என் மலர்
நீங்கள் தேடியது "ஷிவ் நரின் சந்தர்பால்"
- ஸ்டீவன் சுமித் வித்தியாசமாக தனது கண்களுக்கு நேர் கீழாக சிறிய பட்டை போன்று கருப்பு வர்ணத்தை தீட்டியுள்ளார்.
- வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் இதே போன்ற கருப்பு பட்டையுடன் விளையாடி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 2-வது டெஸ்ட் பகல் இரவாக பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இதில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டிக்கான பயிற்சியின் போது ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பு கேப்டன் ஸ்டீவன் சுமித் வித்தியாசமாக தனது கண்களுக்கு நேர் கீழாக சிறிய பட்டை போன்று கருப்பு வர்ணத்தை தீட்டியுள்ளார். இதற்கு முன்பு வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால் இதே போன்ற கருப்பு பட்டையுடன் விளையாடி இருக்கிறார்.
அவரது பாணியை பின்பற்றும் சுமித்திடம் இது பற்றி நிருபர்கள் கேட்ட போது, 'சந்தர்பாலிடம் நான் குறுஞ்செய்தி அனுப்பி இது பற்றி கேட்டேன். அதற்கு அவர் இவ்வாறு கண்ணுக்கு கீழ் பகுதியில் கருப்பு வர்ணம் இருக்கும் போது, கண்களை கூசும் வகையிலான ஒளி 65 சதவீதம் தடுக்கப்படுவதாக கூறினார். அது உண்மை தான் என்பதை பயிற்சியின் போது நானும் உணர்ந்தேன். மேலும் அவர் உங்களது புகைப்படங்களை பார்த்தேன். அதை தவறாக வரைந்துள்ளீர்கள் என்று கூறினார். இப்போது அதை சரி செய்து விட்டேன்' என்றார்.
- முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய 10-வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
- பிராத்வெய்ட்-தேஜ்நரின், தொடக்க விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வெஸ்ட் இண்டீஸ் ஜோடி என்ற சிறப்பை பெற்றனர்.
புலவாயோ:
ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்களில் மழை பாதிப்புக்கு இடையே பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 221 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் 116 ரன்களுடனும், தேஜ்நரின் சந்தர்பால் 101 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த பிராத்வெய்ட்-தேஜ்நரின், தொடக்க விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வெஸ்ட் இண்டீஸ் ஜோடி என்ற சிறப்பை பெற்றனர்.
இந்த கூட்டணி ஸ்கோர் 336-ஐ எட்டிய போது உடைந்தது. பிராத்வெய்ட் 182 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் அபாரமாக ஆடிய தேஜ்நரின் சிக்சர் அடித்து தனது முதலாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய 10-வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 143 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 447 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. தேஜ்நரின் 207 ரன்களுடன் (467 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். இவரது தந்தை ஷிவ் நரின் சந்தர்பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 203 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த ஸ்கோரை தனது 3-வது டெஸ்டிலேயே கடந்து அசத்தியிருக்கிறார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.






