என் மலர்
நீங்கள் தேடியது "குஜராத் டைட்டன்ஸ்"
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி திரில் வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது குஜராத் அணி.
மும்பை:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56-வது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவரில் 155 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 18 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.
இதையடுத்து, குஜராத் வெற்றிபெற ஒரு ஓவரில் 15 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குஜராத் கடைசி ஓவரில் 15 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.
2வது இடத்தில் ஆர்.சி.பி.யும், 3வது இடத்தில் பஞ்சாப் கிங்சும், 4வது இடத்தை மும்பை இந்தியன்சும், 5வது இடத்தை டெல்லியும், 6வது இடத்தை கொல்கத்தாவும், 7வது இடத்தை லக்னோவும் பிடித்துள்ளன.
- டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 155 ரன்கள் எடுத்தது.
மும்பை:
ஐ.பி.எல். தொடரின் 56வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.
ரிக்கெல்டன் 2 ரன்னிலும், ரோகித் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
3வது விக்கெட்டுக்கு வில் ஜாக்ஸ்-சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக ஆடிய வில் ஜாக்ஸ் அரை சதம் விளாசினார்.
இந்த ஜோடி 71 ரன்கள் சேர்த்த நிலையில், சூர்யகுமார் யாதவ் 35 ரன்னில் அவுட்டானார். வில் ஜாக்ஸ் 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
குஜராத் சார்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றவர்கள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. சாய் சுதர்சன் 5 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்த நிலையில் பட்லர் 30 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து கில்லுடன் ரதர்போர்டு ஜோடி சேர்ந்தார். ரதர்போர்டு அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். 14 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் சிறிது தடைபட்டது.
மழை நின்று ஆட்டம் தொடங்கிய நிலையில் சுப்மன் கில், ரதர்போர்டு, ஷாருக் கான், ரஷீத் கான் விக்கெட்டுகள் வீழ்ந்தன. மழை மீண்டும் பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஒரு ஓவரில்15 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில், குஜராத் அணி வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. 8வது வெற்றியைப் பதிவு செய்துள்ள குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
மும்பை அணியின் தொடர் வெற்றிக்கு குஜராத் அணி முற்றுப்புள்ளி வைத்தது. மும்பை அணியின் 5வது தோல்வி இதுவாகும்.
- மும்பை அணியின் வில் ஜாக்ஸ் அரை சதம் விளாசினார்.
- குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித்- ரிக்கெல்டன் களமிறங்கினர். முதல் ஓவரின் 2-வது பந்திலேயே ரிக்கெல்டன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வில் ஜாக்ஸ் முதல் பந்திலேயே கேட்ச் மிஸ் ஆனார். தடுமாறிய ரோகித் சர்மா 7 ரன்னில் அவுட் ஆனார்.
இதனையடுத்து வில் ஜாக்ஸ் - சூர்யகுமார் யாதவ் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய வில் ஜாக்ஸ் அரைசதம் விளாசினார்.
அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 35 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் வில் ஜாக்ஸ் 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து வந்த வீரர்கள் திலக் வர்மா 7, பாண்ட்யா 1, நமன் தீர் 7 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இறுதியில் கார்பின் பாஷ் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக கடைசி ஓவரில் 2 சிக்சர்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் மும்பை அணி 20 ஓவரில் 155 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- நடப்பு தொடரில் மும்பையில் நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் மும்பை அணி வென்றுள்ளது.
- புள்ளிப்பட்டியலில் மும்பை 3-வது இடத்திலும் குஜராத் 4-வது இடத்திலும் உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகள் எடுத்து இருப்பதுடன், ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 3-வது இடம் வகிக்கிறது. குஜராத் அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.
தங்களது எஞ்சிய ஆட்டங்களில் இரண்டில் வெற்றி கண்டாலே அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்துவிடலாம் என்ற நிலையில் இரு அணிகளும் உள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
நடப்பு தொடரில் இங்கு நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் மும்பை அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வான்கடே மைதானத்தில் மும்பை - குஜராத் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சிராஜ் இடம்பெறவில்லை.
ஐபிஎல் தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்காக வான்கடே மைதானத்தில் மும்பை - குஜராத் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய குஜராத் வீரர் முகமது சிராஜ்க்கு பிசிசிஐ சார்பில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோதிரத்தை அணிவித்தார்.
இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட சிராஜ், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.
அப்போது, சிராஜின் நீக்கம் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, "சிராஜ் புதிய பந்தில் மட்டும் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளார். இதனால் முகமது சிராஜின் திறன் சற்று குறைவதாக நாங்கள் உணர்கிறோம். அவர் தனது வாய்ப்பை தவறவிட்டது முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது. என்று தெரிவித்திருந்தார்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். அதிகாரபூர்வமாக 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 9 வெற்றிகள் தேவையாகும். தற்போது லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்குவதால், இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் அதிக முக்கியத்துவம் பெறும்.
