search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Steve Smith"

    • மயங்க் யாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் விளையாட வேண்டும்.
    • 4 ஓவர் வீசுவதற்கும் 20 ஓவர் வீசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் சிறப்பாக பந்து வீசி ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். லக்னோ அணிக்காக இந்த வருடம் அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்று அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

    155 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் இவருடைய திறனை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தியா தன்னுடைய வேகப்பந்து வீச்சாளரை கண்டுபிடித்து விட்டதாக அவரை பிரட் லீ, டேல் ஸ்டெயின் போன்ற வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தியாவுக்காக எதிரான ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள 2024 - 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மயங்க் யாதவை எதிர்கொள்ள காத்திருப்பதாக ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மயங்க் யாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் விளையாட வேண்டும். அவரை எதிர்கொள்வதற்காக நான் காத்திருக்கிறேன். 4 ஓவர் வீசுவதற்கும் 20 ஓவர் வீசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

    நான் இதுவரை பார்த்ததில் மயங்க் யாதவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. ஏனெனில் அவர் நல்ல ஏரியாக்களில் பந்தை வீசுகிறார். அவரைப் போன்ற இளம் வீரர்கள் ஷார்ட் லைனில் நல்ல வேகத்தில் வீசுகின்றனர். எனவே அவர்கள் இன்னும் கொஞ்சம் தெளிந்தால் நீண்ட தூரம் பயணம் செல்ல முடியும்.

    மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்துகளுக்கு எதிராக நீங்கள் உண்மையில் ரிஸ்க் எடுக்க வேண்டும். அதை எதிர்கொள்வது எளிதான காரியம் அல்ல. பெரும்பாலான வீரர்கள் தங்களுடைய அறிமுகப் போட்டியில் அசத்திய பின் அப்படியே பின்தங்கி விடுவார்கள். ஆனால் இவர் அங்கிருந்து மீண்டும் வந்து கிளன் மேக்ஸ்வெல் போன்ற சிறந்த டி20 பேட்ஸ்மேனை அவுட்டாக்கினார்.

    மேலும் கேமரூன் கிரீன், ரஜத் படிதார் போன்ற வேகத்தை திறம்பட எதிர்கொள்ளும் வீரர்களையும் அவர் அவுட்டாக்கினார்.

    இவ்வாறு ஸ்மித் கூறினார்.

    • கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடவில்லை.
    • கடந்த சில நாட்களுக்கு முன் உடற்தகுதி பெற்றதாக பிசிசிஐ அறிவித்தது.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் கார் விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு உடற்தகுதி பெற்று ஐபிஎல் போட்டியில் களம் இறங்க இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் விக்கெட் கீப்பர் பணியுடன், சிறப்பாக பேட்டிங் செய்தால் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

    இதுவரை ஐபிஎல்-லில் களம் இறங்கிய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், தற்போது வர்ணனையாளராக செயல்பட உள்ளார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஆட்டத்தை மீண்டும் பார்க்க உற்சாகமாக இருக்கிறேன் என சுமித் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஸ்டீவன் சுமித் கூறுகையில் "ரிஷப் பண்ட் ஆட்டத்தை மீண்டும் பார்க்க உற்சாகமாக இருக்கிறேன். வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், கடினமான காலத்தை கடந்து வந்துள்ளார். மீண்டும் அவரை களத்தில் பார்க்க இருப்பது சிறப்பானது. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர் விரும்வார்.

    ஆகவே, அவரது எண்ணம் விளையாட்டில் எப்படி செல்கிறது என்று பார்க்க வேண்டும். தன்ன வலுக்கட்டாயமாக மீண்டும் பழைய விளையாட்டுக்கு இழுத்துச் செல்வார் என நினைக்கிறேன். அவர் சூப்பர் ஸ்டார். அவர் விளையாடிய வகையில் மிடில் ஆர்டரில் யாரும் விளையாட முடியாது. அவர் ஆக்ரோசமாக விளையாடுபவர். விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். ஆவர் ரிஷப் பண்ட் மட்டுமே என்று நினைக்கிறேன்" என்றார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

    • ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் எடுத்தது.
    • தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மித் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடிலெய்டு:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டுவில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவரில் 188 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் எடுத்தது. கவாஜா 30 ரன்னிலும் க்ரீன் 6 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் ஷமர் ஜோசப் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகமானர். வேகப்பந்து வீச்சாளரான இவர் அறிமுக போட்டியில் வீசிய முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் 85 ஆண்டு கால சாதனையை ஷமர் ஜோசப் சமன் செய்துள்ளார்.

