என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டீவ் ஸ்மித்"

    • நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு 425 ரன்கள் வெற்றி இலக்காக விக்டோரியா அணி நிர்ணயித்தது.
    • விக்டோரியா அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஷெஃபீல்ட் சீல்ட் (Sheffield Shield 2025-26) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கடந்த 10-ந் தேதி தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற விக்டோரியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி 382 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் 128 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய விக்டோரியா அணி 171/9 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனால் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு 425 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் விளையாடிய சவுத் வேல்ஸ் அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் விக்டோரியா அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக வேல்ஸ் அணியின் 2-வது இன்னிங்சில் 117 ரன்கள் எடுத்திருந்த போது நாதன் லயன் பந்து வீச்சை பேட்டரி பெர்கஸ் ஓ நீல் கட் ஷாட் அடிக்க முயற்சி செய்வார். அது அவரது பேட்டின் நுணியில் பட்டு சிலிப் திசையில் சென்றது. வேகமாகவும் சற்று விலகியும் வந்த பந்தை ஸ்மித் அசால்ட்டாக பிடித்து அசத்தினார். அவர் சிலிப் திசையில் பல அற்புதமான கேட்ச்கள் பிடித்தாலும் இந்த கேட்ச் மிரட்டலாக இருந்தது.

    அவர் கேட்ச் பிடித்ததை பார்த்த பேட்டர் ஷாக் ஆகி கிழே விழுவதுபோல ரியாக்ஷன் கொடுப்பார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது
    • இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

    ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் அணியில் இடம் பெறாததால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனமாக நியமிக்கப்ட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-

    ஸ்மித் (C), ஸ்டார்க், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், அபோட், போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், கவாஜா, லாபுசாக்னே, நாதன் லியோன், ஜேக் வெதரால்ட், வெப்ஸ்டர்

    • WTC இறுதிப் போட்டியின் போது ஸ்மித் காயம் அடைந்தார்/ Smith was injured during the WTC final.
    • காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஸ்மித் விளையாடவில்லை.

    ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 3-ந் தேதி தொடங்குகிறது. கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் விலகியிருந்தார்.

    இந்நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    WTC இறுதிப்போட்டியின் போது ஸ்மித் காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
    • இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் அடித்தார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் அடித்தனர்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள்முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் பவுமா 3 ரன்களுடனும் பெடிங்ஹாம் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சச்சினின் மிக முக்கியமான சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

    ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினை ஸ்டீவ் ஸ்மித் முந்தியுள்ளார்.

    ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சச்சின் 6 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 7 அரைசதங்கள் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

    அதே சமயம் இப்பட்டியலில் 10 அரைசதங்களுடன் யாரும் நெருங்க முடியாத உயரத்தில் விராட் கோலி உள்ளார்.

    • உலகக் கோப்பை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
    • இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடினார்.

    உலகின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக ஜொலித்து வந்தவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அசுர பலத்துடன் திகழ்ந்தார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்று அணிக்கு திரும்பிய பிறகு, டெஸ்ட் போட்டியில் மட்டும் சிறப்பாக விளையாடினார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகப்பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை.

    குறிப்பாக கடந்த ஒருவருடமாக இவரது ஆட்டம் எடுபடவில்லை. இதனால் சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெஞ்ச்-ல் அமர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் தான் நேற்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இந்த போட்டியில் 78 பந்தில் 80 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் ஸ்மித்.

    இந்த ஆட்டம் முடிந்த பிறகு பேசுகையில், கடந்த ஆறு ஆண்டுகளில் தற்போது சிறந்த ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த கோடைக்கால கிரிக்கெட் சிறப்பாக விளையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

    நேற்றைய ஆட்டம் குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ''அனேகமாக இந்த வருடங்களில் சிறந்த ஆட்டமாக இது இருந்திருக்கிறது என உணர்கிறேன். உண்மையிலேயே இந்த ஆட்டத்தில் நான் மிகவும் நல்ல நிலையில் இருந்தேன். சிறந்ததாக உணர்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளில் நான் இதுபோன்று உணரவில்லை.

    நாம் எப்போதும் முழு நிறைவை நோக்கி செல்கிறோம். நான் அதை பெற முதல் ஆட்டத்தில் அடித்த ரன்கள் நெருக்கமாக இருந்தது.'' என்றார்.

    உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மட்டும் களம் இறங்கினார். அதில் நான்கு ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

    • லபுஸ்சேன் அபாரமாக ஆடி இரட்டை சதம் எடுத்தார்.
    • 88-வது டெஸ்டில் விளையாடும் ஸ்டீவ் சுமித்துக்கு 29-வது செஞ்சூரியாகும்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 65 ரன் எடுத்தார். 3-வது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுஸ்சேன் சதம் அடித்தார். அவர் 154 ரன்னும், ஸ்டீவ் சுமித் 59 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. லபுஸ்சேன் அபாரமாக ஆடி இரட்டை சதம் எடுத்தார். அவர் 348 பந்துகளில் 20 பவுண்டரி, 1 சிக்சருடன் 200 ரன்னை தொட்டார். 204 ரன்கள் எடுத்த நிலையில் லபுஸ்சேன் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 402 ஆக இருந்தது.

    இதே போல ஸ்டீவ் சுமித்தும் சதம் அடித்தார். 88-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 29-வது செஞ்சூரியாகும். ஆஸ்திரேலியா அணி தற்போது வரை 141 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 513 ரன்கள் குவித்து ஆடி வருகிறது. ஸ்மித் 165 ரன்களிலும் ஹெட் 50 ரன்னிலும் தொடர்ந்து ஆடி வருகின்றனர்.

    • அஸ்வின் போலவே பந்து வீசக்கூடிய மகேஷ் பித்தியாவை வைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டனர்.
    • நாக்பூர் ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும் என்று நினைக்கிறேன்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற் பந்து வீச்சை எதிர் கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அஸ்வின் சுழலை சமாளிக்க வியூகங்களை வகுத்துள்ளனர். அஸ்வின் போலவே பந்து வீசக்கூடிய மகேஷ் பித்தியாவை வைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சை எதிர் கொள்ள தயார் என்று ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் சுமித் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாங்கள் பல ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடி இருக்கிறோம். அஸ்வின் போன்று மகேஷ் பித்தியா பந்து வீசுகிறார். நாங்கள் அதிகமாக சிந்திக்கவில்லை. அஸ்வின் ஒரு தரமான பந்து வீச்சாளர். ஆனால் அவரது பந்து வீச்சை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்கு வியூகங்கள் எங்களிடம் உள்ளது.

    நாக்பூர் ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடும் என்று நினைக்கிறேன் என்றார்.

    • பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் கால தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளும் மோதும் 3-வது டெஸ்ட் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொரில் கடந்த 2 டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்பட்டு வந்தார். ஆனால், குடும்ப விவகாரம் தொடர்பாக பேட் கம்மின்ஸ் திடீரென ஆஸ்திரேலியா சென்றார். 3-வது டெஸ்ட் தொடங்குவதற்குள் கம்மின்ஸ் இந்தியா திரும்பிவிடுவார் என்று முதலில் தகவல் வெளியானது.

    இந்நிலையில் பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் கால தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 3-வது டெஸ்ட்டில் கம்மின்ஸ் களமிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வரும் 1-ம் தேதி நடைபெறும் 3-வது டெஸ்ட்டில் களமிறங்க உள்ளது.

    • வில்லியம்சனுக்கு மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் பரவியது.
    • வில்லியம்சன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொத்தமாக தொடரில் இருந்தே விலகுவதாக தெரிவிக்கப்பட்டது.

    அகமதாபாத்:

    சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் முக்கியமான வீரர் கேல் வில்லியம்சன் விளையாடினார். குஜராத் அணியின் பவுலிங்கின் போது, ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்சரை பிடிக்க முயன்ற போது, அவரது காலில் காயம் ஏற்பட்டது.

    இதனால் பாதிலேயே அவர் வெளியேறினார். அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார். இந்த நிலையில் வில்லியம்சன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொத்தமாக தொடரில் இருந்தே விலகுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனால் கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே வில்லியம்சனுக்கு மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் பரவியது.

