search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAvIND"

    • இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டுள்ளது.
    • மொத்தமாக 33 விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    கேப்டவுன்:

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் ஜனவரி 3-ந் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 34.5 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 36.5 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 2-வது இன்னிங்சில் 12 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டி 2 நாட்கள் முழுவதும் முடியும் முன்னரே முடிவடைந்தது.

    147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஓவர்களில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் முடிந்துள்ளது. இந்தப் போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டது. மொத்தமாக 33 விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    இந்த பிட்ச் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா -இந்தியா மோதிய 2-வது டெஸ்ட் போட்டி நடந்த மைதான பிட்ச் திருப்தியற்றது என ஐசிசி நிர்ணயம் செய்துள்ளது. ஐசிசி-யின் பிட்ச் மற்றும் அவுட் பீல்ட் கண்காணிப்பு செயல்முறைகளின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது.
    • இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

    துபாய்:

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி தாமதமாக பந்து வீசியதால் 2 புள்ளிகளை இழந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்தது. மற்றொன்று டிரா ஆனது. இதன்மூலம் 26 புள்ளிகள் பெற்று 54.16 சதவீதத்துடன் முதலிடம் பெற்றது.

    இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா 2 டெஸ்டில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் 50 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

    நியூசிலாந்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், மற்றொரு போட்டியில் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகள் மற்றும் 50 சதவீதத்துடன் மூன்றாவது இடம் பிடித்தது.

    ஆஸ்திரேலியா 4-வது இடத்திலும், வங்காளதேசம் 5-வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இலங்கை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
    • இந்த வெற்றிக்கு எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே காரணம் என்றார் ரோகித் சர்மா.

    கேப் டவுன்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிவடைந்தது.

    இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:

    இந்த வெற்றிக்கு எங்களது அணியின் வேகப்பந்து வீச்சார்களான சிராஜ், பும்ரா, முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சே காரணம்.

    செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியில் செய்த தவறை நாங்கள் புரிந்துகொண்டு அதிலிருந்து சில பாடங்களைக் கற்று தற்போது மிகச் சிறப்பாக மீண்டு வந்துள்ளோம். அதிலும் குறிப்பாக, எங்களது அணியின் பவுலர்கள் மிகச்சிறப்பாக பந்து வீசினர்.

    சிராஜ் இந்தப் போட்டியில் அற்புதமாக பந்து வீசினார். அவர் இதேபோன்று எப்பொழுதுமே ஒரு மிகச்சிறப்பான ஸ்பெல்லை அணிக்காக வழங்கி வருகிறார்.

    நாங்கள் முதல் இன்னிங்சில் 100 ரன்கள் வரை முன்னிலை பெற்றது மகிழ்ச்சி. ஆனாலும் கடைசி 6 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இதுபோன்ற குறுகிய போட்டிகளில் இப்படித்தான் நடக்கும். இருந்தாலும் அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர். ஆசிய கண்டத்திற்கு வெளியே நாங்கள் பல போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதில் நமது அணி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

    இந்த தென் ஆப்பிரிக்க தொடரிலும் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. இந்த தொடரை நம்மால் கைப்பற்ற முடியவில்லை என்றாலும் சமனில் முடித்ததை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா ஒரு பலமான அணி எப்போதுமே நமக்கு அவர்கள் சவால் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார்கள். இந்த தொடரில் இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடியது என தெரிவித்தார்.

    • 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் குறைந்த ஓவர்களில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
    • இந்தப் போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கேப் டவுன்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 34.5 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    98 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 36.5 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார்.

    இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், முகேஷ் குமார் 2 விக்கெட்டும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 2வது இன்னிங்சில் 12 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலையில் முடிந்தது.

    ஆட்ட நாயகன் விருது முகமது சிராஜுக்கும், தொடர் நாயகன் விருது பும்ரா மற்றும் டீன் எல்கர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஓவர்களில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் முடிந்துள்ளது.