இந்த தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
5 முறை சாம்பியனான மும்பை அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகள் எடுத்து இருப்பதுடன், ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 3-வது இடம் வகிக்கிறது. முதலில் சற்று தடுமாறிய மும்பை அணி கடைசியாக 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி வீறுநடைபோடுகிறது. முந்தைய 6 ஆட்டங்களிலும் அந்த அணி, எந்த அணியையும் 200 ரன்களை எட்டவிடவில்லை.
மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (475 ரன்), ரையான் ரிக்கெல்டன் (334), ரோகித் சர்மா, திலக் வர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (16 விக்கெட்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (13), ஜஸ்பிரித் பும்ரா (11), தீபக் சாஹர் (9) கலக்குகின்றனர்.
முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.
குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (504 ரன்), ஜோஸ் பட்லர் (470), கேப்டன் சுப்மன் கில் (465) ஆகியோர் சூப்பர் பார்மில் இருக்கின்றனர். இந்த மூவரையே அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (19 விக்கெட்), முகமது சிராஜ் (14), சாய் கிஷோர் (12), ரஷித் கான் வலுசேர்க்கின்றனர்.
தங்களது எஞ்சிய ஆட்டங்களில் இரண்டில் வெற்றி கண்டாலே அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்துவிடலாம் என்ற நிலையில் இரு அணிகளும் உள்ளன. அகமதாபாத்தில் நடந்த குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 36 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மும்பை அணி அதற்கு பதிலடி கொடுக்க முனைப்பு காட்டும். அதேநேரத்தில் மும்பை அணியின் தொடர்ச்சியான வெற்றிப்பயணத்துக்கு முடிவு கட்ட குஜராத் அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. உள்ளூர் சூழல் மும்பை அணிக்கு அனுகூலமாக இருக்கும். நடப்பு தொடரில் இங்கு நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் அந்த அணி வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.
இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), வில் ஜாக்ஸ், திலக் வர்மா, நமன் திர், கார்பின் பாஷ் அல்லது மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.
குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், முகமது சிராஜ், ஜெரால்டு கோட்ஜீ, சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் ஷர்மா அல்லது ரபடா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- சிறந்த அதிரடி பேட்ஸ் மேன்கள் இரு அணியிலும் உள்ளனர்.
- குஜராத் டைட்டன்ஸ் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
மும்பை:
ஐ.பி.எல். போட்டியின் 56-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-சுப்மன்கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி குஜராத்துக்கு பதிலடி கொடுத்து 8-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. மும்பை அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 36 ரன்கள் (அகமதாபாத்) வித்தியாசத்தில் தோற்று இருந்தது. மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று மிகவும் வலுவான நிலையில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மும்பையை மீண்டும் வீழ்த்தி 8-வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவது குஜராத்துக்கு கடும் சவாலானது.
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. சிறந்த அதிரடி பேட்ஸ் மேன்கள் இரு அணியிலும் உள்ளனர். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- குஜராத் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார்.
- அவசரமாக சொந்த நாடு திரும்பினார். இந்த நிலையில் சஸ்பெண்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபடா. இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளனர். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில், சொந்த காரணத்திற்காக உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
இதுவரை குஜராத் அணி 10 போட்டிகளில் விளையாடியள்ளது. மீண்டும் அணியில் இணைவாரா? என்ற கேள்வி எழுந்து வந்தது.
இந்த நிலையில் போதைப்பொருள் சோதனையில் மகிழ்ச்சி அல்லது உடல் சோர்வை போக்குவதற்கான போதைப்பொருள் (recreational drug) பயன்படுத்தியதாக சோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் தடை பெற்றுள்ளேன். ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவில்லை.
இது தொடர்பாக ரபடா வெளியிட்டுள்ள அறிக்கையில் "நான் ஏமாற்றிய அனைவருக்கும் நான் மிகவும் வருந்துகிறேன். கிரிக்கெட் விளையாடும் பாக்கியத்தை நான் ஒருபோதும் அற்பமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். இந்த பாக்கியம் என்னை விட மிகப் பெரியது. இது எனது தனிப்பட்ட விருப்பங்களை விட அதிகம். நான் தற்காலிக இடைநீக்கத்தை அனுபவித்து வருகிறேன், நான் விளையாட விரும்பும் விளையாட்டுக்குத் திரும்புவதை எதிர்நோக்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- அரை சதமடித்த சுப்மன் கில் 76 ரன்கள் விளாசி ரன் அவுட்டானார்
- தனக்கு வழங்கப்பட்ட ரன் அவுட்டிற்கு எதிராக நடுவருடன் சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஐ.பி.எல். சீசனின் 51-வது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணியின் 7வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.
