என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ashish Nehra"
- ஹர்திக் வேறு ஏதாவது அணிக்கு செல்ல நினைத்திருந்தால் அவரை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
- பாண்ட்யா மும்பை அணிக்கு சென்றதால் அதனை செய்யவில்லை.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ந் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் கால்பந்தில் நடப்பது போல கிரிக்கெட்டிலும் இதுபோன்று வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் வரும் காலங்களில் அதிகம் நடக்கும் என குஜராத் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அடுத்த விஷயங்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யா மற்றும் முகமது சமி போன்ற வீரர்களின் அனுபவத்தை உங்களால் வாங்க முடியாது. அவர்கள் இருவரும் அணியில் இல்லாதது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எளிதாக இருக்கப் போவதில்லை. கால்பந்தில் நடப்பது போல கிரிக்கெட்டிலும் இதுபோன்று வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் வரும் காலங்களில் அதிகம் நடக்கும்.
ஆனால், இதனை கற்றுக் கொள்வதற்கான சூழலாக எடுத்துக் கொண்டு அணியினர் முன்னோக்கி செல்ல வேண்டும். குஜராத் அணிக்காக பாண்ட்யாவை தொடர்ந்து விளையாட வலியுறுத்த ஒருபோதும் நான் முயற்சிக்கவில்லை. அதிகம் விளையாடினால் அதிக அனுபவத்தைப் பெற முடியும். அவர் வேறு ஏதாவது அணிக்கு செல்ல நினைத்திருந்தால் அவரை தடுத்து நிறுத்தியிருக்கலாம். அவர் மும்பை அணிக்கு சென்றதால் அதனை செய்யவில்லை.
கில் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பார்க்க மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும். அவர் அப்படிப்பட்ட வீரர். அவர் மூன்று வடிவங்களிலும் சிறப்பாக விளையாட விரும்புபவர். அவர் ஒரு நபராக வளர்ந்தால், அவர் நிச்சயமாக முன்னோக்கி செல்லும் சிறந்த கேப்டனாக இருப்பார்.
இவ்வாறு நெஹ்ரா கூறினார்.
ஐபிஎல் தொடரின் மினி ஏலத்திற்கு முன்னதாக ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியது. அதுமட்டுமின்றி அணியின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்ட்யாவை அணியின் கேப்டனாக அறிவித்தது. இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இறுதியில் கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.
- தொடர்ந்து 4 பந்துகள் மோகித் சர்மா யார்க்கராக வீசினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி 3 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.
பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடின இலக்கை துரத்தியது. முதல் ஓவரிலயே மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி சென்னையின் வெற்றிக்கு 171 ரன்கள் தேவைப்பட்டது.
இறுதியில் கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மோகித் சர்மா வீசினார். தொடர்ந்து 4 பந்துகள் யார்க்கராக வீசினார். 5-வது பந்தில் அவருக்கு கூல்டிரிங்ஸ் மற்றும் அறிவுரை கூறுகிறேன் என்ற பெயரில் ஏதோ அட்வைஸ் கொடுத்திருக்கிறார் பவுலிங் பயிற்சியாளர் ஆசிஷ் நெஹ்ரா. அந்தப் பந்தில் ஜடேஜா சிக்சர் விளாசிவிட்டார்.
இறுதியாக கடைசி பந்தை லெக் சைடில் கொஞ்சம் வைடாக வீசிவிட்டார். இதனை எளிதாக தட்டி விடவே பந்து பவுண்டரிக்கு சென்றது. இதன் காரணமாக சிஎஸ்கே வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், அறிவுரை வழங்குகிறேன் என்ற பெயரில் நன்றாக பந்து வீசிய மோகித் சர்மாவை குழப்பத்தில் ஆழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி தோற்பதற்கு ஆசிஷ் நெஹ்ராவே காரணமாக அமைந்துவிட்டார் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
- ரிஷிக்கு பதில் நெஹ்ரா புகைப்படத்தை மாற்றி பகிர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள்.
- இருவரது தோற்றமும், ஒரே மாதிரியாக இருப்பதாகவும் சிலர் கருத்து.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரான பின்னர் அவர் குறித்த தகவல்கள் தற்போது சமூக வளைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் ரிஷி சுனக் புகைப்படத்திற்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். நெஹ்ராவின் தோற்றமும், ரிஷியின் தோற்றமும் ஒரே மாதிரி இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருவரது புகைப்படங்களும் இணைந்து பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே அதிக அளவில் சமூக வளைதள பார்வையாளர்களை ஈர்த்ததுடன் டுவிட்டர் பார்வையாளர்களிடையே அது வைரலாகி உள்ளது.
அகமதாபாத், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக களமிறங்கி சிறப்பாக விளையாடியது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததுடன், இறுதிப்போட்டிக்குள் நுழைந்து கோப்பையையும் தனதாக்கியது. இந்த சாதனைக்கு அந்த அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதை கூறினாலும், பயிற்சியாளர்களின் பங்களிப்பும் அளப்பரியது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா உள்ளார்.
அவரை அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் ஆலோசகருமான கேரி கிர்ஸ்டன் புகழ்ந்துள்ளார். நெஹ்ரா குறித்து அவர் கூறும்போது, ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல்-லின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக விளங்குகிறார்.
அவர் எனது நெருங்கிய நண்பர். நாங்கள் இருவரும் ஒன்றாக நீண்ட பயணம் செய்துள்ளோம்" என்று கிர்ஸ்டன் கூறினார். "அவர் தனது வீரர்களைப் பற்றி எப்போதும் சிந்தித்து அவர்களுக்கு எப்படி உதவ முடியும் எனது மனதுடன் பயிற்சியளிக்கிறார். மேலும் சிறப்பாக விளையாடுவது எப்படி என்பது பற்றி எப்போதும் தனது வீரர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்" என்று கிர்ஸ்டன் கூறினார்.
அதன்பின் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக செயல்பட்டார். 2018 சீசனில் ஆர்சிபி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி உள்பட அனைவரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் ஆன கேரி கிர்ஸ்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்தது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் தான் பந்து வீச்சு பயிற்சியாளராகவும், கேரி கிர்ஸ்டனுடன் இணைந்து தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட போவதாக ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், புனே வாரியர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்