என் மலர்
நீங்கள் தேடியது "World Championship of Legends 2025"
- முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 208 ரன்கள் எடுத்தது.
- இந்தியா 111 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 111 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி பீல்டிங் செய்வதற்காக மைதானத்திற்குள் நுழைந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ரசிகர்கள் ஆர்சிபி, ஆர்சிபி என முழக்கமிட்டனர். இதனை கேட்டதும் டிவில்லியர்ஸ் சிரித்தபடி கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 208 ரன்கள் எடுத்தது.
- இந்தியா 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியா லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 30 பந்தில் 63 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் யூசப் பதான், சால்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. இதனால் 55 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்தியா, 111 ரன்னில் 9 விக்கெட்டுகளை இழந்தது. யுவராஜ் சிங் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பின்னி 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஆரோன் ஃபாங்கிசோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.






