சதவீதம் இது விற்பனை ஆகி உள்ளது.
மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் கூட இதன் எண்ணிக்கை விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையில் ஐந்தில் ஒரு பங்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒயின்களே விற்பனை ஆகின்றன. இதில் ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட ஒயின்களே அதிகம். தடையற்ற வர்த்தகம் காரணமாக இவை அதிகமாக இறக்குமதி ஆவதால் விற்பனையும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கிகளும் விற்ப னையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அமெரிக்க, ஜப்பானிய, கன்னட விஸ்கிகள் இருந்தா லும் இந்திய தயாரிப்பை மதுப்பிரியர்கள் விரும்புவதாக இந்திய மதுபான விற்பனை சங்கத்தின் தலைமை அதிகாரி நிதா கபூர் தெரிவித்தார்.
- பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிக அளவு கள்ளத்தன மாக