    இந்தப் போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 107 ஓவர்களே வீசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா வெற்றி பெற 79 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா.
    • இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கேப் டவுன்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. விராட் கோலி 46 ரன்னும், ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர். 7 வீரர்கள் டக் அவுட்டாகினர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிரம் 36 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இந்தியா சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், முகேஷ் குமார் 2 விக்கெட்டும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 28 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 10 ரன்னும், விராட் கோலி 12 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 1-1 என சமனிலையில் முடித்தது.

    • தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியாவின் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    கேப் டவுன்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. விராட் கோலி 46 ரன்னும், ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர். 7 வீரர்கள் டக் அவுட்டாகினர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிரம் 36 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

    இந்தியா சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மார்கிரம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், முகேஷ் குமார் 2 விக்கெட்டும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2-ம் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.

    கேப் டவுன்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து வந்த வீரர்கள் விரைவில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் விராட் கோலி பொறுப்புடன் ஆடி 46 ரன்னில் அவுட்டானார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்நிலையில், 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. டீன் எல்கர் 12 ரன்னும், டி சோர்ஜி ஒரு ரன்னும், ஸ்டப்ஸ் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிரம் 36 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

    இந்தியா சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 55 ரன்களில் சுருண்டது.
    • இந்தியாவின் முகமது சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    கேப் டவுன்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது சிராஜ் அசத்தலாக பந்துவீசி முன்னணி வீரர்களை வெளியேற்றினார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் யான்சென் விக்கெட்டை எடுக்க விராட் கோலி சிராஜுக்கு யோசனை தெரிவித்தார். இதை செயல்படுத்திய சிராஜ் அடுத்த பந்தில் யான்சென் விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, விராட் கோலியின் டெஸ்ட் போட்டிகளின் அனுபவமே யான்சென் விக்கெட் எடுக்க காரணமாக இருந்தது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 55 ரன்களில் சுருண்டது.
    • தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 153 ரன்னில் சுருண்டது.

    கேப் டவுன்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து வந்த வீரர்கள் விரைவில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் விராட் கோலி பொறுப்புடன் ஆடி 46 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 55 ரன்களில் சுருண்டது.

    கேப் டவுன்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்திய அணியில் அஸ்வின், ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு ஜடேஜா, முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
    • முதல் டெஸ்ட் போட்டியின்போது தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் இடுப்பு பகுதியில் காயம் அடைந்தார்.

    கேப்டவுன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1 -0 என முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியின்போது தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி இடுப்பு பகுதியில் காயம் அடைந்தார். எனினும் காயத்தை பொருட்படுத்தாமல் அவர் பந்து வீசினார். இதனால் காயம் தீவிரமானது. இதன்காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் அவரை அணியில் இருந்து விடுவித்துள்ளார்.

    எனினும் அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது 

    • முதல் டெஸ்ட் போட்டியில் முதுகுப்பிடிப்பு காரணமாக ரவீந்திர ஜடேஜா இடம் பெறவில்லை.
    • ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக தான் ஜடேஜா இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது கடந்த 26 ஆம் தேதி செஞ்சூரியனில் நடந்தது. இதில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்தது.

    இதில், டீன் எல்கர் அதிகபட்சமாக 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸ் செய்தது. ஆனால், இதில், தென் ஆப்பிரிக்கா பவுலர்களின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக விராட் கோலி மட்டுமே 76 ரன்கள் எடுக்க, இந்திய அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

    இதுவரையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒருமுறை கூட கைப்பற்றவில்லை. ஆனால், இந்த முறை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலேயும் இந்திய அணி கோட்டைவிட்டது. 2-வது போட்டியில் எப்படியும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் முதுகுப்பிடிப்பு காரணமாக இடம் பெறாத ரவீந்திர ஜடேஜா, 2-வது போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக தான் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. ஜடேஜா தற்போது கேப்டவுனில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    ×