search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AB de Villiers"

    • விராட் கோலி ஆர்.சி.பி அணிக்காக ஒரு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
    • தொடக்க சில ஓவர்களில் டு பிளஸ்சிஸ் அதிரடியாக விளையாடி ரிஸ்க் எடுக்க வேண்டும்.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தடுமாற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

    குறிப்பாக இந்த சீசனில் பெரும்பாலான அணிகள் தங்களுடைய சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றி கண்டு வருகிறது. ஆனால் ஆர்.சி.பி. சொந்த மண்ணில் விளையாடிய கொல்கத்தா மற்றும் லக்னோவுக்கு எதிராக தோல்வியை பதிவு செய்துள்ளது.

    இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் 182 ரன்களை இலக்காக கொண்டு சேசிங் செய்த பெங்களூருவுக்கு விராட் கோலி, கேப்டன் டு பிளிஸ்சிஸ், கேமரூன் க்ரீன், கிளன் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். இதனால் பெங்களூரு அந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த நிலையில் ஆர்.சி.பி. அணியின் முன்னாள் வீரரான ஏபி டிவில்லியர்ஸ், தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள பெங்களூரு அணி வெற்றி பெற அறிவுரை வழங்கி இருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    விராட் கோலி ஆர்.சி.பி அணிக்காக ஒரு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று நான் நம்புகிறேன். அந்த அணி நடு ஓவர்களில் கொஞ்சம் தடுமாறி வருகிறது. இதனால் முதல் ஆறு ஓவர்களை விராட் கோலி வெற்றிகரமாக கடந்து நடு ஓவர்களிலும் அவர் விளையாட வேண்டும். அதுதான் தற்போது ஆர்சிபி அணிக்கு மிகவும் முக்கியம்.

    இதனால் தொடக்க சில ஓவர்களில் டு பிளஸ்சிஸ் அதிரடியாக விளையாடி ரிஸ்க் எடுக்க வேண்டும். அதன் பிறகு விராட் கோலி தம்மால் முடிந்தவரை ஆறாவது ஓவரிலிருந்து 15 வது ஓவர் வரை களத்தில் நின்று ரன் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஆர்.சி.பி அணியின் மற்ற வீரர்களும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பார்கள். இப்படி நடந்தால் ஆர்.சி.பி. அணி வேற லெவலாக மாறிவிடும்.

    ஆர்சிபி அணிக்கு இது மோசமான தொடக்கம் கிடையாது. அதேசமயம் நல்ல தொடக்கமும் இல்லை. தற்போது அவர்கள் நன்றாக விளையாடி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற வேண்டும். என்னைக் கேட்டால் ஆர்.சி.பி அணி சின்னசாமி மைதானத்தில் விளையாடுவதை விட வேறு மைதானத்தில் விளையாடும்போது தான் அவர்களுக்கு வெற்றி மற்றும் அதிர்ஷ்டமும் கிடைக்கின்றது. இதனால் ஆர்.சி.பி. அடுத்தடுத்து தற்போது வெளி ஊர்களில் விளையாட உள்ளதால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்

    இவ்வாறு ஏபிடி கூறினார்.

    • இறுதி போட்டிக்கு வந்ததற்காக 2 அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.
    • நீங்கள் விளையாடும் ஒவ்வொரு பந்தையும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.

    மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. மகளிர் ஐபிஎல் தொடரில் இம்முறை புதிய சாம்பியனாக சாதனை படைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லுமாறு மகளிர் ஆர்சிபி அணிக்கு ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இன்று நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 2 பவரான அணிகள் மோதுகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

    அதைப் பார்ப்பதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை. இறுதி போட்டிக்கு வந்ததற்காக 2 அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். தனி நபராகவும் அணியாகவும் சேர்ந்து இத்தொடரில் அசத்திய இந்த இரண்டு அணிகளும் இறுதிபோட்டிக்கு வருவதற்கு தகுதியானவர்கள்.

    ஆர்சிபி அணிக்காக ஒரு சிறப்பு ஆதரவு தருகிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். கோப்பையை வீட்டுக்கு கொண்டு வந்து இந்த மாதத்தின் பிற்பகுதியில் துவங்கும் ஐபிஎல் தொடரில் ஆடவர் ஆர்சிபி அணிக்கு உத்வேகத்தை கொடுங்கள்.

    வாழ்த்துக்கள் நண்பர்களே. நீங்கள் விளையாடும் ஒவ்வொரு பந்தையும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.

