என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aakash Baskaran"

    • அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
    • ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவு

    டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது.

    இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.

    இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் திருத்தம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.

    இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

    மேலும், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி அளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    • ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
    • அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாகக்கூறி, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது.

    இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.

    சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாகக்கூறி, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் மற்றும் பதிவாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

    • தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • ஆகாஷ் பாஸ்கரன் தற்போது டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக படங்கள் தயாரித்து வருகிறார்

    பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இரண்டாம் நாளான இன்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் 'நானும் ரவுடிதான்', 'அமரன்' உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர், ஆகாஷ் பாஸ்கரன். தற்போது டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக படங்கள் தயாரித்து வருகிறார். தனுஷ் நடித்து, இயக்கி வரும் 'இட்லி கடை' படம்தான் அவரது தயாரிப்பில் வெளிவர இருக்கும் முதல் படமாகும்.

    அதேபோல சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்து வரும் 'பராசக்தி' படத்தையும் தயாரிக்கிறார். அதனைத்தொடர்ந்து அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தை அவரே இயக்கி தயாரிக்கிறார்.

    இதுதவிர, சிம்புவின் 49-வது திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்றது. மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்களையும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் நடந்த ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் கூட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தனுஷ், நயன்தாரா, அனிருத், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
    • இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குக்கிறார்

    அண்மையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

    இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

    சமீபத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கலந்துக் கொண்ட நேர்காணலில் STR49 படத்தை குறித்து சில தகவல்களை கூறியுள்ளார் அதன்படி " இந்த படத்திற்காக பல இயக்குனர்களை நாங்கள் தேடினோம். அப்பொழுது நடிகர் சிம்பு தான் இயக்குனர் ராம்குமாரை பரிந்துரைத்தார். இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான திரைப்படமாக இருக்கும். வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும். முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இது இருக்கும்" என கூறியுள்ளார்.

    சிம்பு தற்பொழுது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×