search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AUSvPAK"

    • பாகிஸ்தான் தரப்பில் அலி ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா வருகிற 11-ந் தேதி மோதுகிறது.

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்த தொடரின் முதலாவது அரையிறுதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இன்று மோதி வருகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் தொடக்க முதலே திணறியது. இதனால் 79 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அசான் அவாய்ஸ்- அராபத் மின்ஹாஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

    இருவரும் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களில் ஷாமில் ஹுசைன்(17) தவிர மற்ற வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை தாண்டவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி டிக்சன்- சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர். களமிறங்கிய 14 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் 4, ஹர்ஜாஸ் சிங் 5, ரியான் ஹிக்ஸ் 0 ரன்களிலும் நடையை கட்டினார்.

    இதனால் 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. இதனையடுத்து ஆலிவர் பீக்- ஹாரி டிக்சன் ஜோடி சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக ஆடிய ஹாரி டிக்சன் அரை சதம் விளாசி அவுட் ஆனார். ஆலிவர் பீக் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். இறுதியில் கைவசம் 1 விக்கெட் மீதி இருந்தது. 16 ரன்கள் தேவைப்பட்டது. உச்சக்கட்ட பரப்பரப்பில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    பாகிஸ்தான் தரப்பில் அலி ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதிபோட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.

    • பாகிஸ்தானின் அசான் அவாய்ஸ்- அராபத் மின்ஹாஸ் ஆகியோர் 52 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்த தொடரின் முதலாவது அரையிறுதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இன்று மோதி வருகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் தொடக்க முதலே திணறியது. இதனால் 79 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அசான் அவாய்ஸ்- அராபத் மின்ஹாஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

    இருவரும் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களில் ஷாமில் ஹுசைன்(17) தவிர மற்ற வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை தாண்டவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 313 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 313 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 88 ரன்னும், ஆமிர் ஜமால் 82 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 299 ரன்களில் ஆல்அவுட் ஆனது. லபுசேன் 60 ரன்னும், மிட்செல் மார்ஷ் 54 ரன்னும் எடுத்து வெளியேறினர். அலேக்ஸ் கேரி 38 ரன்னில் அவுட்டானர்.

    பாகிஸ்தான் சார்பில் ஆமீர் ஜமால் 6 விக்கெட்டும், அகா சல்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    14 ரன்கள் முன்னிலையில் உள்ள பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். அயூப் 33 ரன்னும், பாபர் அசாம் 23 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில் எஞ்சியுள்ள 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா கைப்பற்றி எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள் இருவரும் டக்அவுட் ஆனார்கள்.
    • 227 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியதுடன் தொடரில் 2-0 முன்னிலை விக்கிறது.

    பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் 360 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 79 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷபிக், சாய்ம் ஆயுப் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.

    ஐந்து விக்கெட் வீழ்த்தி கம்மின்ஸ்

    ஷான் மசூத் 35 ரன்னிலும், பாபர் அசாம் 26 ரன்னிலும் ஆட்டமிழக்க 96 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. சிறப்பாக ஆடிவந்த முகமது ரிஸ்வான் 88 ரன்னில் அவுட் ஆனார். ஆகா சல்மான் 53 ரன்னிலும் அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் 227 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது.

    கடைசி விக்கெட்டுக்கு ஆமிர் ஜமால் உடன் மிர் ஹம்சா ஜோடி சேர்ந்தார். மளமளவென விக்கெட்டை வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் கடைசி விக்கெட்டை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தானை 250 ரன்னுக்குள் சுருட்டி விடலாம் என நினைத்தனர்.

    ஆனால், ஹம்சா ஒரு பக்கம் நிலைத்து நிற்க மறுபக்கம் ஜமால் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தார். கம்மின்ஸ், ஸ்டார்க் வேகத்தையும், லயனின் சுழற்பந்தையும் இந்த ஜோடி திறமையாக எதிர்கொண்டது. இதனால் பாகிஸ்தானின் ஸ்கோர் 250, 275, 300 என உயர்ந்து கொண்டே சென்றது. அதேவேளையில் ஜமால் அரைசதத்தை கடந்தார்.

    என்னடா... கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லையே... என ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் விரக்தியடைந்தனர்.

     

    அரைசதம் அடித்த ஜமால்

    ஜமால் சதம் அடிப்பார்... பாகிஸ்தான் 325 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்த்த நிலையில் நாதன் லயன் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். ஜமால் 82 ரன்னில் அவரது பந்தில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 77.1 ஓவரில் 313 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது.