    இந்த நிலையில் குஜராத் அணிக்கு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ஸ்டீவ் ஸ்மித் பதில் அளித்துள்ளார்.

    அதில், நான் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பதிவு செய்யவில்லை. அதனால் மாற்று வீரராக என்னை ஒப்பந்தம் செய்ய வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    பொதுவாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ள வீரர்களையே மாற்று வீரர்களாக அணி நிர்வாகங்களால் ஒப்பந்தம் செய்ய முடியும். அதனால் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்யாத ஸ்டீவ் ஸ்மித் நடப்பு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக மட்டுமே செயல்படுவார். டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் வரிசையிலேயே ஸ்டீவ் ஸ்மித்திற்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
    • முகமது சமி ஓவரில் ஸ்மித் இந்த ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்குகியது.

    தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 0 ரன்னிலும் டேவிட் வார்னர் 43 ரன்னிலும் லாபுசேன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ட்திராவிஸ் ஹெட் - ஸ்மித் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஸ்மித் ரியாக்ஷன் தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. முகமது சமி ஓவரில் இந்த சம்பவம் அரங்கேறியது. அவர் தொடர்ந்து அவுட் ஸ்விங் வீசிய நிலையில் அந்த பந்தை இன் ஸ்விங் செய்தார். அதனை ஸ்மித் பேட்டில் வாங்காமல் விட்டுவிட்டார். அப்போது தான் அவர் அந்த ரியாக்ஷன் கொடுத்தார். ஓ.... இன் ஸ்விங் என கை சைகையில் காட்டினார்.

    இவரது ரியாக்ஷன் அடிக்கடி வைரலாகி வருவதுண்டு அதுபோல இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். 

    • ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 4-வது இடத்தில் உள்ளார்.
    • இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 32 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் விளாசியுள்ளார்.

    ஹெட்டிங்லி:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை படைத்துள்ளார். அவர் இன்று தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். கடந்த வாரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்து அசத்தினார்.

    34 வயதான ஸ்மித், கடந்த 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை மொத்தம் 99 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 9,113 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 239 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 4-வது இடத்தில் உள்ளார். 

    • ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு வீரர்களிடம் பீர் குடிக்கலாம் என பேசி கொண்டிருந்தோம்.
    • எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு தொடர் முடிந்த பிறகு பீர் குடிக்காமல் வந்தது இதுவே முதல் முறை.

    சமீபத்தில் நடந்த முடிந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.

    இந்நிலையில் இந்த முறைதான் ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு பீர் அடிக்காம வந்திருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு வீரர்கள் பீர் குடிக்கலாம் என பேசி கொண்டிருந்தோம். அப்போது பென் ஸ்டோக்ஸ் தங்கியிருந்த அறைக்கு சென்று அறையின் கதவை தட்டினோம். அவர் சிறிது நேரம் கழித்தே கதவை திறந்தார். வந்த வேகத்தில் 2 நிமிடம் காத்திருங்கள் என்று கூறி சென்றார். ஒரு மணி நேரம் ஆகியும் வராத காரணத்தால் பீர் அடிக்க வேண்டாம் என்று கூறி நாங்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.

    எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு தொடர் முடிந்த பிறகு பீர் குடிக்காமல் வந்தது இதுவே முதல் முறை. இது அசிங்கமாக இருந்தது. ஆனால் சில மணி நேரம் கழித்து வந்த பென் ஸ்டோக்ஸ், ஒரு வேலையாக சென்றதால் தாமதமாகி விட்டது. மன்னித்து விடுங்கள். மது அருந்துவது என்று முடிவு செய்து விட்டோம். அதனால் அதை கைவிட வேண்டாம். கண்டிப்பாக மது அருந்து விட்டு செல்லலாம் என அவர் கூறினார்.

    அவர் கூறும் அந்த வேலை நான் எனது அறைக்கு சென்று இருந்தேன். மது அருந்தாத மற்ற வீரர்கள் அவருடன் சேர்ந்து மது அருந்தி மகிழ்ந்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×