என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AB de Villiers"

    • சில வீரர்கள் முன்னாள் வீரர்களுடன் இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள்.
    • சிலர் இந்திய அணிக்காக விளையாடாதவர் பயிற்சியாளராக இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதில் கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான தோல்வி இதுவாகும்.

    கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-3 என்ற கணக்கில் முதல்முறையாக பறிகொடுத்தது. உள்நாட்டில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா டெஸ்ட் தொடரை தாரைவார்த்தது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். தோல்விக்கு அவர் கூறிய விளக்கமும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    அதே நேரத்தில் தற்போதைக்கு கம்பீரை நீக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவிடம் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில் கம்பீர் உணர்ச்சிவசப்படும் நபர் என்பதால் அவர் பயிற்சியாளராக இருப்பது இந்திய அணிக்கு நல்லதல்ல என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணியின் தோல்வி தர்மசங்கடமானதும், கடினமானதுமானது. தலைமையைப் பொறுத்தவரை கவுதம் கம்பீர் எப்படிப்பட்டவர் என்பதை நான் அறிவேன். அவர் ஒரு உணர்ச்சிவசப்படும் வீரர். இத்தகைய நபர் ஓய்வறையில், அதுவும் பயிற்சியாளராக இருப்பது நல்ல விஷயமல்ல.

    இப்படிக் கூறும்போது, திரைக்குப் பின்னால் அவர் அப்படித்தான் இருக்கிறார் என்று சொல்வதாக ஆகாது. சில வீரர்கள் முன்னாள் வீரர்களுடன் இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள். சிலர் இந்திய அணிக்காக விளையாடாதவர் பயிற்சியாளராக இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள். கம்பீருக்கு பயிற்சியாளராகும் அனுபவம் உள்ளது.

    கம்பீர் குறித்த கேள்வி கடினமானது. தென் ஆப்பிரிக்க அணியையே எடுத்துக் கொள்ளுங்கள். தற்போதைய பயிற்சியாளரான சுக்ரியுடன் நான் பணியாற்றியதில்லை. காம்பீர், ரியான் டென் டஸ்கேட், மோர்னே மோர்கெல் ஆகியோருடன் இந்திய ஓய்வறையில் நான் இருந்ததில்லை. வெளியில் பார்க்க இது ஒரு வலுவான கூட்டணி போல் தெரிகிறது.

    ஆனால் திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யார் அறிவார்கள்? ஒவ்வொரு வீரருக்கும் பயிற்சியாளர் என்பவர் வெவ்வேறு விதமாகவே தெரிப்பார். முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் தலைமையின் கீழ் நான் விளையாட விரும்புவேன். அவரும் கம்பீர் போலத்தான். முன்னாள் வீரர்களின் அனுபவம் நமக்கு உதவும், சில வீரர்கள் அதனால் சவுகரியமாக உணர்வார்கள். அது அவர்களுக்கு உத்வேகமாகவும் இருக்கும். ஆனால் மற்ற சிலருக்கு அது உத்வேகமாக இருக்காது. எப்படியிருந்தாலும் உணர்ச்சிவசப்படும் நபர் பயிற்சியாளராக இருப்பது நல்லதல்ல" என்று கூறினார்.

    • பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பை வென்றது.
    • இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அமைச்சரின் கையால் கோப்பையை வாங்க மறுத்துவிட்டனர்.

    ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.

    இந்த விவகாரம் குறித்து பேசிய நக்வி, "ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, கோப்பையை இந்தியாவிடம் தர தயாராகவே உள்ளேன். கோப்பையை பெற BCCI ஆர்வமாக இருந்தால் ACC அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளவும்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க மாட்டோம் என்று அறிவித்த இந்திய அணி வீரர்கள், அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அமைச்சரின் கையால் கோப்பையை வாங்க மறுத்துவிட்டனர்.

    ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அமைச்சர் கையால் வாங்க மறுத்த, இந்திய வீரர்களின் செயலை சுட்டிக்காட்டி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் கடுமையாக விமர்சித்தார்.

    இதுகுறித்து பேசி டிவில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "கோப்பையை யார் வழங்குகிறார்கள் என்பது இந்திய அணிக்கு நெருடலாக உள்ளது. விளையாட்டை விளையாட்டாக மட்டும் தான் பார்க்கவேண்டும். விளையாட்டு என்பது அனைவருக்குமானது, அத்துடன் அரசியலை இணைப்பது மிகவும் ஆபத்தானது

    இந்திய அணி வீரர்களின் செயல் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் எதிர்காலத்தில் அவர்கள் விஷயங்களை சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன். இது விளையாட்டிற்கு , விளையாட்டு வீரர்களுக்கும் மிகவும் கடினமான சூழ்நிலையை உருவாக்குகிறது. அதை நான் பார்க்க விரும்பவில்லை. இறுதியில் அது மிகவும் மோசமாக இருந்தது" என்று தெரிவித்தார். 

    • மாறுபட்ட ரோல் மூலமாக மீண்டும் ஐபிஎல் தொடரில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டாகலாம்.
    • என்னுடைய இதயம் ஆர்சிபி-யேடு இருக்கிறது. எப்போதும் இருக்கும்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய தலைசிறந்த வீரர்களில் ஒருவர் தென்ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவர் ஆர்சிபி அணிக்காக 157 போட்டிகளில் விளையாடி 4522 ரன்கள் குவித்துள்ளார்.

    எதிர்காலத்தில் ஆர்சிபி அணியின் ஆலோசகர் அல்லது பயிற்சியாளராக பதவிக்கான வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்வேன். அதன்மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    மாறுபட்ட ரோல் மூலமாக மீண்டும் ஐபிஎல் தொடரில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டாகலாம். தொழில்முறை திறனுடன், சீசன் முழுவதும் ஈடுபடுவது உண்மையிலேயே ட்ரிக்கியானதாக இருக்கும். அந்த நாளும் முடிந்து விட்டன என நம்புகிறேன். என்னுடைய இதயம் ஆர்சிபி-யோடு இருக்கிறது. எப்போதும் இருக்கும். பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பதவி எனக்கானது என்று ஆர்சிபி உணர்ந்தால், என்னுடைய நேரம் வரும்போது, நான் தயாராக இருப்பேன். இது நிச்சயமாக ஆர்சிபிக்காக இருக்கும்.

    இவ்வாறு டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.

    டி வில்லியர்ஸ் ஆர்சிபி அணியில் 2011ஆம் ஆண்டு இணைந்தார். அதற்கு முன்னதாக 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கும்போது டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணியில் இடம் பிடித்திருந்தார்.

    • முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.
    • 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 153 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன.

    நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 41 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.அவரது ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி பெற்றது.

    அந்த அணி 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 153 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் 51 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். இதில் 15 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் தனது 41-வது வயதிலும் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

    • மைதானத்திற்கு சென்று முகத்தில் கொஞ்சம் புன்னகையுடன் ஜாலியாக விளையாடுங்கள்.
    • நான் இங்கே இருந்து உங்களை பார்த்து கொண்டிருப்பேன்.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கான இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் சம்பலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் மைதானத்திற்கு சென்று முகத்தில் கொஞ்சம் புன்னகையுடன் ஜாலியாக விளையாடுங்கள் என விராட் கோலிக்கு ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கோலிக்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான். மைதானத்திற்கு சென்று முகத்தில் கொஞ்சம் புன்னகையுடன் ஜாலியாக விளையாடுங்கள். நான் இங்கே இருந்து உங்களை பார்த்து கொண்டிருப்பேன். கோப்பையை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்.

    என டிவில்லியர்ஸ் கூறினார்.

    • ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்களைக் குவித்த மிடில் ஆர்டர் வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் படைத்தார்.
    • நடப்பு ஐ.பி.எல் தொடரில் சூர்யகுமார் யாதவ் 717 ரன்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இந்த போட்டியில் ஏபி டி வில்லியர்ஸின் 9 ஆண்டு கால சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.

    இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 15 ரன்களை கடந்த போது, ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் அல்லாத வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    கடந்த 2016ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 687 ரன்களைக் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் சூர்யகுமார் யாதவ் 717 ரன்கள் அடித்து இந்த சாதனையை முறியடித்துள்ளார்..

    ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த மிடில் ஆர்டர் வீரர்

    சூர்யகுமார் யாதவ் - 717 ரன்கள் (2025)

    ஏபி டி வில்லியர்ஸ் - 687 ரன்கள் (2016)

    ரிஷப் பண்ட் - 684 ரன்கள் (2018)

    கேன் வில்லியம்சன் - 622 ரன்கள் (2018)

    • குவாலிபையர் 1 சுற்றில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
    • ஈ சாலா கப் நம்தே என்ற முழக்கம் இணையத்தில் பல வருடங்களாக கேலுக்குள்ளாகி வருகிறது.