    ஜமால்- ஹம்சா ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 86 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பேட் கம்மின்ஸ் ஐந்து விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்க உள்ளது.
    • உங்களுக்கு அது போன்ற பை தான் வேண்டும் என நினைக்கிறேன்., என்னிடம் ஒரு பை உள்ளது, அதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் கடைசி போட்டி சிட்னியில் நாளை நடைபெற உள்ளது. அதற்காக மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு சென்ற போது இடையே அவரது பை காணாமல் போயுள்ளது.

    அந்தப் பையில் டேவிட் வார்னரின் டெஸ்ட் போட்டிகளில் அணியும் தொப்பி உள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளுக்கு என பிரத்யேகமாக அளிக்கப்படும் பச்சை நிற தொப்பி அவர்களுக்கு மிகப் பெரும் கவுரவமான ஒன்று.

    திருடப்பட்ட அந்த பையில் அவரது இரண்டு பச்சை நிற தொப்பி உள்ளது. அதில் ஒன்று அவருக்கு முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன போது அளிக்கப்பட்டது. அதை அணிந்து தன் கடைசி போட்டியில் ஆட வேண்டும் என நினைத்து இருந்த வார்னர் தற்போது சோகத்தில் இருக்கிறார்.

    இந்த நிலையில் முகம் தெரியாத திருடனிடம் டேவிட் வார்னர் உருக்கமான வேணடுகோளை விடுத்து கோரிக்கை வைத்து இருக்கிறார் வார்னர்.

    அவர் தனது பையை திரும்ப ஒப்படைக்குமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். "என் லக்கேஜில் இருந்து என் பையை யாரோ ஒருவர் எடுத்து இருக்கிறார்கள். அதில் என் குழந்தைகளுக்கு வாங்கிய சில பரிசுப் பொருட்கள் உள்ளன. அதில் தான் என் பச்சை நிற தொப்பியும் உள்ளது. அது எனக்கு உணர்வுரீதியான ஒன்று. என் கடைசி டெஸ்ட் போட்டியில் அதை அணிந்து செல்ல வேண்டும் என விரும்புகிறேன். உங்களுக்கு அது போன்ற பை தான் வேண்டும் என நினைக்கிறேன்., என்னிடம் ஒரு பை உள்ளது, அதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.

    இவ்வாறு வார்னர் கூறினார்.

    • 2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.

    2-வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்மித் - பாபர் அசாம் குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைதானத்தில் களமிறங்கும் பேட்டர்கள் ஸ்டெம்ப் பக்கத்தில் நின்று லெக் ஸ்டெம்ப் மற்றும் நடு ஸ்டெம்ப் திசையில் சரியாக நிற்கிறேனா என்பதை நடுவரிடம் கேட்டு அதற்கு ஏற்றார்போல் மார்க் பண்ணுவார்கள்.

    அந்த வகையில் பாபர் அசாம் ஆடுகளத்திற்கு வந்து ஸ்டெம்ப் பக்கத்தில் நின்று நடுவரிடம் கேட்பார். அப்படி எடுக்கும் போது ஸ்டெம்ப் பின்னால் நின்ற ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஏதோ (சரியாவே எடுக்க தெரியல என்பது போல) கூறினார். உடனே பாபர் அசாம் பேட்டை நீட்டி ஏதோ (நீ எடுத்து கொடுக்கிறாயா என்பது போல) கூறினார். உடனே ஸ்மித் கையெடுத்து கும்பிட்டு ஆள விடு சாமி என்பது போல சென்றார்.

    பேட்டர்கள் இப்படி எடுக்க வரும் போது எல்லாம் ஸ்மித் இது மாதிரி எதாவது சொல்லுவது வழக்கமாக கொண்டுள்ளார். அதற்கும் மேலாக அவர்கள் மார்க் செய்து வச்ச இடத்தை தடம் தெரியாத மாதிரி அழித்து விடவும் செய்துள்ளார். அந்த வகையில் இது நடந்துள்ளது. ஆனால் இது சற்று வித்தியாசமாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    • ஆஸ்திரெலியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
    • ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.

    பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்திலும் 2-வது டெஸ்ட்டில் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    2 டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. பாகிஸ்தான் அணி 1999-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் இருந்து ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதில்லை. அங்கு தொடர்ந்து 16 டெஸ்டுகளில் தோற்று இருக்கிறது.

