என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலிய அணி"

    • ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது
    • இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

    ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்தது.

    இந்நிலையில், முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் அணியில் இடம் பெறாததால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனமாக நியமிக்கப்ட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-

    ஸ்மித் (C), ஸ்டார்க், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், அபோட், போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், கவாஜா, லாபுசாக்னே, நாதன் லியோன், ஜேக் வெதரால்ட், வெப்ஸ்டர்

    • செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 10 வரை பிரிஸ்பேன் மற்றும் மெக்கே ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படும்.
    • இளம் வீரர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு 2026 உலகக் கோப்பைக்கான இறுதி அணி தேர்ந்தெடுக்கப்படும்

    இந்தியாவுக்கு எதிரான வரவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடருக்கான (U19series) அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

    15 பேர் கொண்ட அணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு இளம் வீரர்கள் ஆர்யன் சர்மா மற்றும் யாஷ் தேஷ்முக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகள் நடைபெறும்.

    செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 10 வரை பிரிஸ்பேன் மற்றும் மெக்கே ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படும்.

    இளம் வீரர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு 2026 உலகக் கோப்பைக்கான இறுதி அணி தேர்ந்தெடுக்கப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) தெரிவித்துள்ளது.

    ஆஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்டோர் அணி:

    சைமன் பட்ஜ், அலெக்ஸ் டர்னர், ஸ்டீவ் ஹோகன், வில் மலாக்சுக், யாஷ் தேஷ்முக், டாம் ஹோகன், ஆர்யன் சர்மா, ஜான் ஜேம்ஸ், ஹேடன் ஷில்லர், சார்லஸ் லாச்மண்ட், பென் கார்டன், வில் பைரோம், கேசி பார்டன், அலெக்ஸ் லீ யங், ஜெய்டன் டிராப்பர்.

    • இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
    • ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வேண்டவே வேண்டாம்! போட்டுடைத்த ஜஸ்டின் லாங்கர்.. கே.எல் ராகுல் கொடுத்த அட்வைஸ் இதுதான்

    டி20 உலகக் கோப்பை 2024க்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த பதவிக்கான விண்ணப்பம் வரும் மே 28 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கே.எல். ராகுல், விவிஎஸ். லக்ஷ்மன், ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் அடிபடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக, தான் விரும்பவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக உள்ள ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்த லாங்கர், ஐபிஎல் போட்டிகளின் போது சமீபத்தில் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலுடன் உரையாடினேன். அப்போது பயிற்சியாளர் பதவி குறித்து கே.எல்.ராகுல் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் எதிர்கொள்ளும் அரசியலும் அழுத்தமும் எந்த ஒரு ஐபிஎல் அணி பயிற்சியாளரையும் விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அதை மிகச் சரியான கருத்து என்று தான் கருதுவதாக லாங்கர் குறிப்பிட்டுள்ளார்.

     

    நேர்காணலில் தொடர்ந்து பேசிய லாங்கர், பயிற்சியாளர் பணி அனைத்தையும் உள்ளடக்கிய பாத்திரம் என்பதை நான் அறிவேன். ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன், அது மிகவும் சோர்வூட்டக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார். 

     

    • வெஸ்ட் இண்டீஸ்க்கு 15 பேரில் 9 பேர் மட்டுமே சென்றுள்ளனர்.
    • கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் போன்றோர் ஐபிஎல் போட்டியில் விளையாடியதால் இன்னும் அணியுடன் இணையவில்லை.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்காக அனைத்து அணிகளும் (இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன) அங்கு சென்றுள்ளன. தற்போது டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    வெஸ்ட் இண்டீசில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நமீபியா அணிகள் மோதின. நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அப்போது ஆஸ்திரேலிய அணிக்காக அந்த அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி, தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோர் பீல்டிங் செய்ய களம் இறங்கினர். இது போட்டியை பார்க்க வந்திருந்த அனைவரும் இது ஆச்சர்யமாக இருந்தது.

    இது தொடர்பாக விசாரிக்கும்போது ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ள 15 பேர்களில் தற்சமயம் 9 பேர் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ளனர்.

    டிராவிஸ் ஹெட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் ஆகியோர் ஐபிஎல் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாடியதால் சற்று ஓய்வு எடுத்து பின்னர் வெஸ்ட் இண்டீஸ் செல்ல திட்டமிட்டுள்ளதால் ஆஸ்திரேலியா 9 வீரர்களுடன் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சப்ஸ்டிடியூட் பீல்டர்களாக தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோர் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    முதலில் களம் இறங்கிய நமீபியா 9 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆஸ்திரேலியா 10 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. டேவிட் வார்னர் 21 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும். ஐபிஎல் தொடரில் ரன் குவிக்க திணறிய டேவிட் வார்னர் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது ஆஸ்திரேலிய அணிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    டிம் டேவிட் 16 பந்தில் 23 ரன்கள் அடித்தார். மேத்யூ வடே 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேசில்வுட் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆடம் ஜம்பா 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    • பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • டெஸ்ட்டில் அறிமுக வீரர்களாக மெக்ஸ்வீனி, ஜோஷ் இங்கிலிஸ் இடம் பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி இரு குழுவாக ஆஸ்திரேலியா செல்கிறது. தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் நிலவியது. இந்த நிலையில் அவர் இன்று புறப்படும் முதல் குழுவினருடன் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2-வது குழு நாளை செல்கிறது.

    இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட்டில் அறிமுக வீரர்களாக மெக்ஸ்வீனி, ஜோஷ் இங்கிலிஸ் இடம் பிடித்துள்ளனர்.

    பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

    ×