என் மலர்

    நீங்கள் தேடியது "Boxing day Test"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது.

    மெல்போர்ன்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 'பாக்சிங் டே' நாளான டிசம்பர் 26-ம் தேதி அன்று ஏதாவது ஒரு அணி மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடிக் கொண்டு இருக்கும்.

    மெல்போர்னில்... 1950-ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. சில காரணங்களால் சில ஆண்டுகள் அந்த போட்டியை குறிப்பிட்ட நாளில் நடத்த முடியாமல் போய் இருக்கிறது. என்றாலும் 1980-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டியை நடத்தும் உரிமத்தை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.

    அந்த வகையில் இந்த முறை 'பாக்சிங் டே'யில் தென் ஆப்பிரிக்க அணி மல்லுக்கட்டுகிறது.

    பிரிஸ்பேனில் நடந்த தொடக்க டெஸ்ட் வெறும் 2 நாளுக்குள் முடிந்து போனதால் அது தரமற்ற ஆடுகளம் என்று கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து மெல்போர்ன் ஆடுகளம் சர்ச்சைக்கு இடமில்லாமல் மிக நன்றாக அமைய வேண்டும் என்பதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் 36 வயதான டேவிட் வார்னருக்கு இது 100-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 14-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெறும் அவர் கடந்த 3 ஆண்டுகளாக சதம் அடிக்காத ஏக்கத்தை தணிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி 12 டெஸ்டுகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டிருக்கிறது.

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் அணிகள் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கின்றன. இரண்டு அணிகளும் பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகின்றன. #AUSvPAK #AUSvNZ
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் 2019-2020-ம் ஆண்டுக்கான போட்டி அட்டவனையை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர்-டிசம்பர்  மாதம் பாகிஸ்தானுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின் டிசம்பர்-ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நவம்பர் 21-ந்தேதி தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நவம்பர் 29-ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.

    அதன்பின் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிசம்பர் 12-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இது பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. அதன்பின் மெல்போர்னில் 2-வது டெஸ்ட் பாக்சிங் டே அன்று தொடங்கிறது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் புது வருடம் டெஸ்டாக நடக்கிறது.



    1987-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா பாக்சிங் டெஸ்டில் மோதியது. அதன்பின் 32 வருடங்கள் கழித்து தற்போதுதான் பாக்சிங் டே டெஸ்டில் விளையாட இருக்கிறது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மெல்போர்ன் டெஸ்டில் 6 ரன்களுக்குள் புஜாரா, விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா ஆட்டமிழந்து 72 வருடகால மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது. 292 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. கம்மின்ஸ் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து 3-வது வீரராக களம் இறங்கிய புஜாரா (0), 4-வது வீரராக களம் இறங்கிய விராட் கோலி (0), 5-வது வீரராக களம் இறங்கிய (1) ரகானே, 6-வது வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா (5) ஆகியோர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். ரோகித் சர்மாவைத் தவிர மற்ற மூன்று பேரையும் கம்மின் 6 பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் வீழ்த்தினால். இதில் விராட் கோலி, ரகானேவை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.



    கடந்த 25 வருடங்களாக இப்படி 3 முதல் 6-ம் நிலை வரை களம் இறங்கும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது கிடையாது. நான்கு பேரும் சேர்ந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்ததன் மூலம் குறைவாக பெற்ற ரன்கள் என்று கடந்த 72 ஆண்டு காலமாக இருக்கும் மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர்.

    இதற்கு முன் 1946-ல் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் (3 முதல் 6 வரை) 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர். அதன்பின் தற்போதுதான் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.



    1969-ல் ஐதராபாத்தில் நியூசிலாந்திற்கு எதிராக 9 ரன்களும், 1983-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 9 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்துள்ளனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விராட் கோலி, புஜாரா, ரகானேவை சாய்த்தார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது.

    292 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஜோடியான ஹனுமா விஹாரி - மயாங்க் அகர்வால் 12-வது ஓவர்கள் தாக்குப்பிடித்தனர்.

    கம்மின்ஸ் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த புஜாரா கம்மின்ஸ் வீசிய 15-வது ஓவரின் 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி ரன்ஏதும் எடுக்காமல் அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் ரகானே 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்தியாவின் நட்சத்திர வீரர்களான புஜாரா, விராட் கோலி, ரகானே ஆகியோரை ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் வெறும் 6 பந்தில் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் 28 ரன்கள் வரை விக்கெட் ஏதும் இழக்காத இந்தியா 32 ரன்னிற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.