இப்போட்டியில் சிறப்பாக ஆடி அரை சதமடித்த சுப்மன் கில் 38 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் விளாசி ரன் அவுட்டானார். ஆனால் தனக்கு வழங்கப்பட்ட ரன் அவுட்டிற்கு எதிராக களத்திற்கு வெளியே நடுவருடன் சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் போட்டியின் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ஐதராபாத் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது அபிஷேக் சர்மாவின் காலில் பந்து பட்டதற்கு LBW முறையில் குஜராத் அணி அவுட் கேட்டது. ஆனால் மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்தார்.
இதனால் கடுப்பான சுப்மன் கில் கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அபிஷேக் சர்மா அவரை சமாதானப்படுத்த முயன்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
ஐபிஎல் போட்டியில் அறத்துடன் விளையாடினாள் நடுவர்கள் PAIR PLAY புள்ளிகள் வழங்குவார்கள். ஏற்கனவே PAIR PLAY பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் குஜராத் அணி சுப்மன் கில்லின் வாக்குவததால் மேலும் PAIR PLAY புள்ளிகளை இழக்கும் என்று கூறப்படுகிறது.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 224 ரன்கள் குவித்தது.
- தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது.
அகமதாபாத்:
அகமதாபாத்தில் நேற்று நடந்த 51வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் அகமதாபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 224 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தையும் பிடித்தது.
இதற்கிடையே, அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பி மீண்டும் குஜராத் வீரரான சாய் சுதர்சன் வசமானது.
இந்த ஆட்டத்தில் 48 ரன் எடுத்த சாய் சுதர்சனின் ரன் எண்ணிக்கை 504-ஆக உயர்ந்தது. அவர் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவிடம் இருந்து (475 ரன்) ஆரஞ்சு தொப்பியை தட்டிப் பறித்துள்ளார்.
இந்நிலையில், ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் நேற்று 54 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்தார். ஆஸ்திரேலியாவின் ஷான் மார்சுக்குப் பிறகு இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரராக சாய் சுதர்சன் திகழ்கிறார்.
இந்திய வீரர்களில் இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 59 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்ததே அதிவேகமாக இருந்தது. அதனை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்கது.
- டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த குஜராத் அணி 224 ரன்கள் குவித்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். சீசனின் 51-வது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.
சிறப்பாக ஆடி அரை சதமடித்த சுப்மன் கில் 38 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் விளாசினார். பட்லர் 37 பந்தில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 23 பந்தில் 9 பவுண்டரியுடன் 48 ரன்கள் குவித்தார்.
ஐதராபாத் சார்பில் உனத்கட் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினார். அரை சதம் கடந்த அவர் 41 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 74 ரன்கள் குவித்து அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணியின் 7வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.
- பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் குவித்தது.
- சுப்மன் கில் 38 பந்தில் 76 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் 2025 சீசனின் 51ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். 3ஆவது ஓவரை முகமது சமி வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தை தவிர மற்ற ஐந்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் சாய் சுதர்சன்.
அடுத்த ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் சாய் சுதர்சன் 4 பவுண்டரி விரட்டினார். 12 பந்தில் 9 பவுண்டரிகள் விளாசினார் சாய் சுதர்சன். அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை கில் பவுண்டரிக்கு விரட்டினார்.
பவர்பிளேயில் குஜராத் அணி 6 ஓவரில் 82 ரன்கள் குவித்தது. 7ஆவது ஓவரை ஜீசன் அன்சாரி வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 9 பவுண்டரியுடன் 48 ரன்கள் விளாசினார்.
அடுத்து ஜாஸ் பட்லர் களம் இறங்கினார். 8.2 ஓவரில் குஜராத் அணி 100 ரன்னைத் தொட்டது. சுப்மன் கில் 25 பந்தில் 6 பவுண்டரி, 2 கிச்சருடன் அரைசதம் கடந்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 13ஆவது ஓவரின் கடைசி பந்தில் ரன்அவுட் ஆனார். சுப்மன் கில் 38 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் விளாசினார். கில் ஆட்டமிழக்கும்போது குஜராத் அணி 13 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்திருந்தது.
3ஆவது விக்கெட்டுக்கு பட்லருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். 15 ஓவரில் குஜராத் 162 ரன்கள் அடித்திருந்தது.
17 ஓவர் முடிவில் 188 ரன்கள் குவித்தது. பட்லர் 31 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். 18 ஓவர் முடிவில் 203 ரன் குவித்தது. 19ஆவது ஓவரில் பட்லர் 37 பந்தில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
கடைசி ஓவரை உனத்கட் வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு தூக்கிய வாஷிங்டன் சுந்தர் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தை டெவாட்டியா சிக்சருக்கு விளாசினார். கடைசி 2 பந்தில் 2 விக்கெட்டை இழக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்துள்ளது. கடைசி ஓவரில உனத்கட் 3 விக்கெட் வீழ்த்தினார்.