    என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

    முன்னதாக மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி அணியிடம் பெங்களூரு தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் 2023 சீசனின் முடிவில் டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2024 சீசனில் விளையாட போகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனையொட்டி தாமதமாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்த நிலையில் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அவர் பேட்டிங் செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    ஐபிஎல் 2023 சீசனின் முடிவில் டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு பெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2024 சீசனில் விளையாட போகிறேன் என்று அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக என் மீது அன்பை பொழியும் ரசிகர்களுக்கு நான் அளிக்கும் பரிசு இது என்று அப்போது அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் கேப்டன் டோனியின் ஓய்வு குறித்து தென் ஆப்ரிக்க அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருது தெரிவித்துள்ளார்.

    அதில், இந்த ஐபிஎல் தொடர் தான் டோனியின் கடைசி தொடராக இருக்குமோ? அதை யார் அறிவார். டோனி ஒரு டீசல் எஞ்சினை போன்றவர். அது எப்படி முடிவில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறதோ அப்படியே டோனியும் இருக்கிறார். அவர் என்ன ஒரு அற்புதமான வீரர். என்ன ஒரு அற்புதமான கேப்டன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது அபாரமாக இருக்கிறது.
    • ஆனால் அனைவராலும் அப்படி செயல்பட முடியாது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியா தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஜத் பட்டிதாருக்கு கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பார் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரஜத் பட்டிதார் யாரும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பாத தொடரைக் கொண்டுள்ளார். ஆனால் இது போன்ற சூழ்நிலையிலும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதே இந்த இந்திய அணியின் நல்ல அம்சம் மற்றும் கலாச்சாரமாகும். ஏனெனில் இத்தொடரில் மகத்தான கிரிக்கெட்டை விளையாடி வரும் அவர்களுக்கு சாதகமாக முடிவுகள் வந்துள்ளன.

    ஒருவேளை ரஜத் பட்டிதாரின் அணுகுமுறை மற்றும் உடைமாற்றும் அறையில் அவருடைய கேரக்டர் பிடிக்கும் அளவுக்கு இருந்தால் ரோகித் மற்றும் தேர்வுக் குழுவினர் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார்கள்.

    அதனால் இந்த தொடரில் ரன்கள் அடிக்காவிட்டாலும் அவருக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று அவர்கள் முடிவெடுப்பார்கள். இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது அபாரமாக இருக்கிறது. ஆனால் அனைவராலும் அப்படி செயல்பட முடியாது. அது இளம் வீரர்களும் மோசமான தருணத்தை சந்திப்பார்கள் என்பதை புரிந்து கொண்டுள்ள இந்திய அணியின் கலாச்சாரத்தை எனக்கு காண்பிக்கிறது.

    இவ்வாறு ஏபிடி கூறினார்.

    • டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.
    • ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவடு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஷஃபாலி வர்மா மற்றும் ஜெஸ் ஜோனசனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் மகளிர் பிரீலிக் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 194 ரன்களைச் சேர்த்து அசத்தியது.

    இதையடுத்து ஆடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தனது முதல் அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    இந்நிலையில், இப்போட்டியின் போது ஆர்சிபி வீராங்கனை ஜார்ஜியா வேர்ஹாம் சிக்சரை தடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டெல்லி வீராங்கனை ஷஃபாலி வர்மா சிக்சர் அடிக்கும் முயற்சியில் பந்தை விளாசினார். அப்பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜார்ஜியா வேர்ஹாம் லாவகமாக தாவி பந்தை பிடித்து தரையை தொடுவதற்கு முன் அதனை மைதானத்திற்குள்ளும் தள்ளிவிட்டார். இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைத்தட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.

    முன்னதாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கா விளையாடி வந்த ஏபிடி வில்லியர்ஸ் இதே போன்று ஒரு பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். அந்த காலத்தில் அவரை ஸ்பைடர் மேன் என நெட்டிசன்கள் புகழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் வேர்ஹாம் - டி வில்லியர்ஸ் இருவரும் ஒரே பாணியில் பந்தை தடுக்கும் புகைப்படத்தையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

    • 3 டெஸ்டிலும் அவர் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • குடும்பம் தான் முதலில் முக்கியம். நாம் அனைவரும் அதை மதிக்க வேண்டும்.

    ஜோகன்ஸ்பர்க்:

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தெரிவித்தது.

