என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ்"

    • முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 198 ரன்கள் குவித்தது.
    • தென்ஆப்பிரிக்கா அணியால் 167 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள்.

    தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ்- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றிரவு நடைபெற்றது.

    இதில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் அணி 198 ரன்கள் குவித்தது. அந்த அணியின் உமர் அமின் 58 ரன்கள் விளாசினார். சோயிப் மாலிக் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் அடித்தார்.

    பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியால் 167 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் மோர்னே வான் விக் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார்.

    இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் தென்ஆப்பிரிக்கா 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில முதலிடம் வகிக்கிறது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் 2-ல் வெற்றி, ஒரு டிரா மூலம் 2ஆவது இடத்தில் உள்ளது.

    இந்தியா 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் தோல்வி, ஒன்றில் டிரா (பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாட மறுத்தது) மூலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    • முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.
    • 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 153 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன.

    நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 41 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.அவரது ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி பெற்றது.

    அந்த அணி 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 153 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் 51 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். இதில் 15 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் தனது 41-வது வயதிலும் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

    • முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 208 ரன்கள் எடுத்தது.
    • இந்தியா 111 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 111 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி பீல்டிங் செய்வதற்காக மைதானத்திற்குள் நுழைந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ரசிகர்கள் ஆர்சிபி, ஆர்சிபி என முழக்கமிட்டனர். இதனை கேட்டதும் டிவில்லியர்ஸ் சிரித்தபடி கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    • முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 208 ரன்கள் எடுத்தது.
    • இந்தியா 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 30 பந்தில் 63 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் யூசப் பதான், சால்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. இதனால் 55 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்தியா, 111 ரன்னில் 9 விக்கெட்டுகளை இழந்தது. யுவராஜ் சிங் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பின்னி 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஆரோன் ஃபாங்கிசோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்களை பாகிஸ்தான் குவித்தது.
    • உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது.

    உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை 2024 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகள் விளையாடுகின்றன.

    இந்த லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் 8 ஆவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கம்ரான் அக்மல் மற்றும் சர்ஜீல் கான் இந்திய அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். 30 பந்துகளில் 72 ரன்கள் குவித்து சர்ஜீல் கான் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய கம்ரான் அக்மல் 77 ரன்களும் சோயப் மக்சூத் 51 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை பாகிஸ்தான் அணி குவித்தது.

    244 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    இந்திய அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 52 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ், சோயப் மாலிக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த சர்ஜீல் கான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 2-ம் இடத்திலும் இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளது.

    • ஜூலையில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் தொடரில் விளையாட உள்ளேன் என்றார் டிவில்லியர்ஸ்.
    • டி வில்லியர்சின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    டர்பன்:

    தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஏ.பி.டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பப் போவதாக அறிவித்துள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் டிவில்லியர்ஸ் கிரிக்கெட் போட்டிக்குத் திரும்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார்.

    முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் (WCL) என்ற தொடர் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டிவில்லியர்ஸ் பங்கேற்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இந்நிலையில், வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் தொடரில் விளையாட உள்ளேன் என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பேட்டியளித்த டிவில்லியர்ஸ், 4 ஆண்டுக்கு முன் நான் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றேன். மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற நினைப்பு இல்லாமல் இருந்தேன். காலம் செல்ல மீண்டும் எனக்கு கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்ப வேண்டும் என்ற நினைப்பு தோன்றுகிறது.

    அதற்கு காரணம் நான் என்னுடைய மகன்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுகிறேன். அப்போது எனக்குள் இன்னும் கிரிக்கெட் வேட்கை இருந்ததை உணர முடிந்தது. எனவே தற்போது ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அது மட்டுமின்றி பேட்டிங் பயிற்சியும் செய்து வருகிறேன்.

    இதன்மூலம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் தொடரில் நான் விளையாட தயாராகி விடுவேன் என தெரிவித்துள்ளார்.

    இந்த தென் ஆப்பிரிக்க அணியில் காலிஸ், கிப்ஸ், ஸ்டெயின், இம்ரான் தாகிர் போன்ற வீரர்களும் விளையாட உள்ளனர்.

    டி வில்லியர்சின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ×