என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீர்"

    • ஏற்றுமதி, இறக்குமதி கலால் வரியும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
    • புதுவையில் கடந்த ஆண்டு கலால்துறை ரூ.1500 கோடி வருவாய் கிடைத்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் பிராந்தி, பீர், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகள் 558 உள்ளன.

    மது கடைகள் ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். உரிமம் கட்டணத்தை கடந்த 2015-க்கு பிறகு 10 ஆண்டுகளாக அரசு உயர்த்தவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உரிமம் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால், அரசாணை வெளியாகவில்லை. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி உரிமம் கட்டணம் உயர்வு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி ஆண்டுக்கு 20 லட்சம் லிட்டர் மது உற்பத்தி செய்யும் ஐ.எம்.எப்.எல். மதுபான தொழிற்சாலைகளுக்கான உரிமக் கட்டணம் ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் 1 லட்சம் லிட்டர் மது உற்பத்திக்கும் ரூ.2 லட்சம் உரிமம் தொகை செலுத்த வேண்டும்.

    எப்.எல். 1 என்ற மொத்த மதுபான விற்பனை கடைகளுக்கான உரிமம் கட்டணம் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாகவும், எப்.எல். 2 சில்லரை மதுபான கடைகளுக்கான உரிமம் கட்டணம் ரூ.19 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் அனைத்து வகை உரிமம் கட்டணங்களும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது

    இதுபோல் ஏற்றுமதி, இறக்குமதி கலால் வரியும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி கலால் வரியும் 2018-க்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. பீர் ஒரு லிட்டருக்கு ரூ. 3.50 இருந்து ரூ.5 ஆகவும், மதுபானங்கள் லிட்டருக்கு ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆகவும் உயர்ந்துள்ளது. ஏற்றுமதி வரி 2001-ம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. புதுவையிலிருந்து ஏற்றுமதியாகும் பீர்களுக்கு ஒரு லிட்டருக்கு 75 பைசாவில் இருந்து ரூ. 5 ஆகவும், மதுபானங்களுக்கு ரூ. 1-ல் இருந்து ரூ.7 ஆகவும் உயர்ந்துள்ளது.

    புத்தாண்டு காலங்களில் மதுபானங்களை விற்க சிறப்பு அனுமதி பெற கட்டணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவை அரசிதழிலும் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.

    புதுவையில் கடந்த ஆண்டு கலால்துறை ரூ.1500 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பு ஆண்டு ரூ.1850 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு உரிமக்கட்டணம், ஏற்றுமதி, இறக்குமதி வரி உயர்வு மூலம் கூடுதலாக ரூ.100 கோடி வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சிம்பா பீர் பல்வேறு வகைகளுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
    • வெண்கல பதக்க விருது பெற்ற சிம்பா ஸ்டவுட் சற்று கசப்பான சுவையுடன் தயாரிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    மதுபான உற்பத்தியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் உள்ளிட்ட குழு உலகில் சிறந்த பீர் வகைகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. முதலிடம் பிடிக்கும் பீர் வகைகளுக்கு தங்க பதக்கமும், 2- வது வகைக்கு வெள்ளி பதக்கமும், 3-வது இடம் பிடிக்கும் பீருக்கு வெண்கல பதக்கம் போன்ற விருதுகள் வழங்கப்படுகிறது.

    அதன் அடிப்படையில் 2025-ம் ஆண்டில் உலக பீர் வகைகளில் இந்தியாவில் தயாரிக்கப்படும் சிம்பா பீருக்கு சிறந்த சுவைக்கான விருது கிடைத்துள்ளது.



    சிம்பா பீர் பல்வேறு வகைகளுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இதன் தயாரிப்பான சிம்பா விட்டிற்கு வெள்ளி பதக்க விருதும், சிம்பா ஸ்டவுட் பீர் வகை வெண்கல பதக்க விருதும் பெற்றுள்ளது.

    இதில் சிம்பா விட் பெல்ஜியம் விட் பாணியில் தயாரிக்கப்படுகிறது. மிக குறைந்த கசப்பு தன்மையுடன் ஆரஞ்சு தோல், கொத்தமல்லி, கோதுமை மால்ட் உள்ளிட்டவைகள் அடங்கிய பொருட்களும் சிறந்த நறுமணம் மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இந்த பீர் வகைகள் தயாரிக்கப்படுகிறது.