    இதற்கு முன்பு டைரல் ஜான்சனுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை ஜோசப் படைத்துள்ளார். 1939-ம் ஆண்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஜான்சன் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஒட்டுமொத்தமாக, ஆண்கள் டெஸ்டில் தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த 23-வது பந்து வீச்சாளர் ஜோசப் ஆவார்.

    கயானாவில் உள்ள சிறிய கிராமமான பராசராவைச் சேர்ந்தவர், 24 வயதான அவர் முன்னதாக பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் கெமர் ரோச்சுடன் சேர்ந்து கடைசி விக்கெட்டுக்கு 55 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 188 ரன்கள் எடுக்க இந்த ஜோடி உதவியது. இறுதியில் ஜோசப் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

    • சமீபத்தில் டேவிட் வார்னர் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • இதனால் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் சுமித் களம் இறங்குகிறார்.

    சிட்னி:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் சுமித் களம் இறங்குவார். உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து தொடக்க வீரராக அவர் ஆடுகிறார்.

    டேவிட் வார்னர் சமீபத்தில் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக தொடக்க வீரராக யார் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆஸ்திரேலிய தேர்வு குழு ஸ்டீவ் சுமித் தொடக்க வீரராக ஆடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இந்நிலையில், டெஸ்ட் அணிக்கு தொடக்க வீரராக விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என ஸ்டீவ் சுமித் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:

    லபுசேன் 3-வது வரிசையில் களம் இறங்குவதால் நான் பேட்டிங் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. பேட்டிங் செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.

    புதிய பந்தினைச் சந்திப்பது எனக்கு பிடிக்கும். 2019-ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரின்போது நான் சீக்கிரமாக களம் இறங்கி புதிய பந்தினைச் சந்தித்தேன்.

    3-வது வரிசையில் களம் இறங்கி பல ஆண்டுகளாக புதிய பந்துகளில் சிறப்பாக விளையாடி உள்ளேன். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த தொடக்க ஆட்டக்காரர் பொறுப்பு ஒன்றும் புதிதாக இருக்கப் போவதில்லை.

    இந்தப் பொறுப்பை மகிழ்ச்சியுடனும், சவாலாகவும் ஏற்றுக்கொண்டு தொடக்க வரிசையில் விளையாடுவேன் என தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்க உள்ளது.
    • ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மெல்போர்ன் பூங்காவில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சுடன் நட்புரீதியான டென்னிஸ் விளையாடி அசத்தினார்.

    இரு நட்சத்திரங்களுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியானது ஆஸ்திரேலிய ஓபன் 2024- க்கு ஒரு முன்னோடியாக திகழும்.

    ஸ்மித் கிரிக்கெட்டில் பெயர் பெற்றவர் என்றாலும், அவர் ஜோகோவிச்சின் ஒரு சர்வீஸை தாக்கு பிடிப்பாரா என்ற கோணத்தில் ரசிகர்கள் எதிர் நோக்கி இருந்தனர். அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அவரது சர்வீஸை ஸ்மித் கோர்ட்டிற்குள் திருப்பி அனுப்பினார். இது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை கண்ட ஜோகோவிச் கூட அதிர்ச்சியடைந்தார். கூட்டத்தில் இருந்த ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் ஸ்மித்க்கு தலைவணங்கி தனது பாராட்டை ஜோகோவிச் வெளிப்படுத்தினார்.

    அதன்பிறகு ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார். அவர் முதல் பந்தை அடிக்க முற்பட்டார். அது பேட்டில் படவில்லை. உடனே அடுத்து பந்து போடப்பட்டது. பேட் நமக்கு செட் ஆகாது என தெரிந்து கொண்ட ஜோகோவிச் மறைத்து வைத்திருந்த டென்னிஸ் மட்டையால் பந்தை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    இவர்கள் இருவரும் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தொடக்க வீரராக யாரை தேர்வு செய்யலாம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது.
    • ஸ்மித்துக்கு தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கொடுத்தால் அவர் 12 மாதங்களுக்குள் நம்பர்-1 டெஸ்ட் தொடக்க வீரராக இருப்பார் என கிளார்க் கூறினார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி வந்த டேவிட் வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தொடக்க வீரராக யாரை தேர்வு செய்யலாம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது.

    இதில் பலரது பெயர்கள் அடிபட்டு வருகிறது. ஸ்டீவ் ஸ்மித்தை தொடக்க வீரராக களம் இறக்கவும் ஆலோசிக்கிறார்கள்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களம் இறங்கினால் லாராவின் 400 ரன் சாதனையை முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டியில் ஸ்மித்துக்கு தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கொடுத்தால் அவர் 12 மாதங்களுக்குள் நம்பர்-1 டெஸ்ட் தொடக்க வீரராக இருப்பார். அவர் ஒரு சிறந்த வீரர்.

