என் மலர்
நீங்கள் தேடியது "AUSvENG"
- ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- அந்த அணியின் அலெக்ஸ் கேரி சதமடித்து அசத்தினார்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற
ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 83 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. பொறுப்புடன் ஆடிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 106 ரன்னும், கவாஜா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மிட்செல் ஸ்டார்க் 33 ரன்னும், நாதன் லயன் ரன் ஏதுமின்றியும் அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், வில் ஜாக்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்கம் முதலே அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பென் டக்கெட் 29 ரன்னும் எடுத்து அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-ஹாரி புரூக் ஜோடி அணியைக் காப்பாற்ற போராடியது. 56 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஹாரி புரூக் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசியில் களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் கேப்டன் ஸ்டோக்சுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியதால் இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்தது.
இறுதியில், 2வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோக்ஸ் 45 ரன்னும், ஆர்ச்சர் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து இன்னும் 158 ரன்கள் பின்தங்கி உள்ளது.
ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஸ்காட் போலண்ட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
- அந்த அணியின் மிட்செல் ஸ்டார்க் உள்பட 5 பேட்ஸ்மேன்கள் அரை சதம் கடந்தனர்.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆர்ச்சர் - ஜோ ரூட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 70 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
ஜாக் கிராலி 76 ரன்னும், ஜோப்ரா ஆர்ச்சர் 38 ரன்னும், ஹாரி புரூக் 31 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டு வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
அந்த அணியின் மிட்செல் ஸ்டார்க் 77 ரன்னும், ஜேக் வெதரால்டு 72 ரன்னும், மார்னஸ் லபுஷேன் 65 ரன்னும், அலெக்ஸ் கேரி 63 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேமரூன் கிரீன் 45 ரன்னும், டிராவிஸ் ஹெட் 33 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 44 ரன்கள் எடுத்தார். ஒல்லி போப் 26 ரன்கள் எடுத்தார். மற்ற ஆட்டக்காரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை 43 ரன் பின்தங்கியுள்ளது.
இன்னும் இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. இதனால் 2வது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா எளிதில் வெல்லும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
- இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
- அந்த அணியின் ஜோ ரூட் 138 ரன்னுடன் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆர்ச்சர் - ஜோ ரூட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 70 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
ஜாக் கிராலி 76 ரன்னும், ஜோப்ரா ஆர்ச்சர் 38 ரன்னும், ஹாரி புரூக் 31 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டு வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் ஜேக் வெதரால்டு 72 ரன்னும், மார்னஸ் லபுஷேன் 65 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேமரூன் கிரீன் 45 ரன்னும், டிராவிஸ் ஹெட் 33 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 378 ரன்கள் குவித்துள்ளது. அலெக்ஸ் கேரி 46 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை விட 44 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது.
- இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் ஆஸ்திரேலியா இந்த தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் இந்த தொடர் குறித்து கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக வலம் வர தொடங்கி உள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் யார் தொடரை கைப்பற்றுவார்கள் என கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பல்வேறு அணிகளின் முன்னாள் வீரர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் தொடரில் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் என தெரிவித்துள்ளார். மேலும் மற்ற முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்களான மெக்ராத், ஆஸ்திரேலியா (5-0) வெற்றி பெறும். கிளார்க் ஆஸ்திரேலியா (3-1) வெற்றி பெறும்.
இதே போல முன்னாள் இங்கிலாந்து வீரர்களான குக், இங்கிலாந்து (3-1) என வெற்றி பெறும் என கூறியுள்ளார். மேலும் ஸ்வான் (இங்கிலாந்து 3-2), டி லாயிட் (இங்கிலாந்து 5-0), ஓ'கீஃப் (இங்கிலாந்து 3-0) என வெற்றி பெறும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் வாகன் மட்டும் இந்த தொடர் டிராவில் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
- இந்த தொடர் வருகிற 21-ந் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகி உள்ளார். அவரின் காயம் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சில் பேட்டர்களை மிரட்டும் வல்லமை கொண்ட அவர் இல்லாமல் இருப்பது இங்கிலாந்து அணி பேட்டர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.
- ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நவம்பர் மாதம் தொடங்குகிறது.
- இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மிகவும் பழமையான ஆஷஸ் தொடர் வரும் நவம்பர் மாதம் 21-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
5 போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதுகுவலி பிரச்சனை காரணமாக அவர் முதல் டெஸ்டில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் குணமடையாத பட்சத்தில் முழு தொடரையும் அவர் இழக்க நேரிடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இவர் விலகினால் ஆஸ்திரேலிய அணிக்கு அது பின்னடைவாக பார்க்கப்படும்.
அவர் ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான வெள்ளை தொடரில் இருந்து விலகினார். அடுத்து தொடங்கவிருக்கும் இந்திய தொடரிலும் அவர் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயனுக்க வயது ஆகிவிட்டது.
