search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suresh Raina"

    • ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாத ஜெய்ஸ்வாலை நீங்கள் சாம்பியன்ஸ் டிராபியில் எடுத்துள்ளீர்கள்.
    • அவரை தேர்வு செய்ததற்காக தேர்வாளர்களுக்கு குறிப்பாக ரோகித் சர்மாவுக்கு தலை வணங்குகிறேன்.

    ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, காயத்திலிருந்து குணமடைந்து வந்த சமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

    இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகமாகி விளையாடாத போதிலும் ஜெய்ஸ்வாலை நம்பி நேரடியாக சாம்பியன்ஸ் டிராபியில் தேர்ந்தெடுத்த ரோகித் சர்மாவுக்கு தலை வணங்குவதாக சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    அந்தப் பையன் ரன்களுக்காக பசியுடன் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருடைய கதையை பார்க்கும் போதெல்லாம் அவர் இந்த லெவலுக்கு ஆர்வத்துடன் வந்துள்ளார் என்பது நமக்கு தெரிகிறது.

    அவரை தேர்வு செய்ததற்காக தேர்வாளர்களுக்கு குறிப்பாக ரோகித் சர்மாவுக்கு தலை வணங்குகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாத அந்த பையனை நீங்கள் சாம்பியன்ஸ் டிராபியில் எடுத்துள்ளீர்கள். அவர் நிறைய கடின உழைப்பை அர்ப்பணிப்புடன் செய்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். அவருடைய கண்களில் வித்தியாசமான அணுகுமுறை தெரிகிறது.

    இது தான் இந்திய கிரிக்கெட்டின் அழகாகும். நீங்கள் கடினமாக உழைத்து நாட்டுக்காக விளையாடும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் ஏதேனும் ஒரு பவர் உங்களை நாட்டுக்காக விளையாடச் சொல்லும். அதைத் தான் ஜெய்ஸ்வால் விஷயத்தில் ரோகித் செய்துள்ளார்.

    என்று சுரேஷ் ரெய்னா கூறினார்.

    • சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை.
    • சூரியகுமார் யாதவ் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு அங்கமாக இருந்தார்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால்

    சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் இடம்பெறாதது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, "சூரியகுமார் யாதவ் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு அங்கமாக இருந்தார். ஆனால் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது.

    அவர் ஒரு ஓவருக்கு 9 ரன்கள் முடிக்கக்கூடிய ஒரு 360 டிகிரி வீரர். சூர்யா அணியில் இருந்திருந்தால் ஒரு X-பேக்டராக இருந்திருக்கும். மிடில் ஆர்டரில் ஒரு முக்கியமான வீரரை இந்தியா இழந்துள்ளது. அவர் ஒரு கேம் சேஞ்சர்" என்று தெரிவித்துள்ளார். 

    • சிறப்பாக செயல்படாததால் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் விலகினார்.
    • ரோகித் சர்மா நேர்மை மற்றும் தன்னலமற்ற தன்மை மூலம் தலைமைத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

    இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. மோசமான பார்ம் காரணமாக ரோகித் இந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.

    முதல் இன்னிங்சில் இந்தியா 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர். இறுதியில் ஆஸ்திரேலியா 181 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இந்த போட்டியின் டிரிங்ஸ் இடைவெளியின் போது ரோகித் சர்மா மைதானத்திற்குள் வந்து பும்ராவிடம் சில அறிவுரைகளை வழங்கினார். இந்திய அணி வெற்றி பெறுவதற்காக கேப்டன் மற்றும் அணியில் இல்லையென்றாலும் இந்திய அணியின் வெற்றிக்காக எதாவது செய்து கொண்டிருக்கிறார். அவர் சிறப்பாக விளையாடாததது அணியின் வெற்றிக்கு பாதிப்பாக இருப்பதால் அணியில் இருந்து வெளியேறி சுயநலமற்ற வீரர் என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார்.

    இந்நிலையில் ரோகித் சர்மா விளையாட்டின் உண்மையான ஜாம்பவான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மா நேர்மை மற்றும் தன்னலமற்ற தன்மை மூலம் தலைமைத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார். தனிப்பட்ட சவால்கள் இருந்தபோதிலும், அவர் அணியின் வெற்றிக்கு முன்னுரிமை அளிக்கிறார், தேவைப்படும்போது ஒதுங்குகிறார். தற்போதைய டெஸ்ட் தொடரில் அவரது தலைமை இந்தியாவின் வெற்றிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. விளையாட்டின் உண்மையான ஜாம்பவான்.

    என ரெய்னா கூறினார்.

    • நீங்கள் எண்ணற்ற சந்தோஷங்களையும் பெருமையையும் இந்தியாவுக்கு கொடுத்துள்ளீர்கள்.
    • இந்திய அணியின் லெஜெண்டாக எப்போதும் நீங்கள் நினைவு கூரப்படுவீர்கள்.

    இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இந்நிலையில் அவரது ஓய்வுக்கு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    அஸ்வின் குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:- 

    பெர்த் டெஸ்டின்போதே அஷ்வினின் ஓய்வு குறித்து நான் அறிந்து கொண்டேன். பிங்க் பால் டெஸ்ட் வரையாவது விளையாடுமாறு கேட்டு கொண்டேன். இந்தியா இதுவரையில் பார்க்காத ஒரு மேட்ச் வின்னர் அஸ்வின் என கூறினார்.

    விராட் கோலி கூறியதாவது:- 

    நான் உங்களுடன் 14 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். ஓய்வை அறிவிக்கப்போகிறேன் என நீங்கள் இன்று என்னிடம் சொன்னபோது உணர்ச்சிவப்பட்டு, நாம் சேர்ந்து விளையாடிய நாட்களை நினைவு கூர்ந்தேன். இந்திய அணியின் வெற்றிகளுக்கு நீங்கள் செய்த பங்கு, உங்கள் கிரிக்கெட் திறனுக்கு ஈடு இணையே இல்லை. இந்திய அணியின் லெஜெண்டாக எப்போதும் நீங்கள் நினைவு கூரப்படுவீர்கள் என கூறினார்.

    கவுதம் கம்பீர் கூறியதாவது:-


    ஒரு இளம் பந்துவீச்சாளராக இருந்து, நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக நீங்கள் வளர்ந்ததை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. அடுத்த தலைமுறை பவுலர்கள் "அஸ்வினால்தான் நான் பவுலர் ஆனேன்" என சொல்வார்கள் என்பது எனக்கு தெரியும். உன்னை மிஸ் பண்ணுவேன் தம்பி என கூறினார்.

    சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-


    கிரிக்கெட் பந்தை வைத்து நீங்கள் செய்யும் அற்புதங்களும், தெளிவான சிந்தனையும், டெஸ்ட் கிரிக்கெட் மீதான அபரீத அன்பும் என்றும் எங்கள் உள்ளங்களில் நிலைத்திருக்கும். நீங்கள் எண்ணற்ற சந்தோஷங்களையும் பெருமையையும் இந்தியாவுக்கு கொடுத்துள்ளீர்கள். அடுத்த அத்தியாயத்திற்கு வாழ்த்துக்கள் என கூறினார்.

    தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-


    சிறந்த விளையாட்டை சிறப்பாக விளையாடினீர்கள். உங்களுடன் விளையாடிதில் பெருமையடைகிறேன். நிச்சயமாக தமிழ்நாடு வீரர்களுள் மிகச் சிறந்தவர் என கூறினார்.  

    • வேறொரு ஐபிஎல் அணிக்காக தீபக் சாஹர் களமிறங்க இருக்கிறார்.
    • தீபக் சாஹரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக திகழ்ந்தவர் தீபக் சாஹர். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தீபக் சாஹர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் முன்னாள் சென்னை அணி வீரர் தீபக் சாஹரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    சி.எஸ்.கே. அணியில் தீபக் சாஹர் மற்றும் எம்.எஸ். டோனி இடையே நல்லுறவு இருந்து வந்தது. களத்தில் இருவரின் சேட்டை சம்பவங்கள் கடந்த ஐபிஎல் சீசனில் மிகவும் வைரல் ஆகி இருந்தது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு வேறொரு ஐபிஎல் அணிக்காக தீபக் சாஹர் களமிறங்க இருக்கிறார்.

    இதையொட்டி, தீபக் சாஹரிடம் எம்.எஸ். டோனியை மிஸ் செய்கிறீர்களா என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த தீபக் சாஹர், எம்.எஸ். டோனியை யார் தான் மிஸ் செய்ய மாட்டார்கள். நிச்சயம் அவர் மிஸ் செய்கிறேன் என்று பதில் அளித்தார். 

    • சென்னை சூப்பர் கிங்சிடம் ரிஷப்பண்டை ஏலம் எடுக்க பட்ஜெட் இல்லை.
    • ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயரும்.

    18-வது ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். ஏலத்தில் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடிப்பார் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரிஷப் பண்டின் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமைகளை தவிர்த்து கேப்டனாக அணியை சிறப்பாக வழி நடத்தும் பண்புகளை கொண்டுள்ளார். இதனால் எந்த ஒரு அணி உரிமை யாளரோ அல்லது பயிற்சி யாளரோ அவரை இழக்க விரும்பமாட்டார்கள். ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக ரிஷப் பண்ட் எடுக்கப் படுவார்.

    பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு அணிகளிடம் ரிஷப் பண்ட்டை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு தொகை இருக்கிறது.

    ஏலத்தில் போட்டி நிலவும் பட்சத்தில் ரூ.25 கோடியை தாண்டி இன்னும் 4-5 கோடிகள் அதிக தொகைக்கு ரிஷப் பண்ட் ஏலம் போவார். ரிஷப் பண்ட்டை எந்த அணி ஏலத்தில் எடுக்கிறதோ அந்த அணிக்காக அவர் 3 ஆண்டுகள் விளையாடுவார்.

    சென்னை சூப்பர் கிங்சிடம் அவரை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு பட்ஜெட் இல்லை. ஆனால், அவர் கண்டிப்பாக பெங்களூரு அல்லது கொல்கத்தா அணியின் கேப்டனாக மாறப்போகிறார் என தெரிகிறது. கொல்கத்தா அணியின் கேப்டனாக ரிஷப்பண்ட் மாறும் பட்சத்தில் அந்த அணிக்கான ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா அணி எடுத்தது சாதனையாகும்.

    • கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர். கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    திரைப்படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடப்பெற்றது.

    இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 'கங்குவா' பட போஸ்டரை இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பண்ட், டோனிக்கு மிகவும் நெருக்கமானவர்.
    • ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 111 போட்டிகளில் விளையாடி 3,284 ரன்கள் எடுத்துள்ளார்.

    2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு அணிகளும் ரூ.120 கோடி செலவிடலாம். இதற்கான ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்படும் வீரர்கள் விவரத்தை 10 அணிகளும் வெளியிட்டுள்ளன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), ஜடேஜா ( 18 கோடி), பதிரனா ( 13 கோடி), ஷிவம் துபே (12 கோடி), டோனி (4 கோடி) ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. அந்த அணி ரூ.65 கோடி செலவழித்துள்ளது. கைவசம் ரூ.55 கோடி இருக்கிறது.

    கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், சி.எஸ்,கே. முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

    "அவர் கூறும்போது நான் டெல்லியில் டோனியை சந்தித்தேன். அங்கே ரிஷப் பண்டும் இருந்தார். ஒரு பெரிய விஷயம் நடக்கும் என்று நினைக்கிறேன். விரைவில் ஒருவர் மஞ்சள் ஆடையை அணியவுள்ளார் என்றார்.

    விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பண்ட், டோனிக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் சி.எஸ்,கே.அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டால் கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 111 போட்டிகளில் விளையாடி 3,284 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதமும், 17 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 128 ரன்கள் குவித்துள்ளார். இவரது தலைமையில், டெல்லி அணி 2021 பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    கார் விபத்துக்கு பிறகு ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு விளையாடிய அவர் 13ஆட்டத்தில் 446 ரன்கள் எடுத்தார். 155 சராசரியாகும். 3 அரைசதம் அடங்கும்.

    • அவர் இன்னும் அதிரடியான ஆட்டங்களை வருங்காலத்தில் விளையாடுவார்.
    • நல்ல தலைமைத்துவமும் கொண்டவர்.

    ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. இவரை சிஎஸ்கே ரசிகர்கள் சின்ன தளபதி என்று அழைப்பார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    இதனையடுத்து லெஜண்ட்ஸ், சாம்பியன்ஸ் போன்ற தொடர்களில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக கேரள மாநிலம் கொச்சிக்கு ரெய்னா சென்றுள்ளார்.

    அப்போது கேரளா மீது தனது அபிமானத்தை வெளிப்படுத்தினார். மேலும் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் சஞ்சு சாம்சனின் மிகப்பெரிய ரசிகன். அவர் திறமையானவர். இன்னும் அதிரடியான ஆட்டங்களை வருங்காலத்தில் விளையாடுவார். நல்ல தலைமைத்துவமும் கொண்டவர். சர்வதேச அரங்கில் அவர் ஜொலிப்பார் என நான் நம்புகிறேன்.

    இவ்வாறு ரெய்னா கூறினார்.

    • ரெய்னா, டோனி ஆகியோரை ‘தல’ என்றும், ‘சின்ன தல’ என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.
    • இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்துள்ளார்.

    ஆம்ஸ்டர்டாம்:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா இடையிலான உறவை கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

    டீம் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக இணைந்து விளையாடிய இவர்கள் இருவரையும் 'தல' என்றும், 'சின்ன தல' என்றும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர்.

    இந்தியா 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வை அறிவித்ததும், அவரது நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னாவும் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

    சி.எஸ்.கே .அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் சுரேஷ் ரைனாவின் பங்களிப்பு மிகப்பெரியது.

    இந்நிலையில், சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் உள்ள தனது ரெஸ்டாரண்டில் எம்.எஸ்.டோனி கையெழுத்திட்ட 7-ம் நம்பர் எண் கொண்ட ஜெர்சியை பிரேம் செய்து மாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    • யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று ஹர்பஜன் தெளிவுபடுத்தினார்.
    • விசாரணைக்காக இந்த புகார் மாவட்ட இணைய பிரிவுக்கு அனுப்பப்படும்," என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    இன்ஸ்டாகிராம் வீடியோவில் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங் , சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், குர்கீரத் மான் ஆகியோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ குறித்து ஹர்பஜன் தனது எக்ஸ் பதிவில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

    இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் (NCPEDP) செயல் இயக்குநர் அர்மான் அலி, அமர் காலனி போலீஸ் நிலைய அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

    இந்தப் புகாரில் கிரிக்கெட் வீரர்களை தவிர மெட்டா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தியா தேவநாதன் ஆகியோரும் அடங்குவர்.

    புகாரின்படி, மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ஐ மீறி, இதுபோன்ற வீடியோவை பதிவேற்றம் செய்ய அனுமதித்ததாக கூறப்பட்டுள்ளது.

    "இது தொடர்பாக அமர் காலனி போலீஸ் நிலையத்திற்கு புகார் கிடைத்துள்ளது. விசாரணைக்காக இந்த புகார் மாவட்ட இணைய பிரிவுக்கு அனுப்பப்படும்," என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர்.
    • நாங்கள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை.

    முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான லெஜெண்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியில் முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் விளையாடினர்.

    வெற்றியை கொண்டாடும் விதமாக யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை போன்ற நடந்து டான்ஸ் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் மாற்றுதிறனாளிகளை கிண்டல் செய்வது போல் உள்ளதாக விமர்சனம் எழுந்தது. இதனால் 3 பேருக்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 15 நாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிய பிறகு எங்கள் உடலின் வலியைப் பிரதிபலிக்கும் வகையில் மட்டுமே இந்த வீடியோவை பதிவிட்டோம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சமூக ஊடகங்களில் தௌபா தௌபாவின் வீடியோக்களைப் பற்றி புகார் செய்யும் எங்கள் மக்களுக்குத் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாங்கள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. ஒவ்வொரு தனிமனிதனையும் சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.

    15 நாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடியதால் எங்கள் உடல் வலியை பிரதிபலிக்கும் வகையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நாங்கள் யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை.. இன்னும் மக்கள் நாங்கள் ஏதாவது தவறு செய்ததாக நினைத்தால்.. அனைவரும் மன்னிக்கவும்.. ப்ளீஸ் இதை இங்கே நிறுத்திவிட்டு முன்னேறுவோம். மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். அனைவரையும் விரும்புகிறேன்.

    இவ்வாறு ஹர்பஜன் தெரிவித்தார்.

    ×