என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ED Raid"

    • அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை இல்லை.
    • நிதி மோசடி வழக்குகள் தேசத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

    சென்னை:

    டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், டாஸ்மாக் தரப்பில் மூத்த வக்கீல் விக்ரம் சவுத்ரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்கள் வாதத்தில், "அமலாக்கத்துறை வெளிப்படையாக இருப்பதுபோல ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் மறைந்துகொள்கிறது. எதற்காக சோதனை செய்கிறோம் என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும்.

    அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்ததாக கூறப்படும் நிலையில், தற்போதுதான் ஞானம் வந்தது போல அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கொடுமை செய்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.

    அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, 'மாநில போலீசார் பதிவு செய்த லஞ்ச வழக்குகளின் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது'' என்று வாதிட்டார்.

    இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ்சிங் வாதம் செய்தார். அவர், 'அமலாக்கத்துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை. மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை எவ்வாறு சொல்ல முடியும்?' என்று வாதிட்டார்.

    அமலாக்கத்துறை தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

    அதன்படி இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினார்கள். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை இல்லை என்று கூறி நீதிபதிகள், அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது கோடிக்கணக்கான மக்களின் நிதி உரிமை சார்ந்ததாகும். இதில் மோசடி நடந்தால் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.

    இதுபோன்ற நிதி மோசடி வழக்குகள் தேசத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வழக்கை பொறுத்தவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்துவதாக மனுதாரர்கள் கூறுகிறார்கள்.

    ஆனால் அரசியலை பொருத்தவரை 'ஏ' பார்ட்டி ஆட்சியில் இருக்கும் போது 'பி' பார்ட்டி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். 'பி' பார்ட்டி ஆட்சியில் இருக்கும்போது 'ஏ' பார்ட்டி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். இதை கோர்ட்டு கவனிக்க முடியாது. குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே கோர்ட்டு பரிசீலிக்க முடியும்.

    இந்த வழக்கை பொருத்தவரை குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதால் அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் என்று அறிவிக்க முடியாது.

    டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அமலாக்கத்துறை நடத்திய சோதனை அடிப்படையில் சட்டப்படி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம்.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

    • தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு.
    • மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. தற்பொழுது இவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    அதில் சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையில் பகுதியாக சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனங்களில் விளம்பர தூதரான மகேஷ் பாபுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    நடிகர் மகேஷ் பாபு ஏப்ரல் 27 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஐதராபாத்தில் உள்ள இந்த இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் மக்களிடம் பண மோசடி செய்துள்ளனர். ஒரே இடத்தை பல பேரிடம் விற்றுள்ளது. தகுதி மற்றும் ஒப்புதல் அளிக்காத வீடுகளை விற்றது என பல்வேறு குற்றச்சாட்டு இந்த இரு நிறுவனங்களின் மீது உள்ளது.

    இந்த நிறுவனங்களின் விளம்பர தூதராக மகேஷ் பாபு இருந்ததால் அவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • அமலாக்கத்துறை சார்பில், டாஸ்மாக்கில் சட்ட விரோதமாக ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.
    • பெண் அதிகாரிகளை இரவில் தங்க வைக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    சென்னை:

    டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சார்பில் கடந்த மாதம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை சட்ட விரோதம் என அறிவிக்க கோரி தமிழக அரசு சார்பிலும் டாஸ்மாக் நிறுவனம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையின் போது, சட்டத்தை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி அமலாக்கத்துறையினர் சோதனையிட்டனர். சில அதிகாரிகளை அமலாக்கத்துறை இரவில் தூங்க விடாதது மனித உரிமை மீறல் என்று டாஸ்மாக் மற்றும் அரசு சார்பில் வாதிட்டனர்.

    அமலாக்கத்துறை சார்பில், டாஸ்மாக்கில் சட்ட விரோதமாக ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. சட்டத்துக்கு உட்பட்டே சோதனை நடத்தப்பட்டது. பெண் அதிகாரிகளை இரவில் தங்க வைக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விட்ட நிலையில் நாளை மறுநாள் (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

    • அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை காங்கிரஸ் கட்சி மீது பா.ஜ.க. ஏவிவிடுவது அருவருக்கத்தக்க செயல்.
    • பா.ஜ.க. அரசு இனிமேலாவது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக சந்திக்கும் துணிச்சலை பெற வேண்டும்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    * காங்கிரஸ் கட்சி மீது அமலாக்கத்துறை சோதனையை ஏவிவிடுவது வெட்கித் தலைகுனிய வேண்டிய அரசியல் பழிவாங்கும் செயல்.

    * அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை காங்கிரஸ் கட்சி மீது பா.ஜ.க. ஏவிவிடுவது அருவருக்கத்தக்க செயல்.

    * குஜராத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மக்கள் விரோத பா.ஜ.க. அரசு பற்றிய கருத்துருவாக்கம் பா.ஜ.க.வை மிரள வைத்திருக்கிறது.

    * ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டின்போது சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது பா.ஜ.க.

    * ஆட்சிக்கு வந்ததிலிருந்து ED-யை தனது கூட்டணி கட்சியாக சேர்த்துக்கொண்டு பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது பா.ஜ.க. அரசு.

    * பா.ஜ.க. அரசு இனிமேலாவது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக சந்திக்கும் துணிச்சலை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சதீசுக்கு சொந்தமான ஜே.பி.நகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • காகசியன் ஷெப்பர்டு இன நாய் வாங்கியதற்கான எந்த ஆவணங்களும் அதிகாரிகளுக்கு சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்தவர் சதீஸ்(வயது 51). தொழில் அதிபரான இவர், விலை உயர்ந்த நாய்களை வாங்கி வளர்ப்பது வழக்கம். மேலும் அந்த நாய்களை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்று வந்தார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு 'காகசியன் ஷெப்பர்டு' வகையை சேர்ந்த நாய் ஒன்றை வாங்கியிருந்தார்.

    அந்த நாயின் விலை ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்த வளர்ப்பு நாயுடன் சதீஸ் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் ரூ.50 கோடி விலை கொடுத்து இந்த நாயை வாங்கியதாக கூறினார். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியது.

    இதுபற்றி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், தொழில் அதிபர் சதீஸ் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று சதீசுக்கு சொந்தமான ஜே.பி.நகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். காலை முதல் மாலை வரை நடந்த இந்த சோதனையில் காகசியன் ஷெப்பர்டு இன நாய் வாங்கியதற்கான எந்த ஆவணங்களும் அதிகாரிகளுக்கு சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது விலை உயர்ந்த நாயை வாங்கியது உண்மை. ஆனால் அதற்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை.

    இதையடுத்து சதீஸ் ரூ.50 கோடி கொடுத்து நாய் வாங்கியது பொய்யான தகவல் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் தொழில் அதிபர் சதீசுக்கு இந்த விலை உயர்ந்த நாய் வாங்க பணம் எப்படி வந்தது என்பது பற்றிய ஆவணங்கள் அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சதீசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



    • முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்.-கள் அடிப்படையில் சோதனை- ED
    • எந்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் டாஸ்மாக்கில் சோதனை நடத்தியது என்பதை அறிந்து கொள்ள தாக்கல் செய்ய உத்தரவு.

    டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்.-கள் அடிப்படையில் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது.

    அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் "டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-களை தாக்கல் செய்ய வேண்டும்" என அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    எந்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் சோதனை நடத்தியது என்பதை அறிந்து கொள்ள உத்தரவிட்டதாக தெரிவித்ததுடன், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

    • ஒரு கட்சி மீது குற்றம் சாட்டும் அரசியல்வாதி அவர் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும்.
    • தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் மன்னிப்பது தான் தமிழனின் பண்பு.

    நாகப்பட்டினம்:

    நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 30-வது தேசிய மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநாடு பணிகள் குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.

    இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே பா.ஜ.க.வுடன் எக்காலத்திலும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, கூட்டணி வைக்கப்போவதும் இல்லை என எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கூறி வந்தனர்.

    ஆனால் திடீரென பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து இதுதான் விடியல் கூட்டணி என்றும், இந்த கூட்டணியால் தான் மக்களுக்கு எதையும் செய்ய முடியும். அதனால் என்ன விளைவுகள் வந்தாலும் அதை எதிர்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இந்த கூட்டணி அ.தி.மு.க தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை.