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. குவாலிபையர் 1 சுற்றில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் இந்தாண்டு கண்டிப்பாக பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    "ஈ சாலா கப் நம்தே" என்ற ஆர்.சி.பி. ரசிகர்களின் முழக்கம் உண்மையாக இன்னும் ஒரு போட்டி தான் மீதமுள்ளது. ஈ சாலா கப் நம்தே என்ற முழக்கம் இணையத்தில் பல வருடங்களாக கேலுக்குள்ளாகி வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டு ஆர்.சி.பி. அணிதான் கோப்பையை வெல்லும் என்று ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "பெங்களூரு ரசிகர்கள் கூறும் வாசகத்தை (ஈ சாலா கப் நம்தே) சொல்ல வேண்டாம் என விராட் கோலி என்னிடம் கூறியுள்ளார். ஆனால் நமக்கான நேரம் வந்துவிட்டதாக நம்புகிறேன் ஆர்.சி.பி. அணி முதல்முறையாக கோப்பையை வெல்லப்போகிறது" என்று தெரிவித்தார். 

    • 2015-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 16 பந்தில் டி வில்லியர்ஸ் அரைசதம் அடித்திருந்தார்.
    • ஜெயசூர்யா, குசால் மெண்டிஸ், கப்தில், லிவிங்ஸ்டன் 17 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர்.

    அயர்லாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி டுப்ளினில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் 8ஆவது வீரராக களம் இறங்கிய மேத்யூ போர்டு 19 பந்தில் 2 பவுண்டரி, 8 சிக்சருடன் 58 ரன்கள் விளாசினார். அவர் 16 பந்தில் 1 பவுண்டரி, 8 சிக்சருடன் அரைசதம் அடித்தார். பவுண்டரி மற்றும் சிக்சர் மூலமாகவே அரைசதம் விளாசினார்.

    இதன்மூலம் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டி வில்லியர்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார். டி வில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2015-ல் 16 பந்தில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். 10 வருடங்கள் கழித்து அவரது சாதனையை மேத்யூ போர்டு சமன் செய்துள்ளார்.

    ஜெயசூர்யா (1996) பாகிஸ்தானுக்கு எதிராகவும், குசால் பெரேரா (2015) பாகிஸ்தானுக்கு எதிராகவும், மார்ட்டின் (2015) கப்தில் இலங்கைக்கு எதிராகவும், லிவிங்ஸ்டன் (2022) நெதர்லாந்துக்கு எதிராகவும் 17 பந்தில் அரைசதம் அடித்து 2ஆவது இடத்தில் உள்ளனர்.

    • விராட் இருக்கும்போது நீங்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை.
    • சிஎஸ்கே-க்கு எதிராக விளையாடியபோது கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விராட் கோலி விளையாடினார்.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது வரை சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் ஆகிய 3 அணிகள் வெளியேறி உள்ளது. மீதமுள்ள 7 அணிகள் 4 இடங்களுக்கு போட்டி போட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரிலும் விராட் கோலியின் ஸ்ரைக் ரேட் குறைவாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் மீடியாவிலும் அதுபோன்ற கருத்துக்கள் வெளியாகியது.

    இந்நிலையில் விராட் கோலி ஆர்சிபி அணியின் Mr. Safety என அந்த அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் எப்போதும் ஆர்சிபி-க்காக இருந்தார். அவர்தான் ஆர்சிபி அணியின் Mr. Safety. விராட் இருக்கும்போது நீங்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை.

    நான் பத்திரிகை நண்பர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். உங்களை எனக்கு பிடிக்கும். ஆனால் விராட் மிகவும் மெதுவாக விளையாடுகிறார் என கூறும்போது ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள், சமீபத்தில் சிஎஸ்கே-க்கு எதிராக விளையாடியபோது கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விராட் கோலி விளையாடினார்.

    என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

    • ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் தொடர்ந்து 5 அரைசதங்களை சாய் சுதர்சன் அடித்துள்ளார்.
    • சின்னசாமி மைதானத்தில் தொடர்ச்சியாக 5 அரை சதங்களை ஏபி டிவில்லியர்ஸ் அடித்துள்ளார்.

    நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. குஜராத் அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும்.

    இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சாய் சுதர்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் தொடர்ந்து 5 அரைசதங்களை சாய் சுதர்சன் அடித்துள்ளார்.

    இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஒரே மைதானத்தில் தொடர்ந்து அதிக அரை சதங்கள் அடித்த ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை சாய் சுதர்சன் சமன் செய்தார்.

    பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடர்ச்சியாக 5 அரை சதங்களை ஏபி டிவில்லியர்ஸ் அடித்துள்ளார்.

    • பெங்களூரு அணிதான் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாட அதிக தூரம் பயணிக்கும் அணியாக உள்ளது.
    • பெங்களூரு அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள்

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    முதல் போட்டியில் கொல்கத்தாவை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்திய பெங்களூரு, 2 ஆவது போட்டியில் சென்னையை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்தியது.

    இப்போது 3 ஆவது போட்டியில் குஜராத் அணியை பெங்களூரு எதிர்கொள்கிறது,. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    பெங்களூரு அணிதான் நடப்பு ஐ.பி.எல். தொடரில் விளையாட அதிக தூரம் பயணிக்கும் அணியாக உள்ளது.

    லீக் போட்டிகளில் மொத்தம் 42 மணி நேரம் விளையாடும் நிலையில், அந்த அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள். அதாவது ஒரு போட்டி பெங்களூரில் அடுத்த போட்டி வெளியூரில் என ஆர்.சி.பி. அணி விளையாடும் போட்டிகளில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆர்.சி.பி. அணியின் போட்டி அட்டவணை பைத்தியக்காரத்தனமாக உள்ளது என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    ஆர்.சி.பி. அணி ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கியுள்ளது. ஆர்.சி.பி. அணியின் போட்டி அட்டவணையை பாருங்கள். ஒருபோட்டி பெங்களூரில், அடுத்த வெளியூரில், மறுபடியும் பெங்களூரில் அடுத்தப்போட்டி வெளியூரில்.. இது பைத்தியக்காரத்தனமாக உள்ளது.

    இதுபோன்ற ஒரு சவாலான சூழ்நிலையை நான் பார்த்ததில்லை. ஆனால் அது அவர்களின் பலமாகவும் இருக்கலாம்.

    கொல்கத்தாவில் நடப்பு சாம்பியன் கே.கே.ஆர். அணியை வீழ்த்தினார்கள். சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தினார்கள். தற்போது நல்ல ரன்ரேட்டில் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதல் இடத்தில உள்ளது" என்று தெரிவித்தார்.

    • கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தியிருந்தது.
    • 2008-க்குப் பிறகு முதன்முறையாக சேப்பாக்கத்தில் நேற்று சிஎஸ்கே அணியை வீழ்த்தியது.

    ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நட்சத்திர வீரர்களுடன் விளையாடிய ஆர்சிபி ஒருமுறை கூட சாம்பியன் கோப்பையை வென்றது கிடையாது. அந்த அணி தலைசிறந்த பேட்ஸ்மேன்களை கொண்டிருக்கும். ஆனால், பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கமாட்டார்கள்.

    பேட்டிங், பவுலிங், பீல்டிங் என சமநிலையற்ற ஒரு அணியாகத்தான் திகழும். ஆனால் இந்த சீசனில் ஆர்சிபி அணியை பார்க்கும்போது சிறந்த பேலன்ஸ் கொண்ட அணியாக திகழ்கிறது. தொடக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோலி உள்ளனர். அதன்பின் தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், டிம் டேவிட், லிவிங்ஸ்டன் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதேவேளையில் பந்து வீச்சிலும் ஹெசில்வுட், புவி, யாஷ் தயால் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சீசன்களை விட தற்பேதைய பேலன்ஸ் கொண்ட ஆர்சிபி அணி 10 மடங்கு சிறந்தது என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    கடந்த சீசன்களுடன் ஒப்பிடும்போது, தற்போதைய பேலன்ஸ் கொண்ட ஆர்சிபி அணி 10 மடங்கு சிறந்தது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது, ஆர்சிபி அணிக்கு பேலன்ஸ் தேவை எனப் பேசியிருந்தேன். இது பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் அல்லது பீல்டர்களை பற்றியது கிடையாது. ஐபிஎல் அணிகள் மற்றும் ஆப்சன்களில் சமநிலையை கொண்டுள்ளது பற்றியது.

    நான் புவியை பார்த்தேன். அவர் விளையாட போவதில்லை என்று நினைத்தேன். ஆனால் சிஎஸ்கே அணிக்கெதிராக களம் இறங்கினார். இதுபோன்ற அட்டகாசமான மாற்று வீரர்களைத்தான் அணி விரும்பும். முதல் போட்டியில் விளையாடவில்லை. 2ஆவது போட்டியில் வேறொரு வீரருக்காக களம் இறக்கப்பட்டார். இதுபோன்ற பேலன்ஸ், பந்து வீச்சில் பலம் அணிக்கு தேவையானது. ஆர்சிபிக்கு சிறந்த தொடக்கம் கிடைத்துள்ளது. இது உண்மையிலேயே சிறந்தது.

    இவ்வாறு ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    ×