search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor"

    • மதுபான கடைக்கு மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டது.
    • பாதுபாட்டில்களை தூக்கி சென்ற அனைவரும் ஓடிவிட்டனர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மதுபானங்கள் கொண்டு சென்ற வாகனம் வேகத்தடையில் ஏறிய போது மதுபானங்கள் அடங்கிய பெட்டிகள் கீழே விழுந்தது.

    அப்போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பலரும் மதுபானங்களை அள்ளிக்கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    மதுபான கடைக்கு மதுபானங்கள் அடங்கிய 110 பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது. அப்போதுதான் 30 பெட்டிகள் கீழே விழுந்துள்ளது.

    மதுபானங்கள் கீழே விழுந்ததை கண்டுபிடித்த ஓட்டுநர் வாகனத்தை திருப்பி வருவதற்குள் பாதுபாட்டில்களை தூக்கி சென்ற அனைவரும் ஓடிவிட்டனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கலால் துறையினரின் இந்த திடீர் சோதனையால் மதுபான கடைகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
    • மது பிரியர்களும் தாங்கள் அருந்திய சரக்கு ஒரிஜினல்தானா? என்ற குழப்பத்துக்குள்ளானார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரையிலான பலவிதமான மது பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காகவே தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

    புதுவையில் குறைந்த விலையில் விற்கப்படும் மதுபானங்களை பக்கத்து மாநிலமான தமிழகத்தை சேர்ந்தவர்கள் வாங்கி சென்றும் அருந்தி வருகின்றனர். அவர்கள் சில நேரங்களில் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும் கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 65-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

    இந்த விஷசாராய சாவு சம்பவத்துக்கு புதுவையில் இருந்து மெத்தனால் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதுபோல் புதுவையில் விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி சென்று குடித்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த 2 பேர் இறந்து போனார்கள். இதனால் புதுவை சாராயக் கடைகளில் புதுவை கலால் துறை அதிகாரிகள் அனைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்நிலையில் புதுவையில் உள்ள மதுபான கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் ரக மதுபானங்களில் சிலர் கொள்ளை லாபம் ஈட்ட கலப்படம் செய்து விற்கப்படுவதாக கலால் துறைக்கு புகார் சென்றது.

    அதன்பேரில் கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவுப் படி தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் கலால் துறை அதிகாரிகள் புதுச்சேரி வில்லியனூர் பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போலீசாரும் உடன் சென்றனர்.

    ஆய்வின்போது அனைத்து மது பாட்டில்களிலும் ஹாலோகிராம் ஒட்டப்பட்டுள்ளதா? என்றும் பாட்டில்களின் சீல்கள் சரியாக உள்ளதா? என்றும் சோதனையிட்டனர்.

    மேலும் உயர் ரக மது பாட்டில்களில் மாதிரி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்த கலால் துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

    கலால் துறையினரின் இந்த திடீர் சோதனையால் மதுபான கடைகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும் அங்கு மது குடித்துக்கொண்டிருந்த மது பிரியர்களும் தாங்கள் அருந்திய சரக்கு ஒரிஜினல்தானா? என்ற குழப்பத்துக்குள்ளானார்கள்.

    • கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது.
    • மதுபானங்களின் தேவை அதிகரிப்பு என்பது, மதுக்கடைகள் குறைவாக இருப்பதை காட்டுகிறது.

    பீதர்:

    கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு மதுபானங்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியானது. குறிப்பாக ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனங்கள் மூலமாக மதுபானமும் விற்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பீதர் மாவட்டத்தில் கலால் துறை மந்திரி ஆர்.பி.திம்மாபூரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது. மதுபானங்களின் விலையை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை குறைவாக தான் உள்ளது. சில உயர்ரக மதுபானங்களின் விலை மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் வருவாய் பாதிக்கப்படுகிறது. மதுபானங்களின் தேவை அதிகரிப்பு என்பது, மதுக்கடைகள் குறைவாக இருப்பதை காட்டுகிறது.