    நிர்பந்தம், அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து தான் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். சரத்பவார் கட்சி, சிவசேனா கட்சியின் நிலை என்ன ஆனது. பா.ஜ.க தன்னுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியை நயவஞ்சகமாக அழித்துவிடும். தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் மத்திய அரசை தமிழக மக்களே எதிர்க்கின்றனர்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஊழல் குறித்து அண்ணாமலை பேசினார். இன்று கூட்டணி வைத்துள்ள காரணத்தால் அ.தி.மு.க.வினர் ஊழல் செய்யவில்லை என பேசுவார்களா?.

    ஒரு கட்சி மீது குற்றம் சாட்டும் அரசியல்வாதி அவர் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அ.தி.மு.க போன்ற கரை படிந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, ஊழல் பற்றி பேச உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தகுதியில்லை. மேலும் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் மன்னிப்பது தான் தமிழனின் பண்பு.

    ஆட்சி, அதிகாரத்தை பிடிக்கவே அனைவரும் அரசியல் கட்சி நடத்துகின்றனர். கம்யூனிஸ்டு கட்சியும் ஒரு நாள் தமிழகத்தையும், இந்தியாவையும் ஆளும். அப்போது கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் முதலமைச்சராகவும், பிரதமராகவும் ஆவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கே.என். ரவிச்சந்திரனை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர்.
    • 5 கிரவுண்ட் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வைத்து நேற்று விசாரணை நடந்தது.

    தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாளாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

    கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

    அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

    கே.என். ரவிச்சந்திரனை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    5 கிரவுண்ட் நிலம் வாங்கியது தொடர்பான ஆவணங்களை வைத்து நேற்று விசாரணை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் 3 இடங்களில் இன்று 3-வது நாளாக சோதனை நீடிக்கிறது.
    • ரவிச்சந்திரன் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு, சென்னையில் உள்ள அவரது மகன் அருண் நேருவின் வீடு, தம்பி ரவிச்சந்திரன் வீடு, கோவையில் உள்ள இன்னொரு தம்பியான மணி வண்ணன் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையை தொடங்கினார்கள்.

    இந்த சோதனை பல இடங்களில் முடிவுக்கு வந்த நிலையில் சென்னையில் 3 இடங்களில் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது.

    அமைச்சர் நேருவின் குடும்பத்தினர் நடத்தி வரும் டி.வி.எச். கட்டுமான நிறுவனம், டி.வி.எச். எனர்ஜி ரிசோர்சஸ் மின் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2018 -ம் ஆண்டு வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

    இதன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நேருவின் தம்பி ரவிச்சந்திரன் வீட்டில் சோதனை மேற்கொண்டிருந்த அதிகாரிகள் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர் தங்களது வாகனத்தில் அவரை ஏற்றிக்கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். இதனால் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் பரவியது.

    இதை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால் 4 மணி நேர விசாரணைக்கு பிறகு ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து நேற்று இரவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 3-வது நாளாக ரவிச்சந்திரனிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அப்போது அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு ரவிச்சந்திரன் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
    • டாஸ்மாக் நிறுவன அமலாக்கத்துறை சோதனை வழக்குகளை முதலில் உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்கட்டும்.

    டெல்லி:

    டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கிற்கு மத்திய அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

    இதற்கிடையே அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் டாஸ்மாக் நிறுவன அமலாக்கத்துறை சோதனை வழக்குகளை முதலில் உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்கட்டும். அதன் அடிப்படையில் விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

    இதனை தொடர்ந்து, அமலாக்கத்துறை சோதனை வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய மனுக்களை திரும்ப பெறுகிறோம் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து திரும்பப் பெற அனுமதி வழங்கப்பட்டது. 

    • ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் 2 இல்லங்களிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
    • திருச்சி தில்லை நகரில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் 10 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவுபெற்றுள்ளது.

    சென்னை:

    தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 4 இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, சென்னையில் அருண் நேரு தொடர்புடைய நிறுவனத்திலும், ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் 2 இல்லங்களிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

    முன்னதாக, திருச்சி தில்லை நகரில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் 10 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவுபெற்றுள்ளது. அதேபோல் கோவை மசக்காளிபாளையத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டில் நடைபெற்ற சோதனையும் நிறைவுபெற்றுள்ளது. 

    • அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    • அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலணி, எம்.ஆ.சி. நகர் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னையில் அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண்நேரு வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலணி, எம்.ஆ.சி. நகர் உள்ளிட்ட இடங்களிலும் TVH குரூப் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×