என் மலர்
நீங்கள் தேடியது "Liquor"
- புதுவையில் இருந்து மதுராந்தகத்திற்கு மது பாட்டில்கள் கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
- புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு மது பாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக உருளை யன் பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புதுச்சேரி:
புதுவையில் இருந்து மதுராந்தகத்திற்கு மது பாட்டில்கள் கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு மது பாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக உருளை யன் பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து உருளையன் பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் பஸ் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.
அப்போது ஒரு பெண் சாக்கு மூட்டையுடன் நின்று கெரண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனை ெதாடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப் பெண் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்த போது அதில் 200 மது பாட்டில்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்பெண் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் சத்யா (40), செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
- மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
- தீவிர சோதனையில் 11 பேர் சட்டவிரோத மது விற்பனை செய்ததில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 108 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோ தமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி மாவட்டத்தில் மலையம்பாளையம், பவானிசாகர், வெள்ளோடு, கொடுமுடி, பங்களாபுதூர், பெருந்துறை , சிவகிரி , சென்னி மலை காவல் நிலைய எல்லைகளில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 11 பேர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 108 மது பாட்டி ல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போலீசார் வெய்க்காலிபட்டி பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- 15 மது பாட்டில்கள், ரூ.5,100 பணத்தை பறிமுதல் செய்தனர்.
நெல்லை:
கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் நேற்று வெய்க்காலிபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் வெய்க்காலிபட்டியை சேர்ந்த ராஜேஷ்(வயது 29), அருன் ஜீசஸ் என்ற விஜித், டி.ராமநாதபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி(42) என்பதும், 3 பேரும் அங்குள்ள பாரில் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மது பாட்டில்கள், ரூ.5,100 பணத்தை பறிமுதல் செய்தனர்.
- மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- மதுபாட்டில் மற்றும் பணம் பறிமுதல்
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ், ஏட்டு தங்கராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை திசையன்விளை பைபாஸ் சாலை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அரசு மதுபான கடையில் மதுபாட்டில்களை வாங்கி அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த தோப்புவிளையை சேர்ந்த ஜோசப் எழிலரசன் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து மதுபாட்டில்களையும், மதுவிற்பனை செய்து வைத்து இருந்த ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் நாள் கொண்டாட்டத்தில், அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
புதிய கலால் கொள்கையின்படி, பாரம்பரிய வழியில் இலுப்பை பூவில் இருந்து தயாரிக்கப்படும் சாராயம் இனி சட்டவிரோதம் ஆகாது. இது 'பாரம்பரிய மதுபானம்' என்ற பெயரில் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும். இலுப்பை பூ பயன்படுத்துவதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் ஏற்படுத்தி தரும்.

பாஜக தலைமையிலான மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் பாரம்பரிய மதுபான விற்பனை முயற்சியை காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. இது பாஜகவின் தார்மீக வீழ்ச்சி என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா கூறி உள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை கள்ளழகர் கோவில் மற்றும் கோவிலைச் சேர்ந்த மலைப்பகுதியில் மது அருந்த தடை விதித்து உத்தரவிட்டனர். கோவில் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமாக எத்தனை மண்டகப்படிகள் உள்ளன? எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? அவற்றை நிர்வகிப்பது யார்? எவ்வளவு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன? ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து பிப்ரவரி 26-ம்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையும் பிப்ரவரி 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #Kallalagartemple #MaduraiHC
உத்தரபிரதேச மாநிலம் பெரேய்லி மாவட்டம் மல்காமாவில் கண்டோண்மென்ட் போலீஸ் நிலையம் உள்ளது.
அந்த பகுதியில் கள்ளச்சாராய நடமாட்டம் அதிகம் உண்டு. போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்வது வழக்கமாக இருந்தது.
இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை போலீஸ் நிலையத்தில் பிளாஸ்டிக் கேன்களில் வைத்திருந்தனர்.
இது சம்பந்தமான வழக்குகளுக்கு சாட்சியாக தேவைப்படும் என்பதால் அவற்றை போலீஸ் நிலையத்திலேயே வைத்திருந்தார்கள்.