    மாநிலத்தில் ஆன்லைன் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படாது. அதுபற்றி அரசு தரப்பில் எந்த விதமான ஆலோசனையும் இதுவரை நடக்கவில்லை. ஆன்லைன் மூலமாக மதுபானம் விற்பனை செய்ய சாத்தியமும் இல்லை. இனிவரும் நாட்களிலும் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யப்படாது. எந்த ஒரு ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாகவும் மதுபானங்கள் விற்பனை செய்வதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் தங்கமாரிமுத்து புகார் அளித்தார்.
    • கள்ளச்சாராய விற்பனையிலும் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக திருமணம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் அந்த குடும்பத்தினரே சாராயம் வாங்கி சப்ளை செய்து வந்ததாகவும் புகார்கள் வந்தன.

    கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக தெரிவிக்கவும், டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆண்டிபட்டி அடுத்துள்ள மேய்க்கிலார்பட்டி ஈஸ்வரன் கோவில் அருகே பழனிக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் தங்கமாரிமுத்து புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டு இருந்த அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (47), கிழக்குத் தெருவைச் சேர்ந்த பொன் இருளன் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஊறல்களையும் போலீசார் அழித்தனர்.

    தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா, அதிநவீன போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் கள்ளச்சாராய விற்பனையிலும் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கலையரசன் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை அர்ஜூனன் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு.
    • மனுதாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உயிரிழந்த தனது மகனுக்கு இழப்பீடு வழங்க கோரி தந்தை தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

    திருச்சி மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக கலையரசன் என்பவர் பணிபுரிந்து வந்தார். பணியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் கடந்தாண்டு உயிரிழந்தார்.

    கலையரசன் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை அர்ஜூனன் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு மீதான விசாரணையின்போது மனுதாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், "சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்போது, அப்பாவி மனுதாரருக்கு மகன் இறப்புக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது" என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

    • கணவர்களை வீட்டில் உங்கள் கண்முன்னே மது அருந்த சொல்லுங்கள்.
    • என்னுடைய இந்த யோசனை நடைமுறை சாத்தியமானது

    மத்தியபிரதேச சமூகநீதி அமைச்சர் நாராயண் சிங் குஷ்வா போபாலில் நடந்த போதை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், உங்கள் கணவர்களும் மகன்களும் மது குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், அவர்களை வெளியே மது அருந்தவிடாமல் வீட்டில் உங்கள் கண்முன்னே மது அருந்த சொல்லுங்கள். அம்மா, மனைவி, பிள்ளைகள் முன்பு அவர்கள் மது அருந்தினால் அவர்களாகவே வெட்கப்பட்டு மது குடிப்பதை படிப்படியாக குறைத்து விடுவார்கள்.

    மேலும், உங்களை பார்த்து நமது பிள்ளைகளும் எதிர்காலத்தில் மது அருந்த ஆரம்பிப்பார்கள் என்று உங்கள் கணவர்களிடம் சொல்லுங்கள். பின்னர் அவர்கள் தானாகவே மது அருந்துவதை நிறுத்தி விடுவார்கள். என்னுடைய இந்த யோசனை நடைமுறை சாத்தியமானது" என்று அவர் தெரிவித்தார்.

    • மது மற்றும் கஞ்சாவினால் மரணிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான்.
    • 2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.

    உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு வருடமும் 32 லட்சம் மக்கள் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மது அருந்துவதால் மட்டும் உலக முழுவதும் ஒவ்வொரு வருடமும் 26 லட்சம் மக்கள் மரணிக்கின்றனர்.

    போதைப் பொருட்களால் உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 6 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.

    மது மற்றும் போதைப் பொருட்களால் மரணிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான். மது அருந்துவதால் 20 லட்சம் ஆண்களும் கஞ்சாவினால் 4 லட்சம் ஆண்களும் ஒவ்வொரு வருடமும் உயிரிழக்கின்றனர்.

    மக்கள் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் அதிகமானோர் மதுவினால் உயிரிழக்கின்றனர். மக்கள் அதிக வருமானம் பெறும் நாடுகளில் குறைவான அளவிலேயே மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளது.

    2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.

    • புதுச்சேரியில் இருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
    • தமிழக போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    அதிக போதைக்காக சாராயத்தில் கலக்க புதுச்சேரியில் இருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதன் தொடர்ச்சியாக தமிழக போலீசார் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக மெத்தனால் சப்ளை செய்யப்பட்டாக கூறபடும் புதுச்சேரி மாநில எல்லை யான மடுகரை உள்ளிட்ட இடங்களில் தமிழக போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் முறையாக அனுமதி பெறாமல் புதுச்சேரியில் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே தமிழக போலீசார் சோதனை குறித்து தகவல் அறிந்து புதுச்சேரி போலீசார் மடுகரைக்கு விரைந்தனர். இந்த சோதனைக்கு புதுச்சேரி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் ஏற்கனவே சோதனை நடத்திவிட்டோம். மெத்தனால் எங்கும் பதுங்கி வைக்கப்படவில்லை எனக்கூறி தமிழக போலீ சாரை திருப்பி அனுப்பினர்.

    இது தொடர்பாக புதுச் சேரி போலீசார் தரப்பில் கூறுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர் வீடு புதுச்சேரி மாநில எல்லையான மடுகரை பகுதியில் உள்ளது. அங்கு சோதனை செய்யவும், விசாரணைக்காகவும் தமிழக போலீசார் வந்தனர்.

    அப்போது அவர்கள் வந்த வாகனத்தில் சாராயத்தில் போதைக்காக பயன்படுத்தும் மெத்தனால் கேன் இருந்தது. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    இதற்கிடையே புதுச்சேரி எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதேசின் உறவினர் வீட்டை கண்காணிக்கவும் போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • நாகர்கோவில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
    • சுவரொட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகர்கோவில்:

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இன்னும் பலர், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்துக்கு தி.மு.க. அரசின் மெத்தன போக்கே காரணம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (24-ந் தேதி) போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் நாளை நடைபெறும் போராட்டத்திற்காக நாகர்கோவில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை அறிந்த போலீசார் தடுத்தனர்.

    மேலும் சுவரொட்டி ஒட்டிய 2 பேரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதுடன் அவர்கள் வைத்திருந்த சுவரொட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

    இது பற்றி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன், கவுன்சிலர் அக்சயா கண்ணன், மாநில நிர்வாகிகள் ராஜன், சந்துரு, ராணி பகுதி செயலாளர்கள் முருகேஸ்வரன், ஜெய கோபால், அணி செயலாளர்கள் ரபீக், ராஜாராம் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட சுவரொட்டிகளை ஒப்படைக்க வேண்டும். பிடிபட்ட நபர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகையில் ஈடுபட்ட வர்களை போலீசார் சமரசம் செய்தனர். தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சுவரொட்டிகள் ஓட்டியதாக பிடித்து வந்த 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில் நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க.வினர் அறிவித்துள்ளனர்.

    • அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
    • பலர் கவலை கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.

    சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.

    கள்ள சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சேர்ந்த மதன் (46) என்பவர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் பலர் கவலை கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு கண் பார்வை பறிபோனது.
    • ஆய்வகங்களில் எத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

    திண்டுக்கல்:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராய விற்பனை, சட்ட விரோத மது விற்பனை குறித்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு கண் பார்வை பறிபோனது. இதற்கு காரணம் போதைக்காக பயன்படுத்தப்படும் மெத்தனால், எத்தனால் வேதிப்பொருட்கள் எனத் தெரிய வந்துள்ளது. எனவே இதனை கண்காணிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஆஸ்பத்திரி, கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களில் எத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. திண்டுக்கல் நகர் பகுதியில் செயல்படும் ஆஸ்பத்திரிகளில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

    தனியார் ஆஸ்பத்திரிகள், கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களில் அளவுக்கு அதிகமாக எத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், ஆஸ்பத்திரிகளில் உள்ள ஆயவகங்களில் சோதனை நடத்த உள்ளதாக மது விலக்கு போலீசார் தெரிவித்தனர்.

    நகர் முழுவதும் நடைபெற்ற அதிரடி சோதனையில் கள்ளச்சாராயம் எங்கும் விற்பனை செய்யப்படவில்லை. ஆனால் சட்ட விரோதமாக மது விற்பனைக்கு பதுக்கிய 345 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கள்ளக்குறிச்சியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
    • கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜனுக்கு, சின்னதுரை சாராயத்தை விற்பனை செய்துள்ளார்.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

    100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில், சாராயம் விற்பனை செய்த சின்னதுரை என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சாராய வியாபாரி சின்ன துரையை கள்ளக்குறிச்சியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

    முன்னதாக, கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜனுக்கு, சின்னதுரை சாராயத்தை விற்பனை செய்துள்ளார்.

    ×