    அடுத்து வந்த ரோகித் சர்மா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் 292 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அறிமுக போட்டியில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி ஆட்டத்தில் கவனம் செலுத்துவது எளிதான காரியம் அல்ல என மயாங்க் அகர்வால் தெரிவித்துள்ளார். #AUSvIND #MayankAgarwal
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் சொதப்பியதால், இந்த போட்டியில் மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மயாங்க் அகர்வாலுக்கு தற்போதுதான் இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் அறிமுகம் ஆனது அவரின் அதிர்ஷ்டம்.

    73 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்த மைதானத்தில் கம்பீரமாக இருவரும் களம் இறங்கினார்கள். முதல் போட்டியில், இவ்வளவு பெரிய ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுகிறோம் என்ற பதற்றம் இல்லாமல் மயாங்க் அகர்வால் விளையாடினார். விஹாரி 8 ரன்கள் மட்டுமே எடுத்தாலும் 66 பந்துகள் சந்தித்து களத்தில் நின்றார். மறுமுனையில் மயாங்க் அகர்வால் சிறப்பாக விளையாடியதால் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 18.5 ஓவரில் 40 ரன்கள் சேர்த்தது.

    95 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்த மயாங்க் அகர்வால் தேனீர் இடைவேளைக்கு சற்று முன் கம்மின்ஸ் பந்தில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிந்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மயாங்க் அகர்வால் கூறியதாவது:-

    புகழ் வாய்ந்த அறிமுக போட்டியில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி ஆட்டத்தின் மீது கவனம் செலுத்துவது எளிதான காரியம் அல்ல. ஆனால், ரன்கள் குவிக்க இது தேவையானது. நான் என்னுடைய திட்டத்தில் உறுதியாக நின்று, அதை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

    என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை அரைசதத்துடன் தொடங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. டெஸ்ட் போட்டி என்பது மிகப்பெரிய இடம். எனக்கு கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு. நான் சீனியர் வீரர்களுடன் வளம்வரும்போது இது மிகப்பெரிய நாள், மிகப்பெரிய வாய்ப்பு என்றார்கள்.

    76 ரன்கள் என்பது மகிழ்ச்சியே. இருந்தாலும் அதிக ரன்கள் எடுத்திருக்கனும். நான் களத்திற்கு சென்று அதிக ரன்கள் அடிக்க வேண்டும், நாள் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாட வேண்டும் என்று விரும்பினேன்.

    இவ்வாறு மயாங்க் அகர்வால் கூறினார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தியும், மிட்செல் மார்ஷ்-க்கு எதிராகவும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோசமிட்டது ஏமாற்றம் அளிப்பதாக டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கிய இந்த போட்டியை பார்ப்பதற்காக சுமார் 73 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் மைதானத்தில் குவிந்தனர்.

    மெல்போர்ன் மைதானம் விக்டோரியாவில் இருக்கிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் முதல் இரண்டு போட்டியில் இடம்பிடித்திருந்த விக்டோரியாவின் ஹெண்ட்ஸ்காம்பிற்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் இடம்பிடித்தார். இந்த மாற்றம் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

    இதனால் விக்டோரியாவைச் சேர்ந்த ரசிகர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை ஊக்கப்படுத்தும் வகையில் கோசம் எழுப்பினார்கள். மேலும், மிட்செல் மார்ஷ் பந்து வீச வரும்போது அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். ரசிகர்களின் இந்த செயலை ஆஸ்திரேலிய வீரர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கோசம் எழுப்புவது ஏமாற்றம் அளிக்கிறது என்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிராவிஸ் ஹெட் கூறுகையில் ‘‘இது சிறந்தது என்று நான் நினைக்கவில்லை. உண்மையிலேயே விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் உற்சாகத்தில் கோசமிட்டதை நாங்கள் பார்த்தோம். ஆனால் மிட்செல் மார்ஷ் பந்து வீச வரும்போது, அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.



    பந்து வீச்சுக்கு சாதகமற்ற ஆடுகளத்தில் இந்தியாவிற்கு மிட்செல் மார்ஷ் கடும் நெருக்கடி கொடுத்தார். ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆஸ்திரேலியாவிலேயே எதிர்ப்பு கோசத்திற்கு உள்ளாவது சரியானது என்று நான் நினைக்கவில்லை. இது மோசமான செயல். அதோடு ஏமாற்றமும் அளிக்கிறது.