    வெண்கல பதக்க விருது பெற்ற சிம்பா ஸ்டவுட் சற்று கசப்பான சுவையுடன் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் கிடைத்ததன் மூலம் இந்தியாவில் மதுபான துறை வளர்ச்சி அடைந்துள்ளதை காட்டுகிறது. உலக அளவிலும் இந்திய தயாரிப்புக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.

    • ஒரு தொண்டு நிறுவனம் தவீசக்கை மருத்துவமனையில் சேர்க்க முயன்றது.
    • போலீசார் அவரது அறையில் 100 பீர் பாட்டில்களைக் கண்டுபிடித்தனர்.

    மனைவி விவாகரத்து செய்ததால் மிகவும் வருத்தமடைந்த ஒருவர், ஒரு மாதமாக எதையும் சாப்பிடாமல், பீர் மட்டுமே குடித்து உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் தாய்லாந்தில் நடந்தது.

    44 வயதான தவீசக் தனது மனைவியால் விவாகரத்து செய்யப்பட்டார். அவர்களுக்கு பதினாறு வயது மகன் இருந்தான். மகனை தவீசக்கிடம் விட்டுவிட்டு அப்பெண் வெளியேறினார்.

    மனைவி தன்னை விட்டுச் சென்றதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தவீசக், சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். நாள் முழுவதும் பீர் குடித்துக்கொண்டிருந்தார்.

    இதனால் அவரது உறுப்புகள் செயலிழந்து, அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஒரு தொண்டு நிறுவனம் தவீசக்கை மருத்துவமனையில் சேர்க்க முயன்றது.

    இருப்பினும், தொண்டு நிறுவனங்கள் அவரது வீட்டை அடைவதற்குள் தவீசக் இறந்துவிட்டார். போலீசார் அவரது அறையில் 100 பீர் பாட்டில்களைக் கண்டுபிடித்தனர்.

    அதிகப்படியான மது அருந்தியதால் அவர் இறந்ததாக போலீசார் முதற்கட்ட தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

    • கடந்த மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே பீர் வகைகளின் விற்பனை சற்று அதிகரித்து இருந்தது.
    • கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கியதுமே மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் மற்ற மதுபான வகைகளை வாங்கி பருகுவதை குறைத்துவிட்டு 'பீர்' வகைகளை அதிக அளவில் வாங்கி குடிக்கின்றனர். அதிலும் குளிரூட்டப்பட்ட 'பீர்' வகைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் 'பீர்' விற்பனை பலமடங்கு அதிகரித்துள்ளது.

    அதன்படி கடந்த மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே பீர் வகைகளின் விற்பனை சற்று அதிகரித்து இருந்தது. மார்ச் மாத இறுதியில் 'பீர்' விற்பனை 40 சதவீதம் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் இளநீர், தர்ப்பூசணி, நுங்கு மற்றும் குளிர்பானங்களை தேடிச்சென்றனர். ஆனால் மதுப்பிரியர்களோ 'பீர்' வகைகளை அதிக அளவில் வாங்கி குடிக்க தொடங்கியுள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் 180 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 3 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடக்கின்றது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் உள்ளதால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

    வழக்கமான விற்பனையில் இருந்து பீர் வகைகள் விற்பனை 60 சதவீதம் கூடியுள்ளதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    • கல்லீரல் பாதிக்கப்பட்டு செயல் இழந்து விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் செய்ய முடியும்.
    • உடம்பு வீங்குவதோடு, ரத்த வாந்தி ஏற்படும். இது ஒரு வகையான பாதிப்பாகும்.

    தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து உள்ளது.

    மற்ற மதுவகைகளை விட தற்போது குளிர்ந்த பீருக்கு தான் தேவை அதிகமாக உள்ளது. பார்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து குளிர்ந்த பீர்களை வாங்கி குடிக்கிறார்கள்.

    வெயில் தாக்கத்திற்கு பீர் இதமாக இருப்பதாக கருதி பெரும்பாலான மதுபிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். கோடை காலத்தில் எப்போதுமே பீர் விற்பனை அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது விற்பனை சூடுபிடித்து உள்ளது.

    பீர் குடிப்பதால் உடலுக்கு நல்லதா? பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது பற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை பேராசிரியர் டாக்டர் மாரிமுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    மது குடிப்பது உடலுக்கு தீங்கானதாகும். இதனால் கல்லீரல் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. தொடர்ந்து மது பழக்கத்திற்கு ஆளாகி குடிப்பதால் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும்.

    கல்லீரல் பாதிக்கப்பட்டு செயல் இழந்து விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் செய்ய முடியும். உடம்பு வீங்குவதோடு, ரத்த வாந்தி ஏற்படும். இது ஒரு வகையான பாதிப்பாகும்.

    மற்றொரு பாதிப்பு வயிற்றுப் பகுதியாகும். மது அருந்துவதால் வயிறு புண்ணாகி அதில் இருந்து ரத்தம் வரக்கூடும். 3-வதாக உடல் உறுப்பான கணையம் பாதிப்படையும். கணையம் பாதிக்கும் போது உடலில் ரத்த அழுத்தம் ஏற்பட்டு பல்ஸ் குறையும். இதனால் நுரையீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளும் பாதிக்கும்.

    4-வது வகை மதுவுக்கு அடிமையாகுதல் ஆகும். தொடர்ந்து மது பழக்கத்திற்கு அடிமையாகி அவர்களால் ஒரு நாள் கூட குடிக்காமல் இருக்க முடியாது. இது போன்ற மது போதைக்கு அடிமையானவர்கள் குடிக்காமல் விட்டு விட்டால் ஒரு வலிப்பு வரும்.

    திடீரென மதுபழக்கத்தை நிறுத்தும் போது இந்த பாதிப்பு ஏற்படும். இது மூளையையும் பாதிக்கும்.

    5-வது வகையான பாதிப்பு தொடர்ந்து மது குடிப்பதால் கை, கால், நரம்புகள் பாதிக்கும். கை, கால் பகுதி உணர்ச்சியற்றதாகி விடும். பாதம் எரியும் அல்லது மறத்து விடும். இது போன்ற பாதிப்புகள் குடியை நிறுத்த முடியாமல் தினமும் குடிப்பவர்களுக்கு ஏற்படும்.

    அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 10 முதல் 20 பேர் வரை மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் வருகிறார்கள். இளம் வயதில் மது பழக்கத்திற்கு ஆளாகி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை தற்போது அதிகரித்து உள்ளது. பெண்கள் கூட சிலர் மதுவுக்கு அடிமையாகி சிகிச்சை பெறுகிறார்கள்.

    கோடை காலத்தில் பீர் அதிகளவில் குடிப்பதால் உடலுக்கு நல்லது எதுவும் இல்லை. அவை குளிர்ச்சியும் கிடையாது. பீர் குடிப்பதும் உடல் நலத்திற்கு பாதிப்பு தான். பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகளை விட பீரில் ஆல்கஹால் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.

    பீர் தினமும் குடிப்பது பாதிப்பை உண்டாக்கும். வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் இருதயத்திற்கு நல்லது.

    குறைவாக குடிக்கும் போது ரத்தக் குழாய் விரிவடையும். குளிர்ந்த பீர் குடிப்பதனாலும் எந்த நன்மையும் இல்லை. கோடை காலத்திற்கு என்றோ குளிர்காலத்திற்கு என்றோ பீரை வகைப்படுத்தக் கூடாது.

    எல்லா மதுபானங்களும் உடலுக்கு தீமைதான். ஆனால் பீர் வகைகள் அடிக்கடி எடுக்காமல் குறைவாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுவிலக்கு போலீசாரால் பல்வேறு இடங்களில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைக்கப்படுகின்றன.
    • நகர்வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு முடிந்த நிலையில் இருந்த கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் இன்று கொட்டி அளிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு அனுமதி இன்றி மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள், வெளியிடங்களில் மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் ஆகியோரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைக்கப்படுகின்றன.

    இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மற்றும் வாகனங்கள் மூலம் கடத்தி வரப்படும் மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டிருந்தது. வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் செலுத்திய பிறகு கைப்பற்றப்பட்ட மதுபானங்கள்கொட்டி அழிக்கப்படும்.

    அதன்படி நகர்வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு முடிந்த நிலையில் இருந்த கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் இன்று கொட்டி அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைைமயில் போலீசார் பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களை தரையில் குழி தோண்டி அதில் ஊற்றி அழித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.

    • சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி வருகிறது.
    • விழா காலம் மற்றும் பண்டிகை நேரங்களில் இதன் விற்பனை 20 முதல் 40 சதவீதம் அதிகரிக்கும்.

    சேலம்:

    தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தினசரி ரூ.40 கோடி மதிப்பில் பீர் மற்றும் பிராந்தி வகைகள் விற்பனையாகி வருகிறது.

    வெயில் தாக்கம் அதிகரிப்பு

    இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கடந்த சில நாட்களாக பிராந்தி வகை–களை விட, பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி வருகிறது. விழா காலம் மற்றும் பண்டிகை நேரங்களில் இதன் விற்பனை 20 முதல் 40 சதவீதம் அதிகரிக்கும்.

    வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பீர் வகைகளை விட, பிராந்தி வகைகளின் விற்பனை அதிகரிக்கும். அதே நேரத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பிராந்தி வகைகளை விட பீர் வகைகளின் விற்பனை அதிகமாக இருக்கும்.

    விற்பனை அதிகரிப்பு

    அதன்படி தற்போது ேகாடை காலத்தை முன்னிட்டு வெயில் அதிகரித்து இருப்பதால், மது பிரியர்கள், பீர் வகைகளுக்கு மாறி விட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதிலும் குறிப்பாக மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பீர் விற்பனை அதிகமாக உள்ளது என டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

    • பாட்டாளி மக்கள் கட்சியின் தாரமங்கலம் நகர செயலாளர் சக்தி உள்ளிட்ட 3 பேர் தாபாவிற்கு சென்று மது அருந்த வேண்டும் என கேட்டுள்ளனர்.
    • சந்திரசேகர் ஓமலூர் அரசு மருத்துவமனை சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தாரமங்கலம் அருகே துட்டம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் கோனேரி வளவு என்ற பகுதியில் தாபா ஹோட்டல் நடத்தி வருகிறார், மேலும் ஆட்டோ கன்சல்டிங் தொழிலும் செய்து வருகிறார்.

    இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தாரமங்கலம் நகர செயலாளர் சக்தி உள்ளிட்ட 3 பேர் தாபாவிற்கு சென்று மது அருந்த வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு மது அருந்த அனுமதி இல்லை என சந்திரசேகரன் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக்தி உள்ளிட்ட 3 பேரும் போன் செய்து உறவினர்களை வரவழைத்தனர். பின்னர் சந்திரசேகரை பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் கூச்சல் போட்டார். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதையடுத்து சந்திரசேகர் ஓமலூர் அரசு மருத்துவ மனை சிகிச்சையாக அனு மதிக்கப்பட்டார். ஓட்டல் உரிமையாளரை கும்பல் தாக்கும் சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சக்தி, அவரது சகோதரர்கள் அருள் மற்றும் அஜித் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே 3 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி ஓட்டல் உரிமையாளர் சந்திரசேகரனின் உறவினர்கள் ஓமலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து டி.எஸ்.பி. சங்கீதா, தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள 3 பேரையும் தீவிர மாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஓமலூர், தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.
    • அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியார் மதுபான பார் உள்ளது.

    இங்கு மதுபிரியர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் 2 பீர் வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 2 பேர் பீர் குடிக்க சென்றனர்.

    அவர்கள் பணம் கொடுத்து 2 பீர் பாட்டில்கள் வாங்கினர். அவர்களுக்கு சலுகையாக மேலும் ஒரு பீர் பாட்டில் வழங்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் 2 பீர் பாட்டில்களை திறந்து குடித்தனர். அதன் பின் சலுகையில் வாங்கிய 3-வது பீரை குடிப்பதற்காக பாட்டிலை கையில் எடுத்தனர். அப்போது பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர்கள் சரியான பதில் தெரிவிக்காமல் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். பீர் பாட்டி லில் காகிதம் கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு வீரர்களிடம் பீர் குடிக்கலாம் என பேசி கொண்டிருந்தோம்.
    • எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு தொடர் முடிந்த பிறகு பீர் குடிக்காமல் வந்தது இதுவே முதல் முறை.

    சமீபத்தில் நடந்த முடிந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.

    இந்நிலையில் இந்த முறைதான் ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு பீர் அடிக்காம வந்திருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு வீரர்கள் பீர் குடிக்கலாம் என பேசி கொண்டிருந்தோம். அப்போது பென் ஸ்டோக்ஸ் தங்கியிருந்த அறைக்கு சென்று அறையின் கதவை தட்டினோம். அவர் சிறிது நேரம் கழித்தே கதவை திறந்தார். வந்த வேகத்தில் 2 நிமிடம் காத்திருங்கள் என்று கூறி சென்றார். ஒரு மணி நேரம் ஆகியும் வராத காரணத்தால் பீர் அடிக்க வேண்டாம் என்று கூறி நாங்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.

    எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு தொடர் முடிந்த பிறகு பீர் குடிக்காமல் வந்தது இதுவே முதல் முறை. இது அசிங்கமாக இருந்தது. ஆனால் சில மணி நேரம் கழித்து வந்த பென் ஸ்டோக்ஸ், ஒரு வேலையாக சென்றதால் தாமதமாகி விட்டது. மன்னித்து விடுங்கள். மது அருந்துவது என்று முடிவு செய்து விட்டோம். அதனால் அதை கைவிட வேண்டாம். கண்டிப்பாக மது அருந்து விட்டு செல்லலாம் என அவர் கூறினார்.

    அவர் கூறும் அந்த வேலை நான் எனது அறைக்கு சென்று இருந்தேன். மது அருந்தாத மற்ற வீரர்கள் அவருடன் சேர்ந்து மது அருந்தி மகிழ்ந்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பீர் விற்பனை சரிந்துள்ளது.
    • விஸ்கி, ரம், பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் வழக்கத்தைவிட சற்று கூடியுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் பீர் விற்பனை அமோகமாக இருந்தது. இந்த வருடம் வெயிலின் தாக்கம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் கடுமையாக இருந்தது.

    இதனால் வழக்கத்தைவிட டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்தது.

    கடந்த ஆண்டைவிட இந்த வருடம் பீர் மது வகைகள் பெட்டி பெட்டியாக விற்பனையானது. தென்மேற்கு பருவமழை காலத்திலும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மதுக்கடைகளில் பீர் வகைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. ஜில் பீர் பானங்களுக்கு தேவை அதிகரித்தது.

    இந்த நிலையில் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. கால சூழ்நிலை மாற்றத்தால் மது விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பீர் விற்பனை சரிந்துள்ளது.

    இந்த மாதத்தில் திடீரென பீர் விற்பனை குறைந்ததற்கு காரணம் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளதே காரணம்.

    இதனால் பீர் பிரியர்கள் ஹாட் மதுபானங்களுக்கு மாறியுள்ளனர். விஸ்கி, ரம், பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் வழக்கத்தைவிட சற்று கூடியுள்ளது.

    இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறும் போது, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் பீர் விற்பனை சரிந்தது.

    பீர் குடிப்பவர்கள், பிராந்தி, ரம், விஸ்கிக்கு மாறியுள்ளனர். மேலும் தற்போது புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் சிலர் விரதம் இருப்பார்கள். இதனால் வரும் நாட்களில் மது விற்பனை குறைய வாய்ப்புள்ளது.

    கார்த்திகை மாதம் வரை கோவில்களுக்கு செல்வதற்காக மாலை போடுவார்கள். அதனால் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் மது விற்பனை சற்று குறையக் கூடும் என்றனர்.

    • பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில் வருகிறது.
    • சிறிய வகை ‘டின்’களிலும் பிரிட்டிஷ் எம்பயர் பீர் கிடைக்கும்.

    சென்னை:

    டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பல்வேறு நிறுவனங்களின் பிராந்தி, விஸ்கி, ஒயின், ரம் மற்றும் பீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல கம்பெனிகளின் பீர் தயாரிப்புகள் புழக்கத்தில் உள்ளன.

    தற்போது புதிதாக பீர் மதுபானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முதலாக பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர் டாஸ்மாக் கடைகளில் விரைவில் விற்பனைக்கு வருகிறது. பிரிட்டிஷ் எம்பயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் இந்த பீர் 650 மில்லி லிட்டர், 325 மில்லி லிட்டர் அளவுகளில் வருகிறது.

    சூப்பர் ஸ்ட்ராங் பீர் என்ற புதிய தயாரிப்பின் பீர் விற்பனை பீர் பிரியர்களிடம் அதிக வரவேற்பை பெறும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கருதுகிறது.

    650 மி.லி முழு பாட்டில் விலை ரூ.200-ம் 325 மி.லி. அரை பாட்டில் விலை ரூ.100-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறிய வகை 'டின்'களிலும் பிரிட்டிஷ் எம்பயர் பீர் கிடைக்கும். இந்த பீர் சில நாட்களில் மதுக் கடைகளில் விற் பனைக்கு கிடைக்கும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    ×