    ஸ்மித் தொடக்க வீரராக விளையாடும் பட்சத்தில் அவர் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த லாராவின் 400 ரன் சாதனையை முறியடித்தால் கூட ஆச்சரியப்பட வேண்டாம். அந்த சாதனையை படைக்க ஸ்மித் தகுதி உள்ளவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்மித், டெஸ்ட் போட்டியில் தற்போது 4-வது வீரராக களம் இறங்கி வருகிறார். 105 போட்டியில் 9514 ரன்கள் எடுத்துள்ளார். 32 சதங்கள், 40 அரை சதங்கள் அடித்துள்ளார்.

    4-வது வரிசையில் களம் இறங்கி 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்கள் எடுத்து உள்ளார். சராசரி 61.51 சதவீதம் ஆகும். 3-வது வரிசையில் 11 முறை களம் இறங்கி 1744 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3 வடிவிலான போட்டிகளும் வார்னர் மிக சிறந்த அதிரடி ஆட்டக்காரர் ஆவார்.
    • டெஸ்ட் போட்டியில் நான் தொடக்க வீரராக விளையாட மகிழ்ச்சியுடன் உள்ளேன்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். ஏற்கனவே அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார்.

    3 வடிவிலான போட்டிகளும் வார்னர் மிக சிறந்த அதிரடி ஆட்டக்காரர் ஆவார். அவரது இடத்தை நிரப்புவது என்பது மிகவும் சவாலானதே.

    37 வயதான வார்னர் சர்வதேச போட்டிகளில் 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். 49 சதமும், 94 அரைசதமும் அடித்துள்ளார். தனது 14 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு தொடக்க வீரராக விளையாட விருப்பத்துடன் இருப்பதாக மற்றொரு முண்ணனி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டியில் நான் தொடக்க வீரராக விளையாட மகிழ்ச்சியுடன் உள்ளேன். நிச்சயமாக தொடக்க வீரராக களம் இறங்குவதில் ஆர்வத்துடன் இருக்கிறேன். தேர்வு குழு என்னிடம் இதுபற்றி பேசுவார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஏற்கனவே கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் பேன்கிராப்ட், மேட் ரென்ஷா ஆகியோரும் தொடக்க வீரருக்கான போட்டியில் உள்ளார். அவர்களுடன் ஸ்டீவ் சுமித் தும் தற்போது இணைந்து உள்ளார்.

    அதே நேரத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் கம்மின்ஸ் தொடக்க வீரராக ஸ்டீவ் சுமித் விளையாடுவதை விரும்ப வில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    • உலகக் கோப்பை தொடரில் முதல் 4 இடங்களுக்குள் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து அணிகளுக்கும் இருக்கும்.
    • அதுபோல நாங்களும் அரையிறுதிக்கு செல்ல விரும்புகிறேன்.

    உலகக் கோப்பை தொடரில் நாளை நடக்கவுள்ள 39-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 6-வது இடத்திலும் உள்ளது.

    ஆப்கானிஸ்தான் கடைசி 3 போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் நாளைய போட்டியில் மிகவும் நம்பிக்கையுடன் விளையாடும். அதேபோல முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா அடுத்து விளையாடிய 5 போட்டிகளில் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    இந்நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பை தொடரில் முதல் 4 இடங்களுக்குள் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து அணிகளுக்கும் இருக்கும். அதுபோல எங்கள் அணியும் அரையிறுதிக்கு செல்ல விரும்புகிறேன். ஆனால் அதற்கு அந்தந்த அணிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதலில் தோல்விகளை தழுவினாலும் பின்னர் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளோம். நாளை எங்களுக்கு மிகப் பெரிய போட்டி உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் என நினைக்கிறேன். முதல் 2 இடங்களில் இருக்கும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை வெல்வது மிகவும் கடினம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5 பேட்ஸ்மேன்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவித்து உள்ளனர்.
    • உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    மெல்போர்ன்:

    கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் 'பேபுலஸ் போர்' (மிகச்சிறந்த நால்வர்) என்ற வார்த்தை பிரபலமானது. வீராட்கோலி (இந்தியா), ஜோரூட் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

    தற்போது இந்த அடை மொழியில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் 5-வதாக இணைந்துள்ளார். அதனால் 'பேப் 5' என அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த 5 வீரர்களில் உலக கோப்பை போட்டியில் வீராட்கோலியும், ஸ்டீவ் சுமித் தான் முத்திரை பதிப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த 5 பேட்ஸ்மேன்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை குவித்து உள்ளனர். இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் இந்த 5 பேருமே ரன்களை குவிக்க வாய்ப்பு உள்ளது. ஒருநாள் போட்டி, டெஸ்ட், 20 ஓவர் என 3 வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக இருப்பது வீராட்கோலி, ஸ்டீவ் சுமித் மட்டுமே.