    விக்கோட்ரியா ரசிகர்களுக்கு ஹேண்ட்ஸ்காம்ப் இல்லாதது ஏமாற்றம் அளிக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மிட்செல் மார்ஷ்க்கு எதிராக அவர்கள் திரும்புவது மோசமானது’’ என்றார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் நியூசிலாந்து 176 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கையும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. #NZvSL
    இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சில் நியூசிலாந்து திணறியது. 64 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதன்பின் வந்த பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அதிரடியாக விளையாடினார். அவர் 65 பந்தில் 68 ரன் அடித்தார். இதில் 6 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.

    இவரது ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 178 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லக்மல் 5 விக்கெட்டும், குமாரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.



    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணியும் திணறியது. பேட்டிங்கில் ஜொலித்த டிம் சவுத்தி பந்து வீச்சிலும் அசத்தினார். குணதிலகா (8), கருணாரத்னே (7), சண்டிமல் (6) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். இதனால் 21 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது இலங்கை.



    மெண்டிஸ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டது. இலங்கை முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் சேர்த்துள்ளது. மேத்யூஸ் 27 ரன்னுடனும், சில்வா 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கடந்த 2014-ம் ஆண்டைவிட தற்போதைய மெல்போர்ன் ‘பிட்ச்’ உயிரோட்டமாக உள்ளது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் முடிவுகள் கிடைத்தன. மெல்போர்ன் ஆடுகளம் கடந்த சில வருடங்களாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. மேலும், போட்டிகளில் முடிவு கிடைக்காமல் ‘டிரா’விலேயே முடிந்துள்ளன.

    இந்திய அணி கடந்த 2014-ம் ஆண்டு மெல்போர்னில் விளையாடியபோது, உயிரோட்டமில்லாத ஆடுகளமாக இருந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 530 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 192 ரன்களும், ரியாஸ் ஹாரிஸ் 74 ரன்களும், கிறிஸ் ரோஜர்ஸ் 57 ரன்களும், பிராட் ஹட்டின் 55 ரன்களும், ஷேன் வாட்சன் 52 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி (169), ரகானே (147) ஆகியோரின் சதத்தால் 465 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    384 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் என்ற நிலையில் தத்தளித்தபோது விராட் கோலி (54), ரகானே (48) அட்டத்தால் இந்தியா போட்டியை டிரா செய்தது. ஆஷஸ் தொடரில் மெல்போர்ன் டெஸ்ட் மட்டும் டிராவில் முடிந்தது. உள்ளூர் தொடரில் அதிக அளவில் சதங்கள் விளாசப்பட்டன.

    இதனால் நாளை தொடங்கும் போட்டியிலும் முடிவு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நேற்று ஆடுகளத்தை பரிசோதித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தற்போதைய ஆடுகளம் உயிரோட்டமாக இருக்கிறது. முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.



    தற்போதைய மெல்போர்ன் ஆடுகளம் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் ஆடுகளத்தை நேற்று பார்த்தபோது, அதன் அடிப்பகுதி உலர்ந்து காணப்பட்டது. ஆனால், மேற்பகுதி புற்கள் நிறைந்து காணப்படுகிறது. இது அப்படியே இருக்க வேண்டும். இந்த புற்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் உற்சாகமாக பந்து வீச போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். கடந்த முறையை (2014) விட தற்போதைய ‘பிட்ச்’ போதுமான அளவு உயிரோட்டமாக இருக்கும் என நம்புகிறேன்.

    முதல் இரண்டு போட்டிகளில் ஆடுகளம் என்ன செய்ததோ, அதை இந்த ஆடுகளமும் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. எப்போதும் நாங்கள் வெற்றியை எதிர்நோக்கிதான் செல்வோம்’’ என்றார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டிசம்பர் 26-ந்தேதி தொடங்கும் போட்டியை ஏன் ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என அழைக்கப்படுகிறது என்பதற்கான காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. #AUSvIND #BoxingDayTest
    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தேவாலயம் முன்பு பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்படும். அதில் பரிசு பொருட்கள் மற்றும் நன்கொடை அளிப்பார்கள். அந்த பெட்டியை மறுநாள் பிரித்து ஏழைகளுக்கு வழங்குவார்கள்.

    அந்த நாளை “பாக்சிங் டே” என்று அழைக்கிறார்கள். இதேபோல் கூலி தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தங்களது குடும்பத்தினரை பார்க்க செல்லும்போது அவர்களது முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்குவார்கள்.

    இதன் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் விளையாடப்படும் டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறது.



    இதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி ஆஸ்திரேலியா அணி மெல்போர்ன் மைதானத்தில் ஏதாவது ஒரு அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடும். இம்முறை இந்திய அணி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்டில் விளையாடுகிறது.
    ×