அதுபற்றி போலீஸ் நிலைய பதிவேட்டிலும் விவரங்களை பதிவு செய்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில் அந்த போலீஸ் நிலையத்துக்கு தலைமை குமாஸ்தாவாக நரேஷ்பால் என்பவர் புதிதாக நியமிக்கப்பட்டார்.
அவர் போலீஸ் நிலையத்தில் உள்ள பொருட்கள் இருப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டார். பதிவேட்டில் 1000 லிட்டர் சாராயம் இருப்பதாக குறிப்பு இருந்தது. எனவே, சாராயம் முழுமையாக இருக்கிறதா? என்று அவர் ஆய்வு செய்தார். ஆனால், சாராய கேன்கள் அனைத்தும் காலியாக இருந்தன. சில கேன்களில் அடியில் ஓட்டைகள் காணப்பட்டன.
அந்த போலீஸ் நிலையத்தில் எலிகள் நடமாட்டம் உண்டு. அந்த எலிகள் 1000 லிட்டர் சாராயத்தையும் குடித்து விட்டதாக கூறப்படுகிறது.
உண்மையிலேயே எலிகள் தான் குடித்ததா? அல்லது போலீசாரே அவற்றை குடித்து விட்டு நாடகம் ஆடுகிறார்களா? என்று தெரியவில்லை.
இது சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநந்தன்சிங் உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் நிலைய பகுதியில் நடமாடிய அனைத்து எலிகளையும் பிடித்து விட்டோம். இனி, எலிகள் உள்ளே வராது என்றும் சூப்பிரண்டு கூறினார். #Rats
சியர்ஸ்..... இந்த சப்தம் எத்தனை முறை ஒரு நாளைக்கு கேட்கிறதோ அத்தனை நெருக்கத்துக்கு எமன் வந்துகொண்டிருக்கிறான். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 18 வயது முதல் 85 வயது வரை உள்ள 4 லட்சம் மக்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வெளிவந்த உண்மை இது.
ஆம். வெளிநாடுகளில் பொதுவாகவே சாதரணமாக தண்ணீர் குடிப்பதுபோல ஒரு கிளாஸ் மதுவை ஆயாசமாக குடித்து செல்வதை நாம் படங்களில் பார்த்து இருக்கிறோம். அதை நம்ம ஊரிலும் பின்பற்றவும் துவங்கிவிட்டோம். சில ஆய்வு அறிக்கைகளின்படி, தினமும் ஒரு கிளாஸ் மது அருந்துவது இதயநோயை தடுக்கும்.

இந்த ஆய்வின் மூலம், தினமும் ஒரு கிளாஸ் மது என்பது இதய நோயை தடுப்பது போலவே, புற்றுநோய்க்கு வழிவகை செய்கிறதாம். இதயநோய் தவிர அனைத்து நோய்களுக்கும் இந்த ரெகுலர் மதுப்பழக்கம் வழிவகை செய்யும். தினமும் ஒரு கிளாஸ் மது என்ற விகிதத்துக்கே வாழ்நாளில் 20% இழக்கிறோம் என்றால் உச்சிக்கு ஏறும்வரை குடிக்கும் குடிமகன்களுக்கு?
ஒருவேளை உங்கள் கைகளில் இப்போது மது இருந்தால் குடிக்காதீர்கள்.. அது உங்கள் வாழ்நாளை கரைக்கும் திறன்கொண்ட திரவம். #LiquorDrinkingCauseDeath
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் அல்லிவிளாகம் பாலக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் 83 அட்டை பெட்டிகளில் 3 ஆயிரத்து 984 மதுபாட்டில்களை புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கார் டிரைவர் நன்னிலம் தாலுகா கூத்தனூரை சேர்ந்த வெற்றிவேந்தன் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.
இதைப்போல மயிலாடுதுறை அருகே கருவி முக்கூட்டில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,600 சாராய பாக்கெட்டுகளை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியை சேர்ந்த சண்முகவேல் (37) என்பவரை கைது செய்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வர பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.