    இருவரும் இந்த உலக கோப்பை போட்டியில் தங்களது முத்திரையை பதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடப்பதால் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆசிய அணிகள் இந்தியாவில் சிறப்பாக செயல்படும்.

    ஆனால் சமீபகாலமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவில் அபாரமாக ஆடுகிறார்கள். இந்தியாவில் அவர்கள் தங்கள் நேரத்தை செலவிடு கிறார்கள். இதனால் உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.

    34 வயதான வீராட்கோலி டெஸ்டில் 8676 ரன்னும் (111 போட்டி) ஒருநாள் போட்டியில் 12,898 ரன்னும் (275), 20 ஓவரில் 4008 ரன்னும் (115) எடுத்துள்ளார். அவரது சராசரி முறையே 49.29, 57.32 மற்றும் 52.73 ஆக இருக்கிறது.

    34 வயதான ஸ்டீவ் சுமித் டெஸ்டில் 9320 ரன்னும் (102), ஒருநாள் போட்டியில் 4939 ரன்னும் (142) எடுத்து உள்ளார். அவரது சராசரி முறையே 58.61 மற்றும் 44.49 ஆக இருக்கிறது.

    • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
    • 20 ஓவர் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரையும், ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும் நடக்கிறது.

    சிட்னி:

    இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி தொடங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரையும், ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும் நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 22-ந் தேதி மொகாலியில் நடக்கிறது.

    இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ், 20 ஓவர் மற்றும் ஒருநாள் அணியில் இடம் பிடித்து இருந்த ஸ்டீவன் சுமித் ஆகியோர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் அணியில் இருந்து விலகி இருக்கின்றனர்.

    இதேபோல் ஒருநாள் அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் ஒதுங்கி இருக்கிறார். ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பை மிட்செல் மார்ஷ் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆஷ்டன் டர்னர், மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோர் கூடுதலாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காயத்தில் இருந்து மீண்டு வரும் கம்மின்ஸ், ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இந்திய தொடருக்குள் முழு உடல் தகுதியை எட்டிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு வீரர்களிடம் பீர் குடிக்கலாம் என பேசி கொண்டிருந்தோம்.
    • எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு தொடர் முடிந்த பிறகு பீர் குடிக்காமல் வந்தது இதுவே முதல் முறை.

    சமீபத்தில் நடந்த முடிந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.

    இந்நிலையில் இந்த முறைதான் ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு பீர் அடிக்காம வந்திருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு வீரர்கள் பீர் குடிக்கலாம் என பேசி கொண்டிருந்தோம். அப்போது பென் ஸ்டோக்ஸ் தங்கியிருந்த அறைக்கு சென்று அறையின் கதவை தட்டினோம். அவர் சிறிது நேரம் கழித்தே கதவை திறந்தார். வந்த வேகத்தில் 2 நிமிடம் காத்திருங்கள் என்று கூறி சென்றார். ஒரு மணி நேரம் ஆகியும் வராத காரணத்தால் பீர் அடிக்க வேண்டாம் என்று கூறி நாங்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.

    எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு தொடர் முடிந்த பிறகு பீர் குடிக்காமல் வந்தது இதுவே முதல் முறை. இது அசிங்கமாக இருந்தது. ஆனால் சில மணி நேரம் கழித்து வந்த பென் ஸ்டோக்ஸ், ஒரு வேலையாக சென்றதால் தாமதமாகி விட்டது. மன்னித்து விடுங்கள். மது அருந்துவது என்று முடிவு செய்து விட்டோம். அதனால் அதை கைவிட வேண்டாம். கண்டிப்பாக மது அருந்து விட்டு செல்லலாம் என அவர் கூறினார்.

    அவர் கூறும் அந்த வேலை நான் எனது அறைக்கு சென்று இருந்தேன். மது அருந்தாத மற்ற வீரர்கள் அவருடன் சேர்ந்து மது அருந்தி மகிழ்ந்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 4-வது இடத்தில் உள்ளார்.
    • இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 32 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் விளாசியுள்ளார்.

    ஹெட்டிங்லி:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை படைத்துள்ளார். அவர் இன்று தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். கடந்த வாரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்து அசத்தினார்.

    34 வயதான ஸ்மித், கடந்த 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை மொத்தம் 99 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 9,113 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 239 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 4-வது இடத்தில் உள்ளார். 

    ×