search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MIvGT"

    • வெயின் பிராவோ 33 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
    • அஸ்வின் 26 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சாஹல் 25 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 169 ரன்கள் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் அணியால் 162 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 12-வது முறையாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

    இந்த போட்டியின் கடைசி கட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா சிறப்பாக பந்து வீசினார். அவர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 33 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இதற்கு முன்னதாக வெயின் பிராவோ 33 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது மோகித் சர்மா பிராவோ உடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை பகிர்ந்தள்ளார்.

    அஸ்வின் 26 விக்கெட்டுகளும், சாஹல், சாவ்லா, அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 25 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

    • டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 233 ரன்களை குவித்தது.

    அகமதாபாத்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர்.

    தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மான் கில் 60 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 129 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில்-சாய் சுதர்சன் ஜோடி 138 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்து ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

    இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்களை குவித்தது. பாண்ட்யா 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

    • மும்பை இந்தியன்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
    • முதலில் ஆடிய குஜராத் அணியின் ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

    அகமதாபாத்:

    ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.

    இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின், மழை நின்ற பிறகு ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர்.

    தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை அணிக்காக முதல் சத்தத்தை பதிவு செய்தவர் இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜெயசூர்யா ஆவார்.
    • மும்பை அணிக்காக சதம் அடித்தவர்கள் அனைவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததுள்ளார்.

    ஐபிஎல் 2023 தொடரின் 57-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 218 ரன்கள் குவித்துள்ளது.

    அதில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் பேட்டிங் செய்ய வந்தது முதல் குஜராத் பெளலர்கள் பந்து வீச்சை நாலபுறமும் பறக்க விட்டார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார்.

    இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 5-வது இடத்தை பிடித்துள்ளார். மும்பை அணிக்காக முதல் சத்தத்தை பதிவு செய்தவர் இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜெயசூர்யா ஆவார். அதற்கு அடித்தப்படியாக சச்சின், ரோகித் சர்மா, சிம்மோன்ஸ் சதம் அடித்துள்ளனர். அதனை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

    மும்பை அணிக்காக சதம் அடித்தவர்கள் அனைவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×