என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    எம்.எஸ்.தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா?: மனம் திறந்த சுரேஷ் ரெய்னா
    X

    எம்.எஸ்.தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா?: மனம் திறந்த சுரேஷ் ரெய்னா

    • நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது.
    • இதில் 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

    இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் கூறியதாவது:

    ஐ.பி.எல். ஏலத்திலேயே சி.எஸ்.கே. அணி தோற்றுவிட்டது. நல்ல பிளேயர்களை வாங்குவதற்கு போதுமான பணம் இருந்தும் அந்த பிளேயர்களை வாங்க சிஎஸ்கே ஏன் ஆர்வம் காட்டவில்லை? கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களை ஏன் சிஎஸ்கே வாங்கவில்லை?

    இந்த ஐபிஎல் ஏலத்தைப் பொறுத்தவரை தோனியின் தலையீடு ஏதும் இல்லை. முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவு.

    தோனியைப் பொறுத்தவரை 43 வயதிலும் அணிக்கு தேவையானதை களத்தில் இருந்து செய்கிறார். சி.எஸ்.கே. அணிக்காக கேப்டன்சி, விக்கெட் கீப்பிங், பேட்டிங் என தன்னால் முடிந்த அத்தனை உழைப்பையும் கொடுக்கிறார். ஆனால் அணியில் இருக்கும் மற்ற பிளேயர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்தது இல்லை. இளம் பிளேயர்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும்.

    என்னைப் பொறுத்தவரை தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாடுவார். சி.எஸ்.கே. நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×