- ஸ்மித், டிராவிஸ் ஹெட் பேட்டிங்கை மட்டுமே அதிக அளவில் நம்பியுள்ளது ஆஸ்திரேலியா
கிரிக்கெட்டில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் ஆஷஸ் தொடர் மிகக்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு ரசிகர்களிடம் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதைவிட அதிக அளவிற்கு இந்த தொடருக்கு உண்டு.
இந்த வருடம் இறுதியில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து ஆஷஸ் தொடரை வென்றதில்லை.
இந்த நிலையில் வயதான பந்து வீச்சாளர்கள், அனுபவம் இல்லாத பேட்ஸ்மேன்களை கொண்ட ஆஸ்திரேலியா அணியை இந்த முறை இங்கிலாந்து வீழ்த்தி தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில் "உண்மையிலேயே, எங்களுக்கு வாய்ப்பு என்பதுடன்தான் ஆஸ்திரேலியாவுக்கு செல்வோம். ஆஸ்திரேலியா உலகின் சிறந்த அணி. சொந்த மண்ணில் நம்பமுடியாதவை. ஆனால் பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன் என வயதான பந்து வீச்சு குழுவை கொண்டுள்ளது. தொடக்க வீரராக விளையாட வாய்ப்புள்ள சாம் கோன்ஸ்டாஸ் உள்ளிட்ட அனுபவம் இல்லாத பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது.
அவர்கள் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை மட்டுமே அதிக அளவில் நம்பியிருக்க வேண்டும். மார்னஸ் லபுசேன் ரன் சேர்க்க திணறுகிறார். ஆகவே, இங்கிலாந்து அணியின் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்தால், வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவின் தொடரை வெல்வதற்கன அணி. இருந்தாலும் இங்கிலாந்துக்கு வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், சம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஜேசன் ராய் 6 ரன்னில் அவுட் ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்தது. ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மலான் சதம் அடித்து அசத்தினார்.
அவர் 134 ரன்னில் சம்பா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடந்து ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், சம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- டேவிட் வார்னர், ஹெட், ஸ்மித் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
- ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி டேவிட் மலானின் சதத்தின் மூலம் 287 ரன்கள் குவித்தது. அவர் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், ஆடம் சம்பா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - ஹெட் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 147 ரன்கள் குவித்தது.
இருவரும் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர். வார்னர் 86 ரன்னிலும் ஹெட் 69 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். மார்னஸ் லாபுசாக்னே 4 ரன்னிலும் அலெக்ஸ் கேரி 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 46.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்திருந்தார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
- உலகக் கோப்பை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
- இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடினார்.
உலகின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக ஜொலித்து வந்தவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அசுர பலத்துடன் திகழ்ந்தார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்று அணிக்கு திரும்பிய பிறகு, டெஸ்ட் போட்டியில் மட்டும் சிறப்பாக விளையாடினார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகப்பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை.
குறிப்பாக கடந்த ஒருவருடமாக இவரது ஆட்டம் எடுபடவில்லை. இதனால் சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெஞ்ச்-ல் அமர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் நேற்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இந்த போட்டியில் 78 பந்தில் 80 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் ஸ்மித்.
இந்த ஆட்டம் முடிந்த பிறகு பேசுகையில், கடந்த ஆறு ஆண்டுகளில் தற்போது சிறந்த ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த கோடைக்கால கிரிக்கெட் சிறப்பாக விளையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய ஆட்டம் குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ''அனேகமாக இந்த வருடங்களில் சிறந்த ஆட்டமாக இது இருந்திருக்கிறது என உணர்கிறேன். உண்மையிலேயே இந்த ஆட்டத்தில் நான் மிகவும் நல்ல நிலையில் இருந்தேன். சிறந்ததாக உணர்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளில் நான் இதுபோன்று உணரவில்லை.
நாம் எப்போதும் முழு நிறைவை நோக்கி செல்கிறோம். நான் அதை பெற முதல் ஆட்டத்தில் அடித்த ரன்கள் நெருக்கமாக இருந்தது.'' என்றார்.
உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மட்டும் களம் இறங்கினார். அதில் நான்கு ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
- ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது.
- இங்கிலாந்து தரப்பில் ரஷித் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சிட்னி:
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ள நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி அந்த அணி முதலில் விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 94 ரன்களும், லபுஷேன், மார்ஷ் அரைசதமும் அடித்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ரஷித் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சிட்னி:
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றது.
இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 94 ரன்களும், லபுஷேன், மார்ஷ் அரைசதமும் அடித்தனர்.
இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டு கைப்பற்றினார்.
இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 34 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. அடுத்து ஆடிய ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். 4-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் வின்ஸ் 60 ரன்னில் அவுட்டானார். சாம் பில்லிங்ஸ் 71 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம்பா அசத்தலாக பந்து வீசினார்.
இறுதியில், இங்கிலாந்து 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், சாம்பா தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.