    ஒரு நாட்டில் தொடர்ச்சியாக அதிக டெஸ்டுகளில் தோற்று பரிதாபத்திற்குரிய அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது. இதற்கு முன்பு வங்காளதேசம் சொந்த மண்ணில் தொடர்ந்து 13 டெஸ்டில் தோற்று இருந்தது.

    • 84 டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
    • 121 ஒருநாள் போட்டிகளில் 236 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் (2 மற்றும் 3) வீழ்த்திய ஸ்டார்க், 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 263 போட்டியில் 651 விக்கெட்டுகள் சாய்த்து சாதனைப் படைத்தார்.

    சர்வதேச போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சு 28 ரன் கொடுத்து 6 விக்கெட் சாய்த்ததாகும். 23 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இரண்டு முறை 10 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

    651 விக்கெட்டுகள் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 4-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வார்னே 1001 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளது.

    ஸ்டார்க் 84 டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாககும். டெஸ்ட் போட்டியில் 14 முறை ஐந்து விக்கெட், இரண்டு முறை 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    121 ஒருநாள் போட்டிகளில் 236 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும். 9 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் 58 போட்டிகளில் 73 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • பாகிஸ்தான் அணி 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிறகு 187 ரன்கள் எடுத்திருந்தது. அலேக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய அலேக்ஸ் கோரி 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா 316 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர்கள் சபீக் 4 ரன்னிலும் இமாம் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேப்டன் மசூத்- பாபர் அசாம் ஜோடி நிதானமாக விளையாடினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மசூத் 60 ரன்களில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து பாபர் அசாம் 41 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சகீல் 24, ரிஸ்வான் 35, சல்மான் 50, ஜமால் 0, அஃப்ரிடி 0, ஹம்சா 0 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    இதனால் பாகிஸ்தான் அணி 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 54 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
    • 2-வது இன்னிங்சில் 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையே மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிறகு 187 ரன்கள் எடுத்திருந்தது. அலேக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய அலேக்ஸ் கோரி 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா 316 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் 8 ரன்கள் எடுப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது. 7 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்துள்ளது.

    • இன்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
    • அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 264 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், நாதன் லயன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 54 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத திரையில் காதலர்கள் மடியில் படுத்து இருப்பது போன்ற காட்சி வெளியானது. இதனை பார்த்த அந்த காதலர்கள் முகத்தை மூடிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நல்ல வேலை செய்தீர்கள் கேமரான் மேன், கொடுத்த வேலைக்கு மேல் கூடுதல் வேலை பார்த்துள்ளீர்கள், போட்டியை காண வந்தீர்களா காதல் செய்ய வந்தீர்களா, என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். பல ரசிகர்கள் போட்டியை வீடியோ எடுக்க சொன்னா அப்பாவி காதலர்களை வீடியோ எடுத்து காட்டிக் கொடுத்து வீட்டீர்களே கேமரா மேன் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • மிட்செல் மார்ஷ் 96 ரன்களிலும் ஸ்மித் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
    • பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி, ஹம்சா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 318 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து இருந்தது.முகமது ரிஸ்வான் 26 ரன்னும், அமீர் ஜமால் 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 264 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியா ஸ்கோரை விட 54 ரன் குறைவாகும். அப்துல்லா ஷபீக் 62 ரன்னும், கேப்டன் ஷான் மசூத் 54 ரன்னும், முகமது ரிஸ்வான் 42 ரன்னும், அமீர் ஜமால் 33 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். நாதன் லயனுக்கு 4 விக்கெட் டும், ஹாசல்வுட்டுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தது.

    54 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆஸ்திரேலிய அணி 16 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து திணறியது.

    உஸ்மான் கவாஜா ரன் எதுவும் எடுக்காமலும், லபுஷேன் 4 ரன்னிலும் ஷகீன் ஷா அப்ரிடி பந்தில் ஆட்டம் இழந்தனர். வார்னர் 4 ரன்னிலும், டிரெவிஸ் ஹெட் ரன் எதுவும் எடுக்காமலும் மிர் ஹம்சா பந்தில் அவுட் ஆனார்கள்.

    இந்நிலையில் 5-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் சுமித்-மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ஷ் 96 ரன்னில் அவுட் ஆனார். 3-ம் நாள் ஆட்டம் முடியும் நேரத்தில் ஸ்மித் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனால் 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி, ஹம்சா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ×