என் மலர்
நீங்கள் தேடியது "Suresh Raina"
- சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது.
- சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதால் இந்த முறை அணியை வலுப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிரமாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை அணி நிர்வாகம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருகிறது.
அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது. சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரவீந்திர ஜடேஜாவை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திறமையான வீரர். அவர் பல ஆண்டுகளாக அணிக்காக உண்மையிலேயே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே 'சர் ரவீந்திர ஜடேஜா' அணியில் இடம் பெற வேண்டும்.
என கூறினார்.
ரவீந்திர ஜடேஜா 2012-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார். 2023-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்ததை மறந்து விட முடியாது. கடந்த சீசனில் அவரை ரூ.18 கோடிக்கு சென்னை அணி தக்க வைத்திருந்தது. அப்படிப்பட்ட அவரை சிஎஸ்கே வேறு அணிக்கு மாற்ற உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
- ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரித்தது.
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரித்தது.
இந்நிலையில், சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய வழக்கில் சுரேஷ் ரெய்னாவின் ரூ.6.64 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும், ஷிகர் தவானின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
- வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால், அவர்களில் யாரும் ஆசிய கோப்பையில் விளையாட விரும்பவில்லை.
- இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது வருத்தமாக இருக்கிறது.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். இது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி உள்ளது.
இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது வருத்தமாக இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
எனக்கு ஒரு விஷயம் நிச்சயம் தெரியும். வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால், அவர்களில் யாரும் ஆசிய கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்திருக்க மாண்டார்கள். ஒரு வகையில், பிசிசிஐ அதற்கு ஒப்புக்கொண்டதால் அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
இந்தியா -பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது வருத்தமாக இருக்கிறது. ஆனால் சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது வீரர்களிடம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது குறித்து அவர்களின் தனிப்பட்ட கருத்துகள் என்ன என்று கேட்டால், அவர்கள் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள் என்பதையும் நான் உண்மையாகச் சொல்ல முடியும். அவர்களில் யாரும் விளையாட விரும்பவில்லை.
என ரெய்னா கூறினார்.
- ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பாக 36 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
- ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இன்று ஆஜராகுமாறு இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இன்று நடைபெறும் விசாரணையில் ரெய்னாவிடம் வாக்குமூலம் பெற அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
- ரசிகர்களால் சின்ன தல என அன்புடன் அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா.
- இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
சென்னை:
கிரிக்கெட் ரசிகர்களால் சின்ன தல என அன்புடன் அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா. இந்திய கிரிக்கெட்டுக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ள சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இதனால் தமிழ் ரசிகர்களுக்கு சுரேஷ் ரெய்னாவை மிகவும் பிடிக்கும்.
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
டிரீம் நைட் ஸ்டோரீஸ் (DKS ) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்.
லோகன் என்பவர் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
ரெய்னா நடிக்கவிருக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு காணொளியை சிவம் தூபே வெளியிட்டார். அதன்பின், ரெய்னா வீடியோ கால் மூலம் நிகழ்வில் இணைந்து பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இதுதொடர்பாக, சுரேஷ் ரெய்னா கூறுகையில், தமிழ்நாட்டில்தான் விசில் போடு ஆர்மி இருக்கிறது. பல கிரிக்கெட் போட்டிகளில் இங்கு ஆடியிருக்கிறேன். ரசம், சென்னை கடற்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் தமிழில் நடிக்கிறேன். மக்களின் அன்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது என தெரிவித்தார்.
- குஜராத் எதிரான போட்டியில் சென்னை அணி 230 ரன்கள் குவித்தது.
- 83 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினாலும் கடைசி போட்டியில் வெற்றி பெற்று ரசிகர்களை சென்னை அணி சந்தோசப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய போட்டியின் வர்ணனையின்போது, "அடுத்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் வருவார்" என்று சுரேஷ் ரெய்னா கூறினார். அதற்கு அவர் பெயர் S-ல் தொடங்குமா?
என்று சக வர்ணனையாளர் சோப்ரா, கிரிக்கெட் கேட்க, அவர் இந்த அணிக்காக அதிவேக அரைசதம் அடித்துள்ளார் என்று சுரேஷ் ரெய்னா சிரித்தபடியே பதில் கூறினார்.
- விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்
- 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9230 ரன்கள் குவித்து 30 சதங்களை அடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 36 வயதான விராட் கோலி, தனது 14 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுகட்டி ஓய்வை அறிவித்தார்.
123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9230 ரன்கள் குவித்து 30 சதங்களை அடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளை அதிக ரசிகர்கள் பார்க்கக் காரணமாக இருந்தவர் விராட் கோலி எனப் பலரும் தற்போது அவரைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டுக்கு விராட் கோலி செய்த பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு இந்திய அரசு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார்.
- நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது.
- இதில் 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் கூறியதாவது:
ஐ.பி.எல். ஏலத்திலேயே சி.எஸ்.கே. அணி தோற்றுவிட்டது. நல்ல பிளேயர்களை வாங்குவதற்கு போதுமான பணம் இருந்தும் அந்த பிளேயர்களை வாங்க சிஎஸ்கே ஏன் ஆர்வம் காட்டவில்லை? கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களை ஏன் சிஎஸ்கே வாங்கவில்லை?
இந்த ஐபிஎல் ஏலத்தைப் பொறுத்தவரை தோனியின் தலையீடு ஏதும் இல்லை. முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவு.
தோனியைப் பொறுத்தவரை 43 வயதிலும் அணிக்கு தேவையானதை களத்தில் இருந்து செய்கிறார். சி.எஸ்.கே. அணிக்காக கேப்டன்சி, விக்கெட் கீப்பிங், பேட்டிங் என தன்னால் முடிந்த அத்தனை உழைப்பையும் கொடுக்கிறார். ஆனால் அணியில் இருக்கும் மற்ற பிளேயர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்தது இல்லை. இளம் பிளேயர்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாடுவார். சி.எஸ்.கே. நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
- பீல்டிங்கை தொடர்ந்து மாற்றுவதோடு, பவுலர்களுடன் தொடர் ஆலோசனையில் கில் இருந்து வருகிறார்.
- கேகேஆர் அணிக்காக ஆடிய போது, சுப்மன் கில் வளர்ந்து வரும் வீரராகவே இருந்தார்.
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 55 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 90 ரன்களை விளாசி இருக்கிறார். மொத்தமாக இந்த சீசனில் 8 இன்னிங்ஸில் ஆடியுள்ள சுப்மன் கில் 3 அரைசதம் உட்பட 305 ரன்களை விளாசி இருக்கிறார்.
கடந்த சீசனை போல் அல்லாமல் இந்த சீசனில் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கிய குஜராத் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் சுப்மன் கில்லும் களத்தில் மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார்.
குஜராத் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. எஞ்சியுள்ள 6 போட்டிகளில் 2-ல் வென்றால் கூட குஜராத் அணி எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
இந்நிலையில் கேப்டசியில் சுப்மன் கில் சிறப்பாக செயல்படுவதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் நிதானமாக நேரம் எடுத்து அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்தார். தற்போது சுப்மன் கில்லால் அதிரடியான ஷாட்களை ஆட முடிகிறது. அதேபோல் டாட் பால் சதவிகிதத்தையும் சுப்மன் கில் குறைத்துள்ளார். சுப்மன் கில்லால் எளிதாக ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்ய முடிகிறது.
அவரிடம் இருக்கும் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால், சக வீரர்களுடன் அவர் தனது தேவையை சிறப்பாக சொல்வதுதான். அவர் களத்திற்கு வெளியிலும் நல்ல உறவுடன் இருப்பதே குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்து வருகிறது. பீல்டிங்கை தொடர்ந்து மாற்றுவதோடு, பவுலர்களுடன் தொடர் ஆலோசனையில் இருந்து வருகிறார்.
கேகேஆர் அணிக்காக ஆடிய போது, சுப்மன் கில் வளர்ந்து வரும் வீரராகவே இருந்தார். ஆனால் இப்போது இந்திய கிரிக்கெட்டின் இளவரசனாக திரும்பி இருக்கிறார். இந்த இடம் அவருக்கு ஸ்பெஷலானது.
என்று ரெய்னா கூறினார்.
- இந்த வருடம் சிஎஸ்கே நிர்வாகம் சரியாக ஏலம் எடுக்கவில்லை என நான் நினைக்கிறேன்.
- சிஎஸ்கே-வின் கைகளில் நிறைய பணமும் இருந்தது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது 6-வது தோல்வியாகும். சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் வருகிற 25-ந்தேதி சன்ரைசர்சுடன் மோதுகிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த நிலைமைக்கு தலைமை பயிற்சியாளர் மற்றும் நிர்வாகம்தான் காரணம் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கூறியதாவது:-
இந்த வருடம் சிஎஸ்கே நிர்வாகம் சரியாக ஏலம் எடுக்கவில்லை என நான் நினைக்கிறேன். ப்ரியன்ஷ் ஆர்யா போன்ற நிறைய இளம் மற்றும் திறமையான வீரர்கள் ஏலத்தில் இருந்தனர். சிஎஸ்கே-வின் கைகளில் நிறைய பணமும் இருந்தது. அப்படி இருந்தும் ஷ்ரேயஸ், ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் போன்ற மூத்த வீரர்களையும் நீங்கள் எடுக்கவில்லை. சிஎஸ்கே அணி இந்த அளவிற்கு தடுமாறி நான் பார்த்ததே இல்லை.
தலைமை பயிற்சியாளர் உட்பட அணி நிர்வாகம் நல்ல வீரர்களைத் தேடவில்லை. இது சிஎஸ்கே அணியின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம். மற்ற அணிகள் விளையாடுவதைப் பார்க்கும்போது, அவர்கள் மிகவும் அதிரடியாக விளையாடுகிறார்கள்.
என்று ரெய்னா கூறினார்.
- சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 171 இன்னிங்சில் 4,687 ரன்கள் அடித்துள்ளார்.
- எம்.எஸ்.தோனி 204 இன்னிங்சில் 4,699 ரன்கள் எடுத்துள்ளார்.
சென்னை:
18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 8-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதின.
முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 51 ரன்கள் எடுத்தார். 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை எம்.எஸ்.தோனி முறியடித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். அவர் 2008 முதல் 2021 வரை 171 இன்னிங்சில் விளையாடி 4,687 ரன் எடுத்துள்ளார். இதில் 1 சதமும், 33 அரை சதமும் அடங்கும். சராசரி 32.32 ஆகும்.
தற்போது ரெய்னாவின் சாதனையை எம்.எஸ்.தோனி முறியடித்தார். எம்.எஸ்.தோனி 204 இன்னிங்சில் 4,699 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்கோரில் 22 அரை சதம் அடங்கும். சராசரி 40.25 ஆகும்.
- சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 171 இன்னிங்சில் 4687 ரன்கள் அடித்துள்ளார்.
- எம்எஸ் தோனி 202 இன்னிங்சில் 4,669 ரன் எடுத்துள்ளார்.
18-வது ஐ.பி.எல். சீசன் இன்று தொடங்குகிறது. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ரெய்னா படைத்துள்ள சாதனையை எம்.எஸ். தோனி முறியடிக்க உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். அவர் 2008 முதல் 2021 வரை 171 இன்னிங்சில் விளையாடி 4,687 ரன் எடுத்துள்ளார். இதில் 1 சதமும், 33 அரை சதமும் அடங்கும். சராசரி 32.32 ஆகும்.
ரெய்னாவின் சாதனையை இந்த சீசனில் தோனி முறியடிக்க உள்ளார். அதற்கு அவருக்கு இன்னும் 19 ரன்களே தேவை. எம்எஸ் தோனி 202 இன்னிங்சில் 4,669 ரன் எடுத்துள்ளார். அவரது ஸ்கோரில் 22 அரை சதம் அடங்கும். சராசரி 40.25 ஆகும்.
ஜடேஜா இன்னும் 8 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் கைப்பற்றிய சி.எஸ்.கே. வீரர் என்ற பெருமையை பெறுவார். பிராவோ 140 விக்கெட் (116 போட்டி) வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்சிஸ் வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா 172 போட்டியில் 133 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த சீசனில் சில போட்டிகளில் ஆட வில்லை. அவர் 6 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற சாதனையை பெறுவார். மலிங்காவை (170 விக்கெட்) முந்துவார். பும்ரா 165 விக்கெட் எடுத்துள்ளார்.