    அதே நேரத்தில் விலகலுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எஞ்சிய 3 டெஸ்டிலும் அவர் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே விராட்கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும், ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிய அவரது நண்பருமான டிவில்லியர்ஸ் வெளியிட்டு இருந்தார்.

    விராட்கோலியும், அனுஷ்கா சர்மாவும் 2-வது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாகவும், இதனால் தான் விராட்கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.


    கடந்த 2 தினங்களுக்கு முன்பு டிவில்லியர்ஸ் அதை மறுத்து இருந்தார். நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் என்றும், விராட் கோலி குறித்து தவறான தகவலை பகிர்ந்து விட்டதாகவும் கூறி வருத்தம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் 2-வது குழந்தை குறித்த தகவல் தொடர்பாக விராட் கோலி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு டிவில்லியர்ஸ் மீண்டும் தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:-

    எனது நண்பர் விராட் கோலி இன்னும் அணியில் இடம்பெறாத நிலையில் உள்ளார். அவருக்கு தகுதியான தனியுரிமையை வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். குடும்பம் தான் முதலில் முக்கியம். நாம் அனைவரும் அதை மதிக்க வேண்டும்.

    எனது முந்தைய தகவலில் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். இதற்காக விராட் கோலி குடும்பத்தினரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உறுதிப்படுத்தப்படாத தகவலை பகிர்ந்து கொண்டது சரியல்ல.

    அவர் நலமுடன் இருக்கிறார் என்பது மட்டுமே எனக்கு தெரியும். அவர் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார். எனவே தான் முதல் 2 டெஸ்டில் விளையாடவில்லை. வேறு எதையும் நான் உறுப்படுத்தப் போவதில்லை. அவர் மீண்டும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரை நன்றாக இருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறார்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    • விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
    • விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியினர் 2-வது குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளனர் என டி வில்லியர்ஸ் தெரிவித்திருந்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், இரண்டு டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணத்தை மேற்கோள்காட்டி இந்திய அணியில் இருந்து விலகினார். இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மாவிடம் விராட் கோலி தெரிவித்திருந்தார். பிசிசிஐ-யும் இது குறித்து முழு அறிக்கை வெளியிட்டு விராட் கோலிக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே விராட் கோலியின் விலகலுக்கான காரணத்தை தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் வெளியிட்டு இருந்தார்.

    விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதியினர் 2-வது குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளனர். அதனால்தான் அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுள்ளார். இதன் காரணமாகவே டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    எஞ்சிய 3 டெஸ்டிலும் கோலி விளையாடமாட்டார் என்றும் கூறப்படுகிறது.

    விராட் கோலி- அனுஷ்கா சர்மா (கோப்புப்படம்)

    இந்த நிலையில் விராட் கோலி குறித்து தவறான தகவல் பகிர்ந்து விட்டேன் என்று டி வில்லியர்ஸ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

    எனது யூடியூப் சேனலில் நான் கூறியது போல் குடும்பம் முதன்மையானது. அதே நேரத்தில் நான் ஒரு பயங்கரமான தவறு செய்து விட்டேன். விராட் கோலி குறித்து உண்மையில்லாத தவறான தகவலை பகிர்ந்து கொண்டேன்.

    அங்கு என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அவரது உடல்நலன் மற்றும் மனநலன் நன்றாக இருக்க வேண்டும். இந்த இடைவெளிக்கு காரணம் எதுவாக இருந்தாலும் அவர் வலிமையாகவும், சிறப்பாகவும் திரும்பி வருவார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியில் இடம் பிடித்த கோலி பின்னர் 2 டெஸ்ட்டில் இருந்து விலகினார்.
    • கோலி டெஸ்ட்டில் விளையாடததற்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

    இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 396 ரன்களும் இங்கிலாந்து 253 ரன்கள் எடுத்தது. இன்று 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதலில் இடம் பிடித்தார். பின்னர் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதற்கு என்ன காரணம் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் கேள்விக்கு விராட் கோலியின் நண்பரும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரருமான டிவில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார். அதில், விராட் கோலியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதாக தெரிவித்தார்.

    இதனால் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது கூட சந்தேகம் தான் என தகவல் வெளியாகி உள்ளது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஷமார் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன விருதை ஜோசப் தட்டிச் சென்றார்.

    பிரிஸ்பேன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 25-ந் தேதி தொடங்கி நடைபெற்றது.

    இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 7 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஷமார் ஜோசப்-ன் வாழ்க்கையை விக்கிபீடியாவில் படித்து கண் கலங்கியதாக தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் ஒரு உதவி செய்யுங்கள். அவருடைய வாழ்க்கையை பற்றி விக்கிபீடியாவில் படியுங்கள். அவரது பயணத்தை பற்றி படிக்கும் போது எனது கண்களில் கண்ணீர் வந்தது. எளிமையா சொல்லனும் என்றால் உங்களுக்கு ஊக்கமளிக்கும்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறினார்.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • சூழலுக்கு தகுந்தார் போல் இந்திய அணி வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கத்தை அமைத்தது.

    இதனையடுத்து இந்திய அணி சுழற்பந்து வீச்சை உபயோகப்படுத்தியது. இதனால் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் பென் ஸ்டோக்ஸ் மட்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் விளாசினார். இறுதியில் இங்கிலாந்து அணி 64.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது.

    அதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசினார். அதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. இது இங்கிலாந்து அணியின் ஸ்கோரை விட 127 ரன்கள் தான் குறைவாகும்.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் டிவில்லியர்ஸ் கிண்டலடித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சூழலுக்கு தகுந்தார் போல் இந்திய அணி வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும். எப்படி ஆடினால் நீங்கள் முன்னிலை பெறுவீர்கள் என்பதில் தான் போட்டியின் மகிமையே இருக்கிறது.

    இதனை நீங்கள் புத்திசாலித்தனம், தைரியம் அல்லது பேஸ் பால் என்று எல்லாம் அழைக்க தேவையில்லை.

    போட்டியின் சூழல் மாறினால் அதற்கு ஏற்றார் போல் நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களுடைய தருணத்திற்காக நீங்கள் மீண்டும் காத்திருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களால் சூழலைப் புரிந்து கொண்டு விளையாட முடியவில்லை என்றால் அது நிச்சயம் உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

    நீங்கள் பேஸ் பால் அல்லது எந்த மாதிரி பாலை விளையாடினாலும் சரி. உங்களுக்கு அது நன்மையை கொடுக்காது.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    • தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
    • கடந்த முறை இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய போது பும்ரா தான் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 இருபது ஓவர் ஆட்டம், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் டிசம்பர் 10-ந் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறும். அதன் பின்னர் முதல் டெஸ்ட் போட்டி 26-ந் தேதி செஞ்சுரியனில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி கேப்டவுனில் நடக்கிறது.

    இந்நிலையில் இந்திய அணியின் சுற்றுப்பயணம் குறித்து தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும் என்றால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

    இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு கடும் சவாலாக ஜஸ்பிரீத் பும்ரா இருப்பார். அவர்களுக்கு கடும் நெருக்கடியை அவர் கொடுப்பார். பும்ரா பந்து வீசத் தொடங்கினால், எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவே மாட்டார். அவரிடம் அனைத்து திறமைகளும் உள்ளன.

    கடந்த முறை இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய போது பும்ரா தான் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார். அவர் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். ஸ்டெம்பை நோக்கி பந்துகளை வீசுவதில் அவர் வல்லவர்.

    இந்த முறை ஒட்டுமொத்த இந்திய வேகப்பந்து வீச்சும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு பெரிய அளவிலான அச்சுறுத்தலைக் கொடுக்கும்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    • சுப்மன் கில் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானர்.
    • கில் கேப்டனாக முன் நின்று வழிநடத்துவதையும் பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்.

    ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதன்படி ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சுப்மன் கில் நல்ல வீரர் தான். ஆனால் அந்த சீனியர் வீரருக்கு கேப்டன் பதவியை கொடுத்திருக்கலாம் என தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஏபிடி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    சுப்மன் கில் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானர். ஆனால் குஜராத் அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் சீனியர் வீரரான கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் வாய்ப்பை கொடுத்திருக்கலாம். குஜராத் அணியின் முடிவு பலனளிக்கலாம். நான் அதைத் தவறு என்று சொல்லவில்லை. 

    2025-ல் கில் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு சிறந்த வாய்ப்பு என்று நான் கூறுகிறேன். இருந்தாலும், நான் உற்சாகமாக இருக்கிறேன். அவர் கேப்டனாக முன் நின்று வழிநடத்துவதை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்.

    என்று அவர் கூறினார்.

    ×